Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி :lol:

20-cm-with-tna-leaders200.jpg

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி [^] இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,

இலங்கையில் வாழும் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதல்வரிடம் கூறினோம்.

இந்தியா என்ன நடவடிக்கை [^] எடுக்கும் என்பதை பொருத்து தான் மற்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்கும். ஆகையால், நாங்கள் இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் உள்ள நிலவரத்தை பற்றி எடுத்துரைத்தோம்.

தமிழக முதல்வரை சந்தித்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் [^] மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் [^] கண்டிக்கத்தக்கது என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/07/20/tamilnadu-cm-karunanidhi-tna-srilanka-tamils.html

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://www.youtube.com/watch?v=rNPcRPzhZgA

இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காமடி பண்ணுறார் போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைஞர் கருணாநிதி அவர்கள் பெரிய நடிகரும் கூட .

தில்லியும் தமிழ் நாடு அரசும் சேர்ந்து நடத்தும் நாடகம். பான் கீ மூன் குழுவுக்கு பதிலாக இந்தியா ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பும். அந்த குழு இலங்கையில் மக்கள் எல்லோரும் அவரவர் இடங்களில் மீள் குடியேற்ற பட்டுலார்கள் மனித உரிமைசெயல் எதுவும் .இடம் பெறுவதில்லை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக சந்தோசமாக பக்கத்துக்கு பக்கத்தில் வசிக்கிறார்கள் என்று ஒரு அறிக்கையை சமர்பிக்கும். இந்த அறிக்கை பான் கீ மூன் குழு சமர்பிக்கும் அறிக்கையை தூக்கி எறிந்துவிடும்.

காலம் கனிகிறது. நிறங்களும் திசைகளும் மாறுகின்றது . இந்த சமயத்திலாவது கெடுப்பதையும் தூற்றுவதையும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைத்து விட்டு இருக்கலாமே.

விடுதலை புலிகளுக்கான தடை நீடிக்க முதல் காரணமாக இந்தியா குறிப்பிட்டது இணைய தளங்களில் வரும் கருத்துகளை தான் . ஞாபகம் இருக்கட்டும்

காலம் கனியலாம், நிறங்களும் திசைகளும் மாறலாம் , ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியாது ! இது வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ கொல்லுறாங்கப்பா! :blink:

இதை விட கொடுமையான விஷயம் எதுவும் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கனிகிறது. நிறங்களும் திசைகளும் மாறுகின்றது . இந்த சமயத்திலாவது கெடுப்பதையும் தூற்றுவதையும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைத்து விட்டு இருக்கலாமே.

விடுதலை புலிகளுக்கான தடை நீடிக்க முதல் காரணமாக இந்தியா குறிப்பிட்டது இணைய தளங்களில் வரும் கருத்துகளை தான் . ஞாபகம் இருக்கட்டும்

கலைஞர் வாழ்க!

தமிழ் காக்க வந்த சிங்கம் வாழ்க!

சிங்கத்தை வாழவைத்த இந்தியா வாழ்க!

அதன் பிரதமரும் இன்னபிற ஊழியரும் வாழ்க!

செந்தமிழ் மாநாடு கண்ட சிங்கம் சிக்கல்கள் ஏதும்மற்று வாழ்க!

பாவமே அறியாத பாரத நாடே நீ நீடுழி நீடுழி வாழ்க!

காலம் கனிகிறது. நிறங்களும் திசைகளும் மாறுகின்றது . இந்த சமயத்திலாவது கெடுப்பதையும் தூற்றுவதையும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைத்து விட்டு இருக்கலாமே.

விடுதலை புலிகளுக்கான தடை நீடிக்க முதல் காரணமாக இந்தியா குறிப்பிட்டது இணைய தளங்களில் வரும் கருத்துகளை தான் . ஞாபகம் இருக்கட்டும்

இந்திய பயங்கரவாதிகளின் போக்கிரித்தனத்துக்காக இணையங்களில், இந்திய பயங்கரவாதிகளை பொய்யாக ஜனநாயகவாதிகள் என்று ஈழத் தமிழன் கூறமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.