Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கு வசித்த பின் அங்கு வசிப்பது கஸ்டமா!

Featured Replies

நான் மீண்டும் ஊருக்கு போய் வாழ கொஞ்சம் கூட விரும்பவில்லை... எனக்கு வெளி நாட்டு வாழ்வில் கிடைத்திருக்கும் தனி மனித சுதந்திரமும், இந்த கலாச்சாரமும் மிகவும் பிடித்து இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலரீதியாக சிந்தித்தால்.... அங்கு போய்வாழ வேண்டும் என்றே எனது மனமும் ஆசை கொள்ளும்.

ஆனால் எனது எதிர்கால கனவுகளுக்கு உகந்ததாக தாய நிலமை இப்போது இல்லை இனிமேலும் இருக்காது என்பதே எனது திண்ணம்.

நான் தாயகத்தில் ஒரு குடிசை வீட்டில் இருந்தே புலம்பெயாந்து வந்தேன். சிறிய வயதில் பல கனவுகள் இருந்தாலும் ஆசைகள் இருநத்தில்லை...

தாயகத்தில் உள்ள எல்லா குடிசைகளையும் இல்லாது ஒழிக்க என்னால் முடியாவிட்டாலும் குடிசையில் வாழும் பல சிறார்களை பல்கலைகழளம் நோக்கி நகர்த்தி அந்த குடிசைகளின் எதிகாலத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையும் கனவும் எனதானது. அதற் தேவையான பணத்தை தாயகத்தில் தனிபட்ட முறையில் என்னால் சம்பாதிக்க முடியாது ( வேறு நபர்களால் வேண்டுமானல் முடியலாம்).

அமெரிக்காவில் சம்பாதிக்கலாம் என்பதே எனது திண்ணம்.

இறந்தபின்பு இறந்த உடலை தீதான் எரிக்கும் அது இங்கு எதித்தால் என்ன ஊரில் எரிந்தால் என்ன? அதில் ஏதும் பெரிய வேறுபாடு உள்ளதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தீயில் எரிவதற்கு முன்பு உடலோடு இங்கு வாள்ந்தாலும் உள்ளத்தால் ஊரில் உள்ள குடிசைகிலும் சுடலைகளிலும் வாழவேண்டும் என்பதே எனது முடிவு.

அனுபவரீதீயாக பார்த்தால் எதாவது நல்ல சிந்தனைகளைபெற்று நாட்டை கடடியெழுப்ப அங்கு செல்லலாம் என்றால்....? நல்ல சிந்தனைகளை காது கொடுத்து கேட்பதற்கு அங்கு யாரும் இல்லை. காசு இருக்கா என்றுதான் கேட்கிறார்கள். மற்றையபடி நல்ல விடயங்களை புலிகள் போன்று கட்டிவைத்து சொன்னால்தான் புரியவைக்க கூடியதாக உள்ளது. ஏதாவது ஊதாரிதனமான கதைகளென்றால் சென்ற வேலையையும் விட்டுவிட்டு செவிமடுத்து கேட்கிறார்கள். (தனிபட்ட அனுபவரீதியாக நான் எடுத்த முடிவு) ஆனால் இதுதான் சரியானது என்பது அல்ல எனது வாதம். சட்டி சுட்டதடா கைவிட்டதடா..... இந்தளவு அறிவே என்னுடையது.

  • கருத்துக்கள உறவுகள்

காசு பணம் மட்டுமே அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு துணைநிற்கும் என்று சொல்லமுடியவில்லை மருதங்கேணியண்ணா

தங்களைப்போன்றவர்கள்

பின் காலத்தில் ஊருக்கு போகணும்

அந்த மண்ணில் பல விடயங்கள் தங்களது வருகைக்காக காத்து இருக்குது.

