Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னங்கன்றில் அம்மனின் முகம் உரும்பிராயில் அதிசயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னங்கன்றில் அம்மனின் முகம் உரும்பிராயில் அதிசயம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 07:56:46| யாழ்ப்பாணம்]

உரும்பிராய் வைத்தீஸ்வரா பகுதியில் உள்ள வீடொன்றில் நின்ற தென்னங் கன்றில் அம்மனின் முகம் தோன் றிய அதி சயம் இடம் பெற்றுள்ளது.அழகன் ரமேஸ்வரன் என்பவரது வீட்டி லேயே இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.

இந்துக்களின் தாய்த் தெய்வ மாக போற்றப்படும் அம்மனின் முகம், ஆறு வருடங்களேயான தென்னங்கன்றில் தோன்றியுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த தென்னங்கன்றுகளுடன் வைத்த அனைத்துக் கன்றுகளும் காய்க்கத் தொடங்கிவிட்டது ஆனால் இந்தக் கன்று மட்டும் பழுதடைந்து வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தென்னங்கன்றை தறிக்க முற்பட்டபோது தென்னங் கன்றிலிருந்து ஒளிதோன்றியது.

இதனால் அதை தறிப்பதை நிறுத்திவிட்டேன்.அதன் பின் சென்று பார் க்கையில் ஒரு கண் மட்டும் தென்பட்டது. இதன் பின்பு இன்று (நேற்று) காலை 7மணியளவில் மீண்டும் தறி க்க முற்பட்டபோது இரண்டு கண்களும் புருவமும் தென்பட்டதோடு முகத் தோற்றத்தையும் ஓரளவுக்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.பின் தென்னங்கன்றை சுற்றிப் பார்த்த போது பின்புறத்திலும் ஓரளவுக்கு அவதானிக்க கூடியவாறு கண்களும் புருவமும் தென்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

valampurii.com

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்காரர் இதற்கு முதல் அம்மனை எங்கேயோ கண்டிருக்கிறார் போல!

அவ்வளவு உறுதியாக அம்மன் தானென்று அடித்துச் சொல்கின்றார்!!!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

போறபோக்கில் ... யாரும் ஒருவன் ... தானிருந்த கக்காவில் ... பிள்ளையார் தெரிகிறார் என சொல்லப் போகிறான்????? <_<

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் போட்டால் நாங்களும் பார்ப்போமல்ல :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மப்படிச்சு விட்டு பார்த்தால் தென்னங்கன்றில இன்னும் பல முகங்கள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அதை தறிப்பதை நிறுத்திவிட்டேன்.அதன் பின் சென்று பார் க்கையில் ஒரு கண் மட்டும் தென்பட்டது. இதன் பின்பு இன்று (நேற்று) காலை 7மணியளவில் மீண்டும் தறி க்க முற்பட்டபோது இரண்டு கண்களும் புருவமும் தென்பட்டதோடு முகத் தோற்றத்தையும் ஓரளவுக்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.பின் தென்னங்கன்றை சுற்றிப் பார்த்த போது பின்புறத்திலும் ஓரளவுக்கு அவதானிக்க கூடியவாறு கண்களும் புருவமும் தென்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் மரத்தை தறிக்க முற்படவேண்டும்.தொடர்ந்து அதிசயம் நடந்த வண்ணம் இருக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காழ்,உரியம் ,ஆண்டுவளையம் என உயிரியல் வகுப்பில வாத்தி படிபிச்ச படங்கள் நினைவில் வருகின்றது....எதற்கும் படிச்ச சனம் வந்து விளக்கம்கொடுத்தால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொருளையோ, ஒரு காட்சியையோ.... மனிதர் பார்க்கும் பார்வையில்.... வித்தியாசப்படும். எல்லோருக்கும் அந்தப் பார்வை தங்கள் கோணத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உரும்பிராய் அம்மன் பக்தர் உண்டியல் வைத்து, ஆக்களை கூப்பிட்டு காசு சேர்க்கவில்லத்தானே....

