Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்.

இங்குள்ள பெரும்பாலன பெற்றோர்கள் இங்கு பிறந்த தமது பிள்ளைகளுக்கு தாயகத்திலிருந்து

மணமக்களை எடுப்பதில ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்க்கு பெற்றோர்கள் தங்கள் நிலையிலிருந்து

பல காரணங்களை கூறுகின்றனர்.ஆனால் இது எந்தளவுக்கு பிள்ளைகளின் நடை முறை வாழ்கைக்கு

ஒத்து வரும்.இங்குள்ள பிள்ளைகள் பல விடையங்களில் அறிவியல் ரீதியில் விபரமானவர்கள்.

இங்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு அங்கிருந்து பெண் எடுப்பதிலம் பார்க இங்கு பிறந்த பெண் பிள்ளைக்கு

அங்கிருந்து மணமகன் எடுப்பது கூடுதலான சிக்கல்களை உருவாக்க கூடியது.பொதுவாழ்கைக்கோ

அல்லது தாமபதிய வாழ்கைக்கோ பல பிரச்சனைகளை கொடுக்கலாம்.இது பற்றிய உங்கள் கருத்க்களை

கூறுங்கள்.பலருக்கு பிரயோசனமாகவும் பலரின் வாழ்க்கை காப்பற்றபடவும் உதவும்.நன்றி

இங்குள்ள பிள்ளைகள் பல விடையங்களில் அறிவியல் ரீதியில் விபரமானவர்கள்.

நீங்கள் கூறுவது அந்தமாதிரி விடயங்களில்???????? அப்படியென்றால் ஏற்றுகொள்ளதான் வேண்டும்....

ஆனால் கல்வி, அறிவியல் சம்மந்தமாக , வசதி வாய்ப்புகள் குறைவு, ஆனாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லை,

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மணமக்களை எடுப்பதில ஆர்வம் காட்டுகின்றனர்.

மணமக்களை தேர்வு செய்கிறது தாங்கள் எண்டு பெற்றோர் தீர்மானிச்சாப்பிறகு அது தாயகமாய் இருந்தால் என்ன, வேற்றுக்கிரகமாய் இருந்தால் என்ன எல்லாம் ஒண்டுதானே. :lol:

அந்தமாதிரி விடயங்களில்????????

நாங்கள் ஊரில இருந்த காலத்தில அந்தமாதிரி விசயங்களில அறிவு பூச்சியமாய் இருந்தம். ஆனால், இப்ப தாயக நிலமை வேறு. அந்தமாதிரி விசயங்களில அவையளும் அந்தமாதிரி இருக்கிறீனம் என்று சொல்லப்படுகிது. புலூபில்மில இருந்து கையைத்தூக்கி அந்தமாதிரி இடங்களில வைக்கிறது வரை ஓப்பனாய் செய்கிறீனமாம். பிறகென்ன.. தாயகம் வெளிநாடு என்று வேறுபாடு பார்க்க என்ன இருக்கிது. இனி சமருக்கு இஞ்ச இருக்கிறதுகள் விழுந்துகட்டிக்கொண்டு அங்கைபோய் அங்கை இருக்கற பெடி, பெட்டையளுக்கு சூடேற்றி எழுப்பம் காட்டிறதும், அங்குள்ளவர்களும் தாங்கள் ஒன்றுக்கும் சளைச்சவர்கள் இல்லையெண்டு இஞ்ச இருந்து போறதுகளுக்கு மசில்ஸ் காட்டிறதும் இப்படியே எல்லாம் அந்தமாதிரி இருக்கும். :lol:

