Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 59

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவனாக இருக்கும் பொழுதும் சரி,இளைஞனாக இருந்த காலங்களிலும் சரி கோயில் மணியகாரர்(தர்மகர்த்தா) என்றால் அவர்கள்தான் கோயிலை கட்டியவர்கள் என்று எண்ணியிருந்தேன்.அதாவது அந்த கோயிலுக்கு சொந்தகாரர்கள் அவர்கள் தான் என நினைத்திருந்தேன்.அவர்களின் செயற்பாடும் அப்படித்தான் இருக்கும் .ஜயரைவிட அவர்கள்தான் பெரியமனிதர்கள் என்றிருந்தேன்.பெற்றோரும் சொல்லிச்சினம் பரம்பரைபரம்பரையாக அவர்கள்தான் கோயில் சொந்தக்காரர்கள் அதுதான் அவர்களுக்கு முதல்மரியாதை செய்யிறவர்கள் என்று.

தேர் திருவிழா போன்ற விசேட நாட்களில் இவர்களுக்குதான் முதல்மரியாதை கொடுக்கப்படும்,அதாவது தெப்பை அணிவித்து மேளதாளத்துடன் கோயிலை சுற்றிவருவார்கள்.அவர்களின் முழுக் குடும்பம்மும் அதில் பங்குபற்றும் ,அடுத்த வாரிசு யார் என்பதை பக்தர்கள் புரிந்துகொள்வார்கள்.இந்த குடும்பம்தான் மணியகாரக் குடும்பம் என்ற கருத்து பரம்பரை பரம்பரையாக எமக்கும் புகுத்தப்பட்டுவிடும்.

ஊரில பழைய கோயிலைதான் வெள்ளை அடிச்சு கும்பாஅபிசேகம் செய்வினம் காரணம் புதுகோயில் கட்ட வசதியில்லை,அந்த காரணத்தால்

ஒரே குடும்பமே பரம்பரை மணியகாரர் என்ற கருத்து புகுத்தப்பட்டு விட்டது .

ஆனால் புலத்தில் அப்படியில்லை இங்கு 83க்கு பிறகுதான் கோயில்கள் ஈழத்தமிழனால் அதிகமாக கட்டப்பட்டது.(இனிமேல் வட இந்தியகாரர்கள் உரிமை கொண்டாடுவது வேறு விடயம்)இங்கு எல்லா தமிழனும் காசு கொடுத்துஇந்த கோயில்களை கட்டினான்.அதில் சிலர் அதிக பணம் கொடுத்திருக்கலாம் சிலர் அந்த பணத்தை தவனைமுறையில் கொடுத்து இருக்கலாம்.ஆகவே சிட்னியில்(புலத்தில்)இந்த மணியகாரர் குடும்பம் அல்லது கோயிலை கட்டியவர்கள் இந்த குடும்பம்தான் என்ற பெயருக்கே இடம் இல்லை.ஆனால் பாருங்கோ சிலர் உந்த மணியகாரர் ஆக வரவேணும் எண்ரு முயற்சி செய்து கொண்டிருக்கினம் போல தெரியுது சிட்னியில்.ஏன் என்றால் கோயில் கமிட்டியில் 10,15 பேர் இருக்கினம் அவையள் தான் மாறி மாறி தலைவர்,உபதலைவர் அப்படி இப்படி என்று பதவிக்கு வருவினம்,போதாக்குறைக்கு தங்கள்து வாரிசுகளையும் உள் இழுத்துவிடிவினம் பாருங்கோ, பிறகு என்ன விசேடநாட்களில் முதல்மரியாதை உவையளுக்கு கொடுக்கப்படும்,அவையளும்முக மலர்ச்சியுடன் ஏற்று கொண்டுதிரிவினம்.

இதை நான் கிறுக்குவதற்கு காரணம் எங்களுக்கும் விசயம் விளங்குமல்ல என்று காட்டத்தானுங்கோ. அதாவது எல்லா பக்தர்களுக்கும் முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.பக்தர்கள் எல்லோரும் இந்த கோயிலை கட்டுவதில் எதாவது ஒரு வகையில் பங்கு வகித்துள்ளனர்.ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து கொமிட்டியில் இருந்து கொண்டு தலைவர் ,செயலாளர் என மாறி மாறி வந்து போட்டு தாங்கள்தான் முதல் மரியாதைக்கு உருத்துடையவர்கள் என எண்ணக்கூடாது.கோயில் சொந்தக்காரர்கள் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.

