Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்....

மாவீரர் அஞ்சலிக் கவிதை.....

கவிதை - இளங்கவி....

காலச சுவடுகளில் என்றும்

கால் பதித்து விட்ட

கார்த்திகை வந்ததுமே...

கடும் பனியும் மறந்துபோச்சு....

காலகளை மூடிவிடும்

கடும் மழையும் மறந்து போச்சு.....

கனவுகளை ஆட்சி செய்யும்

காதலும் மறந்து போச்சு.....

கவலைகளைத் துறந்து....

காதலை மறந்து...

காடு மேடெல்லாம் திரிந்து

கடும் பசியும் தாங்கி - தமிழரின்

கனவுகளை நினைவாக்க

கஸ்ரங்கள் மட்டுமே அனுபவித்த

காவிய நாயகர்தாம் என் நினைவில்......

கடலிலும் வெடித்தான்....

கட்டாம் தரையிலும் வெடித்தான்....

கடல் நீர் அருந்தி மட்டும்

காவியங்கள் பல முடித்தான்.....

காரிருளில் நடைபயின்று -எதரியின்

காவலரங்களைச் சிதைத்தான்......

கனவுக்குள்ளே சென்று- எதிரியை

கலக்கத்தில் வைத்திருந்தான்......

கட்டிய கோட்டைக்குள்ளே -எதிரி

கண் வைத்துப் பார்த்திருக்க

கட்டுநாயக்கா வரை சென்று - அவன்

கட்டிடங்களை பிரித்து வந்தான்....

கட்டளைக்கு முதலிடம் - அவனின் சுயநலக்

கனவுகளோ என்றும் வெற்றிடம்......

கவலையின்றி வாழும் தேசமொன்றைக்

கட்டுவதில் அவன் மனதில் தனியிடம்....

கடல் நீரை செந்நீராக்கி - தமிழரின்

காவியத்துக்காய் தன்னை வெந்நீராக்கி - தான்

காதலித்த மண்ணில் - தன்னுடலை

கல்லறைக்குள் அடக்கமாக்கி

கவலையின்றி உறங்கும்

காவியச் செல்வங்களே - உமை நினைத்து

காலம் முழுதும் - நம்

கண்களில் நீர்த்துளிதான் - அதிலும்

கார்த்திகை இருபத்தியேழில்- நம்

கண்ணீர்த் துளிகள்

கடும் பனித்துளியையும் சூடாக்கும்.....

கார்த்திகைப் பூக்கள்- உம்

கல்லறையைத் தேடிவரும் - நம்

கைகளோ உங்கள்

காலடியைத் தொட்டு வணங்கி -

காலத் தேவருமக்கு

மாவீர வணக்கம் செல்லுத்தும்........

கவிதை . -இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

"க" வரிசை தேர்ந்தெடுத்து கவி படைத்த கவி ....... இளங்கவிக்கு நன்றி

காலத்தால் மறவாத மாவீரருக்கு அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் சுமைகளை அதிகப்படுத்துகின்றன கவிதை வரிகள் இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நிக்கிறார் இளங்கவி! வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்....

கட்டளைக்கு முதலிடம் - அவனின் சுயநலக்

கனவுகளோ என்றும் வெற்றிடம்......

கவலையின்றி வாழும் தேசமொன்றைக்

கட்டுவதில் அவன் மனதில் தனியிடம்....

கடல் நீரை செந்நீராக்கி - தமிழரின்

காவியத்துக்காய் தன்னை வெந்நீராக்கி - தான்

காதலித்த மண்ணில் - தன்னுடலை

கல்லறைக்குள் அடக்கமாக்கி

கவலையின்றி உறங்கும்

காவியச் செல்வங்களே - உமை நினைத்து

காலம் முழுதும் - நம்

கண்களில் நீர்த்துளிதான் - அதிலும்

கார்த்திகை இருபத்தியேழில்- நம்

கண்ணீர்த் துளிகள்

கடும் பனித்துளியையும் சூடாக்கும்.....

கார்த்திகைப் பூக்கள்- உம்

கல்லறையைத் தேடிவரும் - நம்

கைகளோ உங்கள்

காலடியைத் தொட்டு வணங்கி -

காலத் தேவருமக்கு

மாவீர வணக்கம் செல்லுத்தும்........

கவிதை . -இளங்கவி

நன்றி ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"க" வரிசை தேர்ந்தெடுத்து கவி படைத்த கவி ....... இளங்கவிக்கு நன்றி

காலத்தால் மறவாத மாவீரருக்கு அஞ்சலி

நிலாமதி அக்காவுக்கு

'கா' ர்த்திகை இருபத்ததியேழை எண்ணீயே 'கா' வில் எழுத முயற்சித்து சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு சரி 'க' வும் இருக்கட்டுமே என்று 'க' வும் 'கா' வும் சேர்த்து கவிதையை எழுதினேன் அக்கா....

கருத்துக்கு மிக்க நன்றி அக்கா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி அண்ணா,

கார்த்திகைப் புதல்வர்களுக்காய் கவி பாடிய உங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதின் சுமைகளை அதிகப்படுத்துகின்றன கவிதை வரிகள் இளங்கவி

வல்வை சகாரா அக்காவுக்கு

புத்திதெரிந்த வயதிலிருந்து புலம்பெயர்ந்த காலம் வரைக்கும் ஒவ்வொரு மாதங்களும் நினைவில் நிற்பதுபோல தமிழர் கலாச்சார நிகழ்வுகளோ, சமய நிகழ்வுகளோ அல்லது கால நிலை மாற்றங்களோ எங்கள் மனதில் பதிந்துவிட்டிருந்தாலும் என்றிலிருந்து நம் தலைவன் மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து கார்த்திகை என்றதுமே கடும் மழையும் இடுப்பளவு வெள்ளத்தில் எந்தத் துன்பங்களும் தெரியாமல் அங்குமிங்கும் ஓடித்திரிந்த பசுமையான நினைவுகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக இன்று முற்றிலுமாக நீங்கி, கார்த்திகையென்றால் மாவிரர் நினைவுகள் மட்டுமே மனதில் வியாபித்திருக்கிறது.... அந்தளவுக்கு எங்கள் உணர்வுடன் கலந்துவிட்டார்கள்....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கேதான் நிக்கிறார் இளங்கவி! வாழ்த்துக்கள்!!

suvy

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றிகள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஐயா

விசுகு அண்ணாவுக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி அண்ணா,

கார்த்திகைப் புதல்வர்களுக்காய் கவி பாடிய உங்களுக்கு.

ஜீவா

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

அருமையான கவிதாஞ்சலி அண்ணா!

ஒவ்வொரு வரிகளும் தனித்துவமாய் எம் கார்த்திகை வீரர்களுக்காக ................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதாஞ்சலி அண்ணா!

ஒவ்வொரு வரிகளும் தனித்துவமாய் எம் கார்த்திகை வீரர்களுக்காக ................

பார்த்தீபன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.