Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இட்லி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இட்லி

செய்யும் முறை 1

இது வரை இட்லி என்னை கைவிட்டதில்லை. நான் எந்த விதமான ஊக்கிகளும் சேர்ப்பதில்லை - சில நேரங்களில் அவை அமிலத்தன்மையை அளிப்பதுண்டு. தமிழர்களின் அற்புதமான இந்த உணவு வகை - கொஞ்சம் பழகினால் நன்றாக வரும். வெந்தயம் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

எதற்கும், செய்முறை இங்கே

பச்சரிசி - 1 அளவு

புழுங்கலரிசி - 4 அளவு

வெந்தயம் - 1/8 அளவு

1.மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

2.தோலில்லாத முழு உழுந்து - 1 1/2 அளவு - நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும்.

3.முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும். நன்றாக பொங்கி வர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்க்க வேண்டும்.

4.மாவை எடுத்து விட்டு, அரிசியை அறைக்கலாம். நிறைய தண்ணீர் விட வேண்டாம். கொஞ்சம் ரவையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

5.தேவையான உப்பைப் போட்டு ஒரு 5 நிமிடங்கள் அறைக்கலாம். நன்றாக சேர்ந்து கொள்ளும்.நன்றாக எல்லவற்றையும் கலந்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோக்க 8-6 மணி நேரத்துக்கு முன் வெளியில் வைக்க வேண்டும். நன்றாக பூத்து வரும்.இட்லி வார்ப்பதற்கு முன், தேவையான தண்ணீர் விட வேண்டும். கரண்டியில் விட்டுப் பார்த்தால், சுலபமாக விழ வேண்டும். இது மிக முக்கியம். (paint consistency)

6.மல்லிகைப்பூ இட்லிக்கு நான் உத்தரவாதம். :)தோசையானால், தண்ணீர் இன்னம் சேர்க்க வேண்டும் - (distemper consistency)

7.தேங்காய் மற்றும் வெங்காய சட்னிகள் + வெங்காய முருங்கை சாம்பார் - ஆஹா!!

- ஸ்வர்ணலக்ஷ்மி lakshmi_ssri@yahoo.com

செய்யும் முறை 2

இட்லி

புளுங்கல் அரிசி 800 கிராம் (4 கப்)

உளுந்து 200 கிராம் (1 கப்)

உப்பு தேவைக்கேற்ப

அரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி தனி தனியாக குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து,முதலில் உளுந்தை சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மசிய அரைத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை உப்பு சேர்த்து சிறிது கொர கொரப்பாக அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில் கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி அவிக்கலாம்.

குறிப்புகள்:

நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.

அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் உற வைத்தும் காலையில் அரைக்கலாம்.

அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால் அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது. அதிகமாக கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு சத்துக்களும் போய்விடும்.

இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்பொழுது இட்லிமாவில் சிறிது வெந்தயப் பொடியை கலந்து தோசை சுடும்போது ருசியுடன் வாசனையாகவும் இருக்கும்.

பொதுவாக குக்கர் தட்டாயிருந்தாலும். ஏழுகுழி, ஐந்துகுழி அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும் இட்லி வேகும் நேரம் ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறி விடக்கூடும்.

-மீனா

செய்யும் முறை 3

Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

long grain rice கிடைக்கிறது என்கிறீர்கள். அப்புறம் என்ன கவலை. அதை வெறும் வாணலியில் சூடு வர வறுத்துக் கொண்டு நன்கு அலசிக் களைந்து நீர் ஊற்றி ஊற வைக்கவும். அரிசியின் அளவே உளுந்து போட்டுக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி வெந்தயம் உளுந்தோடு சேர்த்துக் கொண்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு சேர்த்துப் புளிக்க வைத்து இட்லியோ, தோசையோ செய்யலாம். யு.எஸ்.ஸில் எங்க பெண்ணிற்கு இட்லி அரிசி கிடைக்காத சமயம் இப்படித் தான் செய்வதாய்ச் சொன்னாள். நானும் அங்கே இருந்தபோது செய்திருக்கிறேன். வித்தியாசமே தெரியாது. சிலர் இந்த லாங் கிரெயின் அரிசியோடு ஒரு கரண்டி அங்கேயே கிடைக்கும் புழுங்கல் அரிசியும் சேர்த்துக் கொள்வதாய்ச் சொன்னார்கள். முயலவும்.