இங்கு பிறந்த பிள்ளைகள் இங்குள்ளவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கிடையில் மொழி மற்றும் புரிந்துகொள்ளுதல் இலகுவாகவிருக்கும்.மற்றவையெல்லாம் பிரச்சினைக்குரிய விடயங்கள். மற்றும் மணமக்கள் தேடும் படலம் பழசுகள் மண்டையைப் போட்டதும் நின்றுவிடும். இங்கு பிறந்தவர்கள் இந்த மாடு பார்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தாயகத்தில் இருந்து பெண்ணெடுக்க போய் திருமணம் எல்லாம் இலங்கையில் முடிந்க்டு ஸ்பொன்சரும் செய்து ரொரொன்டோவுக்கு கிட்டத்தட்ட பல பெண்கள் வந்து சந்தோசமாகவும் வாழ்கிறார்கள். மிகவும் கவலையான விடயம் கிட்டத்தட்ட 40 பெண்கள் இலங்கையில் இருந்து தனது எதிர்கால கணவருடன் இணைய வந்தும் யாரும் அவர்களை பாரமெடுக்காமலும், சிலரின் உறவினர்கள் பொறுப்பேற்றும் தங்களது எதிர்கால கணவர்(??)ஏற்காததால் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ரொரண்டோ பொலிஸ் தமது பராமரிப்பில் வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிறந்த பிள்ளைகள் இங்குள்ளவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கிடையில் மொழி மற்றும் புரிந்துகொள்ளுதல் இலகுவாகவிருக்கும். மற்றும் மணமக்கள் தேடும் படலம் பழசுகள் மண்டையைப் போட்டதும் நின்றுவிடும். இங்கு பிறந்தவர்கள் இந்த மாடு பார்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்.

இதுதான் எனது கருத்தும்

எத்தனை வருடம் சென்றாலும் ஊரில் பிறந்து வளர்ந்த ஒருவரது மொழி உச்சரிப்பு

இங்கு பிறந்த பிள்ளையின் உச்சரிப்பை எட்டாது.

பழக்க வழக்கங்களும் அப்படித்தான்....

இதுபோதும் பிரச்சினைக்கு.....

அதேநேரம் எனது பிள்ளைகளுக்கு அவர்களே தமக்கானவரை தெரிவு செய்வர்.

பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இப்படி தாயகத்தில் இருந்து பெண்ணெடுக்க போய் திருமணம் எல்லாம் இலங்கையில் முடிந்க்டு ஸ்பொன்சரும் செய்து ரொரொன்டோவுக்கு கிட்டத்தட்ட பல பெண்கள் வந்து சந்தோசமாகவும் வாழ்கிறார்கள். மிகவும் கவலையான விடயம் கிட்டத்தட்ட 40 பெண்கள் இலங்கையில் இருந்து தனது எதிர்கால கணவருடன் இணைய வந்தும் யாரும் அவர்களை பாரமெடுக்காமலும், சிலரின் உறவினர்கள் பொறுப்பேற்றும் தங்களது எதிர்கால கணவர்(??)ஏற்காததால் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ரொரண்டோ பொலிஸ் தமது பராமரிப்பில் வைத்துள்ளார்கள்.

அண்ணா நுணாவில் இதில் உள்ள சங்கதியை உற்று நோக்குமிடத்து பெரியவர்களால் உருவக்கப்பட்டதாகவே தெரிகின்றது. ஆரோக்கியமான காதலுக்கு அனுமதியழிக்க வக்கிரம் பிடித்த மனங்கள் இடம் கொடுப்பதில்லை.திரும்பவும் சொல்கின்றேன் இங்கு பிறந்தவர்கள் இங்குள்ளவர்களையே மணந்து கொள்வதுதான் சிறந்தது.

அதேநேரம் எனது பிள்ளைகளுக்கு அவர்களே தமக்கானவரை தெரிவு செய்வர்.

பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

விசுகு இதற்கு நடைமுறையில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வேண்டும். நம்மில் பலர் வெளி நாட்டிலும் வாழவேண்டும் ஊரிலுள்ள சம்பிரதாயமும் வேண்டுமென்று நினைப்பவர்கள்.அங்குதான் இவர்கள் முழு முட்டள்களாக நடந்து கொள்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகிகள் ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு பாக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டார்கள். :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இதற்கு நடைமுறையில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வேண்டும். நம்மில் பலர் வெளி நாட்டிலும் வாழவேண்டும் ஊரிலுள்ள சம்பிரதாயமும் வேண்டுமென்று நினைப்பவர்கள்.அங்குதான் இவர்கள் முழு முட்டள்களாக நடந்து கொள்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு வந்த புதிதில் ஆர்மேனிய - கிரேக்கரிடம் வேலை செய்தேன்

அவருக்கு 2 பெண் பிள்ளைகள்

வயதுக்கு வர அவர்களது நடவடிக்கைகள் மாறத்தொடங்கின.

இது பற்றி அவருடன் நான் கதைத்தபோது அவர் எனக்கு சொன்னது

இங்கு வாழவேண்டுமென்றால் இங்குள்ள நடைமுறைகளுக்கு ஒத்துவரவேண்டும்

அங்கத்தைய முறைகள் வேண்டுமென்றால் அங்கு கூட்டிக்கொண்டு போய்விடவேண்டும்

நான் என்னை மாற்ற முயற்சிக்கின்றேன்

மாறுவேன்

வேறு வழியில்லை என்று.

இது அப்படியே எனது மனதில் பதிந்துவிட்டது

இது போன்ற தலைப்புக்களில் எழுதவேண்டும் என்று நினைப்பேன்

நேரம் கிடைப்பதில்லை;

இப்போது சஐPவன் ஆரம்பித்துள்ளார்

நல்ல விடயம்

ஆதரிப்போம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பிறந்த பிள்ளைகள் இங்குள்ளவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கிடையில் மொழி மற்றும் புரிந்துகொள்ளுதல் இலகுவாகவிருக்கும்.மற்றவையெல்லாம் பிரச்சினைக்குரிய விடயங்கள். மற்றும் மணமக்கள் தேடும் படலம் பழசுகள் மண்டையைப் போட்டதும் நின்றுவிடும். இங்கு பிறந்தவர்கள் இந்த மாடு பார்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்.

இதுதான் எனது கருத்தும்.

அலட்டல் இல்லாமல் அமசடக்காய் நல்லதலைப்பை புகுத்திய சகீவனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதலைப்பை புகுத்திய சகீவனுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.அனைவரின் கருத்துக்களும் யதார்த்ததுடன் ஒது்து போவதாகவே அமைந்துள்ளன.ஆனால் இன்னும் பல பெற்றோர்கள் யதார்த்தத்தை விட்டு வெகு தூரம் நின்று அதீத கற்பனைகளில் மிதக்கின்றனர்.அதுவே அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதில மச்சான் சொன்ன மாதிரி என்ன தான் ஊரில் முன்னேறி இருந்தாலும் திருமணம் குடும்பம் கணவன் மனைவி என்று வரும் போது அங்கிருந்து வரும் ஆணோ அல்லது பெண்ணோ இங்குள்ளவர்களின் வாழ்க்கை முறையைப்பாத்து கலவரம் அடையத்தான் செய்வினம்.இவளவு வருடங்கள் இங்கு வாழ்ந்த நாமே நடிகைகளை வேறு யாருடனும் பாத்தவுடன் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ஓடுப்பட்டு திரிகிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்.

இங்குள்ள பெரும்பாலன பெற்றோர்கள் இங்கு பிறந்த தமது பிள்ளைகளுக்கு தாயகத்திலிருந்து

மணமக்களை எடுப்பதில ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்க்கு பெற்றோர்கள் தங்கள் நிலையிலிருந்து

பல காரணங்களை கூறுகின்றனர்.ஆனால் இது எந்தளவுக்கு பிள்ளைகளின் நடை முறை வாழ்கைக்கு

ஒத்து வரும்.இங்குள்ள பிள்ளைகள் பல விடையங்களில் அறிவியல் ரீதியில் விபரமானவர்கள்.

