Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டாவது தடவையாக ஏமாந்து போன கூட்டமைப்பு:நேற்றைய பேச்சுகளிலும் வெறுங்கையுடன் திரும்பியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாவது தடவையாக ஏமாந்து போன கூட்டமைப்பு:நேற்றைய பேச்சுகளிலும் வெறுங்கையுடன் திரும்பியது

[Thursday, 2011-06-30 08:35:17]

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன.

நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்திருந்தனர்.

இந்த ஆவணம் நேற்று தமது கைகளில் கிடைக்கும் என்று கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரும் எதிர்பார்ப்புடன பேச்சுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நேற்றைய பேச்சுக்களில் அத்தகைய எழுத்துமூல ஆவணம் எதையும் சிறிலங்கா அரசதரப்பு கையளிக்கவில்லை.

எனினும் எதிர்வரும் சந்திப்புகளின் போது- இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எழுத்துமூல ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.அதேவேளை, நேற்றைய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

நேற்றைய பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு எந்தவிதமான எழுத்து மூல ஆவணத்தையும் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை.இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் நாள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சந்திப்புக்களைப் போன்றே இந்தமுறையும் பழைய விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டதாக சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மீண்டும் எதிர்வரும் 06ம் திகதி இருதரப்பும் சந்தித்துக் கலந்துரையாட இணக்கம் காணப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=45689&category=TamilNews&language=tamil

கூட்டமைப்பினர் நிலைமைகளை ஆதாரத்துடன் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளுக்கு விளக்கி பிரிந்து செல்வதே ஒரே வழி என்பதை உறுதியாக சொல்லவேண்டிய காலம் இது.

எங்களால் இன்னமும் சில விடயங்கள் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது. இலங்கையரசு தமிழர்களுக்கு எதையும் வழங்காது என்பது தெளிவாகத் தெரிந்தும், கூட்டமைப்புத் தோற்றுவிட்டது என்று செய்தி வெளியிடுவது மூளையில்லாத் தனமாகத்தான் உள்ளது. காலங்காலமாகத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படியிருந்தும் புலிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி, கூட்டமைப்பு தேற்றுவிட்டது என்றெல்லாம் யாரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடுகிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எத்தனை முறை பேசினாலும் அத்தனை முறையும் தோல்வியே சந்திக்க போகின்றார்கள் என்பதே உண்மை ஏனெனில் சிங்களவன் தருவதற்கு அவனிடம் தீர்வு ஒன்றும் இல்லை அவங்கள் இப்படியே இழுத்து காலத்தை கடத்தபோகின்றாங்கள்.

எங்களால் இன்னமும் சில விடயங்கள் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது. இலங்கையரசு தமிழர்களுக்கு எதையும் வழங்காது என்பது தெளிவாகத் தெரிந்தும், கூட்டமைப்புத் தோற்றுவிட்டது என்று செய்தி வெளியிடுவது மூளையில்லாத் தனமாகத்தான் உள்ளது. காலங்காலமாகத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படியிருந்தும் புலிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி, கூட்டமைப்பு தேற்றுவிட்டது என்றெல்லாம் யாரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடுகிறார்களோ தெரியவில்லை.

இறைவன்:

இதை 15 இலக்க font இல் இரத்த சிவப்பு நிற எழுத்தில் பதியுங்கள்.

தலையங்கம் தீட்டியவரை வேறு யாரும் ஏமாறவில்லை.

பேச்சுவார்த்தைகளில் சிங்களம் எத்தனை தரம் ஏமாற்றியது என்பதும்; பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பு எத்தனை தரம் ஏமாறியது என்பதும்; எமக்குத்தெரியும். ஆனால் அதை யார் சிங்களத்திற்கு முண்டு கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு விளக்கப்படுத்தவேண்டியது தமிழர் தரப்பின் கடமை. அதை முன்னின்று செய்யவேண்டியது கூட்டமைப்பு.

அதை நாம் வெற்றிகரமாக செய்யாதவரைக்கும் சிங்களம் ஏமாற்றிய வண்ணமே இருக்கும்.

