Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரூர் மாவட்டத்தின் இலங்கை அகதி முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியசாலையில் நேற்று மரணம்‐ இறுதி வாக்குமூலம் இணைப்பு

Featured Replies

கரூர் மாவட்டத்தின் இலங்கை அகதி முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியசாலையில் நேற்று மரணம்‐ இறுதி வாக்குமூலம் இணைப்பு

தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்;று (28.03.10) உயிரிழந்துள்ளார்.

கடந்தவாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர். இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை அழைத்துச் சென்ற காவற்துறையினர் காவற்துறை நிலையத்திற்குச் செல்லாது தனியார் வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுத்திருந்தன.

இதுதொடர்பான தகவல்களை வெளியிடுமிடத்து கணவரைச் சுட்டுக் கொல்லப்போவதாக பத்மாவதியைக் காவற்துறையினர் மூவர் எச்சரித்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் வீடு திரும்பிய இந்தப் பெண் தனக்குத் தானே எண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கடுமையான காயங்களுடன் கரூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதி சிகிச்சை பலனளிக்காது நேற்று மாலை உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்குச் சற்று முன் மனித உரிமைவாதியும் பெண்ணிலைவாதியுமான ஒருவரிடம் தனது இறுதி வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். (அவரது வாக்குமூலம் ஒளிவடிவில் இணைக்கப்பட்டுள்ளது.)

அந்த வாக்கு மூலத்தில் முக்கிய விடயங்கள் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள பெண்ணிலைவாதி அதன் சிறு பகுதியை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை காட்டுவதாகக் கூறி தன்னையும் தனது தாயாரையும் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் எனினும் காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லாது தனியான கம்பவுண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியதுடன் அங்கு தனது கணவரைக் காட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தப் பெண் வயிற்றுவலிகாரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இன்று அவசர அவசரமாக பெண்ணின் சடலத்தை காவற்துறையினர் தகனம் செய்துள்ளனர்.

இது குறித்து இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் கடுமையான விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞரின் சிங்களத்துக்கு ஆமாப்போடும் கலைஞர்,சன் தொலைக்காட்சி இந்தச் செய்தி என்றால் மூச்சுவிடாது.

இதென்னையா அநியாயமாக இருக்கு?

சிங்கள ஆமிக்கும் இவங்களுக்கும் என்னய்யா வித்தியாசமிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னையா அநியாயமாக இருக்கு?

சிங்கள ஆமிக்கும் இவங்களுக்கும் என்னய்யா வித்தியாசமிருக்கு?

என்ன சூறாவளி 1987 - 1990 வரை இவர்கள் எங்கள் மண்ணில் செய்தவற்றை மறந்திட்டீர்களா..??! இவர்களுக்கு பாலியல் வல்லுறவு என்பது அல்வா சாப்பிடுவது போல. அந்த நாடு அப்படி. கலாசாரம் மண்ணாங்கட்டி என்று கொண்டு உள்ள கறுமாந்திரம் செய்யும் கொடூர புத்தி இந்திய ஆண்கள் பலரிடம் இருக்கிறது. கருணாநிதி மட்டும் என்ன குறைஞ்சவனா. அண்மையில் உச்ச நீதிமன்ற வழக்கில் திருமணத்திற்கு முன் உறவு கொள்வது தவறில்லை என்று அறிவிக்க.. உடன இவன் சொல்லுறான்.. அதெல்லாம் இலக்கியங்களிலையே சொல்லியாச்சுன்னு. அவ்வளவு அனுபஸ்தங்களைக் கொண்ட தலைமையில்..ஹிந்திய தேசத்திடம் போய் மனிதம்.. எதிர்பார்ப்பது எமது இயலாமை என்று தான் சொல்ல வேண்டும்.

வருந்துகிறேன் சகோதரி உங்களின் இழப்பிற்காக.

ஐயா நெடுமாறன்.. வைகோ.. அண்ணன் சீமான்.. பாரதிராஜா.. திருமா.. எங்கே போய்விட்டீர்கள். இந்தக் கொடுமைகளை தட்டிக்கேட்க நீங்களும் தயார் இல்லையா..??! பாரத தேசத்தில் நீதி செத்துவிட்டதா..??!

