Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல முக்கிய முன்நாள் அமைச்சர்களுக்கு பதவிகள் இல்லை

Featured Replies

பல முக்கிய முன்நாள் அமைச்சர்களுக்கு பதவிகள் இல்லை

வவுனியா நிருபர்

சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010

முன்னைய அரசில் மஹிந்தவிற்கு அதீத விசுவாசம் காட்டிய பலருக்கு இந்த முறை அமைச்சு பதவி உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. இதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் அமுனுகம , கேகலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த கமகே, அனைத்து கட்சி குழு தலைவர் பேராசிரியர் விஸ்வ விதாரண, எஸ்.பி.திஸ்ஸ நாயக்க, காமினி திஸ்ஸ நாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸ நாயக்க உட்பட பலருக்கு அமைச்சுப்பதவிகள் உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இதுவரை எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை என அறியப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, 39 பிரதியமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கே பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புதிதாக போட்டியிட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளோ, பிரதியமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

அமைச்சர்களாக பி.தயாரத்ன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ஏழு பேருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இந்திக்க பண்டாரநாயக்க, சரத் குணரத்ன மற்றும் நந்தமித்திர ஏக்கநாயக்க ஆகியோரே பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டதுடன் அதில் பலர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளி நாடுகளுக்காக அவர்களிடமிருந்து நிதிகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சரவை.

உட்கட்சிப் பூசலைத் தடுப்பதற்காக மேலும் பல அமைச்சரவைகள் உருவாக்கப்படும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

யூ என் பி ஆட்களை மேலும் கவர இந்த திட்டமாம். யூ என் பி யினர் பலருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இதுக்கு தானாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவரில இறக்கிறதும் ஏத்திறதும் நடக்கிறது தானே! அடுத்த தேர்தலோட மகிந்தா இறங்கிடுவார்.....தமிழரா இருந்தால்தான் காணாமல் போயும் தலைவரா வச்சிருப்பினம். :lol:

  • தொடங்கியவர்

சிங்களவரில இறக்கிறதும் ஏத்திறதும் நடக்கிறது தானே! அடுத்த தேர்தலோட மகிந்தா இறங்கிடுவார்.....தமிழரா இருந்தால்தான் காணாமல் போயும் தலைவரா வச்சிருப்பினம். :lol:

அதுக்கு ஒரே காரணம் விலை போதல்... வசதிக்காகவும் வாய்ப்புக்காகவும் சொந்த இனத்தை கூறு போடும் ஆக்கள் தான் இப்ப முன்னுக்கு வருகினம்... வாறவன் தகுதி இல்லாதவனாகவும் அர்ப்பணிப்பு இல்லாதவனாகவும் இருப்பதுதான்... ஆனால் சிங்களவன் அப்படி இல்லை தனக்கு யார் அடிச்சாலும் அவன் தமிழனுக்கு தான் திருப்பி அடிப்பான்...! அது யார் தலைவராக வந்தாலும்...

உதாரணத்துக்கு டக்கிளஸ் மாமாவை எடுங்கோ... புலிகளோடை பிரச்சினை எண்ட உடனை அவர் நாடின இடம் இந்தியா வும் சிங்களவனும் தான்... மக்களை திரட்டி எதிர்க்கவோ சந்திக்கவோ முடியாத பேடிகள்...

எதிரியோடை சேர்ந்து தமிழரை அழிக்க உதவி எதிர்த்தவையாம்... இப்படி ஆக்கள் இருக்கும் போது தமிழ் மக்கள் எப்படி உங்களிலை நம்பிக்கையை கொண்டு இருப்பினம்...?

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 ஆயிரத்த கூட்டி குடுத்திட்டு 3 லச்சத்த விட்டிட்டு ஓடின தலைவர்மாரெல்லாம் இருக்கேக்க!!!??? :lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரத்த கூட்டி குடுத்திட்டு 3 லச்சத்த விட்டிட்டு ஓடின தலைவர்மாரெல்லாம் இருக்கேக்க!!!??? :lol:

பல துரோகிகள் தான் காரணமாக இருந்தார்கள். ஏன் வேளி நாட்டுக்கு தப்பியோடிய தமிழரும் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்? ஒரு சிலர் , தலைவர் உட்பட உயிரை கொடுத்து போராட மிச்சப்பேர் விசிலடித்தான் குஞ்சாக இருந்ததால் தான் முடிவு அப்படி அமைந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் கடமையை அவரவர் செய்கிறார்கள் விட்டு தள்ளுங்கப்பா.... யாரோ ஒருவர் கூறுவதால் நெஞ்சுறுதி மிக்க ஈழ தோழர்கள் மாற போவது இல்லை....

