Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சமீபமாக நேற்று நள்ளிரவு வீடு புகுந்து நகைகள், பணம் கொள்ளை! பெண்களுக்கு வாள் வெட்டு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சமீபமாக நேற்று நள்ளிரவு வீடு புகுந்து நகைகள், பணம் கொள்ளை! பெண்களுக்கு வாள் வெட்டு:

திகதி:15.08.2010,

நல்லூர், வைமன் வீதியில் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வீடு புகுந்த ஆயுதக்குழு ஒன்று அங்கிருந்த பெண்களை வாளால் வெட்டிவிட்டு நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.

இந்தத் திகிலூட்டும் கொள்ளைச் சம்பவம் மக்கள் மிகுதியாக நெருக்கமாக வாழும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த நிலையில் கே.பரமேஸ்வரி (வயது 60) என்பவரும் மற்றும் எஸ்.சுரேணுகா (வயது 24) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.

இந்தச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது :

வாள்களுடன் எண்மர் கொண்ட குழு ஒன்று 3 பெண்கள் மட்டும் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்தது, அந்தப் பெண் களை வாள்முனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகை களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளைக் கோஷ்டியை எதிர்த்த பெண்களை அவர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்தத் துணிகரக் கொள்ளை நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு மிகச்சமீபமாக சில மீற்றர்கள் தொலைவில் உள்ள வீதியில், ஆலயச் சூழலில் வர்த்தகர்களின் நடமாட்டம் இருந்த வேளையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

sankathi

பென்களை வாளால் வெட்டியவர்களை நான் கடுமையாக கண்டிக்கிரேன்..

மற்றும் நேத்திரவு முருகன் அண்ணர் கனவில வந்து சொன்னவர் நகை.பணம் பத்தி யொசிக்கவேண்டாமாம்.. அது தன்டயில்லையாம்

... நம்பிக்கைதான் வாழ்க்கை ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நம்பிக்கைதான் வாழ்க்கை ...

நீங்க இந்த திரியிலை வந்தும் உள்குத்து,வெளிக்குத்து குத்துறிங்களே :rolleyes:

டக்லஸ் தமிழ் அரங்க கூட்டத்துக்கு கிழக்கை போயிருக்கேக்க இது நடப்பது ஆச்சரியம் தான்.

என்கே எங்காவது பகுத்தறிவு (சைவ மதத்தை அழிக்கும்) கூட்டம் நடை பெறுதா, நாத்திக வாதிகளை எங்கே இன்னமும் காணோம்

மனைவி காலை போன் பண்ணும்போது உந்தவிடயத்தை சொன்னா.நான் இங்கு அப்படியொரு செய்தியையும் காணவில்லை என்று சொன்னேன்.

போன வாழ்க்கை போனதுதான் இனிநாங்கள் எமது வாழ்க்கையும் அவர்கள் அவர்களது வாழ்க்கையை வாழ்விடுவதும் தான் புத்தி என்று சொன்னா.நாங்கள் இங்கிருந்து எமது நாட்டை பற்றியும் இடம் பெயர்ந்தவர்களைப் பற்றியும் அக்கறை கொள்வதில் ஒரு 10% கூட அங்குள்ளவர்களுக்கு இல்லை.இப்பவும் அவர்கள் அவரது சொந்த பிரச்சனையில் ஓடுப் பட்டு திரிகின்றார்கள்.ஊருக்கு ஊர் கோவிலகளும் திருவிழாக்களும் நித்திரை கொள்ளமுடியாமல் லவுட் ஸ்பீக்கேர்ஸ் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்குதாம்.ஆமிக்காரன் முழத்துக்கு முழம் சைக்கிலில் வேறுதிரிகின்றானாம்.புலம் பெயர்ந்தவர்களின் உபயத்தில் பாடசாலைகள் போட்டி போட்டு கட்டிடங்கள் கட்டியும் விளயாட்டு மைதானங்கள் விஸ்தரிப்பிலே மும்முரமாம்.ஒரு இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்வோம் என்ற எண்ணம் துளியுமில்லாமல் அட்மிசனுக்கு டொனேசன் வேறு கேட்கின்றார்களாம் .மனைவியின் வீடு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் இருக்கின்றது.

இன்று நல்லூர்,கொக்குவில் மஞ்சவனப்பதி இரண்டு கோவில்களினதும் கொடியேற்றம்.இந்தியா போய் வருவது போல் இனி சிறிலங்காவும் போய் வரவேண்டியதுதான் என்றா.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி காலை போன் பண்ணும்போது உந்தவிடயத்தை சொன்னா.நான் இங்கு அப்படியொரு செய்தியையும் காணவில்லை என்று சொன்னேன்.

போன வாழ்க்கை போனதுதான் இனிநாங்கள் எமது வாழ்க்கையும் அவர்கள் அவர்களது வாழ்க்கையை வாழ்விடுவதும் தான் புத்தி என்று சொன்னா.நாங்கள் இங்கிருந்து எமது நாட்டை பற்றியும் இடம் பெயர்ந்தவர்களைப் பற்றியும் அக்கறை கொள்வதில் ஒரு 10% கூட அங்குள்ளவர்களுக்கு இல்லை.இப்பவும் அவர்கள் அவரது சொந்த பிரச்சனையில் ஓடுப் பட்டு திரிகின்றார்கள்.ஊருக்கு ஊர் கோவிலகளும் திருவிழாக்களும் நித்திரை கொள்ளமுடியாமல் லவுட் ஸ்பீக்கேர்ஸ் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்குதாம்.ஆமிக்காரன் முழத்துக்கு முழம் சைக்கிலில் வேறுதிரிகின்றானாம்.புலம் பெயர்ந்தவர்களின் உபயத்தில் பாடசாலைகள் போட்டி போட்டு கட்டிடங்கள் கட்டியும் விளயாட்டு மைதானங்கள் விஸ்தரிப்பிலே மும்முரமாம்.ஒரு இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்வோம் என்ற எண்ணம் துளியுமில்லாமல் அட்மிசனுக்கு டொனேசன் வேறு கேட்கின்றார்களாம் .மனைவியின் வீடு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் இருக்கின்றது.

