Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் தேசியகீதம் பாடுவது வழமையான நடைமுறையே: அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் பிரலங்கள் கலந்துகொள்ளும் வைபவங்களில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறையே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய அனர்த்த நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடவேண்டும் என ஏற்பாட்டுக்குழுவினரால் வலியுறுத்தப்பட்டதாக வந்த செய்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், தமிழ்மிரர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்:

ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் முக்கியத்துவர்கள் கலந்துகொள்கின்ற தேசிய நிகழ்வுகளில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடப்படுவதுதான் வழமையான நடைமுறை. இந்நடைமுறைக்கு அமைவாகவே நாளைய நிகழ்விலும் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடப்படவுள்ளது. இது இலங்கையின் எப்பாகத்திலும் ஒரே நடைமுறைதான். இவ்விடயத்தில் எவ்விதமான உள்நோக்கமும் கிடையாது.

அமைச்சரவைக்கு ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்படும். அவை அனைத்துதே பிரேரிக்கப்படுவதில்லை. பலரின் ஏகோபித்த முடிவுக்கு அமைவாகவே அவை நடைமுறைப்படுத்தப்படும். அந்தவகையிலேதான் சிங்கள மொழியில் மாத்திரமே தேசியகீதம் இசைக்கப்படவேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் அவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயத்தில் தமிழ்மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஆனால், நாளை நடைபெறவுள்ள நிகழ்வில் சிங்கள மொழிமூல தேசியகீதம் என்பதற்கும் இந்த விடயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எதிர்வருகின்ற காலங்களில் தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் நான் நிச்சயம் கலந்துரையாடுவேன் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோது...

நாளைய நிகழ்வில் சிங்கள மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல. சில ஊடகங்கள் தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. நாளைய நிகழ்வுக்கு தேசிய ஏற்பாட்டு குழுவொன்று இருக்கிறது. அக்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவொரு தேசிய நிகழ்வு என்பதால் எங்களுடைய பங்களிப்பு குறைவாகவே இருக்கும். எங்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை நிறைவேற்றுவதே எமது கடமையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13633-2010-12-25-07-59-50.html

... "யாழ் மன்னர்" சொல்கிறார் ...இவர்தான் இப்ப "தமிழ் அரங்கத்தையும்" ஆளுகிறாராம்! ... இவர் தான் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்டுத்தரப் போகிறாராம்?????36_11_23.gif

  • தொடங்கியவர்

அண்மையில் சிங்களத்திற்கு எதிராக சர்வதேச மனித அமைப்பு ஒன்றால் முன்வைக்கப்பட்ட பல கருத்துக்களில், தமிழில் சிறிலங்கா தேசிய கீதம் பாடப்படும் உரிமை மறுக்கப்படுவதும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

அவர் இதை தொடர தொடங்கி பல வருடங்களாச்சு

இப்ப போய் இது பற்றிக்கேட்டால் கோபம் வருவது நியாயம்தானே...?

  • கருத்துக்கள உறவுகள்

.

சுட்டுப் போட்டாலும்... திருந்தாத ஒட்டுக்குழுக்கள் தான், முதலில் சிங்களத்தில் தேசியகீதம் படித்து, பாட ஆரம்பிக்க வேணும்.

.

இங்கிலண்ட்டுல இங்கிலிஸ்ஸில தேசியகீதம் படிக்கிறோம் சாமி.

பிரான்ஸுல பிரஞ்சில தேசியகீதம் படிக்கிறோம் சாமி.

இத்தாலியில இத்தாலியனில தேசியகீதம் படிக்கிறோம் சாமி.

இந்தியாவில வங்காளத்தில தேசியகீதம் படிக்கிறோம் சாமி.

ஸ்ரீ லன்காவில மட்டும் ஸிங்களத்துல தேசியகீதம் பாடமாட்டேன் என்பது அடாவடித்தனம்.