அந்த மக்களை பாசக்கரம் கொண்டு அணைத்த கை இன்று இல்லை. அவர்களது ஏக்கங்களை வெளியில் சொல்லி அழக்கூட முடியாதவர்கள் அவர்கள். தங்களைப்போன்றோர் தோழ்களில் அந்த மக்கள்சிறு கணமேனும் இளைப்பாறணும்

எனக்கு நல்லூரில்1 அரைப்பரப்பு காணி இருக்கு

அங்கு 2003 இல் போயிருந்தபோது அந்த ஒன்றரைப்பரப்பு காணியில் 2 அறைகளுடன்வீடு கட்டுவது என்றும் அமைதி திரும்பியதும் பிள்ளைகள் வராவிட்டாலும் நானும் மனைவியும் சென்று அந்த மக்களோடு வாழ்வது என்றும் பிள்ளைகள் தங்களது விடுமுறைக்காவது எம்முடன் வந்து நிற்கக்கூடியதாக வெளிநாட்டு பாணியில்வீடு கட்டுவது என்றும் முடிவெடுத்து இருந்தேன். தற்போது அது பிற்போடப்பட்டாலும் மனதில் நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள நினைத்து அந்த மக்களின் துக்கங்களில் பங்கெடுக்க பின் நிற்கின்றோமோ என்ற உறுத்துதல் உண்டு. உங்களை மாதிரித்தான் இங்கிருந்து எம்மால் முடிந்தவரை எமது உழைப்பில் செய்தபின்......

எம்மால் உழைக்கமுடியாத காலத்திலாவது அவர்களுடன் இருக்கலாமே.........

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னாள் நிழலி அண்ணா மாதிரி எனக்கும் அங்கு பொய் வாழப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் விடுமுறை பொய் வர விருப்பம் ஆனால் முக்கியமாக அங்குள்ள பொருளாதார நிலைமை, வேலை வாய்ப்பு, சுய பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் போன்றவற்றால் அங்கு பொய் வாழ என்னால் இயலாது என நினைக்கிறன் :( . இன்னும் ஒரு பத்து நாட்களில் ஊர் போகிறேன். பொய் விட்டு வந்து மீதியைக் கூறுகின்றேன். :(

நான் வாழும் ஒன்ராறியோ மாநிலத்தில் சில நாட்கள் மின்சாரம் இல்லாமல் போனது, ஒரு ஏழு இல்லை எட்டு வருடங்களுக்கு முன்னர்.

அதுவே, சில கிழமைகள் என நீடித்திருந்தால் இல்லை அந்த சில நாட்கள் பனிக்காலத்தில் வந்திருந்தால் (பல வெள்ளை இனத்தவர் ஒரு கிராம வீடும் ( cottage) வைத்திருப்பார்கள். அங்கே சென்று ஒரு மீனை இல்லை மானை சாப்பிட்டு தப்பி விடுவார்கள்.) தெரிந்திருக்கும் தாயகத்தின் அருமை.

Edited by akootha

இங்கே, வளர்ந்த நாடுகளில் ஒரு பொருளாதார மந்த நிலை உருவாகி, அதுவே ஒருவித யதார்த்தமாகவும் மாறியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட பத்து வீதமானோர் இன்று வேலையில்லாமல் இருக்கின்றனர்.

ஒரு புலம் பெயர் தமிழர் பல தகமைகள் இருந்தும் அதற்கு ஏற்ற வேலைகள் பல காரணத்திற்காக மறுக்கப்படுகின்றனர். இதை அவர்களும் ஏற்றாக வேண்டியுள்ளது. ஆனால், அவர்கள் பிள்ளைகளும், இங்கு பிறந்தவர்களும் இப்படியான ஒரு இனம் / நிறம் உட்பட்ட அந்நியப்படுத்தலுக்கு (discrimination) உள்ளாக்கப்படுகின்றனர். இது அவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

அன்று அவர்கள் தம் பெற்றோரை பார்த்து கேட்கலாம், " வாருங்கள் எமது தாயகத்திற்கு போய் விடலாம், இங்கு எனக்கு பிடிக்கவில்லை என". :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் இலங்கைக்குச் சென்றேன் (ஆனால் ஊருக்குச் செல்லவில்லை!). முதல் நாள் நடைபாதையில் நடக்கும்போது கிடங்கு, குழிகளில் இருந்த வெள்ளம் படாதவாறு அதிக கவனம் எடுத்து நடந்தேன். இரண்டாம், மூன்றாம் நாள் கவனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கிழமைக்குள் வியர்வை நாற்றம், சேறு எல்லாம் பழகிவிட்டது. எனவே இடம் புதிதாக இருந்தால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகப் போகப் பழகிவிடும். எல்லாம் மனத்தில்தான் இருக்கின்றது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக்கு அங்கு போய் இருக்க விருப்பமோ :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.