இன்று நல்லூர்,கொக்குவில் மஞ்சவனப்பதி இரண்டு கோவில்களினதும் கொடியேற்றம்.இந்தியா போய் வருவது போல் இனி சிறிலங்காவும் போய் வரவேண்டியதுதான் என்றா.

அவர்களை அவர்கள் வழியிலேயே விடுவதுதான் சரி. அதனால் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்துக்குச் செல்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் இங்கேயிருந்துகொண்டு இடையிடையே ஹொலிடே போய் வருவது ஏதோ ஒரு வழியில் அவர்களைப் பாதிக்கவே செய்யும்...! இவ்வளவுகாலமும் புலிகளின் அடக்குமுறையாலும் ஆயுதப்போராலும் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். புலம்பெயர்மக்கள் இதனைக் கருத்தில்கொண்டு தாயக விசிட்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்..! :(

சிலவற்றை எழுதத்தான் வேண்டும்.

தமிழனுக்கு பிரச்சனையென்று காட்ட நாம் ஊருக்கு போகாமல் விடவேண்டும் என்பது நடக்கப் போவதில்லை. போபவர்கள் மனிதர்கள் மாதிரிப் போய் வந்தால் நல்லது.

நான் பெருமைக்கு சொல்லவில்லை எனது மனைவியை சந்தித்தபலர் கனடாவில என்ன கஸ்டமோ காணி விக்க வந்தனீர்களோ என்று கேட்டார்களாம்.ஆட்டோ காரன் கனடாவில் இருந்து வந்தனான் என்றால் நம்ப மறுக்கின்றானாம் ஏனெனில் வெளிநாட்டில் இருந்து போபவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி அம்மன் மாதிரி உலா வருகின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

" அம்மன் " மாதிரி உலா வருவது வில்லங்கத்தை விலைக்கு வாங்குவது போல் என்று சிலருக்குபுரிவதில்லை. இங்க என்றால் ( கனடாவில் வெளி நாட்டில் ) செய்த நகையை போடாமல் கலர் கலராய் போடுகிறார்கள். ( பெரியக்காவின் மகள் வெள்ளியிலும் ....வண்டில் சில்லு மாதிரி .. தோடும் போடுகிராளாம் :( )

  • கருத்துக்கள உறவுகள்

சிலவற்றை எழுதத்தான் வேண்டும்.

தமிழனுக்கு பிரச்சனையென்று காட்ட நாம் ஊருக்கு போகாமல் விடவேண்டும் என்பது நடக்கப் போவதில்லை. போபவர்கள் மனிதர்கள் மாதிரிப் போய் வந்தால் நல்லது.

நான் பெருமைக்கு சொல்லவில்லை எனது மனைவியை சந்தித்தபலர் கனடாவில என்ன கஸ்டமோ காணி விக்க வந்தனீர்களோ என்று கேட்டார்களாம்.ஆட்டோ காரன் கனடாவில் இருந்து வந்தனான் என்றால் நம்ப மறுக்கின்றானாம் ஏனெனில் வெளிநாட்டில் இருந்து போபவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி அம்மன் மாதிரி உலா வருகின்றார்களாம்.

அது நடக்க வேண்டும்..! ஆபத்து காலத்தில் தப்பி ஓடிவந்துவிட்டு பிறகு அந்த மக்கள் தமக்கென்று ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் மீண்டும் அங்கே செல்வது குழப்பங்களை விளைவிக்கும். அந்த மக்களும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பர். ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் இன்னும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடாது.

வேண்டுமென்றால் ஆபத்து காலத்தில் அவர்களை அனாதையாக விட்டுவிட்டு இங்கு ஓடிவந்து வாங்கிய அகதி அந்தஸ்தை கைவிட்டுவிட்டு அங்கே நிரந்தரமாகச் செல்வது நல்லது. அங்கே மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதும் அவசியம். இப்படிச் செய்யும் பட்சத்தில் வழிதவறிய பிள்ளையை மீண்டும் அனுசரித்து குடும்பத்தில் சேர்ப்பதைப்போல தாயக மக்கள் இங்கிருந்து விசிட் செய்பவர்களை அள்ளி அரவணைப்பார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டுக்காரிக்குப் படம் காட்ட வெளிக்கிட்டு இருக்கிற எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு அம்மன் மாதிரிப் போனாக் கள்ளன் விடுவானோ?

வாத்தியார்

*********

" அம்மன் " மாதிரி உலா வருவது வில்லங்கத்தை விலைக்கு வாங்குவது போல் என்று சிலருக்குபுரிவதில்லை. இங்க என்றால் ( கனடாவில் வெளி நாட்டில் ) செய்த நகையை போடாமல் கலர் கலராய் போடுகிறார்கள். ( பெரியக்காவின் மகள் வெள்ளியிலும் ....வண்டில் சில்லு மாதிரி .. தோடும் போடுகிராளாம் :rolleyes: )

வண்டில் சில்லு மாதிரி தோடு போடுவதானால் கவனம் கொண்டு போரவன் கதையும் சேர்த்து கொண்டு போய்விடுவான்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.