Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரநாயின் எச்சத்திலிருந்து உருவாகும் விலையுயர்ந்த கோப்பி

Featured Replies

உலகில் அதிகமானோரால் விரும்பிப் பருகப்படும் பானமாக திகழ்வது கோப்பியாகும்.

இவ்வாறு விரும்பி அருந்தப்படும் கோப்பி வகைகளில் பல வகைகள் உண்டு.

எனினும் உலகில் விலையுயர்ந்த கோப்பி வகை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அத் தகவல் சற்று சுவாரஸ்யமானது.

இவ்வகை கோப்பியின் பெயர் ' கோபி லுவாக்' Kopi Luwak.

' கோபி லுவாக்' (Kopi Luwak)

இவை இந்தோனேசியாவின் சுமாத்ரா, பாலி , ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தீமோரிலும் இவை உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அங்கே இது 'மொடிட் கொபி' motit coffee மற்றும் 'கெபே லாகு' kafé-laku என அழைக்கப்படுகின்றன.

ஆம், இக் கோப்பியானது ஆசிய மரநாய் எனப்படும் புழுகுப்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கின் கழிவிலிருந்து பெறப்பட்ட கோப்பிக் கொட்டைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது.

இவ்விலங்குகளுக்கு பழுத்த கோப்பிக் கொட்டைகள் உணவாக வழங்கப்படுகின்றன.

வழங்கப்பட்ட அக் கோப்பிக்கொட்டைகள் இவ்விலங்குகளின் வயிற்றில் செரிமானம் ஆகாமல் கழிவாக வெளியேறுகின்றன.

இவ்வாறு கழிவுகளாக வெளியாகிய கோப்பிக் கொட்டைகள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வறுக்கப்பட்டு பின்னர் கோப்பித் தூளாக மாற்றப்படுகின்றது.

இக் கோப்பிக்கென வெளிநாட்டில் அதிக கேள்வியுள்ளது.

இக் கோப்பி கோப்பையொன்றின் சராசரி விலை 50 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமாகும்.

இதேவேளை இதேபோன்று தயாரிக்கப்படும் இந்தோனேசியாவின் வீசெல் கோப்பி weasel coffee இன் விலை கிலோ சுமார் 6600 அமெரிக்க டொலர்களாகும்.

இவ்வகை கோப்பியின் அதிக விலைக்கான காரணம் என்னவெனில் கோப்பியின் கசப்புத்தன்மை குறைவாகும்.

அதற்கான காரணம் அப்பிராணிகளின் செரிமானத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாகும்.

மேலும் கோப்பியில் இருக்கும் கெபையின் போதைப்பொருளின் அளவும் இக்கோப்பியில் குறைவென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கோப்பிக்கான நிரம்பல் அதிகமாக உள்ள போதிலும் அதன் உற்பத்தியளவு குறைவாக உள்ளமையும் இதன் அதிக விலைக்கு ஓர் காரணமாகும்.

http://www.pathivu.com/news/16602/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

-------

இக் கோப்பியானது ஆசிய மரநாய் எனப்படும் புழுகுப்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கின் கழிவிலிருந்து பெறப்பட்ட கோப்பிக் கொட்டைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது.

------

இனிமேல் கோப்பி குடிக்கும் போது.... மரநாயின் எச்சம் தான் ஞாபகம் வரப்போகுது கோமகன்.

இந்தப் புழுகுப் பூனைகள், புணரும் போது.... புனுகு என்று ஒரு வாசனைத் திரவியம் வருமாம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அந்த திரவியம் தான் உலகிலேயே..... வாசம் கூடின, வாசனைத் திரவியமாம்.

அதனை மணந்து பாக்க, இன்னும் சான்ஸ் கிடைக்கவில்லை. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா கோப்பியைக் கூட ஒழுங்கா குடிக்க விடமாட்டீங்களா?

coffee_drink_smiley.gif :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ,கடவுளே இங்கேயும் இந்த செய்தி வந்துட்டா..நேற்றைக்கு இதைப் பார்த்த நேரம் தொடக்கம் எனக்கு தேனீர்,கோப்பி குடிக்கவே விருப்பின்றி வந்துட்டு..ஆனால் நான் சாப்பாட்டை விட தேனீர்,கோப்பி தான் நிறைய குடிக்கிறனான்.இனி இதை எல்லாம் குடிக்கிறதை நிறுத்த வேணும். :(:(

மனிதரின் கழிவை உருளைக்கிழங்கிற்கு உரமாக பயன்படுத்துவார்கள் என சிறுவயதில் கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரின் கழிவை உருளைக்கிழங்கிற்கு உரமாக பயன்படுத்துவார்கள் என சிறுவயதில் கேள்விப்பட்டேன்.

உருளைக்கிழங்கிற்கு மட்டுமல்ல,

நாம் சாப்பிடும் பாணிலிருந்து உருவாகும் கோதுமை, சோழம் போன்றவற்றுக்கும் பயன் படுத்துகின்றார்கள்.

