Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களிடம் பிச்சை எடுக்கும் தமிழர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ,மோகன் அண்ணா.

சிங்களவர்களை வேலைக்கு வைத்திருந்த காலம் போய் இப்போது சிங்களவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு யாழ்ப்பாணம் தள்ளப்பட்டுவிட்டதாம். இது ஒன்றும் ஆதங்கப்படவேண்டிய விசயம் இல்லை. அந்னியர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மேட்டுக்குடிகள் சிங்கள மக்களை எவ்வாறு அவமதித்தார்கள் என்பது சிங்களவர்கள் மத்தியில் என்றும் மாறத வடுவாக உள்ளது. எஞ்சினீயர் ஓவசீயர் கண்காணி என்று படிப்பும் வேலையும் கூடவே ஊர்த்திமிரும் சாதித்திமிரும் அறிவாளிகள் என்ற மமதையும் சேர்ந்து எப்படியெல்லாம் சிங்கள வறியமக்களை வதைத்திருந்தால் யாழ் நூலகத்தை அவர்கள் குறிவைத்து எரித்திருப்பார்கள். ஆனால் இங்கே திமிர்பிடித்த மேட்டுக்குடிகள் அரசபதவிகளிலும் மேற்கு நாடுகளிலும் சுகபோகமாக வாழ வறிய மக்களல்லவா சிங்களவனிடம் வதைபடுகின்றார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற இந்த வர்க்க ஏற்றதாழ்வை சிங்கள மக்களுக்கு புரியவைப்பது அவசியமானது. கடந்த செவ்வியில் இஸ்லாமிய மக்கள் வன்னி மக்களின் மாடுகளை திருடுவதாகவும் அவர்களிடம் பழிவாங்கும் உணர்வுடன் செயற்படுவதாகவும் கூறப்பட்டது. இதுவும் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற நிலைதான். சிங்களமக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் ஒன்றைத் தெளிவிக்க வேண்டும் வறுமைப்படும் தமிழ்மக்களை ஒடுக்குவது தமிழ்த்தேசியமும் தான். தமிழ்த்தேசியவாதம் முள்ளிவாய்க்காலில் காவுகொடுத்தது வறியமக்களைத்தான்.

தன்னைத் தானே தின்று ஏப்பம் விடும் இந்த இனம் இனமாக என்றைக்கும் தன்னை நிர்வகிக்க முடியாது. சாதி மத பிரதேசவாதபேதங்களால் ஒருவனை ஒருவன் மறுதலித்து அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கி தன்னளவில் ஏற்றுக்கொண்ட நிலையில் இனம் என்ற பொது வட்டத்துக்குள் இது என்றைக்கும் நிலைபெற முடியாது. சாதி மதம் பிரதேசம் என்று சுய தம்பட்டம் அடிக்கும் இந்த மக்கள் கூட்டத்திற்கு தனியரசும் ஆட்சியும் நடைமுறைக்கு ஒவ்வாது என்பதை செவ்வனே புரிந்துகொண்ட பிரிட்டிஸ்காரர்கள் பாலி மொழியில் இருந்து மகாவம்சத்தை சிங்கள மொழிக்கு மாற்றுவதில் தொடங்கி பெளத்தத்தை வளர்த்து சிங்கள தேசியத்துக்கு வித்திட்டு ஒரு இனமாக உருவகப்படுத்தி அவர்களிடம் தமக்குச் சாதகமாக ஆட்சியை கொடுத்துவிட்டுப்போனார்கள்.

எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் என்றைக்கும் தீர்க்க முடியாது. அது அன்றய சாதிமத பிரச்சனைகளானாலும் சரி பிரதேசவாங்களானாலும் சரி இயக்கங்கள் ஆனாலும் சரி இன்று கே பி காஸ்ரே நெடியவன் உருத்திரகுமார் இடது சாரி மாற்று மயிர் மட்டை எதுவானாலும் சரி நாம் ஒன்றை ஒன்று ஒருவரை ஒருவர் ஏற்கப்போவதில்லை. எமது ஒவ்வொரு முயற்சியும் எதிர்வினையாகவே முடியும். சாண் ஏற முழம் சறுக்கும். பல்வேறு முறண்பாடுகளை கடந்து தேசியவாதம் என்று தொடங்கியபோது ஒரு நம்பிக்கையாகத்தான் இருந்தது ஆனால் இறுதியில் வரலாறுகாணாது சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளோம். எமது அருவெருப்பு நிறைந்த முரண்பாடுகளும் அதனால் வளர்ந்துவிட்ட தனிமனித குணங்களும் எமது அடயாளங்களை முற்றாக அழித்தொழிக்கும். பாவத்தின் சம்பளம் மரணம் போல் எமது சமூக முரண்பாடும் அதனூடான கேடுகெட்ட குணத்தின் விழைவு இனத்தின் மரணம். திருத்த திருந்த முடியாத ஒரு சுழலில் இதை ஏற்பதும் நல்லதுதான்.

மிகவும் யதார்த்தமான உண்மை.ஆனால் இந்த உண்மையை எவரும் ஏற்கபோவதில்லை.

வாயை திறக்க முதல் கைகூலியென்றும்,ரோ என்றும் மண்டையில் போட பழக்கிவிட்டு போய் சேர்ந்துவிட்டார்கள்.இப்போ மண்டையில் போட வக்கிலாத்தால் திண்ணையில் தொடர்கின்றார்கள்.

