Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா உட்பட தமிழ் அரசியல்வாதிகளையும் காட்டிக்கொடுப்பேன். மஹிந்தவின் சமிக்ஞை

Featured Replies

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடான சந்திப்பின் போது சிறிலங்கா அரசு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்திய அரசின் இரட்டை வேடம் இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

.

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஈழத்தமிழர் தொடர்பில் எதனையும் வலியுறுத்தவில்லை என்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தையோ அதற்கு மேலான 13 பிளஸ் குறித்தோ அவர்கள் தன்னிடம் மூச்சு விடவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

.

அதேபோன்று, உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த இங்கு பிரஸ்தாபித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனையின் அடிப்படையிலேயே இந்தக் குழு நியமிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

.

மேலும் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் இளைஞர் கொலைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்திருந்தும் அவர்கள் அப்பாவிகள் எனக் கூறிய ஆனந்தசங்கரி உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் அதனையடுத்துத்தே தான் அவர்களை விடுதலை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

.

ஆக மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மூன்று துரோகத்தனங்களை மஹிந்த ராஜபக்ஷ அம்பலப்படுத்தியிருந்தார். தமிழர்களின் உறவு நாடான இந்தியாவினதும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இருவரினதும் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் எதிரிகள் யார் என்பதனை அவர் சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் அவரின் காய்நகர்த்தல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வை வலியுறுத்தப் போகிறோம் என சிறிலங்காவுக்கு அவசர அவசரமாக வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் தொடர்பில் மஹிந்த தெரிவித்த கருத்துகளை இதுவரை இந்தியா மறுக்கவில்லை. அவர்கள் சிறிலங்காவுக்கு வந்ததன் நோக்கமானது அலரிமாளிகையிலுள்ள புத்த பிரானை கும்பிடவே என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

.

மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் ஊடக நிறுவனத் தலைவர்களைச் சந்தித்து இவ்வாறு தெரிவித்திருக்க, மன்மோகன் சிங்கும் புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் சில விடயங்களைக் கூறியிருந்தார். ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவே வேண்டும். அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார். இருப்பினும் அவர், இறுதியில் ஒரு குண்டையும் போட்டுள்ளார். இலங்கை விவகாரத்தில் இந்தியா அவசரமாகச் செயற்பட முடியாது. என்பதே அந்தக் குண்டு.

.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதுடில்லியால் அவசரப்பட்டு எதனையும் செய்ய முடியாது என்றால் வன்னி யுத்த களத்தில் தமிழர்களை அழிப்பதற்கான ஆயுத உதவிகளை மட்டும் அவசர அவசரமாக ஏன் இந்தியா வழங்க வேண்டும்? தமிழின அழிப்புக்குக் காட்டிய அவசர அக்கறையைத் தப்பிப் பிழைத்த மிச்சத் தமிழினத்தின் பிரச்சினைத் தீர்வுக்கு ஏன் இந்தியாவால் காட்டமுடியாது?

.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா இவ்வாறான ‘அரசியல் குண்டு’ களை கடந்த காலங்களிலும் தாரளமாகப் போட்டுள்ளன.

.

வன்னி உச்சக் கட்டப் போரின் போது அதற்கு எதிராகத் தமிழக மக்கள் கொதித்தெழுந்திருந்தனர். அப்போது நிலைமையைச் சமாளிப்பதற்காகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென புதுடில்லி அரசு சிறிலங்கா அரசைக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் பிரதமர் மன்மோகன் சிங்கே சிறிலங்கா ஜனாதிபதியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வேண்டுகோளை விடுவித்தார் என இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

.

ஆனால், அவ்வாறு எதனையும் மன்மோகன் தன்னிடம் கேட்கவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

.

இதுபோன்றே வன்னி தமிழ் மக்கள் கொலைக்களத்துக்காக இந்தியா இராணுவ ரீதியில் எதனையும் செய்யவில்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதனைக் கூட மறுத்த சிறிலங்கா அரசு தலைமைää இந்தியாவின் உதவியினால்தான் இறுதிப் போரில் தம்மால் வெற்றி பெற முடிந்ததாக நற்சாட்சிப்பத்திரம் வழங்கியிருந்தது.

