Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவருக்கு எங்களை வேண்டாமாம். நான் என்ன செய்ய?கணவனால் கைவிடப்பட்ட மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, May 30, 2011, 15:08சிறீலங்கா

யாழ். நாவற்குழி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரைக் கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் கணவர் வாழ்க்கை நடத்துவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்ட பெண் “அவருக்கு எங்களை வேண்டாமாம். நான் என்ன செய்ய?” என்று, கைக்குழந்தை ஒன்றைக் தோளில் சுமந்தபடி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் கணவர் மேசன் தொழில் செய்பவர் எனவும் அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தகப்பனால் கைவிடப்பட்ட இந்தக் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்குவதற்காக, குடும்பத்தில் மூத்த பிள்ளையான 13 வயது சிறுவன் தச்சுத் தொழிலுக்குப் போவதாக அந்தத் தாய் தெரிவித்தார்.

மேலும் அந்தச் சிறுவன் கொண்டுவரும் வருமானத்தில் தான் தமது வாழ்க்கை செல்வதாகவும் கைக்குழந்தையுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த அந்தப் பெண் வேதனையோடு தெரிவித்தார்.

இதுபோன்ற ஏராளமான குடும்பப் பிணக்குகள் இப்போது பொலிஸ் நிலையங்களுக்கு எடுத்துவரப்படுவதாகவும் பல குடும்பங்கள் விவாகரத்துக் கோரி வருவதாகவும் அவர்களை சேர்த்து வைக்கவே தாம் இயன்றவரை முயல்வதாகவும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

வன்னிப் பகுதியில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திலும் இவ்வாறு தினமும் ஏராளமான விவாகரத்துக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

tamilthai.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஆண்கள் பெண்களை வேண்டாமென்கின்றார்கள்!

புலத்தில் பெண்கள் ஆண்களை வேண்டாமென்கின்றார்கள்!

சம்பிரதாயங்கள் என்ற வலை மட்டுமே இந்தக் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்திருந்தது!

இந்த வலை அகலும் போது, அல்லது அகற்றப் படும் போது இச்சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

பிற்காலத்தில் வயது போன காலத்தில் புதிய மனைவி கைவிடும் போது தான் பழைய மனைவி, பிள்ளைகளின் அருமை தெரியும்.

ஊரில் ஆண்கள் பெண்களை வேண்டாமென்கின்றார்கள்!

புலத்தில் பெண்கள் ஆண்களை வேண்டாமென்கின்றார்கள்!

சம்பிரதாயங்கள் என்ற வலை மட்டுமே இந்தக் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்திருந்தது!

இந்த வலை அகலும் போது, அல்லது அகற்றப் படும் போது இச்சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியாது!

பிற்காலத்தில் வயது போன காலத்தில் புதிய மனைவி கைவிடும் போது தான் பழைய மனைவி, பிள்ளைகளின் அருமை தெரியும்.

அது மட்டுமல்ல பெண்கள் தாங்களாகவே வாழ்வதற்கு உரிய பொருளாதாரத் தளத்தை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். சமூகக் கட்டுப்பாடுகள் என்பது பெண்களைத்தான் வெகுவாகப் பாதிக்கிறது. அதனை மீறிச் செயற்பட்டால்தான் பெண்கள் தனித்தும் வாழலாம். சமூகக் கட்டுப்பாட்டை அல்லது ஒரு பெண்ணைக் கொடுமைக்குள் உள்ளாக்கும் கணவனுக்கு சமூகமே தண்டனை வழங்க வேண்டும். உதாரணமாக இவனுக்கு எங்கும் வேலையே கொடுக்கக் கூடாது.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

யாரை நம்பினாலும் கொத்தனை (மேசன்) நம்பக்கூடாது எண்டொரு பழமொழி இருக்கு..! :wub::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலுபிள்ளையை குடுத்துட்டு குடும்பத்தை நடுத்தெருவிலை விட்டவனன்ரை அதை அரைவாசியோடை அறுத்தெறியோணும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபிள்ளையை குடுத்துட்டு குடும்பத்தை நடுத்தெருவிலை விட்டவனன்ரை அதை அரைவாசியோடை அறுத்தெறியோணும்.

எதுக்கு மிச்சத்தை விட்டு வச்சிருக்கிறீங்கள் கு.சா?

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு மிச்சத்தை விட்டு வச்சிருக்கிறீங்கள் கு.சா?

:D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் இதை விட மோசமா எல்லாம் எம்மவர்கள் நடந்து கொள்ளினம். இது எமது சமூகத்திற்குள் குடியிருக்கும் ஒரு அறியாமைப் பிசாசு. என்னதான் எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தாலும்.. சரியான சமூக அறிவின்மையும்.. சரியான சமூக.. அரசியல் தலைமைத்துவம் இன்மையுமே இந்த மக்கள் கூட்டம் இப்படிச் சீரழிய முக்கிய காரணம். இதனை எதிரியும் பல்வேறு வகையில் ஊக்குவிக்கிறான். காரணம் சமூகக் கட்டமைப்பு சீரழிந்த ஒரு இனம்... அரசியல் உரிமை பற்றி சிந்திக்க வாய்ப்பிருக்காது. அதன் அன்றாட குடும்ப.. சமூகப் பிரச்சனையே அதனை சீரழித்துக் கொண்டிருக்கும். அதனால் ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் எளிதில் நிறை வேறும்..!