அது, வரை நீங்கள் சந்தோசப் படுங்கோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உரும்பிராய் அம்மன் உண்மையா??? காணொளிகளுடன் கூடிய சிறப்புச் செய்தி அறிக்கை

[உரும்பிராய் அம்மன் உண்மையா??? காணொளிகளுடன் கூடிய சிறப்புச் செய்தி அறிக்கை] 2011-05-06 04:44:55 [views = 2078]உரும்பிராயில் அம்மன் தோன்றியது பற்றி எமது விசேட ஊடகவியலாளர்களால் தரப்பட்ட காணொளிகளுடன் கூடிய செய்தி அறிக்கை கீழே. எமது ஊடகவியலாளர்களால் அம்மனுக்கு அருகில் உள்ள மாமரத்தில் பிள்ளையாரும் கண்டு பிடிப்பு. காணொளிகள்

1) யாழ்ப்பாணத்தில் ஏசி பூட்டாத குறையாக உள்ள வசதி கூடிய கோவில்களை விட்டு விட்டு உரும்பிராயில் மலசல கூடத்திற்கு 5 மீற்றர் தொலைவில் மலசல கூட வாயிலைப் பார்த்தபடி உள்ள சிறிய வளர்ச்சி அடையாத தென்னை மரத்தி்ல் அம்மன் கண் வைத்தது ஏன்?

2)கண்ணை மட்டும் வைத்த அம்மன் முகத்தையோ அல்லது உடலையோ காட்டாது மறைப்பது ஏன்?

3) வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒளியைக் காட்டிய அம்மன் மற்றவர்களுக்கு ஒளியைக் காட்டாது விட்டது ஏன்??

4) குடாநாட்டில் காணாமல் போனவர்கள் மற்றும் கொடிய யுத்தத்தால் கை, கால்கள் ஊணமுற்று அநாதரவாக நிற்கும் உறவுகளுக்கு அம்மன் கண்ணை முழித்துக் காட்சி கொடுத்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பாளா? அல்லது எமது சமயப் பெரியோர்கள் சொன்னது போல உங்கள் ஊழ்விணைப் பயன் என சொல்லி பேசாது இருப்பாளா?

5) யாழ்ப்பாணத்தில் நடக்கும் சமூகச் சீரழிவுகளை தட்டிக் கேட்டு திருத்துவாளா?

இவ்வளவு வினாக்களுக்கும் விடை காண்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து 8 கி.மி தூரத்தில் உள்ள உரும்பிராய் மேற்குப் பகுதிக்குப் பயணமானோம்.

பக்திமயமாக சென்று கொண்டிருந்த சிலரை வழி தொடர்ந்து அந்த வீட்டை அடைந்தோம்.

சனசமூக நிலையம் ஒன்றை சுற்றிச் சென்ற பாதை வழியே அம்மனின் கண் தென்பட்ட இடத்தினைக் கண்டறிந்தோம்.

வீட்டுக் கோடியின் அருகே மலசல கூடத்துக்கு அண்மையில் காணப்பட்டது வளர்ச்சி குன்றிய தென்னமரம். அருகே சென்று பார்த்த உற்றுப் பார்த்த போது பெண்களின் கண்ணமைப்பில் ஒரு சோடி வடிவம் காணப்பட்டது. விரல்களால் தொட்டுப் பார்க்க முற்பட்ட போது வயது போன ஆச்சியின் குரல் எம்மைத் தடுத்தது.

"ஐயர் சொன்னவர் அம்மனின் கண்ணை தொடக் கூடாது என்று" ஆச்சி கத்தினார்.

எமது ஊடகவியலாளர்களில் ஒருவர்ஆச்சியை ஏமாற்றிக் கொண்டு நிற்க இன்னொருவர் கண்களை தொட்டுப் பார்த்தார்.

தென்னை மரத்திற்கு 'மேக்கப்' செய்யப்பட்டது அப்பட்டமாகத் தெரிந்தது.

சாதாரணமாகத் தெரிந்த கண்ணைப் போன்ற உருவத்திற்கு சிறிய ஊசிகள் கொண்டு குற்றிக் குற்றி இமைகள் செதுக்கி அம்மனின் கண்களை அழகு படுத்தியுள்ளார்கள். அதை அப்பகுதியில் உள்ள கோயில்ப் பூசாரி ஒருவரைக் கொண்டு வந்து காட்டியுள்ளார்கள். அம்மனை நேரில் கண்டவர் போல குறிப்பிட்ட பூசாரியும் இது அம்மனின் கண்கள் தான் என தரச் சான்றிதழ் கொடுத்துள்ளார்.

