Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!

Featured Replies

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!

வீரகேசரி இணையம் 7/16/2010

முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?

இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.

ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

hen-and-egg.jpg

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.

இந்த 'வோக்லெடின்-17' செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.

'வோக்லெடின்-17' புரோட்டின், 'கிறிஸ்டல்', 'நியூகிளீசா'க மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றனர்.

இனிமேல் யாரிடமும் யாரும் "முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? " என்றெல்லாம் கேட்டு, 'டோச்சர்' பண்ணக்கூடாது. சரிதானா?

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25498

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முதலாவது கோழி எப்படி வந்தது? அதை சொல்லட்டும் முதலில்!

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

அப்ப முதலாவது கோழி எப்படி வந்தது? அதை சொல்லட்டும் முதலில்!

வாத்தியார்

*********

கடவுள் ஆணையும் அவனுக்குத் துணையாக பெண்ணையும் படைத்தவர். அதே போல தான் மிருகங்களையும், பறவைகளையும், கடல் உயிரினங்களையும் (சோடிகளாக படைத்து இருக்கலாம்) படைத்து அதன் பிறகு தான் அவைகளை பல்கிப் பெருகுங்கள் என்று கட்டளை இட்டார்.

அதனால பறவைகளை சோடிகளாக படைக்கும் போது ஒரு கோழியும் ஒரு சேவலையும் படைத்து இருக்கலாம் தானே?

கடவுள் ஆணையும் அவனுக்குத் துணையாக பெண்ணையும் படைத்தவர். அதே போல தான் மிருகங்களையும், பறவைகளையும், கடல் உயிரினங்களையும் (சோடிகளாக படைத்து இருக்கலாம்) படைத்து அதன் பிறகு தான் அவைகளை பல்கிப் பெருகுங்கள் என்று கட்டளை இட்டார்.

அதனால பறவைகளை சோடிகளாக படைக்கும் போது ஒரு கோழியும் ஒரு சேவலையும் படைத்து இருக்கலாம் தானே?

குட்டி, இன்னுமா கடவுள் உயிர்களை படைக்கின்றார் என்பதை நம்புகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, இன்னுமா கடவுள் உயிர்களை படைக்கின்றார் என்பதை நம்புகின்றீர்கள்?

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் கற்றுக் கொண்டவை (மிக மிக மிக மிக மிக மிக மிக மிக) சிறிய அளவே ஆகும்.

பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் சிறந்து விளங்கிய விஞ்ஞானி அயன்சைரன் கூட கடவுளை நம்பி இருக்கிறார். காரணம்.. இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் இன்னும் மர்மமாகவே உள்ளது. அதற்கு விடை காணாமல்.. கோழி முட்டை தர்க்கக் கேள்விக்கும் விடை காண்பது இலகு அல்ல.

கோழியில் இருந்த புரதம் தான் முட்டையில் இருக்கென்பது.. பசுவில் உள்ள புரதம் தான் பாலில் உள்ளது என்பது போன்றது. அதைத்தான் சொல்வார்கள் பசு தன் இரத்தத்தை பாலாக்கி தருகிறது என்று. இந்த எளிமையான உண்மைக்கு இத்தனை பெரிய ஆய்வா..??! ஆனால் இதன் மூலம் குறிப்பிட்ட தர்க்க வினாவிற்கு தெளிவாக பதிலிறுக்க முடியாது. அதற்கு பிரபஞ்சத்தின் தோற்றம் எப்படி நிகழ்ந்தது.. அதன் முதன்நிலை நிகழ்வுக்கு யார் காரணம்.. அல்லது எது காரணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்காதவரை.. கோழி முட்டை வினாவிற்கும் பதில் சொல்ல முடியாது. :lol:

  • தொடங்கியவர்

குட்டி, இன்னுமா கடவுள் உயிர்களை படைக்கின்றார் என்பதை நம்புகின்றீர்கள்?

கடவுள் உயிர்களைப் படைத்தார் என்று நம்புறேன்

அப்ப கடவுள் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடந்தபோது "holiday " இல் இருந்தவரே?

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின்படி கோழிக்கும் சேவலுக்கும் தான் முதல் முட்டை கிடைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெவ்வேறு பறவைகளின் கலப்பு விருத்தியினாலும் கோழி என்ற பறவையினம் உருவாகியிருக்கலாம்.

உலகின் முதற்கருவின் பரிணாம வளர்ச்சியே சகல மற்றைய உயிரினங்களினதும் பிறப்பு. மனிதன் உட்பட.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடவுள் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடந்தபோது "holiday " இல் இருந்தவரே?

சும்மா holiday அல்ல honey moon holiday யாம் ,இன்னொரு பிரபஞ்சத்தை படைப்பதில் பிசியா இருந்தவராம் அதுதான் அவர் முள்ளிவாய்காலை மறந்திட்டராம்

  • கருத்துக்கள உறவுகள்

சேவலா, கோழியா, முட்டையா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? :lol::lol:

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் கற்றுக் கொண்டவை (மிக மிக மிக மிக மிக மிக மிக மிக) சிறிய அளவே ஆகும்.

பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் சிறந்து விளங்கிய விஞ்ஞானி அயன்சைரன் கூட கடவுளை நம்பி இருக்கிறார். காரணம்.. இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் இன்னும் மர்மமாகவே உள்ளது. அதற்கு விடை காணாமல்.. கோழி முட்டை தர்க்கக் கேள்விக்கும் விடை காண்பது இலகு அல்ல.

ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளிகள் யாழ் தளத்தில் உள்ளதை நினைக்க புல்லரிக்கிறது.

ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளிகள் யாழ் தளத்தில் உள்ளதை நினைக்க புல்லரிக்கிறது.

ஐன்ஸ்டீன் கடவுளை நம்பினார் என்பது மதவாதிகள் கிளப்பிய புரட்டு. எங்கே proof ?

அதோடு , ஐன்ஸ்டீன் கடவுளை நம்பினார் என்று வைத்தாலும் , அது சரியாய் இருக்க வேண்டும் என்றில்லை. அவர் வாழ்ந்த காலம் வேறு; நாம் இருக்கும் காலம்வேறு.

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நல்லவரா?கெட்டவரா? ஏனென்றால்.......................முதலில் விடையைச் சொல்லுங்கள் பிறகு மிகுதியைத் தொடரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.