Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்வீகம் வெற்றியளிக்காவிடில் வேறு வழியை நாடுவோம்; சம்பந்தன் ஆவேசம்

Featured Replies

அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு கிழக்கின் உள்ளூராட்சிச் சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்றுக்காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எம்மக்கள் அளித்துள்ள ஆணைக்கு மதிப்பளித்துத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உறுதியான தீர்வு ஒன்றைக் காண அரசு முன்வர வேண்டும். அண்டை நாடுகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது, சர்வாதிகாரம் புரிந்த தலைவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதையும் அரசு உணர வேண்டும். தென்பகுதி மக்கள் எப்படி ஆளும்கட்சிக்கு ஆணைவழங்க உள்ளனரோ, அதேபோலதான் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கி உள்ளனர்.ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், அதே ஜனநாயக முறைப்படி மக்கள் பலத்தைப் பெற்ற ஒரு சமூகத்துக்கு அநீதி இழைக்கக்கூடாது. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காது சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொண்ட உலக நாடுகளில் மக்கள் புரட்சி வெற்றியளித்துள்ளது.

இதேபோன்று, எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக ளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், அரசுடன் தொடர்புகொண்டு பேச்சு மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான இணக்கப்பாடு ஒன்றைக் காணத் தயாராக இருகிறோம் என்று அறிவித்தோம். இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை.பின்னர், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெற்றன. எமது அடிப்படை சுயநிர்ணய உரிமைகள் குறித்து விரிவான கருத்துக்களை நிலைப் பாட்டை மக்கள் முன் வைத்தோம். எமது கொள்கைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு அளித்து எமக்கு ஆணை வழங்கி உள்ளனர்.இதன்படி, அரசுடன் பேசுகின்றோம். தனிநாடோ, தமிழீழமோ நாங்கள் கேட்கவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களுடன் குரோதம் பாராட்டவும் இல்லை.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. எம் மக்கள் இன்றும் அகதிகளாகவே வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; எமது உடைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; கல்வி அபிவிருத்தி காண வேண்டும்; கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும்; சுகாதார வசதிகள் பேணப்பட வேண்டும்; விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்ய வேண்டும்; கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபடப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.இவற்றையெல்லாம் நிர்ணயிக்கும் அதிகாரம் வேண்டும். நாம் வன்முறையை எதிர்ப்பவர்கள்; ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அதேசமயம், அதிகாரத்தில் இருக்கும் சிலர் அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் என்று வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.எமது நோக்கம் ஒன்று தான். மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கவும் நிர்ணயிக்கவும் கூடிய உரிமை வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்யும் அதிகாரம் வேண்டும்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

:o:(^_^சம்பந்தன் ஐய்யா அவர்களே,

சாத்வீகம் சரிவராவிட்டால் என்ன செய்வதாக நினைத்து வைத்திருக்கிறீர்கள்??

உங்களுக்கு வன்முறை பிடிக்காது என்று வேறு சொல்கிறீர்கள். ஒரே குளப்பமாக இருக்கிறதே.

வன்முறையும், சாத்வீகமும் இல்லாத அந்தப் பாதை எதுவென்பதை நீங்கள் சற்றுக் கூறினீர்கள் என்றால், எங்களுக்கும் புரிந்துகொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

தனி நாடும் வேண்டாம், சுதந்திரமும் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அது இரண்டையும் தவிர மற்றதெல்லாம் இப்போது இருக்கிறதே ஐய்யா??!!!

என்னவோ சொல்லுங்கள். பார்த்து வாசிப்பதிலேயே உங்களுக்கு இவ்வளவு குளப்பமென்றால், நீங்களாக சொந்த முடிவெடுப்பதென்பது எவ்வளவு கஷ்ட்டமாக இருக்கப்போகிறது ??!!

அன்று தொடக்கம் இன்று வரை சம்பந்தர் ஓர் மர்மப்பொருள், நம்ப முடியாத மனிதர் ... அது எமக்கு மட்டுமல்ல கூட்டமைப்புக்கு உள்ளுக்கும்!!!!

... ஆனால் அங்கு என்னத்தை செய்ய சிங்களம் விடப்போகிறது??? எமது பலம் அழிந்த பின், ஒவ்வொன்றாக துடைத்தெடுக்கிறான்!!! ... இன்று அங்கு ஓர் தமிழ் கட்சி என்று ஒன்றிருப்பதும், அது தொடர்ந்திருப்பதும் அவசியம்!! ... இல்லை ஈழம்தான் என்று, இவ்ந்த கூட்டமைப்பும் கூறியிருந்தால், இன்று அக்கட்சி மட்டுமல்ல, அதில் உள்ள ஒருவரையும் உயிரோடு சிங்களம் விட்டு வைத்திருக்காது!!! ... செய்தாலும் உலகம் பார்த்து ஒன்று செய்ய இயலாமல் தான் இருக்கும்!!!

