Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர மறுத்த வைரமுத்து வரிகள் .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர மறுத்த வைரமுத்து வரிகள் .....

வைரமுத்து தலைமையில் தமிழகக் கலைஞர்கள் சிலர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இங்குள்ள தமிழர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதும் அவர்களை நோக்கியே இவ்வாறான கலைப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே.

இந்தக் கலைப்பயணத்தில் தலமையேற்று வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவுஸ்த்திரேலிய சமூக வானிலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்புச் சேவை சார்பாக பிரபாகரன் எனும் அறிவிப்பாளர் பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியை மூன்று பாகங்களாக எஸ்.பி.எஸ் வானொலி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஒலிபரப்பி வந்தது.முதலிருவாரங்களிலும் அவர் தமிழ் பாடல்த்துறைக்குச் செய்த பணிகள், தேசிய விருது நிகழ்வுகள், அவருக்குப் பிடித்த பாடல்கள் என்று பேட்டி போய்க்கொண்டிருந்தது. மூன்றாவது பாகம் சற்று வித்தியாசமானது.

பேட்டி கண்ட பிரபாகரன் வைரமுத்துவிடம் பின்வருமற்று கேட்கிறார், "கவிப்பேரர்சு வைரமுத்து அவர்களே, உங்கள் போன்ற தமிழ் இன உணர்வாளர்கள் கலைஞரைச் சுற்றியிருந்தும் தமிழினக்கொலையை தடுத்து நிறுத்த முடியாமல்ப் போய்விட்டதே? அது ஏன்?"

ரெண்டு மூன்று நொடி மவுனங்களுக்குப்பிறகு நிகழ்ச்சி அமைப்பாளர் ரைசல் அவர்கள் "இக்கேள்விக்கு வைரமுத்து அவர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டார்" என்று வானலையில் கூறினார். பேட்டி தொடர்ந்தது...

இன்னுமொரு கேள்வி, " வைரமுத்து அவர்களே, அண்மையில் கோவையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு எதிர்பார்த்த பலனை அளித்ததா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், " நீங்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள், இந்தியா என்கிற மாபெரும் இறையாண்மைக்கு உற்பட்டு, கட்டுப்பட்டு அதன் தேசிய ஒருமைப்பாட்டை மனதாராஏற்றுக்கொண்டு வாழ்கிற இந்தியர்கள் தான் நாம், இந்திய பெருந்தேசத்தில் ஒரு சிறிய மாநிலம்தான் தமிழ்நாடு, அதன் இறையாண்மைக்கு உற்பட்டு, ஒருமைப்பாட்டிற்கு உற்பட்டு எவ்வளவு கூடிய அதிகாரங்களைப் பெற முடியுமோ அவற்றை பெறுவதற்காக நாங்கள் போராடுகிறோம், வெற்றியும் பெறுவோம். முத்தமிழ்க் கலைஞர், உலகத் தமிழினத் தலைவர் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கலை நீங்கள் யாரும் கேட்கவில்ல போலிருக்கிறது, தமிழ் மொழி முன்னேற்றத்திற்கு 100 கோடி ரூபாய், வழக்காடு மொழியாகத் தமிழ்..." என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்.

ஈழத்தமிழனின் பணத்தை நம்பி வந்திருக்கிறீர்கள், ஆனால் அவனது துன்பத்தில் பங்குகொள்ள மனமில்லை. ஆனால் அவனது துயரத்தை விற்றுப் பணம் சம்பாதிக்க மட்டும் தயக்கமில்லை.

என்ன கலைஞர்களோ என்று சினம்தான் வந்தது. "சீமான் கைது செய்யப்பட்டதற்கும் திரைத்துறைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, அது அவரது அரசியல் சம்பந்தப்பட்டது, இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை"....இப்படிக் கூறியது வேறு யாருமில்லை, தமிழின உணர்வாளர் பரதிராஜாதான்.

" நான் ஒன்றும் எதிர்கட்சித் தலைவர் அல்ல, இந்த நாட்டின் ஆளும்கட்சித் தோழன், இந்த நாடு ஒரு மாபெரும் தலைவரை இழந்திருக்கிறது, அவரின் குடும்பம் இன்று ஆட்சியில் இருக்கிறது, அவர்களின் உணர்ச்சியில் நான் தலையிட முடியாது, நீங்கள் மகிந்தவுடன் ஒற்றுமையாகச் செயல்ப்படுங்கள்"..இப்படிக் கூறியது, முத்தமிழக் கலைஞர் கருணாநிதி.

ஆக ஒன்று மட்டும்தெளிவானது. தமிழகத் தலைவர்கள் எம்மைக் கை விட்டு நெடு நாளாகி விட்டது. அவர்கலது இந்திய மாயைக்குள்ளிருந்து வெளியே வர அவர்கள் ஒருபோதும் விரும்பப்போவதில்லை. அப்படி நாம் எதிர்பார்த்தால் அது எம் முDDஆள்த்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.......