செய்யும் முறை 4

இட்லி

மற்றொருவகை

புளுங்கல் அரிசி கிடைக்கவில்லையென்றால்

இரண்டு கப் பச்சரிசி

ஒரு கப் உளுந்து

கால் தேக்கரண்டி வெந்தயம்(அரிசியுடன் சேர்த்து ஊறவைக்கணும்)

இரண்டு மேஜைக்கரண்டி சாதம்

உப்பு சிறிதளவு

முதலில் உளுந்தை அரைத்து பிறகு அரிசி வெந்தயத்துடன் சாதம் உப்பு சேர்த்து

(மறக்காமல் கொர கொரப்பாக)அரைத்து எல்லாவற்றையும் (நன்கு)கலந்து 8 மணிநேரம் வைத்து பின் இட்லி அவிக்கணும்.

பூப்போன்ற வெள்ளை நிற இட்லி ரெடி :)

-மீனா rangameena@gmail.com

http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

இணைப்பிற்கு நன்றி நுணாவிலன்.

ஓரளவு நன்றாக சமைக்கத் தெரிந்த எனக்கு இன்னும் இந்த இட்லி ஐ மல்லிகைப்பூ பதத்தில் அவித்தெடுத்தல், இடியப்பம் பிழிவது போன்றவற்றில் உள்ள ரெக்னிக் எல்லாம் பிடிபடுகிதில்லை.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலன்.

ஓரளவு நன்றாக சமைக்கத் தெரிந்த எனக்கு இன்னும் இந்த இட்லி ஐ மல்லிகைப்பூ பதத்தில் அவித்தெடுத்தல், இடியப்பம் பிழிவது போன்றவற்றில் உள்ள ரெக்னிக் எல்லாம் பிடிபடுகிதில்லை.

ஏன் தப்பிலி வார விடுமுறைக்கு குசினியை விட்டு வெளிய வாற யோசனை இல்லையோ? :lol: :lol: :D

ஏன் தப்பிலி வார விடுமுறைக்கு குசினியை விட்டு வெளிய வாற யோசனை இல்லையோ? :lol: :lol: :D

இல்லை குட்டி எல்லாக் கலைகளையும் முனைப்பாக தேடி அறிந்து கொள்ளும் ஒரு அறிவுப்பசி. :lol:

இல்லை குட்டி எல்லாக் கலைகளையும் முனைப்பாக தேடி அறிந்து கொள்ளும் ஒரு அறிவுப்பசி. :lol:

கலைகளை அறிஞ்சு வைத்திருப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் அதை தெரிந்தது போல் காட்டிக் கொண்டால் தான் பிரச்சனையே... :D

கலைகளை அறிஞ்சு வைத்திருப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் அதை தெரிந்தது போல் காட்டிக் கொண்டால் தான் பிரச்சனையே... :D

உண்மைதான். குட்டிக்கு நல்ல அனுபவம்போல. ^_^

எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டால் காலையில் எழுந்தவுடனேயே சாரி கட்ட வேண்டியிருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் இட்லியொடு நிறுத்திவிட்டு தொட்டுக்கொள்ள ஒன்றும் சொல்லாமல் போகும் தோழர் நுணாவிலான் அவர்களை நான் மிகவும் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன் :)

தக்காளி சட்னி

Photo+Samaiyal+396.jpg

தக்காளி சட்னி – 1

தேவையானவை :

தக்காளி – 2 (சிறியதாக இருந்தால் 3)

பெரிய வெங்காயம் – 1 (சிறியதாக இருந்தால் 2)

வற்றல் மிளகாய் – 3

கொத்துமல்லி இலை – கைப்பிடியளவு

கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி.

எண்ணை – 2 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

1. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து, வற்றல் மிளாகய் சேர்க்கவும்.

2. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துப் பரிமாறவும்.

இட்லி, தேசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும் இந்த தக்காளி சட்னி.

idli-tomato-chutney-300x225.jpg

http://rammalar.wordpress.com/2010/08/21/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/

  • கருத்துக்கள உறவுகள்

இட்டலிக்கு சில பேர் அரிசி அரைத்துப் போடாமல் ரவையை ஸ்டீம் பண்ணி போடுவார்கள் சாப்பிட பூப் போல இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இட்டி நல்ல விருப்பம் :D

இணைப்புக்கு நன்றி..........இதோட தொட்டுக்க காரமாய் ஒண்டும் இல்லையோ!!!!!!

அதையும் தந்தால் வசதியாக இருக்குமெல்லே..........................

வெயிலும் வந்திட்டுது...........இட்டலி நன்றாய் புளிக்கும்..........அதனால் மனிசிட்ட செய்ய சொல்லுறன்!!!!!