சில புலம்பெயர் மக்கள் கோயில்காரர் என்ற பதத்தை அதிகமாக பாவிக்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை,எதோ கோவில் அவர்களின் சொத்துபோல கமிட்டியில் இருப்பவர்கள் தொடர்ந்து மாறி மாறி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்து ,இவர்களை கோவில் சொந்தக்காரர்கள் என நினைக்கிறார்கள் போலும்.

ஒரு கலைவிழாவுக்கு போய் இருந்தேன் எங்கன்ட கந்தரும் வந்திருந்தார்.ஒரு மேசையை காட்டி சொன்னார் அந்த மேசையில் இருப்பவர்கள் எல்லாம் கோயில் காரார் என்று.

இன்னோரு நாள் ஒரு கலியாண வீட்டுக்கு சென்றிருந்தேன் , அந்த கலியாணவீட்டு சம்பிரதாயங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குதே என்று கேட்க அதற்கும் கந்தர் சொன்னார் உதுவும் எங்கன்ட கோயில்காரரின்ட மகளின்ட கலியாணம் என்று......

கோவில்காரர் என்ற கருத்தை கந்தரே பரப்புவதை பார்த்தால் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இங்கே லண்டனிலும் அப்படித்தான் கொஞ்சப் பேர் கோயில் தொடங்கையில் காசு கொடுத்தவர்கள் என சொல்லி அவர்களுக்கு தான் முதல் மரியாதை.அவர்களின் மனுசிமாரின் அலம்பல் சொல்லி வேலையில்லை...அது சரி ஏன் இந்த முறை கதைவடிவாய் எழுதவில்லை!

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்

தாங்கள் குறிப்பிடும் மணியக்காரர் அல்லது தர்மகர்த்தா என்ற வரிசையில் வந்தவன்தான் நானும். கிராஞ்சியம்பதி முருகன் ஆலயம் எனது மூதாதையர்களால் கட்டப்பட்டது. அதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் மூத்த ஆண்மகன் தர்மகர்த்தா ஆவார். அதன்படி ஆலயத்திருவிழாவில் கும்பம் வைப்பதிலிருந்து காளாஞ்சி வாங்குவது சூரன் ஆட்டுவதுவரை எங்களது பிரசன்னம் இல்லாமல் நடக்காது. அந்த வகையில் தற்போது ஊரில் இருந்தால் நானும் இவற்றைச்செய்யலாம்தான் :lol: . ஆனால் எனது தகப்பனாரின் காலம் வந்தபோது

தாயகபோராட்டவழிக்கமைய அதை பொதுமக்களுக்கு அர்ப்பணித்துவிட்டார்.

ஆனாலும் தற்போதும் அங்கு இது போன்ற காரியங்களில் தர்மகர்த்தாக்கள் கௌரவிக்கப்படுவதாகவே அறிகின்றேன்.

இனி மாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் நான் முயற்சிப்பேன். எனது தகப்பனார் போல்எனக்கு இடம் கிடைத்தால்..........?

இதை இங்கு நிஐ தகவல்களுக்காகவே எழுதுகின்றேன். வேறு விதங்களில் பார்க்கவேண்டாம். அதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுமா? கோயிலுக்கு அன்னதானம் கொடுத்து விட்டு அவர்கள் கதைக்கும் கதை இருக்கே.

புத்தன் இங்கே லண்டனிலும் அப்படித்தான் கொஞ்சப் பேர் கோயில் தொடங்கையில் காசு கொடுத்தவர்கள் என சொல்லி அவர்களுக்கு தான் முதல் மரியாதை.அவர்களின் மனுசிமாரின் அலம்பல் சொல்லி வேலையில்லை...

எந்த கோவிலில் நடக்கிறது. கேள்விப்பட்ட மாதிரி தெரியுது!

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுமா? கோயிலுக்கு அன்னதானம் கொடுத்து விட்டு அவர்கள் கதைக்கும் கதை இருக்கே.

கதையைச் சொல்லுங்கள். "ம்" கொட்டக் காத்திருக்கின்றோம் :wub:

கதையைச் சொல்லுங்கள். "ம்" கொட்டக் காத்திருக்கின்றோம் :wub:

என்ன பெரிசா சொல்லப்போயினம்......