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இங்குள்ளவர்கள் இப்படியான கலைஞர்களைத் தான் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஈழமண்ணில் பிறந்த கலைஞர்களைக் கண்டு கொள்வதில்லை.

வைரமுத்து சில நல்ல கவிதைகளைப் படைத்துள்ளார்.

ஆனால் அவரது பெரும்பாலான சினிமா பாடல்கள் தரமற்றவை. மட்டரகமானவை. விரசமானவை.

தமிழின உணர்வற்று, விரசமான சினிமா மோகத்தில் மயங்கி உள்ள அரைவேக்காட்டு கவிஞர்களை புலத்து தமிழர் உரிய இடத்தில் வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னே ஒரு கவிக்கு முன்னூறும் நானூறும்!

பொன்னே கொடுப்பார் புலவர்க்கு!-இன்னாளில்

வாசிக்க அறியாத மடையர் படைக்கின்றார்

காசுக்கு ஐந்நூறு கவி!

ஓரு ஈழத்துக் கவிஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக குரல் கொடுத்த பல தமிழக உறவுகளை நாம் தற்போது இழந்துள்ளோம்

முக்கியமாக

சுப. வீ

கஸ்பார் அடிகளார்

பாரதிராஜா

வைரமுத்து.............???

தேவையா இதன் தொடர்ச்சி

சிந்திப்போமாக......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான உணர்வாளனை எந்த ஒரு விமர்சனமும் பாதிக்காது.

அந்த விமர்சனங்களூடாக அவன் தன்னை மெருகூட்டிக் கொள்வான்.

வாத்தியார்

*********

... நாம் செய்த அரசியலின் அறுவடைகாலம் முடிந்து விட்டது என நினைத்தேன், இல்லை தொடர்கிறது ...

வாடா ... வா! இந்தியாவை உடைப்போம்! தமிழகத்தை பிரிப்போம்! ... சிந்தனையில்தான் தென்கிழக்காசிய அரசியலே ஓடுகிறது! இந்தியாவை உடைக்க நாம் எவருடனும் கை கோர்ப்போம் .. ஊஊஊஊஊஉ ..... கொதி கொதியாக வருகிறது ... வார்த்தைகளே தடுமாறுகிறது!!! . .... ஆஆஆஆஆ.. இவ்வசனங்களை பலர் ஆமோதிப்பார்கள் என நம்புகிறேன், அதுதான் வேறொருவர் எழுதுவதற்கு முன்னுக்கு நான் முந்தீட்டன் ... :)

Edited by Nellaiyan

நல்ல கருத்து, எமது இலக்கை அடைய என்ன வழி என ஆராய்வதை விடுத்து பிரியோசனம் இல்லாத வழிகளிலேயே எமது நேரம் செலவிடப்படுகிரது, இந்தியாவை உடைக்க அது ஒன்றும் பிஸ்கட் இல்லை, அதுக்கு என காலம் நேரம் வரும் அப்போது எல்லாம் நல்லா நடக்கும், பழைய சோவிய்த் ஒன்றியம் போல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை உடைக்க வேணும் என்று யார் அழுதார்?? எமக்கு அநியாயம் செய்யாமலிருந்தால் சரி, அவ்வளவுதான்.

அதேவேளை சும்மா 7 கோடி மக்கள், அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்கிற பம்மாத்தையெல்லாம் இனி ஏற்கும் நிலையிலில்லை. கருணாநிதியையும் பார்த்தாச்சு, பாரதிராஜாவையும் பார்த்தாச்சு, இறுதியாக வைரமுத்துவையும் பார்த்தாச்சுது.

நம்பிக் கெட்டது போதும் எமது தந்தை நாடு, தாய்நாடு சொல்லிப் பெருமைப்பட்டது போதும்.

இந்தியா எமக்கு எதிரி - இதுதான் அடிப்படை. அது அழிந்தாலென்ன வாழ்ந்தாலென்ன நாம் கவலைப்படத் தேவையில்லை. அவ்வளவுதான்.ரெண்டுலட்சம் சனத்தைக் கொன்றபிறகு யாருக்கு வேணும் தோழமையும், பாசமும். இலங்கை அழித்தான், இந்தியா எடுத்துக் குடுத்தான், நாம் இனியும் "இந்தியா தாய்நாடு, தந்தை நாடு" என்று கொண்டாடுவோம், காரனம், எம்மால் எதுவும் இயலாது, நாம் வக்கற்றவர்கள், செல்லாக்காச்சு...அப்படித்தானே??

நல்லது, அப்படியே இருக்கட்டும் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட நிகழ்வு வந்த வைரமுத்து ஈழம் பற்றிக் கதைக்கத் தயங்குகிறார். ஆனால் தமிழக மக்கள் அதிகமாகக் கலந்து கொண்ட அமெரிக்க நிகழ்வில் அண்மையில் கவிஞர் தாமரை ஈழத்தின் அவலம் பற்றிக் கதைத்திருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.