Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி

ஞாயிறு, 14 பிப்ரவரி 2010( 10:43 IST )

இலங்கையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தி.மு.க. அரசு அதனை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு :

கேள்வி : இலங்கை அதிபர் ராஜபக்ச, அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவரா?

பதில் : தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் - தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.

கேள்வி:- பொன்சேகாவை இலங்கை அதிபர் ராஜபக்சே கைது செய்து வைத்திருப்பதும் - அவருக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக செய்திகள் பரவுவதும் பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில் : இலங்கை வரலாற்றில் அந்த‌க் காலத்திலும், இந்த‌க் காலத்திலும் யார் யாரெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள், கொலையுண்டார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். அதே நேரத்தில் இந்திய வரலாற்றில் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்ற புருஷோத்தம மன்னனை, அலெக்சாண்டர் எப்படி நடத்தினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தச் சரித்திரக் குறிப்பை இலங்கையிலே உள்ள ஆட்சியாளர்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1002/14/1100214003_1.htm

அப்ப இதுவரை வேடிக்கை பார்த்ததாகத்தானே அர்த்தம்.

போச்சா ?சும்மாதானே இருந்தனீங்க அதென்ன பல்டியெல்லாம் அடிக்கிறீங்க, முத்திப் போச்சுதோ மாந்திரீகம் மந்திரங்கள் அங்கதானே நிறைய இருக்கே?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில காங்கிரஸ்காரன் சொன்னதை எதையாச்சும் கேட்காமல் விட்டிருப்பான் சிங்களவன்..! உடனே மேலே இருந்து இவருக்கு கீ குடுத்திருப்பாங்கள்..! :unsure:

தலையங்கத்தை வடிவா வாசிச்சுப் பாருங்கோ!

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கினால் தி.மு.க வேடிக்கை பார்க்காது என்று சொன்னாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பற்றி மகிந்தாவுக்கு கடிதம் எழுதலாமே??????

என்ன அய்யா இந்த யோசனை உங்களுக்கு தோணலையா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடர் முதுகில் குத்தும் கட்சி எப்பவும் வேடிக்கை பாக்காது. எரியற வீட்டில கொள்ளி புடுங்கி தலைவரிண்ட குடும்பம், சின்ன வீட்டிண்ட குடும்பம், மற்ற சின்ன வீட்டிண்ட குடும்பம் எண்டு நல்லா கவனிப்பினம்.

இரண்டு இலட்சம் தமிழர் சாக 20 கிலோ மீட்டர் தூரத்தில 7 கோடி தமிழரை வேடிக்கை பாக்க வைத்த கள்ள கூட்டம். இவையளுக்கும் கலி காலம் முத்திவிட்டது. தமிழர் முன்னேற வேண்டுமென்றால் நமது காலை சுத்தியிருக்கும் இந்த பதர்களை அகற்றவேண்டும்.

இவன்களைஎல்லாம் நம்பி கொண்டு ஒரு கூட்டம் இருக்கு தானே? பகுத்தறிவு கூட்டமாம் அவையள். சிரிப்பா வருது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தி.மு.க. அரசு அதனை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கொஞ்ச நாள் பேசாமல் தானே...... இருந்தவர். மீண்டும் ஏன் ஆரம்சிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி

ஞாயிறு, 14 பிப்ரவரி 2010( 10:43 IST )

இலங்கையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தி.மு.க. அரசு அதனை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நான் நினைக்கிறன் கிழவனுக்கு alzheimer வியாதி வந்த்துட்டுது போல.. இருக்கிறவங்க உசராகுங்கோ அடுத்த முதலமைசர் பதவிக்கு

நாம் தமிழர் பக்கத்தில் இருப்பது தமிழ்நாடு. ஆயினும் நாம் அழிக்கப்பட்டோம். இந்துக்களாகப் பெரும்பான்மைத் தமிழர் இருக்கிறார்கள். பக்கத்திலுள்ளது இந்து நாடு. ஆயினும் அழிக்கப்பட்டோம். எல்லாம் இவர்களை நம்பியதால். நாம் தனித்து முடிவுகளை எடுத்து வாழப் பழகவேண்டும்.

சிங்களவருடன் வாழலாம், ஏனென்றால் நாம் ஒரு நாட்டிற்குள் இருப்பவர்கள். இந்தியர்களுக்கு நாங்கள் பகடைக்காய்களாகக் கூடாது.

:unsure::unsure:
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு சன், கலைஞர், குங்குமம், தினகரன் போன்ற ஊடகங்களில் கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க, மகிந்தா தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கிவிட்டது என்ற செய்தி வந்தாலும் வரலாம். 2 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்ததினால் தான் சிறிலங்கா அரசு தமிழர்களைக் கொலை செய்ததை நிறுத்தியதாக கலைஞரின் ஊடகங்களில் முன்பு முக்கிய செய்தியாக வந்தது தெரியும்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.