Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாக தீபம்

திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை

கவிதை - இளங்கவி

பாரதத்துக்கு

அகிம்சை கற்பித்த

பன்னிரு நாள் வேள்வி......

தீயிலல்ல

தீயினும் கொடிய

பட்டினி வேள்வி......

புலியொன்று

பசி கிடந்து

பாரதத்துக்கு அகிம்சையை

சொல்லித்தந்த வேள்வி......

பசியதை மறந்தான்

பன்னிரு நாளும்

நீர்த்துளியதை மறந்தான்......

பத்திரமான தன்

உயிரினைக் கூட

பஞ்சு பஞ்சாய்ப்

பிய்த்து எறிந்தான்.....

பார்க்க வந்தோருக்கும்

தன் புன்னகைப்

பூவினைக் கொடுத்தான்....

பார்க்க மறந்தது பாரதம்

அவன் கோரிக்கையை

கேட்க மறுத்தது பாரதம்......

நாத்தம் பிடித்த

சாக்கடைச் சகதியில்

காந்தியின் அகிம்சையைப்

புதைத்தது பாரதம்.....

கோரிக்கையெனும் காலில்

உறுதியாய் நின்றான்...

கொள்கையெனும் பாதையில்

நேராய் நடந்தான்...

நாள் ஒன்று தொடங்கி

பன்னிரு நாள் வரை

சாவின் முன்னின்று

தமிழ் சங்கீதம் இசைத்தான்....

வேதனை மனங்கள் வேக

வேண்டாத மனங்கள் மகிழ

நேரு பேரனின் சொல்கேட்ட

சுங்கான் பிடித்தவன்

புகையிலே எரிந்தான்.....

அவன் வேள்வி முடித்து

கல்லறை போகு முன்

அவன் வாய் உரைத்த

மந்திர வரியிது

''மக்கள் புரட்சி வெடிக்கட்டும்''

அவன் மூட்டிவைத்த தீ

எங்கோ ஓர்

மூலையில் புகையுது.......

அதை முழுதாய் பற்றாமல்

சதி மழை நனைக்குது....

துரோகப் பனிக்குளிரும்

புரட்சி வெடிப்பதை தடுக்குது...

இருந்தும் ஓர் நாள்

மழையது விலக்கி

பனிக்குளிரினை விரட்டி

வெளிச்சக் கீற்றுடன்

சூரிய ஓளியது பரவ......

செந்தணல் வேள்வியில்

பூத்த பூமியாய்

தமிழீழமும் மலர....

தான் சொன்ன

மக்கள் புரட்சியின்

மகத்தான பரிசையெண்ணி

வானிலிருந்து சிரிப்பான்......

அது தமிழீழ மண்ணில்

மழையாய் சிலிர்க்கும்........

இளங்கவி

தியாக தீபம்

திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை

கவிதை - இளங்கவி

...

அவன் வேள்வி முடித்து

கல்லறை போகு முன்

அவன் வாய் உரைத்த

மந்திர வரியிது

''மக்கள் புரட்சி வெடிக்கட்டும்''

அவன் மூட்டிவைத்த தீ

எங்கோ ஓர்

மூலையில் புகையுது.......

அதை முழுதாய் பற்றாமல்

சதி மழை நனைக்குது....

துரோகப் பனிக்குளிரும்

புரட்சி வெடிப்பதை தடுக்குது...

இருந்தும் ஓர் நாள்

மழையது விலக்கி

பனிக்குளிரினை விரட்டி

வெளிச்சக் கீற்றுடன்

சூரிய ஓளியது பரவ......

செந்தணல் வேள்வியில்

பூத்த பூமியாய்

தமிழீழமும் மலர....

தான் சொன்ன

மக்கள் புரட்சியின்

மகத்தான பரிசையெண்ணி

வானிலிருந்து சிரிப்பான்......

அது தமிழீழ மண்ணில்

மழையாய் சிலிர்க்கும்........

இளங்கவி

நன்றி இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி உங்கள் கவிதைக்கு .நன்றி . இப்பொது உங்களை இங்கு காண முடிவதில்லை வேலைப்பளுவோ ..

திலீபனை எனக்கு தெரியாது எனக்கு தெரிந்தது இராசையா மாஸ்டரின் ஸ்கூட்டரில் வரும் பார்திபனையே.நம்ப முடியவில்லை உனது மூன்று அண்ணனமார்களுமே எனது நண்பர்கள்.உனது அப்பா எனது அப்பாவின் ஆருயிர் தோழன்.என்னால் உன்னை இன்னமும் திலீபனாக பார்க்க முடியவில்லை என்னென்றும் எனக்கு நீ அந்த குட்டி பார்தீபனே.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் அகிம்சையைப்

புதைத்தது பாரதம்.....

நாங்கள் இப்ப புலிகளின் தியாகம் எல்லாத்தையும் மறந்து......அவர்களின் நினைவஞ்சலியின் பொழுது காந்தியத்தையும் அகிம்சையையும் நினைவு கூறும் நிலைக்கு புலத்தவர் நாம் இருக்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி.

குட்டி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி உங்கள் கவிதைக்கு .நன்றி . இப்பொது உங்களை இங்கு காண முடிவதில்லை வேலைப்பளுவோ ..