ஸிங்களவரிடம் பானும் சம்பலும் வாங்கித்திண்டுவிட்டு விண்ணானம் கதைத்தால் அடிக்கத்தான் செய்வான்.

பிறகு அடிக்கிறான் குத்துறான் எண்டு ரோட்டில நிண்டு ஒப்பாரி வைத்து சும்மா இருக்கும் எல்லொருக்கும் பிரச்சினை வர வைக்கிறது மட்டும்தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஏன் வள்வள் என்கிறது.........

கிளி ஏன் கீ கீ என்கிறது.......

குயில் ஏன் கூ கூ என்கிறது........

யானை ஏன் பிழிறுகிறது.......

புலி ஏன் சீறுகிறது.........

காக்கா ஏன் கரைகிறது........

சேவல் ஏன் கூவுகிறது........ :)

நாய் ஏன் வள்வள் என்கிறது.........

கிளி ஏன் கீ கீ என்கிறது.......

குயில் ஏன் கூ கூ என்கிறது........

யானை ஏன் பிழிறுகிறது.......

புலி ஏன் சீறுகிறது.........

காக்கா ஏன் கரைகிறது........

சேவல் ஏன் கூவுகிறது........ :lol:

நரிகள் ஏன் ஊளையிடுகின்றன?

பனங்காய் அண்ண மொத்தத்தில இலங்கையில் தமிழர்கள் பிழைக்க வந்தவர்கள் என சொல்கின்றாரோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் ஏன் வள்வள் என்கிறது.........

கிளி ஏன் கீ கீ என்கிறது.......

குயில் ஏன் கூ கூ என்கிறது........

யானை ஏன் பிழிறுகிறது.......

புலி ஏன் சீறுகிறது.........

காக்கா ஏன் கரைகிறது........

சேவல் ஏன் கூவுகிறது........ :)

:lol:

ஓநாய்கள் ஊளையிடுகின்றன.

ஓநாய்களின் மொழியும் சிங்களம் தான். சிங்களத்தில் ஓநாய்கள் பாடட்டும்.

பனங்காய் அண்ண மொத்தத்தில இலங்கையில் தமிழர்கள் பிழைக்க வந்தவர்கள் என சொல்கின்றாரோ

நான் சொல்லவில்லை உலகமே சொல்லுகிறது....

ஒரு கனேடியன் இளையொரை பிரான்சுக்கு கொணந்து பிரிட்டிஷ் கொடியுடன் உண்ணாவிரதம் இருக்கவிடுவோமா? :lol:

நான் சொல்லவில்லை உலகமே சொல்லுகிறது....

ஒரு கனேடியன் இளையொரை பிரான்சுக்கு கொணந்து பிரிட்டிஷ் கொடியுடன் உண்ணாவிரதம் இருக்கவிடுவோமா? :lol:

அப்படி ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் அவரின் உயிருக்கு உத்திரவாதம் உண்டு.. ! ஆனால் இலங்கையில் இதை எதிர்த்து இருந்தால் அப்படி ஒண்டு இருக்கோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்!!!!!!!! நீவீர் சிங்கமடா...சிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தமிழீழக்கொடி ஏத்தி

பக்கத்தில் பிரெஞ்சுக்கொடி ஏத்தலாம் ஏத்தாமலும் விடலாம்

தமிழீழ தேசியபாடல் தமிழில்பாடி

அஞ்சலி முதல் அரங்கம் அதிரும்படி ஆடவும் உரிமையுண்டு.

அதை பலவருடங்களாக நாம் தொடர்ந்து செய்கின்றோம்.

உதைத்தானே 30 வ்ருசமா செய்துவருகின்றீர்கள்?

உதைத்தானே 30 வ்ருசமா செய்துவருகின்றீர்கள்?

குறைஞ்சது அந்த மயிரை கூட நீங்கள் புடுங்க இல்லை... வெறும் புலிக்காச்சல் மட்டும் தான் உங்கட பிரச்சினை...