மிகவும் யதார்த்தமான உண்மை.ஆனால் இந்த உண்மையை எவரும் ஏற்கபோவதில்லை.

வாயை திறக்க முதல் கைகூலியென்றும்,ரோ என்றும் மண்டையில் போட பழக்கிவிட்டு போய் சேர்ந்துவிட்டார்கள்.இப்போ மண்டையில் போட வக்கிலாத்தால் திண்ணையில் தொடர்கின்றார்கள்.

உங்களுக்கு ஒருவகையான வருத்தம் இருக்கண்ணை... நல்ல மனநல வைத்தியரை பாருங்கோ....! புலியை சொறியாமல் உங்களாலை இப்பவும் தூங்க முடியேல்லை எண்டது கொஞ்சம் பிரச்சினையான விசயம் தான்...!

உங்கட இயலாமைகளை புலியை சொறிஞ்சு அடக்கி கொள்ளுறது ஒருவகை மன வியாதிதான்...

உங்களாலை ஏலும் எண்டால் செய்யுங்கோ இல்லை எண்டால் செய்யுறவைக்கு பின்னாலை போய் பாருங்கோ... அதுவும் முடியாது எண்டால் அமத்தி கொண்டு இருங்கோ...! இப்பவும் புலி விடுகுதில்லை புராணம் பாடாதேங்கோ...

உதாரணத்துக்கு ஒரு பெடி லண்டனிலை இருந்து ஜெனீவாக்கு நடக்குது... அதுக்கும் புலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அந்த பெடியை யாரும் தடுக்கவும் இல்லை... தலைமை தாங்க வேண்டும் எண்டு வெளிக்கிட்ட பயந்து பம்மிக்கொண்டு வீட்டுக்கை இருந்து புலி புலி எண்டு பினாத்தாமல் நல்ல வைத்தியராய் நாடுங்கோ....!

Edited by தயா

தலையங்கத்திற்கு காரணம் யாரென்று விளங்கினபடியால் தான் நான் புலம்புகின்றேன்.

நான் வைத்தியரிட்டை போறன்.ஆனால் நீங்கள் உண்மையை இனியாவது ஒப்புக் கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊருக்கு போட்டு வந்த ஒருத்தர் சொசன்னார்.யாழில் ஆழுக்கு குறைந்தது மூன்று கைத்தொலைபேசிகளாம்.ஒரு வீட்டில் இரன்டு அல்லது மூன்று வாகனங்களாம்.(அவர் பார்த்த வரைக்கும்.)இங்கு புலத்தில் போட்டிக்கு உழைப்பு மற்றும் சொத்து சேகரித்தல்(நான் பார்ப்பது)இப்படி இருக்கும் போது ஏன் தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வந்தது.ஒட்டு மொத்த ஈழத் தமிழரும் வறுமையில் வாடினால் போரின் கொடுமை என்று சொல்லலாம்.ஆனால் நிலமை என்னவென்றால் எந்த போரினால் ஒரு பகுதி பணத்திலும் பந்தாவிலும் மிதக்குதோ அதே போரினால் தான் இன்னொரு பகுதி மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் துயரத்திலும் வாடுது.போரின் விளைவுகள் பகிர்ந்தளிக்கபடவேண்டும்.சிந்திப்போமா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் இப்போ அங்குள்ள தமிழர்கள் விரும்புகின்றனர் என்று

நான் சொல்லவில்லை

அங்கு இருந்து எழுதுபவர்களும்

அங்கு சென்று வந்தவர்களும் சொல்கின்றனர்

இதைத்தான் இப்போ அங்குள்ள தமிழர்கள் விரும்புகின்றனர் என்று

நான் சொல்லவில்லை

அங்கு இருந்து எழுதுபவர்களும்

அங்கு சென்று வந்தவர்களும் சொல்கின்றனர்

நீங்கள் கூறுவது விளங்கவில்லை, எதை கூறுகுறீர்கள் தமிழர் பிச்சை எடுப்பதையா அல்லது 3 கைத் தொலைபேசி வைத்திருப்பதையா

... சேரமான்களுக்கும், அதியமான்களுக்கும், பதிவு/ஈழமுரசு/ஈழநாட்டவர்களுக்கு இப்படியான செய்திகள் கண்களுக்கு தெரிவதில்லையா??? இல்லை தெரிந்தால் நோ வந்து விடுமா????

மே18 முடிந்து ... அங்கு அவலப்படும் மக்களுக்கு புலத்திலுள்ள நாம் எவ்வாறு உதவியிருக்கலாம், அது சிங்களத்தின் கைகளுக்கு செல்லாமல் என சிந்தித்து செயற்பட்டிருந்தால் ... இச்செய்திகள் இன்று இல்லாமல் இருந்திருக்கும் மட்டுமல்ல கேபியின் ஓநாய் அழுகைகளும் இல்லாதிருந்திருக்கும்!! ... இந்நிலைக்கு காரணம்????

அங்கு ரோட்டு ரோட்டாக பிச்சை! இங்கோ ரோட்டு ரோட்டாக 4வீலருகளில் அரசியலாம்! ... கேடு கெட்ட இனம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.