ஒரு சிறிய கதை:

ம்ம் கடந்த காலங்களில் ஒருமுறை அய்யர் வீட்டு மேல் மாடியில் குடி இருந்தேன் ... அய்யர் ஒரு நாய் வளர்ப்பார்... அது நாங்களும் தோழர்க்ளும் மாடி படி ஏறும் போது.... அடிக்கடி குரைப்பதாகவும் கடிக்க போகதாகவும் கர் புர் என்று குரைக்கும்... இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை... எல்லா பிஸ்கெட்டு ... கறிதுண்டுகள் எல்லாம் போட்டு பார்த்தாகிவிட்டது .... ஆனால் அதை போட்ட கடனுக்காக குரைக்காமல் இருந்திருக்கலாம்... அதை தின்றுவிட்டு மறுபடி குரைக்க ஆரம்பிக்கும்.... ம்ம்ம் ஒரு நாள் நானும் சரி இதற்கு ஒரு வழி காணவேண்டும் என நானும் நன்றாக உண்டு விட்டு அதனருகில் தூர சேர் போட்டு அமர்ந்தேன்.... ம்ம்ம் 1 மணி நேரம் குரைத்தது ...அடுத்து... 2 மணி நேரத்திற்கு எப்போதாவது தலை திரும்பினால் வள் வள்... கடைசியில்... அதுவே பேசாமல் படுத்து கொண்டது...

யாருக்கு எவ்வளவு முக்க்யத்துவம் நாம் அளிக்கிறோமொ அந்த அளவிற்கே அவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள் அதை ஈழதோழர்கள் கவனித்தில் கொள்ளுதல் நன்று....குறைந்த பட்சம் அவர்களுடைய நெஞ்சுறுதியையும் கடமை தவறாது உழைப்பதையுமாவது அன்னபறவை போல ஈழ தோழர்கள் கற்று கொள்ளவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் கடமையை அவரவர் செய்கிறார்கள் விட்டு தள்ளுங்கப்பா.... யாரோ ஒருவர் கூறுவதால் நெஞ்சுறுதி மிக்க ஈழ தோழர்கள் மாற போவது இல்லை....

யாருக்கு எவ்வளவு முக்க்யத்துவம் நாம் அளிக்கிறோமொ அந்த அளவிற்கே அவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள் அதை ஈழதோழர்கள் கவனித்தில் கொள்ளுதல் நன்று....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் விசுகு...

  • தொடங்கியவர்

50 ஆயிரத்த கூட்டி குடுத்திட்டு 3 லச்சத்த விட்டிட்டு ஓடின தலைவர்மாரெல்லாம் இருக்கேக்க!!!??? :lol:

50 ஆயிரத்தை நாங்கள் கொல்ல குடுத்தம் எண்டது உண்மை தான்... வானத்தாலை டண் கனக்கிலை கொண்டுவந்து கொட்டும் போது எங்களாலை வலை போட்டு தடுக்க முடியவில்லை... சர்வதேசத்திட்டை முறை இட்டால் தனது செல்வாக்கால் இந்தியா தடுத்தது... ஆயுதங்களோடை போன எங்கட ஏழு கப்பல்களை கடைசிக்கட்டத்திலை கடலிலை வைத்து அழித்தது... ஆனந்த புரத்திலை தனது படைவீரர்களை கொண்டு வந்து முன்னணியில் நிறுத்தி விச வாயுக்கள் அடித்து கொண்றது... இவ்வளவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் துணை நிண்டு செய்விச்சவை நல்லவை ஆனால் காப்பாத்த எங்களால் முடியாமல் போனதால் நாங்க கெட்டவையோ...??

சரி மக்கள் வெளியிலை வந்ததுகளே... ஆனால் அதுக்கு பிறகு நடந்த கொலைகளை எங்கை கொண்டு போய் சேர்க்க போறியள்...?? அந்த கொலைகளை காட்டி குடுத்து செய்யதவர்களையும் துணை நிண்டவைகளுமே இப்ப தமிழரின் தலைமை...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நடந்தது புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும். உலக நாடுகளும் வெளியில விடு எண்டுதான் சொல்லிக்கொண்டிருந்தது. அக்கராயனில ராணுவம் நிக்கேக்க தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் வெல்லமுடியாத யுத்தமெண்டு. கூட்டிக்கொண்டுபோன தலைவர் கிளிநொச்சி பிடிபட்டபோதாவது விட்டிருக்கலாம், விடாததுக்கு காரணம் தங்களுடைய பாதுகாப்புத்தானே தவிர மக்கள் பாதுகாப்பில்லை. மக்களுக்காக போராட வெளிக்கிட்டு மக்களையே கூட்டிக்குடுத்த கொடுமை வெளிக்கிட்ட மக்கள சுட்ட பெருமை கூட்டிக்கொண்டு போனவைய தான் சேரும். :lol:

  • தொடங்கியவர்

போர் நடந்தது புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும். உலக நாடுகளும் வெளியில விடு எண்டுதான் சொல்லிக்கொண்டிருந்தது. அக்கராயனில ராணுவம் நிக்கேக்க தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் வெல்லமுடியாத யுத்தமெண்டு. கூட்டிக்கொண்டுபோன தலைவர் கிளிநொச்சி பிடிபட்டபோதாவது விட்டிருக்கலாம், விடாததுக்கு காரணம் தங்களுடைய பாதுகாப்புத்தானே தவிர மக்கள் பாதுகாப்பில்லை. மக்களுக்காக போராட வெளிக்கிட்டு மக்களையே கூட்டிக்குடுத்த கொடுமை வெளிக்கிட்ட மக்கள சுட்ட பெருமை கூட்டிக்கொண்டு போனவைய தான் சேரும். :lol:

அந்தளவு மக்களை அப்பவும் பிடிச்சு கொலை செய்துதானே இருப்பினம்....??? யாழ்ப்பாணம் பிடிப்பட்ட போதும், கிழக்கு பிடிப்பட்ட போதும் செய்தவைகள் எங்களுக்கு மறந்து போட்டுது எண்டு நினைக்கிறியளோ....???

  • கருத்துக்கள உறவுகள்

3 இலட்சம் மக்களை 10 ஆயிரம் புலிகள் எப்படி ஆயுத முனையில் ஒரு குறுகிய இடத்தில் இருந்து எப்படி வெளியேறாமல் தடுப்பது?அதுவும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற? சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களுடன் சுற்றி வளைத்திருக்கும் பொழுது அவர்களை எதிர்த்துத் தாக்காமல் மக்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர் என்பது நகைப்புக்கிடமானது.மக்களைத் தாக்கியது இந்தியாவின் ஆலோசனையின் பேரில் புலிகளின் சீருடையில் இருந்த ஒட்டுக் குழுக்களே.அதைக் கவனமாக செய்மதிப் படம் பிடித்து மக்களைப் புலிகளுக்கு எதிரான நிலையெடுக்க வைப்பதற்காக சர்வதேச ஊடகங்களுக்குப் பரப்பினார்கள் என்பதே உண்மை.அந்தக் காட்சி சர்வதேச நாடுகளின் செய்மதியிலும் பிடிபட்டு இருக்கலாம்.சரளமாக தமிழில் கதைத்தபடி புலிகளின் சீருடையில் தங்களைத் தாக்கியவர்கள் புலிகளே என்று ஒரு சில மக்கள் கருதியிருக்கலாம் சொல்லியுமிருக்கலாம்.இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே சதிவேலைகள் செய்தவர்கள் செயற்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தளவு மக்களை அப்பவும் பிடிச்சு கொலை செய்துதானே இருப்பினம்....??? யாழ்ப்பாணம் பிடிப்பட்ட போதும், கிழக்கு பிடிப்பட்ட போதும் செய்தவைகள் எங்களுக்கு மறந்து போட்டுது எண்டு நினைக்கிறியளோ....???

ம்....தேர்தலில சைக்கில ஓடினவைக்கு நடந்ததுகளில இருந்து உது எந்த அளவு உண்மையெண்டு தெரியிது. :D:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 இலட்சம் மக்களை 10 ஆயிரம் புலிகள் எப்படி ஆயுத முனையில் ஒரு குறுகிய இடத்தில் இருந்து எப்படி வெளியேறாமல் தடுப்பது?அதுவும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற? சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களுடன் சுற்றி வளைத்திருக்கும் பொழுது அவர்களை எதிர்த்துத் தாக்காமல் மக்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர் என்பது நகைப்புக்கிடமானது.மக்களைத் தாக்கியது இந்தியாவின் ஆலோசனையின் பேரில் புலிகளின் சீருடையில் இருந்த ஒட்டுக் குழுக்களே.அதைக் கவனமாக செய்மதிப் படம் பிடித்து மக்களைப் புலிகளுக்கு எதிரான நிலையெடுக்க வைப்பதற்காக சர்வதேச ஊடகங்களுக்குப் பரப்பினார்கள் என்பதே உண்மை.அந்தக் காட்சி சர்வதேச நாடுகளின் செய்மதியிலும் பிடிபட்டு இருக்கலாம்.சரளமாக தமிழில் கதைத்தபடி புலிகளின் சீருடையில் தங்களைத் தாக்கியவர்கள் புலிகளே என்று ஒரு சில மக்கள் கருதியிருக்கலாம் சொல்லியுமிருக்கலாம்.இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே சதிவேலைகள் செய்தவர்கள் செயற்பட்டார்கள்.

அமிர்தலிங்கத்த போட்ட மாதிரி வந்து போட்டாங்கள் எண்டு சொல்லுறீங்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.