Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதையில் இளைஞர்கள் செம்மணியில் அட்டகாசம்

Featured Replies

போதையில் இளைஞர்கள் செம்மணியில் அட்டகாசம் பொது மக்கள் முகஞ்சுழிப்பு

[05 ஜனவரி 2011, புதன்கிழமை 12:00 மு.ப இலங்கை]

5nnn1.jpg

செம்மணி, ஜன. 5

செம்மணி நீரேரியில் இளை ஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளு டன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களு டனும் சேஷ்டை விட்டனர். இத னால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர்.

இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங் கிக் குளித்தனர்.

5nnn2.jpg

இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென்ற யுவதிகளையும் தகாத வார்த் தைகளால் திட்டினர். வாகனங் களின் குறுக்கே பாய்ந்தும் மறித் தும் சண்டித்தனத்திலும் ஈடு பட்டனர். உள்ளாடைகளுடன் சில சமயம் அதுவுமின்றித் தண் ணீரில் இருந்து எழுந்து வந்த இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாததாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த வர்கள் தெரிவித்தனர்.

மேற்படி வீதியால் சென்ற பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாது கலக்கத்துடன் தலை குனிந்தவாறு சென்றதனையும் அங்கு அவதானிக்க முடிந்தது. கும்பல் தமக்குத்தாமே சண் டையிட்டு விட்டு பின்னர் வாக னத்தில் ஏறிச் சென்றது.

இதே நேரம் இவர்களின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டு புத்திமதி சொல்லப்போன பெரி யவர் ஒருவர் வாங் கிக் கட்டிக் கொண்டார். பின்னர் அவர்களி டம் இருந்து விடுபடுவதே அவ ருக்குப் பெரும் பாடாகிப் போனது.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3410&tab=tbl_news

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை நினை மக்களே....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

<_<இது ந டக்குமென்று எதிர்பார்த்ததுதானே?? நடக்கட்டும், நடக்கட்டும்.

வடக்கில் வசந்தம் இதுதான் போல. புலம்பெயர் தமிழர், தாயகத்தில் உள்ளவர்மேல் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது, இனியும் உங்களுக்காகக்ச் சிலுவை சுமக்கத் தயாரில்லை...இப்படி எத்தனையோ கேட்டாச்சுது.

அவர்களின் "சுதந்திரத்தில்" தலையிட நாம் யார்?? அவர்கள் மகிந்தவின் செல்லப்பிள்ளைகள். மகிந்தவுக்கு ஒரு அவமானம் என்றால் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தவும் தயார். ஆனால் வன்னியில் அந்தச் சனம் லட்சக்கணக்கில கொல்லப்படும்போது மட்டும், யாழ்ப்பாணத்துக்கு எப்ப பஸ் ஓடும், எப்ப கரண்ட் வரும், எப்ப விஜை, தலை படம் வருமென்டு மினக்கெட்டுக் கொண்டு திரியத்தான் நேரமிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இளைஞர்கள் செய்யும் அநாகரிகங்களோடு ஒப்பிட்டால் இதில என்ன புதுமை இருக்குது..???!

அவர்களை குற்றம் சுமத்த நமக்கு என்ன தகுதி என்றும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இளைஞர்கள் செய்யும் அநாகரிகங்களோடு ஒப்பிட்டால் இதில் என்ன புதுமை இருக்குது..???!

அவர்களை குற்றம் சுமத்த நமக்கு என்ன தகுதி என்றும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல ஆக்கபூர்வமான பதிவுகளை இணைத்து வரும் நீங்கள் சில சந்தர்ப்பங்களில் தடுமாறுகிறீர்கள்...ஏனென்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இளைஞர்கள் செய்யும் அநாகரிகங்களோடு ஒப்பிட்டால் இதில என்ன புதுமை இருக்குது..???!

அவர்களை குற்றம் சுமத்த நமக்கு என்ன தகுதி என்றும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் இங்கு அநாகரிகமாக நடந்தால் என்ன அங்கு அநாகரிகமாக நடந்தால் சுட்டிக்காட்டுவது தானே.அதற்கு ஏன் அங்கு, இங்கு என குழம்பி கருத்து கூறமுடியாமல் அல்லாடுகிறீர்கள். அல்லது புதுமையான அநாகரிகசெயல் செய்தால் தான் சுட்டிக்காட்டுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_<இது ந டக்குமென்று எதிர்பார்த்ததுதானே?? நடக்கட்டும், நடக்கட்டும்.

வடக்கில் வசந்தம் இதுதான் போல. புலம்பெயர் தமிழர், தாயகத்தில் உள்ளவர்மேல் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது, இனியும் உங்களுக்காகக்ச் சிலுவை சுமக்கத் தயாரில்லை...இப்படி எத்தனையோ கேட்டாச்சுது.