உதைத்தானே 30 வ்ருசமா செய்துவருகின்றீர்கள்?

அப்புடி போடுங்கோ தோழர்....

இந்த யாருக்கும் பிரயோசனம் இல்லாத 2, 3 சதவீதம் பிரச்சினைகுரியதுகளால்தான், சமுதாயத்தில் எமக்கு பயங்கரவாதிகள் முத்திரை.

அப்புடி போடுங்கோ தோழர்....

இந்த யாருக்கும் பிரயோசனம் இல்லாத 2, 3 சதவீதம் பிரச்சினைகுரியதுகளால்தான், சமுதாயத்தில் எமக்கு பயங்கரவாதிகள் முத்திரை.

முத்திரை எடுத்தால் மட்டும் முன்னாலை வந்திடுவியளோ...?? அப்பவும் நக்கி தான் தண்ணிகுடிப்பியள்... எலும்பு போட்டால் வால் ஆட்டுவியள்...

Edited by தயா

முத்திரை எடுத்தால் மட்டும் முன்னாலை வந்திடுவியளோ...??

இல்லாம? உந்த புலி மட்டும் இல்லாட்டி..... எல்லாத்தமிழரும் ஒற்றுமையாக சிங்களவரிடம் ஒரு கௌரவமான தீர்வை கேட்டிருக்கலாம், அவர்களும் உலகசமுதாயங்களின் கண்டனங்களுக்கு ஆளாவதை தவிர்க, எமக்கு ஒரு தீர்வை தந்திருப்பார்கள். எல்லாம் குழம்பினது இந்த பிரபாகரனினால்த்தான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப 2 வருடமாக யார் குளப்பிறது

ஐமாய்க்க வேண்டியது தானே...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாம? உந்த புலி மட்டும் இல்லாட்டி..... எல்லாத்தமிழரும் ஒற்றுமையாக சிங்களவரிடம் ஒரு கௌரவமான தீர்வை கேட்டிருக்கலாம், அவர்களும் உலகசமுதாயங்களின் கண்டனங்களுக்கு ஆளாவதை தவிர்க, எமக்கு ஒரு தீர்வை தந்திருப்பார்கள். எல்லாம் குழம்பினது இந்த பிரபாகரனினால்த்தான்

என்ரை ராசா? அண்டு தொடக்கம் எங்கடை பிரச்சனையளை கௌரவமாய் சொல்லி, எங்கடை உரிமைகளை கௌரவமாய் கேட்டு எத்தினை தரம் சிங்களவனிட்டை அடி வாங்கியிருக்கிறம்?அதுசரி தந்தை செல்வநாயகம் காலத்து பிரச்சனையள் தம்பி பனங்காய்க்கு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்த தேசிய கீதத்தின் தமிழ் வடிவமே பிடிக்கிறதில்ல. இலவச பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரச அச்சக நூல்களில் அவை முதல் பக்கத்தில் அச்சிடப்படும் போது அவற்றையும் உறைக்குள் வைத்து கவர் போட்டிடுவன்.

ஆனால் உவன் டக்கிளஸ் சொல்லுறான்.. சிங்கள மொழில தேசிய கீதம் பாடிறதென்று. நான் காணேல்ல.. எங்கள் பாடசாலை நாட்களில் சிறீலங்காவின் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட்டு நான் அறிஞ்சதே இல்லை. தமிழீழ தேசிய கீதம் தான் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் போதும் இசைக்கப்பட்டது. அதற்கு முன் தமிழில் சிறீலங்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. சிங்களப் பல்கலைக்கழகங்களில் கூட இன்ன மொழில தான் தேசிய கீதம் இசைக்கனும் என்ற ஒரு விதிப்பும் கிடையாது. சிங்கள மாணவர்களே உதை இசைக்கப் பிரியப்படுறது கூட இல்ல. பல நிகழ்வுகள் இது இசைக்கப்படாமல் நடந்ததாகத்தான் அறிகிறேன்..