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரு தமிழ் குடும்ப பெண்ணை, பாலியல் வக்கிரம் செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டு காவல் துறை நடந்து கொண்டது மிகவும் கீழ்த்தரமான செயல். :wub:

.

அந்த சகோதரிக்கு அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சகோதரிக்கு அஞ்சலிகள்..

காந்தியும் (மகாத்மா?) பெண் சபலம் கொண்டவர் என்று இந்தியர்கள் சொல்வார்கள்.

நேரு, மவுன்ட் பேட்டன் (ஆங்கிலேய ஆளுனர்) மனவியுடன் தகாத உறவு வைத்திருந்தார்.

தேசத்தின் தந்தை, தேசத்தின் மாமா இப்படி இருக்க பொறுக்கித் தின்னும் தமிழ்நாட்டுப் பொலிசுக்காரனைப் பற்றிப் பேசவா வேண்டும். அதுவும் ஏமாற்று, பிராடுப் பேர்வ‌ளியின் ஆட்சியில்...

என்ன சூறாவளி 1987 - 1990 வரை இவர்கள் எங்கள் மண்ணில் செய்தவற்றை மறந்திட்டீர்களா..??! இவர்களுக்கு பாலியல் வல்லுறவு என்பது அல்வா சாப்பிடுவது போல. அந்த நாடு அப்படி. கலாசாரம் மண்ணாங்கட்டி என்று கொண்டு உள்ள கறுமாந்திரம் செய்யும் கொடூர புத்தி இந்திய ஆண்கள் பலரிடம் இருக்கிறது. கருணாநிதி மட்டும் என்ன குறைஞ்சவனா. அண்மையில் உச்ச நீதிமன்ற வழக்கில் திருமணத்திற்கு முன் உறவு கொள்வது தவறில்லை என்று அறிவிக்க.. உடன இவன் சொல்லுறான்.. அதெல்லாம் இலக்கியங்களிலையே சொல்லியாச்சுன்னு. அவ்வளவு அனுபஸ்தங்களைக் கொண்ட தலைமையில்..ஹிந்திய தேசத்திடம் போய் மனிதம்.. எதிர்பார்ப்பது எமது இயலாமை என்று தான் சொல்ல வேண்டும்.

வருந்துகிறேன் சகோதரி உங்களின் இழப்பிற்காக.

ஐயா நெடுமாறன்.. வைகோ.. அண்ணன் சீமான்.. பாரதிராஜா.. திருமா.. எங்கே போய்விட்டீர்கள். இந்தக் கொடுமைகளை தட்டிக்கேட்க நீங்களும் தயார் இல்லையா..??! பாரத தேசத்தில் நீதி செத்துவிட்டதா..??!

ஆரம்பத்தில IPKF ல இருந்த தமிழக சிப்பாய்கள் அவ்வளவுக்கு அநியாயம் செய்யேல்ல. பின்னர் வந்த காட்டுமிராண்டிகள் தான் அநேகமான கொடுமைக்கும் காரணம். அதிலையும் மராட்டி சனியன்களை நினைத்தால் இண்டைக்கும் இரத்தம் கொதிக்கும்.

இந்த தமிழ்நாட்டிலையும் இப்படி நடக்குமா? அகதியே அபளைதானே அதை விட அவன்ர அக்க தங்கை அவங்களுக்கு நன்றாக இருந்திருப்பாள்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அச் சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ஈனபிறப்புகளாக இருக்கிறார்கள் தமிழ் நாட்டு காவல்படையினர். தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு என்ன நடந்தது?.சனி நாயக நாடு அழிந்தே போக வேண்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு என்ன நடந்தது?.சனி நாயக நாடு அழிந்தே போக வேண்டும். :rolleyes:

இந்திய ஊடகங்களா? வட இந்தியர்களால் இந்தியர்கள் அவுஸ்திரெலியாவில் கொல்லப்பட்டதையே அவுஸ்திரெலியர்களால் இந்தியர்கள் கொல்லப்பட்டதாக செய்திவெளியிடும் ஊடகங்களா உண்மை பேசப்போகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.