அவர்களின் "சுதந்திரத்தில்" தலையிட நாம் யார்?? அவர்கள் மகிந்தவின் செல்லப்பிள்ளைகள். மகிந்தவுக்கு ஒரு அவமானம் என்றால் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தவும் தயார். ஆனால் வன்னியில் அந்தச் சனம் லட்சக்கணக்கில கொல்லப்படும்போது மட்டும், யாழ்ப்பாணத்துக்கு எப்ப பஸ் ஓடும், எப்ப கரண்ட் வரும், எப்ப விஜை, தலை படம் வருமென்டு மினக்கெட்டுக் கொண்டு திரியத்தான் நேரமிருந்தது.

யாழ்மக்கள் தமது ஜனனாயக சுதந்திரத்தை மொத்தமாக அநுபவித்துக் கொண்டிருக்கும் போது, தேசவிடுதலைப் பயணத்திற்கு தோழ்தர மறுத்தால்,

நிட்சயமாக அவர்கள் மன்னிக்கப்பட முடியாத குற்றத்திற்கு பொறுப்பானவர் ஆவார்கள்! வெள்ளை வான் வீதியில் வாழும் அவர்கள் சொப்பனத்தில் கூட மரணபயம் துரத்தாத வாழ்கையை வாழ்ந்திருக்க மாட்டாதவர்கள், இன்நிலையில் அவர்களிடம் எமது எதிர்பார்ப்பு பலிக்கவில்லை என்று என்ணுவது வீணானது.

இன்று அங்கு அரச அதிகாரப் பொறிமுறையால் நிகழ்த்தப்படும் அனைத்து சீரழிவுக்கும் காரணம் சமூம் என்று குற்றம் சுமத்துவதும், பொறுப்பற்ற செயல்களே ஆகும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இங்கு அநாகரிகமாக நடந்தால் என்ன அங்கு அநாகரிகமாக நடந்தால் சுட்டிக்காட்டுவது தானே.அதற்கு ஏன் அங்கு, இங்கு என குழம்பி கருத்து கூறமுடியாமல் அல்லாடுகிறீர்கள். அல்லது புதுமையான அநாகரிகசெயல் செய்தால் தான் சுட்டிக்காட்டுவீர்களா?

நான் நினைத்தேன் இவ்வளவும் போதும் புரிந்து கொள்வார்கள் என்று.

உதாரணத்திற்கு லண்டனின் ஒரு பகுதியில் மட்டும் குற்றச்செயல்களைக் குறைக்க என்று 20 க்கும் மேற்பட்ட தமிழர்களை பொலிஸார் ஒரே தினத்தில் கைது செய்து உள்ளே போட்டனர். நான் அறியவில்லை இப்படி கறுப்பர்களைக் கூட ஒரே தினத்தில் கைது செய்து போட்டதாக. இப்படியான சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர்களும் இப்போ யாழ்ப்பாணத்தில் நிற்கின்றனர். தென்பகுதியில் இருந்து வந்தவர்களும் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றனர். ஆக இப்படியான குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்தினர் மீது மட்டும் சுமத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. வெளிநாட்டு தமிழர்கள் உட்பட பலரும் இதன் பின்னணியில் இருக்கின்றனர். சிறீலங்கா அரசும் இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தினர் மீது மட்டும் யாரும் குற்றம் சாட்டியதாக தெரியவில்லை.

தமிழினம் இப்படி ஆகிவிட்டதே அல்லது ஆகிவிடுமோ என்ற ஆதங்கம்தான் தெரிகிறது அதன்மீது நேசம் கொண்டவர்களால்.நீங்கள் எந்த நோக்கத்திற்காக தற்போது எழுதுகின்றீர்கள் என்று புரியவே முடியவில்லை . :(

தலைப்பு கூட சரியாக தான் போடப்பட்டு இருக்கு.. இடையிலை ஏன் ஒட்டு மொத்த மக்களும் இப்படி கேடுகெட்டு போய் தான் இருக்குதுகள் எண்டு நிறுவ நிக்கிறீர்கள்.....??

போதையில் இளைஞர்கள் செம்மணியில் அட்டகாசம்- பொது மக்கள் முகஞ்சுழிப்பு

3 லச்சம் தமிழர் வழும் லண்டனிலை ஒட்டு மொத்தமாக கூட்டி களிச்சாலும் ஒரு 500 காவாலியளை கண்டு பிடிக்க ஏலாது... அதுக்காக ஒட்டு மொத்த லண்டனும் இப்படி எண்டுறதும்... 4 லட்ச்சம் வாழும் யாழ்ப்பாணத்திலை ஒட்டு மொத்த பெடியளும் காவாலி எண்டுறதும் என்னப்பா இதெல்லாம்... ???

எனக்கு தெரிய லண்டனிலை இருக்கும் பெடியளில் பெரும்பான்மையானவர்கள் கண்ணியமானவர்களே ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.