உடனடியாக அம்மனுக்கு உண்டியல் வைக்கப்பட்டது.

அம்மன் உள்ள பகுதியை சுற்றி துப்பரவு செய்வதற்கு முன்னலே ஒரு தட்டில் திருநீற்றுடன் கூடிய பணத் தட்டு வைக்கபட்டது. மிகுந்த பக்தியுடன் வரும் பக்த கோடிகளும் பிள்ளைக்கு கொப்பி பேனை வாங்கிக் கொடாத பெற்றோரும் அம்மனின் தட்டில் காசினைப் போட்டு தமது குறைகளை மனத்தினால் கூறிக்கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அங்கு நின்றிருந்த வீட்டு உரிமையாளரான குடும்பத் தலைவனால் தென்னை மர அம்மனின் கண்களில் இருந்து வந்த ஒளி பற்றிய வர்ணனை வந்து போகும் பக்தர்களுக்கு விபரமாக கூறப்பட்டுக் கொண்டு இருந்தது. இதனையடுத்து எமது ஊடகவியலாளர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

இன்று வெள்ளிக் கிழமை அம்மனின் கண்கள் உள்ள அந்த இடத்திற்குச் சென்ற போது ஏராளமான மாற்றங்கள் தென்பட்டன. மலசல கூடம் சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. தென்னை மரத்தினைச் சுற்றி மாட்டின் சாணத்தால் மெழுகப்பட்டு புனிதமாக்கப்பட்டிருந்தது. வேம்பம் இலைகளால் அம்மனின் கண்கள் உள்ள பகுதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்டியல் பாத்திரம் வேறாகவும் திருநீற்றுப் பாத்திரம் வேறாகவும் வைத்திருந்தார்கள்.

அம்மன் இருக்கும் இடத்தில் நிச்சயம் பிள்ளையார், முருகன் போற தெய்வங்களும் காணப்படும் என நினைத்து நாம் அந்த இடத்தில் உள்ள மரங்களை ஆராய்ந்தோம். அப்போது ஒரு மாமரத்தில் மரத்தில் பிள்ளையார் வடிவில் ஒரு உருவம் தென்படவே அங்கு நின்ற ஒரு ஆச்சியிடம் இங்கு பாருங்கள் பிள்ளையார் எனத் தெரிவிக்க ஆச்சி ஓடிவந்து தேவரம் பாட முற்பட்டார். ( காணொளியில் காணலாம்) மற்றும் தென்னைக்கு மேலேயும் எங்கள் கண்கள் மேயவே அதில் சிவனின் உருவ அமைப்புடன் ஒரு தோற்றம் காணப்பட்டது. அதைனையும் சுட்டிக் காட்டி விட்டு மாமரத்தில் இருந்த இன்னொரு உருவத்தினை முருகனது நாமத்தை சூட்டி விட்டு வெளியே வந்தோம்.

பக்த கோடிகள் அங்கு இருந்த உண்டியலில் காசு போடுவதை அவதானித்த எமது ஊடகவியலாளரில் ஒருவர் தனது வீட்டுக்குச் சென்று எமக்கு சிறிது நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனது பலா மரத்தில் புத்த பெருமான் தோன்றி உள்ளார் என. அந்த இடத்திற்கு விரைந்து கொண்டு இருக்கின்றோம்.

செய்திகள் தட்டுப்பாடாக இருக்கின்ற இந்தக் காலத்தில் இவ்வாறான அதிசயங்களை உடனடியாகப் படம் பிடித்து போடுவதற்கு ஆவலாக உள்ளோம். உங்கள் வீடுகளிலும் இருக்கும் உருவங்களை இவ்வாறு எமக்கு தெரியப்படுத்தினால் உடனடியாக நாம் பிரசுரிப்பதற்கு தயாராக உள்ளோம்.

புதிதாகத் தோன்றிய பிள்ளையாரை மெய்மறந்து கும்பிடும் பாட்டி ( இந்தப் பிள்ளையார் முதல் முதல் இவர்களுக்கு எம்மால் காட்டப்பட்டது)

http://newjaffna.com/fullview.php?id=MzM5MA==

  • கருத்துக்கள உறவுகள்

தனது காணியை, புத்த விகாரைக்கு தானம் கொடுக்க விரும்பாத.....

உரும்பிராய் அம்மன் பக்தரை பாராட்டுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.