நிலாமதி அககா

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

வெளி நாட்டு வாழ்க்கையில் வேலைப்பளு என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே எனவே அந்த நிலை நான் ஆக்கங்களை எழுதுவதை தடுக்கவில்லை என நினைக்கிறேன்.. எமது தமிழீழத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலைதான் என் படைப்புக்களில் கவனம் செலுத்தமுடியவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபனை எனக்கு தெரியாது எனக்கு தெரிந்தது இராசையா மாஸ்டரின் ஸ்கூட்டரில் வரும் பார்திபனையே.நம்ப முடியவில்லை உனது மூன்று அண்ணனமார்களுமே எனது நண்பர்கள்.உனது அப்பா எனது அப்பாவின் ஆருயிர் தோழன்.என்னால் உன்னை இன்னமும் திலீபனாக பார்க்க முடியவில்லை என்னென்றும் எனக்கு நீ அந்த குட்டி பார்தீபனே.

arjun

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

நீங்கள் சொன்னது உண்மைதான்.... மாவீரர்களோ, எமது போராளிகளோ வானத்திலிருந்து குதித்தவர்களல்ல, அவர்கள் எங்கள் இரத்தம், எங்கள் சொந்தம், எங்கள் சகோதரம், எங்களில் ஒருவர். ஒன்றாய் இருந்து ஒருதட்டில் சாப்பிட்டவர்கள்....

அவர்கள் சிந்தனை எமது விடுதலையை நோக்கிச் சிந்தித்ததன் பரிசு அவர்கள் இன்று எம்முடன் இல்லை, அல்லது சிறையிலோ அல்லது வேறுவகையிலோ கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்....

ஆனாலும் கொடுமை என்னவென்றால் அவர்களையும் வேற்றுக்கிரக மனிதர்களாய்ப் பார்த்து அவர்கள் செய்த தியாகங்களை மறந்து, தங்களின் சுய நலத்தையே நினைக்கும் எம்மவர்கள் தான்....!

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம்

திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை

கவிதை - இளங்கவி

''மக்கள் புரட்சி வெடிக்கட்டும்''

அவன் மூட்டிவைத்த தீ

எங்கோ ஓர்

மூலையில் புகையுது.......

அதை முழுதாய் பற்றாமல்

சதி மழை நனைக்குது....

துரோகப் பனிக்குளிரும்

புரட்சி வெடிப்பதை தடுக்குது...

இளங்கவி

நன்றி இளங்கவி

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்ப புலிகளின் தியாகம் எல்லாத்தையும் மறந்து......அவர்களின் நினைவஞ்சலியின் பொழுது காந்தியத்தையும் அகிம்சையையும் நினைவு கூறும் நிலைக்கு புலத்தவர் நாம் இருக்கிறோம்

புத்தனுக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த சமயம் காந்தீயம் பேசும் பாரதம், அகிம்சையால் விடுதலை பெற்ற பாரதம் திலீபனை அணுவணுவாகக் கொன்று தனது அகிமசையைப் புதைத்ததாக எனது கவிதையில் ஒரு பகுதி அமைந்திருந்தது, அதை நீங்கள் வேறுவிதமாக அர்த்தப்படுத்திவிட்டீர்களோ என எண்ணுமளவிற்கு உங்கள் கருத்து அமைந்திருப்பதாக உணர்கிறேன்....

மற்றும்படி எங்கள் சரித்திரத்தில் அகிம்சை என்றால் திலீபன் அன்னை பூபதி ஆகியோரே.... பாரதத்தின் அகிம்சையை மறந்து பல வருடங்களாகிவிட்டன.... மற்றும்படி பிழை செய்தவனுக்கு நீ என்னபிழை செய்தாய் என்பதை சுட்டிக்காட்டும் வரிகளே என் கவிதை வரிகள்....

அத்துடன் எம்மைச் சுற்றியுள்ள உறவுகளிலோ, நண்பர் கூட்டத்திலோ யாராவது இறந்துவிட்டால் எங்கள் மனதில் இடம் பிடித்தவருக்குத்தான் பாடலாகவோ, ஒரு பேச்சாகவோ அல்லது வேறுவிதமாகவோ நாங்கள் அஞ்சலி செலுத்துவோம். மற்றவர்களுக்கு நாங்கள் போய் முகம்காட்டிவிட்டு வருவது மாத்திரமே.... அதுபோலத்தான் எங்கள் சரித்திரத் தியாகிகளின் தினங்களுக்கு எங்கள் அஞ்சலிகளைச் செலுத்துவது அவர்கள் தியாகங்கள் இன்றும் நம் மனங்களை ஆட்சி செய்வதால் தானே தவிர, இழவு வீட்டுக்கு முகம் காட்டிவிட்டு வருவது போலல்ல என்பது என் தாழ்மையான கருத்து.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி

வாத்தியார்

*********

வாத்தியார்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

சமீபத்தில் உங்களின் சில கவிதைகளைப் பார்த்தேன்.... மிகவும் திறமையான எண்ணோட்டம், வார்த்தைக் கோர்ப்புக்கள், குறுகிய நேரத்தில் நினைத்ததை எழுதும் திறன் அத்தனையும் அமையப் பெற்றதாயிருந்தது...... உண்மையாகவே அசத்தியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்...மேலும் தொடருங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.