Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி பிணை மனு தள்ளுபடி: தொடரும் சிறை வாசம். பூ வாடி கருகப் போகிறது.. கலைஞர் நல்லா கண்ணீர் விடட்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. சி.பி.ஐ. கோர்ட் சம்மனை ஏற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இருவர் தரப்பிலும் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அவர்களை ஜாமீனில் விடுவிக்க சி.பி.ஐ. வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி அஜித் பாரிகோக் கடந்த மாதம் 30ந் தேதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (08.06.2011) அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி பாரிகோக், தனது தீர்ப்பை அளித்தார்.

கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55599

கனிமொழி, சரத்குமார் ரெட்டியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இந்த இருவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஜாமீன் மனுக்களை ஏற்கனவே சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் ஒரு மாத கால கோடை விடுமுறை அடுத்த நாள் தொடங்கியது. இதனால் ஒரு மாதத்திற்கு கனிமொழி வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பரிஹோக் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தனது தீர்ப்பை அளித்தார் நீதிபதி பரிஹோக்.

அப்போது கனிமொழி மற்றும் சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருப்பார்கள் என்பதற்கு பூர்வாங்கம் உள்ளது. எனவே இருவரையும் ஜாமீனில் விட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

கண்ணீர் விட்டு அழுத ராசாத்தி அம்மாள்:

ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

அவரை அருகில் இருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் ஆறுதல் படுத்தினர்.

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி தொடர்ந்து சிறையிலேயே அடைபட்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் விட்டு அழுத ராசாத்தி அம்மாள்:

மற்றவர்கள் கண்ணீர் விடும்போது மகிழ்ந்திடும் கீழ்த்தரமான குணம் எனக்கு இல்லை!

ஆனாலும் நீங்கள் கண்ணீர் விடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை வெளியே விட்டால்...... மிச்சம், மீதி இருக்கிறதையும் சுருட்ட வெளிக்கிடுவார்கள். அதனால், இவர்கள் சிறையிலேயே இருப்பது நல்லது.

சொக்கத்தங்கம் சோனியாவின் ஆட்சியில் நீதி சாகவில்லை, என்பதற்கு இவர்களின் மனுவை நிராகரித்த நீதிபதிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை வெளியே விட்டால்...... மிச்சம், மீதி இருக்கிறதையும் சுருட்ட வெளிக்கிடுவார்கள். அதனால், இவர்கள் சிறையிலேயே இருப்பது நல்லது.

சொக்கத்தங்கம் சோனியாவின் ஆட்சியில் நீதி சாகவில்லை, என்பதற்கு இவர்களின் மனுவை நிராகரித்த நீதிபதிக்கு நன்றி.

கொஞ்சம் நால்ல நோண்டினால், மங்குனி மன்மோகன்சிங்கும், சொக்க தங்கமும் கூட உள்ள போக வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நால்ல நோண்டினால், மங்குனி மன்மோகன்சிங்கும், சொக்க தங்கமும் கூட உள்ள போக வேண்டி வரும்.

கருணாநிதி இந்தியப் பிரதமராக வந்தால்......

இருக்கிற ஆத்திரத்துக்கு, சொக்கத்தங்கத்தையும், மங்குனியையும் உள்ளே போட்டுடுவார். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நாடகம் எல்லாம் போட்டாய்.. உனக்கு வேனும்.... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளர் கூட்டமே! நம்பிக்கைத்துரோகிகளே! என்றென்றும் உள்ளிருக்கக்கடவீர்.

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்த வினை துளிர்க்கிறது, அறுவடையாகுமுன் அழவும் ஆள் இருக்கவேணுமே!

  • கருத்துக்கள உறவுகள்

08 ஜூன் 2011

2-ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிஇ சரத்குமார் ரெட்டி ஆகியோர் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு இவர்கள் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியானதை அடுத்து இவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மூன்றாம் தேதி ஜாமீன் மீதான் தீர்ப்பு வெளியாகும் என்னும் நிலையில் அதுவும் தள்ளிப் போய் கோடை விடுமுறைக்குப் பின் என்ற நிலை உருவானது. இதனால் ஒரு மாதம் கனிமொழி சிறையிலிருப்பது உறுதியானது

. ஆனால் இந்த ஜாமீன் மனு மீதான் தீர்ப்பை இன்று அறிவிப்பதாக நீதிபதி பரிஹோக் அறிவித்த நிலையில் இன்று தீர்ப்பிற்காக கனிமொழி உள்ளிட்டோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெருந்திராளான திமுக பிரமுகர்கள் கருணாநிதியின் குடும்பத்தாரும் நீதிமன்றத்தில் திரண்டிருந்த நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள கனிமொழிஇ சரத்ரெட்டி இருவருக்கும் முழுமையான தொடர்பிருப்பதன் ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரின் ஜாமீன் மனுவையும் இந்த நீதிமன்றம் நிராகரிப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்தார்.

கதறியழுத ராசாத்தி அம்மாள்

.

ஜாமீன் நிராகரிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் ராசாத்தி அம்மாள் நீதிமன்றத்திலேயே கதறியழுதார்.

. நீதிமன்றம் வந்திருந்த திமுக பிரமுகர்கள் அவரைத் தேற்றிய போதும் அவர் அடக்க முடியாமல் கதறியழுது விட்டார். கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் இனி அவர் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருக்க நேரிடலாம் என தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

source:GTN.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் தமிழக மக்களை பற்றி இன்னும் சரியாக கணிக்கவில்லை.. இந்த சென்டிமெண்டி சீன்ஸ் எல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அத்திவாரமாகும் .. ஏற்கனவே ஜெவும் இதை போல மேடைகளில் கதறி கதறி வாக்கு கேட்டவர்தான்.. முன் தேர்தலில் வீடு வீடாக குழந்தைகள்+மனைவியை அழைத்து கொண்டு பிச்சை (கம்) வாக்கு சேகரித்தவன் எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஆகிவிட்டான்.. ஆக இந்த சீன்ஸ் எல்லாம் தமிழ்நாட்டு தாய்குலங்கள் மனதை கரைக்காமல் இருக்க இறைவனை வேண்டுவம்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.