Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை

Featured Replies

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது.

தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?

http://www.vannionline.com/2010/04/blog-post_28.html

மக்கள் பேரவைகளும் அனைத்துலக தொடர்பகத்துக்கு உரிமை கொண்டாடுபவர்களும் இந்த மக்களின் துயரை துடைக்க மின்னல் வேகத்தில் முன் வருவார்கள். ஒரு முன் நிபந்தனை இனி மேல் இதை சாட்டி புலம் பெயாந்த மக்களிடம் வசூல் வேட்டையில் இறங்கக் கூடாது.

Edited by athiyan

  • தொடங்கியவர்

மக்கள் பேரவைகளும் அனைத்துலக தொடர்பகத்துக்கு உரிமை கொண்டாடுபவர்களும் இந்த மக்களின் துயரை துடைக்க மின்னல் வேகத்தில் முன் வருவார்கள். ஒரு முன் நிபந்தனை இனி மேல் இதை சாட்டி புலம் பெயாந்த மக்களிடம் வசூல் வேட்டையில் இறங்கக் கூடாது.

வேறு எங்கிருந்து இவர்களுக்கான உதவிகளைப் பெறுவது? பரிதாபத்துக்குரியவர்களைப் பரிகாசம் செய்யக் கூடாது. நல்லவர்கள் உதவி நாடிவந்தால் உதவுவதற்குத் தயாராகவிருப்போம்.

ஏற்கனவே இவர்களுடன் உள்ள பெரு நிதியை இந்த மக்களின் துயர் துடைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என்போன்றவர்களின் ஆதங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இவர்களுடன் உள்ள பெரு நிதியை இந்த மக்களின் துயர் துடைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என்போன்றவர்களின் ஆதங்கம்

எல்லோரது விருப்பமும் அது தான். அவர்களுக்கு காலத்தே செய்யும் உதவி தான் இப்போது அவசரமானது.

அதனை அவர்களுக்குச் செய்யாமல், கடைசியில் மொத்தப் பணத்தையும் சிங்களவனிடம் கொடுக்காமல் இருக்கவேண்டுமே..... என்னும் பயமும் எழுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி இணைத்த இறைவன் அவர்களுக்கு,

இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் யாராவது தங்கள் தொடர்பில் அல்லது நாம் தொடர்பு கொள்ளும் வகையிருப்பின் அறியத்தாருங்கள். நேசக்கரத்தால் இயற்ன உதவியை இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்க முயற்சி செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி இணைத்த இறைவன் அவர்களுக்கு,

இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் யாராவது தங்கள் தொடர்பில் அல்லது நாம் தொடர்பு கொள்ளும் வகையிருப்பின் அறியத்தாருங்கள். நேசக்கரத்தால் இயற்ன உதவியை இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்க முயற்சி செய்யலாம்.

இப்ப இதே முக்கியம்.சம்பந்நதர் நல்வவாரா,கஜேந்திரன் நல்லவாரா,டக்ளஸ் நல்லவவரா,இது தான் எங்களின் முக்கிய பிரச்சனை :( அங்க சனம் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன.எங்கட பிழ்ழைகள் பாடசாலையில் இருந்து வீடு செல்ல முதல் (2 நிமச வாகன தூரம்)யோகéகற குடுக்கும் கூட்ட்ம். :D

இப்ப இதே முக்கியம்.சம்பந்நதர் நல்வவாரா,கஜேந்திரன் நல்லவாரா,டக்ளஸ் நல்லவவரா,இது தான் எங்களின் முக்கிய பிரச்சனை :( அங்க சனம் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன.எங்கட பிழ்ழைகள் பாடசாலையில் இருந்து வீடு செல்ல முதல் (2 நிமச வாகன தூரம்)யோகéகற குடுக்கும் கூட்ட்ம். :D

பலமாய் கத்தி தம்பட்டம் அடிச்சு செய்யிறவை மட்டும் தான் உண்மையிலை செய்பவர்கள் எண்டுறீயள்...!

எங்களிட்டை சிங்கள அரசாங்க ஆதரவு இல்லை... எதையும் களவாய் தான் செய்ய வேண்டி கிடக்கு அதாலை எங்களுக்கு குரல் வெளியிலை வருகுது இல்லை அண்ணை...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு ஒளித்து மக்களுக்கான உதவியைத் திறம்படச் செய்யமுடியாது. இதைக் காரணம் காட்டி அவலப்படும் மக்களைக் கைவிட்டுவிட்டு, அவர்கள் பட்டினியால் மரிக்கும்போது செய்தி போட்டு கண்ணீர் வடிக்கவும் ஒரு கூட்டம் புலம்பெயர் நாடுகளில் காத்திருக்கின்றது.

சிங்கள அரசுக்கு ஒளித்து மக்களுக்கான உதவியைத் திறம்படச் செய்யமுடியாது. இதைக் காரணம் காட்டி அவலப்படும் மக்களைக் கைவிட்டுவிட்டு, அவர்கள் பட்டினியால் மரிக்கும்போது செய்தி போட்டு கண்ணீர் வடிக்கவும் ஒரு கூட்டம் புலம்பெயர் நாடுகளில் காத்திருக்கின்றது.

அங்கே மக்களுக்கான தேவைகள் என்பது பரந்து விரிந்து கிடக்கிறது... அவை ஓர் இருவர் மட்டும் செய்து விட்டு போகக்கூடிய விடயங்களும் இல்லை...