இது திணிப்பு. இதை எதிர்த்து சிறீலங்காவின் தேசிய கீதத்தை தமிழர்கள் தீயிட்டுக் கொழுத்த வேண்டும். உலகம் பூராவும் தமிழர்கள் இதை செய்வதன் மூலம் சிங்கள அரசுக்கும் அதன் வால்பிடிகளுக்கும் உலகிற்கும் தமிழ் மக்கள் ஒரு தெளிவான செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.

அண்மையில் அமெரிக்க பாதிரியார் ஒருவர் குர்ரானை எரிக்கப் போவதாகச் சொன்னது போல.. நாம் இதை எரிக்கனும். எமது எதிர்ப்பை உலகிற்கு காட்டனும். நாம் செயற்பாடற்று சுயநலத்தோடு இருக்கும் ஒவ்வொரு விநாடியும் எதிரி எமது நிலத்தை உரிமைகளைப் பறிக்க பயன்படுத்திக் கொள்வான். இது உறுதி. அதில் அவன் தெளிவாகவே எப்போதும் இருந்து வருகிறான்.

Edited by nedukkalapoovan

அண்மையில் அமெரிக்க பாதிரியார் ஒருவர் குர்ரானை எரிக்கப் போவதாகச் சொன்னது போல.. நாம் இதை எரிக்கனும். எமது எதிர்ப்பை உலகிற்கு காட்டனும். நாம் செயற்பாடற்று சுயநலத்தோடு இருக்கும் ஒவ்வொரு விநாடியும் எதிரி எமது நிலத்தை உரிமைகளைப் பறிக்க பயன்படுத்திக் கொள்வான். இது உறுதி. அதில் அவன் தெளிவாகவே எப்போதும் இருந்து வருகிறான்.

ஸ்ரீ லங்கா தாயே - நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்

:)

Edited by Panangkai

என்ரை ராசா? அண்டு தொடக்கம் எங்கடை பிரச்சனையளை கௌரவமாய் சொல்லி, எங்கடை உரிமைகளை கௌரவமாய் கேட்டு எத்தினை தரம் சிங்களவனிட்டை அடி வாங்கியிருக்கிறம்?அதுசரி தந்தை செல்வநாயகம் காலத்து பிரச்சனையள் தம்பி பனங்காய்க்கு தெரியுமோ?

கொந்து.. எமக்கு தந்த செல்வநாயகம் தொடக்கம்.. 2ம் லெப்டினட் செங்கதிர் வரை தெரியும்.

செல்வநாயகம் ஸ்டைலில் ட்ரை பன்னி மூண்டாயிரம் நாலாயிரம் பேர்தான் கொலைசெய்யப்பட்டார்கள்..செங்கதிர் ஸ்டைலில் ட்ரை பன்னி எவ்வளவு பேர் கொலைசெய்யப்பட்டார்கள்? மூண்டு லச்சம்? நாலு லச்சம்?

நாம் தர்மத்தின் வழியில், மனிதத்தின் மொழியில் தொடர்ந்து அகிம்சை போர் நடத்துவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தர்மத்தின் வழியில், மனிதத்தின் மொழியில் தொடர்ந்து அகிம்சை போர் நடத்துவோம்..

உந்த தர்மவழி,மனிதமொழி,அகிம்சை போர்ர்ர்ர்ர்ர்ர் என்னமாதிரி?எப்பிடி?எங்கை?ஆரோடை?என்னெண்டு?ஆரை வைச்சு?எப்ப?

இதுக்கு இன்னும் எவ்வளவுகாலம் செல்லும்?முப்பதுவருசம்?நாப்பதுவருசம்?

என்ரை பனங்காயே? நீங்கள் பனங்கொட்டையாய் மாறுறதுக்கிடையிலை பதிலை சொல்லுங்கோ.ஊமல் ஆனாப்பிறகு ஒண்டும் செய்யேலாது.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.