மறுபுறம், இவர்களை நாம் உடைப்போமாயின் ... அங்கு மிஞ்சப்போவது தம் தாய்மார்கள், சகோதரிகளையே சிங்களத்துக்கு கூட்டிக் கொடுக்கும் டக்லஸுகளும், கருணா/பிள்ளையானுகளுமே!!! ... கூட்டமைப்பா??? கூட்டிக்கொடுப்பதுகளா??

... நாம் ஏதாவது செய்ய வேண்டுமாயின் ... அது புலத்தில்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா, உங்களைத் துப்பவும் ஏலாமக் கிடக்கு,விழுங்கவும் ஏலாமக் கிடக்கு?

நீங்கள் எங்களுக்கு என்ன வழியை மிச்சம் வைத்திருக்கின்றீர்கள்?

தனிநாடோ, தமிழீழமோ நாங்கள் கேட்கவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களுடன் குரோதம் பாராட்டவும் இல்லை.

தயவு செய்து இந்திய அரசின் வாக்குறுதிகளை மனதில் வைத்து எங்கள் மக்களை மீண்டும் பலிக்கடாவாக்கி விடாதீர்கள்.

அவர்களிடம் அழுவதற்குக் கண்ணீர் இல்லை!!!

  • தொடங்கியவர்

சம்பந்தர் ஐயா, உங்களைத் துப்பவும் ஏலாமக் கிடக்கு,விழுங்கவும் ஏலாமக் கிடக்கு?

நீங்கள் எங்களுக்கு என்ன வழியை மிச்சம் வைத்திருக்கின்றீர்கள்?

தயவு செய்து இந்திய அரசின் வாக்குறுதிகளை மனதில் வைத்து எங்கள் மக்களை மீண்டும் பலிக்கடாவாக்கி விடாதீர்கள்.

அவர்களிடம் அழுவதற்குக் கண்ணீர் இல்லை!!!

கூட்டமைப்பு கட்டாயம் தேவை அத்துடன் எதிர்காலத்தில் நல்ல தலைமையும் அதற்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா ஆயுதம் தூக்கப்போகிறாரா? இல்லை அறளை பெயர்ந்து புலம்புகிறாரா?

30 வருட அரசியலில் சிங்களவனிடம் அடிவாங்காத தமிழ் தலைவர் என்றால் சம்பந்தர் தான்.அப்படி ஒரு தத்திரசாலி.அதே நேரம் தமிழ் மக்களுக்கு எதுவும் பெற்றும் கொடுக்கவில்லை.புலிகளை விமர்சிப்பதற்கு மட்டும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வந்து விடுவார்.இளைஞர்களை கட்சியில் சேர்ப்பது மட்டுமல்லாமல் தனது தலைமை பதவியை விட்டுக்கொடுக்காமல் அரச சுகபோகங்களை இறக்கும் வரை அனுபவிக்க கட்சியும் விட்டு விட்டார்கள். :wub:

அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமிழரின் உரிமைகளையும், வீரத் தலைமையையும் இதுவரை தொடர்ந்து அடகு வைத்துவந்த சம்பந்தனின் உளறலை யார்தான் செவிமடுக்கப் போகிறார்கள்?

அமிர்தலிங்கத்தைப் போல கீழ்தர அரசியல் செய்ய முனைந்துவிட்டார் போலும்.

இனி என்ன கோவண போராட்டமோ?

கூட்டமைப்பு கட்டாயம் தேவை அத்துடன் எதிர்காலத்தில் நல்ல தலைமையும் அதற்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

சாத்வீகம் வெற்றியளிக்காவிடில் வேறு வழியை நாடுவோம்

கட்சியைக் கலைச்சுட்டு சிறிலங்கா அரசுடன் சேரப்போகிறீர்களா?

சாத்வீகம் வெற்றியளிக்காவிடில் வேறு வழியை நாடுவோம்

கட்சியைக் கலைச்சுட்டு சிறிலங்கா அரசுடன் சேரப்போகிறீர்களா?

சரி, நீங்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்??? அவற்றை, அவர்கள், இன்றுள்ள நிலையில் செய்யலாமா????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சரி, நீங்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்??? அவற்றை, அவர்கள், இன்றுள்ள நிலையில் செய்யலாமா????

புதிய தலை முறைக்கு வழி விடுங்கள்.தலைமைக்குப் போட்டி வந்த காலங்களில் எல்லாம் அதை தடுத்து நிறுத்தி, தகுதியுள்ளவர்களுக்குக் கரி பூசி அனுப்புவது, இவருக்கும் இவருடன் சேர்ந்திருக்கும் சிலரதும் வழக்கம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா கடந்த 50 வருடங்களாக அரசியலில் இருந்து தமிழ் மக்களுக்கு எதனையும் பெறறுக் கொடுக்கவில்லை. கடைசியாக அவரது தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளால் ததேகூட்டமைப்பை உடைத்ததுதான் அவர் செய்த வேலை.இளைஞர்களுக்கு வழி விடுவதே அவர் செய்ய வேண்டிய வேலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.