தமிழ் மக்களின் தலைவிதி

  • கருத்துக்கள உறவுகள்

எனினும் எதிர்வரும் சந்திப்புகளின் போது- இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எழுத்துமூல ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.அதேவேளை, நேற்றைய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

நேற்றைய பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு எந்தவிதமான எழுத்து மூல ஆவணத்தையும் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை.இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் நாள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அக்கடா உக்காடா.. அரசு தரப்பு .. அரசாங்க தரப்பு இரண்டும் வெவ்வேறாகும்.. இங்க எட்டாங்கிளாஸ் அருட்சொருட் பொருள் பாடம் நடத்தவில்லை.. இதுபோக நாடாளுமன்ற தெரிவுக்குழு.. கழிவுக்குகுழு.. சனிவுக்குழு இன்னும் பல பல குழுக்குகள் அதற்கு உதவி ஒத்தாசை அளிக்கும் ராகுகுழுக்கள் சட்ட கேது குழுக்கள் எல்லாம் அமைக்கபட இருக்கினறன.. போக இந்த கலியுகம் முடியும் தருவாக3500 ஆம் ஆண்டு ஏதாவது தீர்வு வர்லாம்... ^_^ ^_^

எங்களால் இன்னமும் சில விடயங்கள் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது. இலங்கையரசு தமிழர்களுக்கு எதையும் வழங்காது என்பது தெளிவாகத் தெரிந்தும், கூட்டமைப்புத் தோற்றுவிட்டது என்று செய்தி வெளியிடுவது மூளையில்லாத் தனமாகத்தான் உள்ளது. காலங்காலமாகத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படியிருந்தும் புலிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி, கூட்டமைப்பு தேற்றுவிட்டது என்றெல்லாம் யாரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடுகிறார்களோ தெரியவில்லை.

இவர்கள் ஏமாறப் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் ஏமாந்து கொண்டிருப்பதை வேடிக்கை பாருங்கள், ஆனால் குறை கூறாதீர்கள் என்கிறார்கள் சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இதில் உண்மை என்னவென்றால், கூத்தமைப்பினர் ஏமாந்ததைப் பெரிதுபடுத்தும் நீங்கள் புலிகள் கூட ஏமாந்துதான் போனார்கள் என்பதை மறைத்துவிடுகிறீர்கள் என்று அங்கலாய்க்கும் கூத்தமைப்பு அபிமானிகளின் கருத்துத்தான் தெரிகிறது. இந்தியாவிடம் சரணடைந்து ஒரு சரணாகதி அரசியலையே தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் ஒரு எடுபிடியிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலு கூத்தமைப்பு அபிமாணிகள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் கலந்துரையாடலுக்கு மாவையினூடாக கூத்தமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். எனக்கு வேறு வேலையிருக்கு என்று கூறிய மாவை, மற்றைய கூத்தமைப்பினரையும் போக விடவில்லையாம். படுகொலைகளின் கருத்தரங்கிலேயே கலந்துகொள்ளப் பயப்படும் கூத்தமைப்பு எப்படி தமிழருக்கு உரிமைகளை வென்று தரப்போகிறது ?

விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பார்களே...அதுபோலத்தான் !!!!!

புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு இதில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் இன்றுவரைக்கும் தமிழர்கள்தான். அது விடுதலைப்புலிகளாயிருந்தாலென்ன? கூட்டமைப்பினராயிருந்தாலென்ன? ஒரு விடயம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். விடுதலைப்புலிகள், தமிழ்மக்கள் என்றும், கூட்டமைப்பினர், தமிழ்மக்கள் என்றும் பிரித்துப் பார்க்கப்படுவதற்கு இங்கு ஏதுமில்லை. தமிழர் பிரதேசத்தில் தமிழர்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் கூட்டமைப்பினர். இவர்களைத்தவிர உங்களது வேறு அபிமானிகள் இருந்தால் அவர்கள் அரசுடன் பேசலாம். அப்படிப்பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு ஏமாற்றமே. அவர்களும் தமிழர்களே.

சரணாகதி அரசியல் இனித் தேவைதான். எந்தச் சர்வதேசம் தமிழருக்காக முண்டுகொடுத்தாலும் அது இந்தியாவின் கைகளைமீறிச் செல்ல முடியாது. விழுந்தவர்கள் நாங்களே. முடிந்தரை மீசையிலுள்ள மண்ணைத் தட்டிப்பார்க்க வேண்டியதுதான். :lol:

அடிமை மனோபாவம் நிரம்பியவர்கள், தம் இனம் அழிவதைக் கவலைப்படாமல், தமக்கு அழிவு வரும்வரை, ஏதாவது நன்மை கிடைக்குமா என அழிப்பவர்கள் காலடியில் விழுவதை பெருமையாக நினைப்பார்கள். அநியாயம் செய்பவர்களை - அழிப்பவர்களை எதிர்த்து போராட முடியும் என்ற நம்பிக்கை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு உலக அழுத்தம் இல்லாதவரை தமிழர்களை ஏமாற்றிய படியே இருப்பார்கள்.