இங்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு அங்கிருந்து பெண் எடுப்பதிலம் பார்க இங்கு பிறந்த பெண் பிள்ளைக்கு

அங்கிருந்து மணமகன் எடுப்பது கூடுதலான சிக்கல்களை உருவாக்க கூடியது.பொதுவாழ்கைக்கோ

அல்லது தாமபதிய வாழ்கைக்கோ பல பிரச்சனைகளை கொடுக்கலாம்.இது பற்றிய உங்கள் கருத்க்களை

கூறுங்கள்.பலருக்கு பிரயோசனமாகவும் பலரின் வாழ்க்கை காப்பற்றபடவும் உதவும்.நன்றி

என்னைப் பொறுத்தவரையில், அந்தந்த நாட்டில் பிறந்தவர்கள் அந்த நாட்டிலேயே..... திருமணங்களை முடிப்பது என்று நினைக்கின்றேன்.

காரணம்:

1) ஆணோ, பெண்ணோ அவர்கள் படித்த படிப்பிற்கு பொருத்தமான வேலை கிடைக்காமல் போகலாம்.

2) முன்பு இருந்த நாட்டு பழகிய நண்பர்களுடன், வஞ்சகம் இல்லாமல் பழகும் போது மற்றவருக்கு சந்தேகம் ஏற்படலாம். (திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில், இது மிகவும் ஆபத்தான விடயம்)

3) தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.

பொதுவான விடயம்:

நல்ல ஒரு குடும்ப வளர்ப்பு உள்ள பிள்ளைகள் எங்கு இருந்தாலும் சமாளித்து, வளர்ந்து வாழ்க்கையில் முன்னோடிகளாக உள்ளதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ஆகவே.... இதனை ஒரு தனி வரை முறைக்குள்..... அடக்கமுடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி உங்கள் கருத்துப்பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது அவரவர் சொந்த விருப்பம் ஆனாலும் ஏன் இங்கு பிற்ந்தவர்கள் அங்கு பிற்ந்தவர்களை மணம் முடிப்பதில் என்ன பிழை...தற்போதைய கால கட்டத்தில் அங்கு பிறந்தவர்களும் இங்குள்ளவர்களுக்கு இணையாக அறிவில் சிறந்து விளங்குகிறார்கள்...இங்குள்ளவர் கதைப்பது வேற்று மொழியிலும் சிறந்து விளங்குகிறார்கள்[ஆங்கிலம்,பிரென்ச்,டொச்]....இங்கு பிறந்த உங்கள் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையாயின் பிறகு ஏன் உங்கள் மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள் அது தேவையில்லை என்பது என் கருத்து...இது எனது தனிப்பட்ட கருத்து தப்பாயின் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

தங்களது கேள்விக்கு பதில் எழுத கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டேன்.

ஏனெனில் தங்களது கேள்விக்கான எமது பதில் பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது போன்றது.

எமது பிள்ளைகள் அங்கு உள்ளவர்களை மணம் முடிப்பது எமக்கு பிடிக்கவில்லை என்று இங்கு யாரும் எழுதவில்லை என்று நினைக்கின்றேன்.

எமக்கு பூரண சம்மதம்

ஆனால் அது அவர்கள் விரும்பி நடக்கவேண்டும் என்பதே எங்களது கருத்து.

அடுத்து

எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்புக்கும் அவர்களுடைய திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்..???இன்னொன்றையும் கூறி நிறுத்தலாம் என்று நினைக்கின்றேன்

எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்பு என்பது ஆரம்பத்தில் எமது பிள்ளைகளுக்கு ஒரு திணித்தலாகத்தான் இருக்கின்றது என்பது எனது கருத்து

ஆனால் பின் வளர்ந்தபின் சில பிள்ளைகள் அதை விரும்பி

ஏற்று நடக்கின்றார்கள் என்பதும் உண்மையே..