இணைப்புக்கு நன்றி..........இதோட தொட்டுக்க காரமாய் ஒண்டும் இல்லையோ!!!!!!

அதையும் தந்தால் வசதியாக இருக்குமெல்லே..........................

வெயிலும் வந்திட்டுது...........இட்டலி நன்றாய் புளிக்கும்..........அதனால் மனிசிட்ட செய்ய சொல்லுறன்!!!!!

தக்காளி சட்னி நாக்கு புளி.....ச்சுப் போட்டுது................

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலன். எனக்கு இட்லி எல்லாம் சரி ட்வராது.

தொட்டுக்கொள்ள இணைத்த தக்காளி சட்னி பார்க்க நல்ல கலர்வுல்லா இருக்கு.

நூடில்ஸ் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.

தக்காளி சட்னி தந்த புரட்சிக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இட்டலி எனக்கு மிகவும் பிடித்த உணவு.

தமிழ்மாறன் சொல்லியது போல் வெய்யில் காலம் வந்துள்ளதால் இனி அடிக்கடி இட்டலி செய்ய வேணும்.

இட்டலிக்கு தக்காளி சட்னி, தோதான சேர்மானம்.

அத்துடன் தமிழ்கடைகளில் விற்கும் கட்டா சம்பல் போத்தில் ஒன்று, வீட்டில் கைகாவாலாய் இருந்தால்... அதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இணைப்புக்கு நன்றி நுணாவிலான் & புரட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இட்டி நல்லா பிடிக்கும் சிறி அண்ணா ..ஆனா செய்து தரத் தான் ஆக்கள் இல்லை...! :):D

இட்டலியா அல்லது இட்லியா செய்து தர ஆள் இல்லை!!!! பையன் இதோ ஒரு தடீர் ஆலோசனை

எதுவாக இருந்தாலும் தடீர் கல்யாணம் ஒண்டு செய்யுங்கோ பிரச்சினைக்கு முடிவு வந்து விடும்

எங்களிற்கும் சொல்லி அனுப்புங்கோ

இட்லியும் தக்காளி சட்னியும் கொண்டு வாறம்.............

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இட்டி நல்லா பிடிக்கும் சிறி அண்ணா ..ஆனா செய்து தரத் தான் ஆக்கள் இல்லை...! :):D

உங்கள் சாதகக் குறிப்பை தரகரிடம் குடுங்கோ.....

மிச்சத்தை அவர் பார்த்துக் கொள்ளுவார். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜச்சோ...சிறி அண்ணா.. நான் இன்னும் அந்த வயதுக்கு வர வில்லை..அதுக்கு இன்னும் கொஞ்சக் காலம் இருக்கு :lol:

எனக்கும் இட்டி நல்லா பிடிக்கும் சிறி அண்ணா ..ஆனா செய்து தரத் தான் ஆக்கள் இல்லை...! :):D

உங்கள் சாதகக் குறிப்பை தரகரிடம் குடுங்கோ.....

மிச்சத்தை அவர் பார்த்துக் கொள்ளுவார். :D

ஜச்சோ...சிறி அண்ணா.. நான் இன்னும் அந்த வயதுக்கு வர வில்லை..அதுக்கு இன்னும் கொஞ்சக் காலம் இருக்கு :lol:

அதாவது, உளுந்து அரிசி, ரவை வாங்கி இட்லியும் தக்காளி சட்னியும் தரகர் செய்து தருவார் பையா, நீங்கள் சாதகக் குறிப்பை மட்டும் குடுங்கோ... :D அப்படித் தானே சிறி அண்ணா சொல்ல வந்தனீங்கள்? ^_^

  • கருத்துக்கள உறவுகள்
<_<:rolleyes:

பையன் 26 எண்டதை நாங்கள் எல்லோரும் வயசு எண்டு நினைத்து

கால் கட்டு போடுற வயசு எண்டு எல்லே நினைச்சிட்டம்

நாங்கள் படுகிற துன்பம் நீங்களும் பட வேணும் எல்லே!!!!!

அந்த நல்ல மனசில தான் உங்களின்ர வாழ்க்கையில அக்கறை காட்டுறம்

வேறு ஒண்டும் இல்லை நல்ல மனசு பண்ணி சொல்லுறம் எண்டு தப்பா எண்ணாதையுங்கோ..................

  • கருத்துக்கள உறவுகள்

இட்டலிக்கும், தக்காளிச் சட்னிக்கும் நன்றி. காரம் தேவை என்றால் இட்டலிப் பொடி செய்து வைத்திருந்தால் உபயோகமாய் இருக்கும். தோசைக்கும் நல்லாய் இருக்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.