அடிமை மனோபாவம் நிரம்பியவர்கள், தம் இனம் அழிவதைக் கவலைப்படாமல், தமக்கு அழிவு வரும்வரை, ஏதாவது நன்மை கிடைக்குமா என அழிப்பவர்கள் காலடியில் விழுவதை பெருமையாக நினைப்பார்கள். அநியாயம் செய்பவர்களை - அழிப்பவர்களை எதிர்த்து போராட முடியும் என்ற நம்பிக்கை இருக்காது.

இலங்கை மண்ணில் தமிழர் சார்பாக போராட்டம் நடத்துவதற்கு முன் வருபவர்கள் இனிமேல் யார்? அவ்வாறான தைரியசாலிகளை இனங்காட்டுங்கள். அவர்கள் முன்வந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம். நடைபெற்ற போரின் வடுக்கள் கிஞ்சித்தும் ஆறாத நிலையில், பேச்சுச் சுதந்திரம் அற்ற நிலையில்தான் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தத் தமிழர் அமைப்பும் தமிழர்பற்றிக் கதைக்கவேயில்லை.

இன்றுவரை அடிமைகளாகத்தான் இலங்கையில் தமிழினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்களை மீட்கக் கூடிய சக்தி கொண்டவர்கள் எவருமேயில்லை. ஏமாற்றப்பட்டாலும் தமிழர் தரப்பு எனப்படுவது எவரது துணையுடனோ இலங்கையரசுடன் பேசித்தானாக வேண்டும். அநியாயத்தை எதிர்த்து போராடி உரிமையினை மீட்கலாம் என்ற ஒரு தமிழனையும் இனிவரும் இரண்டு, மூன்று பரம்பரைக்குக் காணமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மண்ணில் தமிழர் சார்பாக போராட்டம் நடத்துவதற்கு முன் வருபவர்கள் இனிமேல் யார்? அவ்வாறான தைரியசாலிகளை இனங்காட்டுங்கள். அவர்கள் முன்வந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம். நடைபெற்ற போரின் வடுக்கள் கிஞ்சித்தும் ஆறாத நிலையில், பேச்சுச் சுதந்திரம் அற்ற நிலையில்தான் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தத் தமிழர் அமைப்பும் தமிழர்பற்றிக் கதைக்கவேயில்லை.

இன்றுவரை அடிமைகளாகத்தான் இலங்கையில் தமிழினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்களை மீட்கக் கூடிய சக்தி கொண்டவர்கள் எவருமேயில்லை. ஏமாற்றப்பட்டாலும் தமிழர் தரப்பு எனப்படுவது எவரது துணையுடனோ இலங்கையரசுடன் பேசித்தானாக வேண்டும். அநியாயத்தை எதிர்த்து போராடி உரிமையினை மீட்கலாம் என்ற ஒரு தமிழனையும் இனிவரும் இரண்டு, மூன்று பரம்பரைக்குக் காணமுடியாது.

கூட்டமைப்பின் வினைத்திறன் தெரிந்ததுதானே.

மற்றது தைரியசாலிகள் பற்றி தைரியசாலியிடமே கேட்கக்கூடாது. <_<

... தர மாட்டார்கள்! ஏமாற்றுகிறார்கள்! வீணடிக்கும் செயல்! .... எதுவோ நாம் பேசியே ஆக வேண்டும்!!!! எல்லாவற்றையும் தற்போது சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. ... அதற்கு மேல் தமிழ் பேசும் ஓநாய்களும், நரிகளும் கவ்விக் கொண்டு செல்வதை தடுக்கவாயினும் ...

... அது அங்கு தமிழர்களாக உள்ளவர்கள் செய்யட்டும்!! .. அவர்களை உடைப்பதை/சிதைப்பதை விட்டு ... அவர்கள் செய்ய முடியாததை புலத்தில் செய்வோம்!!! ... அநாவசியமாக நாமும் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் ... அங்கு பிழை பிடிப்பதில் அர்த்தமில்லை????????!!!!!!!!

... அங்குள்ள நிலைமையை உணருவோம் ... செய்ய வேண்டியவை புலத்தில் ... அவற்றை செய்கிறோமா?