நாம் இன்று பெய்த... மூத்திரம் கூட, இரண்டு நாளில், நம் வீட்டு பைப்பில் வரக்கூடிய சான்ஸும் உண்டு. :)

நாம் இன்று பெய்த... மூத்திரம் கூட, இரண்டு நாளில், நம் வீட்டு பைப்பில் வரக்கூடிய சான்ஸும் உண்டு. :)

இதையெல்லாம் அறிந்தமையாலேயே அறிஞர் ஒருவர் இவ்வாறு செய்கின்றார்:

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், கலைஜன், தமிழ் சிறி ஆகியோரின் புண்ணியத்தால் இனிக் கோப்பி, தண்ணி, உருளைக் கிழங்கு, சோளம் சாப்பிடும் போதும் தொண்டைக் குழிக்குள் ஒரு தடவை தங்கித் தான் பின் கீழே இறங்கும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழாம் எட்டாம்வகுப்பிலை.................. சுழர்ச்சி முறையிலைதான் மனிசன்ரை வாழ்க்கை நடக்குது எண்டு விஞ்ஞான ரீச்சர் படிப்பிச்ச ஞாபகம் வருது.மேலை நிக்கிற விண்வெளி ஆய்வுகூடத்திலையும் மூத்திரத்தையே சுத்திகரிச்சு தண்ணியாய் தாகத்துக்கு குடிக்கினமாம்.

கதையோடை கதையாய்.........தன்ரை மூத்திரத்தையே சுடச்சுட மருந்தாய் நினைச்சு காலமையிலை குடிச்ச மொரார்ஜி தேசாய் பேய்க்காய் ஒண்டு :D

ஏழாம் எட்டாம்வகுப்பிலை.................. சுழர்ச்சி முறையிலைதான் மனிசன்ரை வாழ்க்கை நடக்குது எண்டு விஞ்ஞான ரீச்சர் படிப்பிச்ச ஞாபகம் வருது.மேலை நிக்கிற விண்வெளி ஆய்வுகூடத்திலையும் மூத்திரத்தையே சுத்திகரிச்சு தண்ணியாய் தாகத்துக்கு குடிக்கினமாம்.

கதையோடை கதையாய்.........தன்ரை மூத்திரத்தையே சுடச்சுட மருந்தாய் நினைச்சு காலமையிலை குடிச்ச மொரார்ஜி தேசாய் பேய்க்காய் ஒண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் அறிந்தமையாலேயே அறிஞர் ஒருவர் இவ்வாறு செய்கின்றார்:

இந்தியாவின் பிரதமராக இருந்த, மொரார்ஜி தேசாய் கூட......

காலையில் எழுந்தவுடன் வரும், முதல் மூத்திரத்தை... வடிக்காமல் குடிப்பவர் என்று சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், கலைஜன், தமிழ் சிறி ஆகியோரின் புண்ணியத்தால் இனிக் கோப்பி, தண்ணி, உருளைக் கிழங்கு, சோளம் சாப்பிடும் போதும் தொண்டைக் குழிக்குள் ஒரு தடவை தங்கித் தான் பின் கீழே இறங்கும்!!!

ஏதோ......... எங்களுக்கு, தெரிந்ததை சொல்லத்தான் வேண்டும் என்னும் நல்ல எண்ணம் தான், புங்கையூரான்.

அதற்காக, தண்ணீர் குடிக்காமால்... விரதம் இருக்காதீர்கள்.

மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு, ஏற்ப அவனது உடலும் இசைவாக்கம் பெற வேண்டியது, என்பது காலத்தின் கட்டாயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கதையோடை கதையாய்.........தன்ரை மூத்திரத்தையே சுடச்சுட மருந்தாய் நினைச்சு காலமையிலை குடிச்ச மொரார்ஜி தேசாய் பேய்க்காய் ஒண்டு :D

குமாரசாமியண்ணை, மூத்திரம் போகும் போது சாதுவான சூடாகத்தானே... இருக்கும்..!!!!

அதை... சுடச், சுடச் குடிப்பதென்றால்...... அடுப்பில் வைத்து சூடாக்கியிருப்பார்களோ...... :o

Edited by தமிழ் சிறி

அதற்கான காரணம் அப்பிராணிகளின் செரிமானத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாகும்.

முற்றிலும் தவறு.. துல்லியமானா சுவையை உனருவதர்க்கு காரணம் இந்த மிருகம் 100 சதவீதம் தயாரான கோப்பிப்பழங்களை மட்டுமே உண்ணும். இதனால் மட்டுமே இந்த 100 சதவீதம் தயாரான கோப்பிப்பழங்களை கண்டறியமுடியும்... இதனால்தான் இந்தக்கோப்பி துல்லியமான சுவையைத்தரும்.

இந்தக்கோப்பி குடித்திருக்கிறேன்.. லண்டன் கவன்ட்கார்டினினில் உள்ள கோப்பிக்கடைகளில் வாங்கலாம்.. 10 பவுனில் இருந்து 70 பவுன் வரை விலை வேறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் புண்ணியத்தில் இனி கோப்பி குடிக்கலாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.