நாங்கள் தான் போனகிழமை அன்னதானம் கொடுத்தனாங்கள் ,அந்த மாதிரி சமைச்சு போட்டம், 20 கிலோ பருப்பு 20 கிலோ கிழங்கு ,20 தயிர்,20 ..........எங்கன்ட சனத்திற்கு எவ்வளவு அவிச்சு போட்டலும் கட்டாது 2,3 கோப்பயில வாங்கி கொண்டு போவினம் கடைசியாக எங்களுக்கு ஒரு சாப்பாடும் இருக்காது ...சரியான சேல்விஸ் பிடிச்ச சனம் அப்பா ....... :D:D

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

இது சராசரிக் கதை ஜில்லு! கறுப்பி வித்தியாசமான கதை சொல்லுவா(ர்) ^_^

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கோவிலில் நடக்கிறது. கேள்விப்பட்ட மாதிரி தெரியுது!

லண்டனில் எல்லாக் கோயிலிலும் இது நான் நடக்கிறது ஆனால் நான் குறிப்பாக சொல்ல வந்தது என்ப்பீல்ட் நாகபூசணி அம்மன் கோயில்

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் குளத்தை சுத்துறதை எப்பதான் கைவிடப்போறியளோ?? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுமா? கோயிலுக்கு அன்னதானம் கொடுத்து விட்டு அவர்கள் கதைக்கும் கதை இருக்கே.

அடிக்கடி அன்னதானத்துக்கு நீங்கள் சென்றால் சனம் கதைக்காமல் என்ன செய்யும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இஞ்சை சிட்னிகோப்பிலை முதல்மரியதையும்கோவில்காரரும் எண்டு புடுங்குப்பட உங்கை வெள்ளத்தோடைவெள்ளமாய் புடையன்பாம்பும் முதலையும் வீட்டுவாசலுக்கை வந்து நிண்டு நீந்தப்போகுதுகள் .எடியே கந்தப்பு கவனமெடி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இஞ்சை சிட்னிகோப்பிலை முதல்மரியதையும்கோவில்காரரும் எண்டு புடுங்குப்பட உங்கை வெள்ளத்தோடைவெள்ளமாய் புடையன்பாம்பும் முதலையும் வீட்டுவாசலுக்கை வந்து நிண்டு நீந்தப்போகுதுகள் .எடியே கந்தப்பு கவனமெடி

வெள்ளம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தான் வந்தது. சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் பயணம் செய்தால் தான் குயின்ஸ்லாந்தை அடையலாம்.

வெள்ளம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தான் வந்தது. சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் பயணம் செய்தால் தான் குயின்ஸ்லாந்தை அடையலாம்.

வெள்ளம் வராதற்க்கு காரணம் அந்த சிட்னி முருகன் அப்பு....அந்த சிட்னிமுருகு இல்லாட்டி இன்றைக்கு சிட்னியும் சட்னியாக வெள்ளத்தில கழுவுப்பட்டு போய்யிருக்கும்....சிட்னி முருகுக்கு அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு போர்தின்ற வலிகளும்,அவமானங்களும்,சுமைகளுடனும் அடித்து விரப்பட்டு/வேறு வழியின்றி எல்லாவற்றையும் இழந்து தாய் நிலத்தை விட்டு வந்தாலும் பிற்போக்குத்தனங்களையும்,குருட்டு நம்பிக்கைகளையும்,துரோகச்சிந்தனைகளையும்,சாதி எனும் விச விதையையும் தங்களுடன் கூடவே சுமந்து வந்திருக்கிறது எங்களுடைய இனம்...எங்கள் இனம் இப்பொழுதும் செல்வநாயகத்திற்கு முந்திய காலத்தில்தான் இருக்கிறது...பிரபாகரன் என்ற மனிதன் வாழ்ந்த காலத்தில் அல்ல..பிற்போக்குச்சிந்தனைகள் நிரந்தரமாக எமது சமூகத்தின் மூளைக்குள் தங்கிவிட்டிருக்கிறது..போராட்ட பூமியில் போராட்ட காலத்தில் அது உறை நிலையில் இருந்தது..ஆனால் புலத்தில் அது அப்பொழுதில் இருந்தே இருந்து கொண்டிருக்கிறது..இன்றுகூட பிராமணரைத்தவிர்த்து கடவுள் என்று சொல்லப்படும் கோவில்களில் உள்ள மண் உருவங்களை வேறொருவர் தொடமுடியுமா..?கடவுளை பரம்பரைச்சொத்தாக உரிமை கொண்டாடும் பைத்தியக்காரத்தனத்திற்கு அந்தக்கடவுள் உண்மையில் இருந்தால் கல்லிலே தலையை அடித்து உயிரை விட்டிருப்பார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.