கோமாளிகளுக்கும், ஏமாளிகளுக்கும் தான் கூட்டமைப்பின் வெற்றிகள்? விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவை விடவா சம்பந்தன் அரசியல் சாணக்கியர். சம்பந்தன் இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதை நீண்டது. நிச்சயம் அவர் அதை தனது வாழ்க்கை காலத்தில் கடக்கப் போவதும் இல்லை. சர்வதேசம் காப்பாற்ற முற்படும் சிறீலங்காவை சம்பந்தன் காப்பாற்றி அபயம் அளிப்பதில் தீவிரமாக உள்ளார். அதில் உள்ள தீமை ஒரு நாளைக்கு அவரையே காவு கொள்ளும் போது அதை அவர் உணர்ந்து கொள்வார்.

அவர் எப்போதுமே பிரபாகரனை விட சிங்களத் தலைவர்கள் மீது "மிதவாத அரசியல் ஜனநாயக" நம்பிக்கை கொண்டவர். அவரிடம் போய் தமிழ் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதுதான் தவறு.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சர்வதேச அரசியல் புரிந்த விலை போகாத இளைய சமூகம் ஒன்று தலைமை தாங்கி நடத்தும் அரசியலே எனித் தேவை. சம்பந்தன் கூட்டமைப்பு எல்லாம்... காலாவதியான உணவுப் பண்டங்கள். அவை சிங்கள பேரினவாத பூதத்திற்கு உணவாகலாமே ஒழிய தமிழ் மக்களுக்கு அமிர்தமாக முடியாது. :)

Edited by nedukkalapoovan

தமிழர்கள் எல்லோருமே ஏமாற்றப்பட்டவர்கள்தான். தந்தை செல்வாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சர்வதேச அரசியல் தமிழருக்கானதல்ல. அதிலிருந்து கிடைக்கக் கூடிய பலன்களைத்தான் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாமே தவிர அதையே இலங்கையில் வாழும் தமிழர்கள் தமக்குச் சாதகமான நிலையென்று கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் சர்வதேசத்திற்குச் சார்பான மாறுதலைப் பொறுத்து, தமிழர்கள் கைவிடப்பட்டு விடுவார்கள் என்பது வெளிப்படையானது.

இன்னொரு இளைய தலைமுறை எப்போது தோன்றும். அதற்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும், என்பதெல்லாம் இன்றுவரையில் நிழலான விடயங்கள்தான்.

கோமாளிகளுக்கும், ஏமாளிகளுக்கும் தான் கூட்டமைப்பின் வெற்றிகள்? விளங்குது.

கூட்டமைப்பு எப்போது வெற்றிபெற்றது? இது கோமாளித்தனமாகத் தெரியவில்லையா?

இந்தியா என்பது எக்காலத்திலும் விலக்க முடியாத ஒன்று. இந்தியச் சிதைப்பிற்கு எந்த ஒரு இந்தியனும் வழிவிடமாட்டான். அதனால்தான் ஈழத்தமிழனுக்கு இந்த நிலை. இந்தியா பிரிந்து செல்வதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் இப்போதைக்கு இல்லை. இந்தியா என்பது மாயையா? அல்லது இரும்புத்திரையா என்பது எனக்குத் தெரியாது. வந்தே மாதரம் என்ற மந்திரத்தினுள் எல்லா இந்தியனும் கட்டுண்டு நிற்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது எக்காலத்திலும் விலக்க முடியாத ஒன்று. இந்தியச் சிதைப்பிற்கு எந்த ஒரு இந்தியனும் வழிவிடமாட்டான். அதனால்தான் ஈழத்தமிழனுக்கு இந்த நிலை. இந்தியா பிரிந்து செல்வதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் இப்போதைக்கு இல்லை. இந்தியா என்பது மாயையா? அல்லது இரும்புத்திரையா என்பது எனக்குத் தெரியாது. வந்தே மாதரம் என்ற மந்திரத்தினுள் எல்லா இந்தியனும் கட்டுண்டு நிற்கிறான்.

இந்தியாவுக்கு மாயப்பொடி தூவி மயக்கிறதுக்கு ஈழத்தமிழர்களால் முடியாது. இந்தியா ஈழத்தமிழர் மீதுள்ள பழைய "கறளை" மறக்காமல் இலங்கை அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் தொடர்ந்தும் உதவிகளைச் செய்து தமிழர்களை இலங்கையரசின் பிடிக்குள் தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.