Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தர்மச்சக்கரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும்

வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது.

'தர்மச்சக்கரம்'

கலிங்கம் வீழ்ந்தது!

குருதி கொப்பழித்த 'தாயா'

நதிக்கரையின் ஓரங்களில்,

கரையொதுங்கிய பிணங்களின்

இரத்த வாடை கலந்த காற்று

வெற்றிச்செய்தியை,

நெற்றியில் சுமந்து வீசியது,

அன்னப் பறவைகள் நடை பயின்ற

ஆற்றங்கரையில்,

ஆந்தைகளும் கழுகுகளும்

குந்தியிருந்தன..

கலிங்கம் வீழ்ந்தது!.

வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு.

வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து

வீரர்களின் கோலத்தை,

தோல்வியில் துவளும் கலிங்கத்தின்

குங்குமம் இல்லாத முகத்தைப்

பார்க்கத் துடித்தது

அவன் வக்கரித்துப்போன மனம்.

கலிங்கம் வீழ்ந்தது!

காணுமிடமெல்லாம்,

மரணத்தின் விளம்பரங்கள்.

ஆண்கள், பெண்கள் குழந்தைகள்

ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன.

ஆயுதம் தாங்காத கைகள்!

கவசம் இல்லாத மேனிகள்!.

கந்தல் ஆடைகளே கவசங்களாக,

கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக,

அசோகன் கலங்கினான் .

'அகண்ட' பாரதம்.

அவன் கண்ட கனவு!

நனவாகிய வேளை,

அவன் கண்கள் பனித்தன.

கலிங்கம் வீழ்ந்தது!

மன்னனின் தலைக்குள் ஒரு குரல்!

'மன்னா பற்றைத் துறந்து விடு'.

மன்னனின் நாடி நரம்பெல்லாம்

திரும்பத் திரும்ப,

மந்திரமாக ஒலித்தது அது.

'மன்னா பற்றைத் துறந்து விடு'

சடப்பொருளிலும் ' தர்மா' வைத்

தேடியவனின் குரல்கள்..

காலம் திரும்பியது.,

மீண்டும் ஒரு கலிங்கம்!

'சர்வதேச சமுகம்'

முன்னுரையை எழுதிவைக்க

'முள்ளிவாய்க்கால்'

முடிவுரையை எழுதியது.

முன்னின்று நடத்தியது,

‘'அகண்ட' பாரதம்!

'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்'

தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள்

மீண்டும் கழன்றன.

அழகிய தர்மச்சக்கரம்,

'அகண்ட பாரதக்' கொடியின்

அலங்கோலத்தைப்

பிரதி பலித்தது.

கலிங்கத்துப் போரில்,

பேய்கள் கூழ் காய்ச்சப்

பற்கள் கிடைத்தன.

எங்கள் கலிங்கத்தில் ..

எரிந்த 'இரசாயன' நெருப்பில்

எங்கள் பற்கள் மட்டுமல்ல

எலும்புகள் கூட,

நீறாகிப் போயின.

பதுங்கு குழிகளே எங்கள்

புதை குழிகள் ஆக,

எங்கள் வேலிகளே

எங்களை மேய்ந்தன.

புத்தனின் பல் மட்டும்

பூட்டிய பெட்டியினுள்

பத்திரமாய் இருந்தது.

‘தலதா’ மாளிகையின்

வாசற்படிகளில்.

காவலுக்கு நின்றன

இயந்திரத் துப்பாக்கிகள்!

ரத்தக் காட்டேரிகள் ஆளும்

'இலங்காபுரி'யின்

தேசீய இலச்சனையிலும்

திமிரோடு வீற்றிருந்தது

அந்தத் 'தர்மச்சக்கரம்'

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்திலும் இணைத்துப் பார்க்க் கூடியதாக் உள்ளது. தங்கள் பகிர்வுக்கு நன்றி . பாராட்டுக்கள.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சொன்னா கட்டாயம் நல்ல கவிதைதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

பாரதத்தின் கணக்கு முடிக்கப்படும்

அதன் கிளைகள் வெட்டப்பட்டு

அதன் துண்டுகளை வைத்தே

பாரதத்தின் கதை எழுதப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்திலும் இணைத்துப் பார்க்க் கூடியதாக் உள்ளது. தங்கள் பகிர்வுக்கு நன்றி . பாராட்டுக்கள.

நன்றிகள் பல, நிலாமதி அக்கா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சொன்னா கட்டாயம் நல்ல கவிதைதான் :)

நன்றிகள், தோழரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

பாரதத்தின் கணக்கு முடிக்கப்படும்

அதன் கிளைகள் வெட்டப்பட்டு

அதன் துண்டுகளை வைத்தே

பாரதத்தின் கதை எழுதப்படும்

பாரதம் என்றைக்குமே ஒரு தேசமாக இருந்ததில்லை.பல சிறு சிறு கூறுகளாக, குறு நில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.ஆங்கிலேயர்களின் கோமாளித்தனத்தால் அது ஒன்றாக்கப்பட்டது. இந்தியா என்றொரு தேசமே கிடையாது. அது ஒரு மாயை.அது உடைக்கப் பட வேண்டியதே.நீங்கள் கூறுவது போல அதன் கிளைகள் வெட்டப்ப்படுமானால், அன்றைக்கே மிகுந்த மன அமைதியுடன் 'மணற்காடு' போவேன்.அது நடந்தால் 'ஈழம்' தானாக மலரும்.நன்றிகள் விசுகு!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு திரும்பும் என்பது இதைதானோ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு திரும்பும் என்பது இதைதானோ??

வரலாறு எப்போதும் வட்டப்பாதையில் பயணிக்கின்றது.

நன்றிகள நுணாவிலான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.