எமது தேசத்தை நாம் பரிபாலன் செய்ய வேண்டியதும்.. எமது இனத்தை நாம் ஆள வேண்டியதும் கூட இதன் பின்னணியில் இருந்து எழுகிறது. யாழ் குடாவில் 1990-95 களில் குடும்பப் பிணக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததுடன்.. முறையற்ற உறவுகள்.. தகாத உறவுகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதனால் சமூகம் ஒரு பலமிக்க கட்டமைப்புக்குள் இருந்ததோடு ஓரளவுக்கு போராட்ட குணத்தை ஊட்டக் கூடிய ஒன்றாக இருந்தது. இன்று அந்த நிலையை எதிரி தகர்த்துக் கொண்டிருக்கிறான். ஆக்கிரமிப்பாளர்கள் இப்படியான சமூக விரோதச் செயல்களை ஊக்குவித்து போராட்ட குணமுள்ள இனத்தை பல வழிகளிலும் பலவீனப்படுத்துவது ஒன்றும் புதிய அம்சமும் அல்ல. கிட்லர் காலத்தில் இருந்து நடக்கும் விடயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் 1990 ல் இருந்து 1995 வரை அது ஒரு வாழ்க்கை தான் எங்குமே கிடை;காத ஒரு சுதந்திரத்தை இந்த காலப்பகுதியல் நான் அணுபவித்து இருக்கிறன் எங்களுக்கான ஒரு பிரதேசம் எங்களுக்கான ஒரு கட்டமைப்பு..கோயில் திருவிழாக்கள் என்ன...போராட்டம் சார்நத விழாக்கள் என்ன நல்லூர் திருவிழா என்ன...சுதந்திரமாக இரவு வீதிகளில் சுற்றி திரிந்தது என்ன.. இங்க நிறைய பேருக்கு அந்த அணுபவம் இருக்கும் எண்டு நினைக்கிறன்...

தனிப்பட்ட பிரச்சினை.. கருத்துச்சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது..

இப்படிப்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளில் மூக்கை அளவுக்கதிகமாக நுளைத்தது தமிழீழ விடுதலை புலிகளின் மீதான மக்களின் ஆதரவில் பாரிய வீழ்ச்சிக்கு வடிகோலாக அமைந்தது எண்டால் எண்டால் மிகையாகது..

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட பிரச்சினை.. கருத்துச்சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது..

இப்படிப்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளில் மூக்கை அளவுக்கதிகமாக நுளைத்தது தமிழீழ விடுதலை புலிகளின் மீதான மக்களின் ஆதரவில் பாரிய வீழ்ச்சிக்கு வடிகோலாக அமைந்தது எண்டால் எண்டால் மிகையாகது..

.

திருட்டும் எப்படி தனிப்பட்ட பிரச்சினை என்று சொல்லி தப்பிக்கப் பட விட முடியாதோ அப்படியேதான் இதுவும்.

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுளௌயும் போது மனைவியை கடைசிவரை காப்பாற்றுவேன் என்ற உறுதியும், இன்னொரு பெண்ணுக்கு பின்னால் போக மாட்டேன் என்ற உறுதியும் எடுக்கப் படுகின்றது. பின்பு அதை மீறி செயற்படும் போது நம்பிக்கத்துரோகம் என்ற குற்றத்துக்குள் மாட்டுகின்றான் அந்த நம்பிக்கைத் துரோகி.

இப்படிப் பட்ட குற்றங்கள் மேல்நாட்டுச் சட்டங்கள் கூட தண்டிக்கின்ற போது பனங்காய்க்கு மட்டு ஏன் பிடிக்காமல் போனது. தாங்களும் உங்கட வசதிக்கு சட்டத்தை மாற்றப் பார்க்கின்றீர்களா?

இப்படிப் பட்ட குற்றங்கள் மேல்நாட்டுச் சட்டங்கள் கூட தண்டிக்கின்ற போது பனங்காய்க்கு மட்டு ஏன் பிடிக்காமல் போனது. தாங்களும் உங்கட வசதிக்கு சட்டத்தை மாற்றப் பார்க்கின்றீர்களா?

தமிழ்படம் நிறைய பாப்பீங்களோ.... ? அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறீங்களே.... :rolleyes:

இந்த "மித்திரன்" பத்திரிகை செய்தி போன்ற இந்தச் செய்தி இப்போதுதான் கண்ணுக்கு பட்டது. இத்தகைய செய்திகளை இணைப்பதை தவிர்க்கவும்

செய்திப் பஞ்சம் இப்ப இருப்பதால் எம் இணையத்தளங்கள் இப்படியான செய்திகளை வைத்து காலத்தை ஓட்ட வேண்டி இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.