திருமணம் என்பது அவரவர் சொந்த விருப்பம் ஆனாலும் ஏன் இங்கு பிற்ந்தவர்கள் அங்கு பிற்ந்தவர்களை மணம் முடிப்பதில் என்ன பிழை...தற்போதைய கால கட்டத்தில் அங்கு பிறந்தவர்களும் இங்குள்ளவர்களுக்கு இணையாக அறிவில் சிறந்து விளங்குகிறார்கள்...இங்குள்ளவர் கதைப்பது வேற்று மொழியிலும் சிறந்து விளங்குகிறார்கள்[ஆங்கிலம்,பிரென்ச்,டொச்]....இங்கு பிறந்த உங்கள் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையாயின் பிறகு ஏன் உங்கள் மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள் அது தேவையில்லை என்பது என் கருத்து.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது அவரவர் சொந்த விருப்பம் ஆனாலும் ஏன் இங்கு பிற்ந்தவர்கள் அங்கு பிற்ந்தவர்களை மணம் முடிப்பதில் என்ன பிழை...தற்போதைய கால கட்டத்தில் அங்கு பிறந்தவர்களும் இங்குள்ளவர்களுக்கு இணையாக அறிவில் சிறந்து விளங்குகிறார்கள்...இங்குள்ளவர் கதைப்பது வேற்று மொழியிலும் சிறந்து விளங்குகிறார்கள்[ஆங்கிலம்,பிரென்ச்,டொச்]....இங்கு பிறந்த உங்கள் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையாயின் பிறகு ஏன் உங்கள் மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள் அது தேவையில்லை என்பது என் கருத்து...இது எனது தனிப்பட்ட கருத்து தப்பாயின் மன்னிக்கவும்.

ரதி நீங்கள் பிளையாக விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.பெற்றோர்கள் அங்குள்ளவர்களை விருமணம் செய்து கொடுப்பதில்தான்.ஆனால் நான் கேட்டது பிள்ளைகளின் விருப்பு இல்லாமல் தங்கள் தேவைகளுக்காக அவர்களை வற்புறுத்தலாமா என்றுதான்.

  • 3 weeks later...

பிள்ளைகளின் விருப்பம் இல்லாமல் பெற்றவர்களோ இல்லை மற்றவர்களோ தங்கள் தேவைகளுக்காக அவர்களை வற்புறித்தி கல்யாணம் செய்து வைப்பது எந்தநாட்டில் என்றாலும் (தாயகத்திலோ அல்லது வெளிநாட்டிலோ ) அது தவறு என்பது எனது கருத்து.

.... கேள்விக்கான எமது பதில் பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது போன்றது.

எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்புக்கும் அவர்களுடைய திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்..???இன்னொன்றையும் கூறி நிறுத்தலாம் என்று நினைக்கின்றேன்

எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்பு என்பது ஆரம்பத்தில் எமது பிள்ளைகளுக்கு ஒரு திணித்தலாகத்தான் இருக்கின்றது என்பது எனது கருத்து

ஆனால் பின் வளர்ந்தபின் சில பிள்ளைகள் அதை விரும்பி

ஏற்று நடக்கின்றார்கள் என்பதும் உண்மையே..

1.

"எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்புக்கும் அவர்களுடைய திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்..."

இப்படியான பதில் சொல்லுரவர்களை அடிக்க வேண்டும் எண்டு நீங்களே சொல்லிபோட்டிங்கள்,...... !!! :(

2.

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு வளர்ப்புக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் ஒண்டும் இல்லை எண்டால், பிறகென்னத்துக்கு இந்த கலை கலாச்சார பண்பாட்டு எல்லாத்தையும் இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிகுடுக்கவேண்டும்.

3.

எமது மொழி கலை கலாச்சார பண்பாட்டு வளர்ப்பு என்பது ஆரம்பத்தில் எமது பிள்ளைகளுக்கு ஒரு திணித்தலாகத்தான் இருக்கின்றது என்று நினைப்பது சரி இல்லை, இதில் திணித்தல் ஒண்டும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.