தலைமறைவாக இருக்கும் போராளிகளில் இருந்து பிடிபட்ட போராளிகள், சரண் அடையாது இருக்கும் முன்னாள் போராளிகள், ஊனம் உற்ற போராளிகள், பிறகு அவர்களின் குடும்பங்கள், அதன் பின்னர் போராட்டத்துக்காய் வீரர்களை இழந்த குடும்பங்கள், அனைத்து தமிழ் மக்கள் எண்று எல்லாருக்கும் தேவைகள் உள்ளது... ( தலை மறைவாக இருக்கும் போராளிகளை விட்டு விடலாம்)

இவைகளை எல்லாம் செய்ய வேண்டும் எண்றால் ஒரு அமைப்பு ரீதியான செயற்பாடுகள் தேவை... இந்த அமைப்புக்களை தாயகத்தில் உருவாக்க உதவிகள் கிடைக்குமா...?? நாங்களாக ஒரு அமைப்பை உருவாக்கி செய்ற்படுத்த முடியும்... ஆனால் அனுப்பும் சாமான்கள் ஊருக்கு போகுமா...? அல்லது அனுப்பு அமைப்பு புலிகளின் அமைப்பு எனும் பெயரில் தடை செய்ய படுமா...??

அப்படியே ஒரு அமைப்பை சிங்கள அரசு அங்கீகரித்தாலும் இங்கிருக்கும் ஆக்கள் சனத்திட்டை காசு வாங்கி தங்கட குடும்பத்தை வாழ வைக்கிறாங்கள் எண்டு புரளி கிழப்பியே செயற்படாது தடுக்க மாட்டார்களா...??

எனக்கு தெரிய நீங்கள் செய்யக்கூடிய விடயம் எண்றால் உங்களுக்கு தெரிந்தவர் அறிந்தவர்கள் ஊடாக நீங்களே நேரடியாக உதவுவது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றில் இருந்த ஆய்வுக் கட்டுரையை வாசித்தபின்னர் புலம்பெயர் நாடுகளிலும் தேசியத்தை முன்நிறுத்துவோர் ஒளிக்கவேண்டிவரும் என்று தெரிகின்றது. எனவே ஒளிக்காமல் நேரிடையாக உதவ எதிர்க்கட்சிகள் என்று எதையும் விட்டுவைக்காத மகிந்தவை அனுசரித்துத்தான் போகவேண்டும்.ஆகவே உதவிபுரிய முனையும் அமைப்புக்கள் அரசைப் புறந்தள்ளி உண்மையில் உதவமுடியாது. அவர்கள் கேட்கும் 10% ஐக் கொடுத்தாலாவது 90% வீதம் தேவைப்படுவர்களுக்கு போகும்தானே..

தமிழ்நெற் ஆய்வு..

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=31637

அவர்கள் கேட்கும் 10% ஐக் கொடுத்தாலாவது 90% வீதம் தேவைப்படுவர்களுக்கு போகும்தானே..

தமிழ்நெற் ஆய்வு..

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=31637

அவர்கள் 10% கேட்டால் உண்மையில் பறவாய் இல்லைதான்... ஆனால் 90% அல்லவா கேக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி இணைத்த இறைவன் அவர்களுக்கு,

இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் யாராவது தங்கள் தொடர்பில் அல்லது நாம் தொடர்பு கொள்ளும் வகையிருப்பின் அறியத்தாருங்கள். நேசக்கரத்தால் இயற்ன உதவியை இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்க முயற்சி செய்யலாம்.

http://rohmay2009.com/

இந்த இணையத்தில் உள்ள முயற்சியும் இவர்களுக்கு உதவும்.

அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் அவர்களை எல்லோரும் கைவிட்டுவிடவில்லை. பலர் பலவிதமாக உதவி வருகின்றனர். ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். அப்படி யாராவது இருந்தால் தனிப்பட்ட செய்தி அனுப்பவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைப்பற்றி என்ன கவலை எண்டமாதிரியெல்லோ பல விடயம் நடக்குது. உங்க அண்ணை, தேசியம், தாயகம் பேசினவையள் கனபேர் இப்ப கதிரைச் சண்டை ஒரு பக்கம் அது இது என்றெல்லோ போகினம். அண்மையில என்ர நண்பரொருவர் மன வேதனையோட சொன்ன விடயம் துணை நிறுவனங்களே போராட்டத்தைப் பற்றிக் கதைக்கக் கூடாது எண்டமாதிரி சொல்லுகினமெண்டு சொன்னார். ஏனெண்டு கேட்க , தமிழாலய நிகழ்வொண்டுக்கான கலந்துரையாடலிலை போராட்டத்தப் பற்றி உச்சரிச்சுப் போட வேண்டாம் எண்டாராம் நிர்வாகி. இருந்த வாத்திமாரும் முழுசிக் கொண்டிருந்துட்டு வந்தினமாம்.வாத்திமாரிட்ட ஏன் கதைக்கேல்லையெண்டு கேட்டா, கதைச்சா எண்டு இழுத்தார்... !

கதைச்சா வாத்தி வேலை போயிடுமெண்டோ? என்று யோசித்தன்.

தேசியத்தின் பெயரால் உருவாகிய நிறுவனங்கள் தேசியத்தின் பெயரால் குளிர்காய்வோரது கரங்களில். யேர்மனை எடுத்தால் எவளவோ செய்யலாம். அதற்கு உண்மையான தேசிய உணர்வு உள்ளவர்கள் பொறுப்பகளில் இருக்க வேணும். அதாவது நரித்தோல் போர்த்திய புலிகளல்ல. உண்மையான ..... கவனிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.