இவ்வாறு புதுடில்லியின் அனைத்து விடயங்களையும் சிறிலங்கா அரசு பொய்யாக்கிக் கொண்டே வந்துள்ளது. இறுதியாக ஜனாதிபதி மஹிந்தவால் கடந்த வாரம தெரிவிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் எந்த வற்புறுத்தலும் இல்லை என்ற கூற்றுக்கு இதுவரை புதுடில்லியால் பதில் அளிக்கப்படவில்லை.

.

எதற்கு எடுத்தாலும் இந்தியாவை ஒரு குறைகேள் அதிகாரியாக நம்பிக் கொண்டு அதன் பின்னால் ஓடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஈழத்தமிழர் மீதான இந்திய மத்திய அரசின் அக்கறையை பற்றி சிறிலங்கா சிங்கள அரசின் தலைவரே வெளிக்காட்டியிருப்பது வேதனைமிக்கதும் வெட்கக் கேடானதுமாகும்.

சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர் தமிழகம் வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த சீவ்சங்கர் மேனன், முதலமைச்சரால் இலங்கைத் தமிழர் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்களைக் கூட சிறிலங்கா அரசு தலைமையிடம் சொல்லாமல் சென்ற திராணியற்ற தனத்தையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

.

இது இவ்வாறிருக்க, பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடனேயே பேச்சு நடத்தி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என சிறிலங்கா அரசு தலைமை பொதுத் தேர்தல் காலத்தில் கூறி வந்தது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த பல மாத காலமாக அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுவரை எட்டுக் கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எட்டப்பட்டது எதுவுமே இல்லை. இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து அதன் மூலமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமெனத் தெரிவிக்க அதனை உடனேயே ஏற்றுக் கொண்ட அரசு துரித செயற்பாட்டிலும் இறங்கிவிட்டது. சொன்னதை அப்படியே சொல்லும் சிறிலங்கா சிங்கள அரசின் கிளிப்பிள்ளையான டக்ளஸ் இதன் மூலம் சிங்கள அரசின் தமிழினத் துரோகத்துக்கு தொடர்ந்து துணை நிற்கிறார் என்பதனை சிங்கள அரசு தலைமையே கிண்டலாக் சொல்லிக் காட்டியுள்ளது.

.

இவ்வாறான கருத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்திருந்தால் அதனை அவர் முன்னரே கூறியிருக்க வேண்டும். எட்டுத் தடவைகள் கூட்டம் நடத்தி ஏறி இறங்கி ஏமாற்றியிருக்கத் தேவையில்லை. இந்த விடயத்தில் இன்னுமொன்றையும் கூறவேண்டும். அதாவதுää காலத்தை இழுத்தடித்து அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கான ஒரு கருவியாக சிறிலங்கா அரசு அமைச்சர் டக்ளஸைப் பயன்படுத்தியிருப்பதுடன் அதற்கு அவர் தனது பரிபூரண விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். ஆனால் புதிதாக கூறப்படும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவானது மங்கள முனசிங்க தலைமையிலான குழுவையும் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிக் குழுவையும் மிஞ்சியபடி எதுவும் செய்யப் போவதில்லை. மொத்தத்தில் அதனால் ஒன்றும் நடக்கப் போவதும் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அத்துடன் புதிதாக அமைக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக்கு குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என பல கட்சிகள் இப்போதே திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டன. கடைசியில் இந்தக் குழுவில் இடம்பெறப் போவோர் அரசதரப்பு சிங்களப் பிரதிநிதிகளும் டக்ளஸ்ää ஹக்கீம் போன்றவர்களுமே.

.

இது இவ்வாறிருக்கää திருமலையில் தமிழ் இளைஞர் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களையும் அப்பாவிகளெனத் தீர்ப்புக் கூறி விடுவித்தவர் ஆனந்த சங்கரிதான் என்று ஜனாதிபதி மஹிந்த அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாககவே கூறியிருந்தார். ஆனந்தசங்கரியா இப்படிச் செய்தார் என்று எந்தத் தமிழனும் ஆச்சரியப்படமாட்டான். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பிரசார ரீதியாகத் தோற்கடிக்கும் முயற்சியில் சிங்கள அரசுடன் சேர்ந்து கைகோர்த்து நின்றவர் அவர். சிங்கள அரசின் இலவச பங்களா, பாதுகாப்புப் பரிவாரம், சன்மானங்கள் இவைகளுக்காக இனத்தைக் காட்டிக் கொடுப்பதில் அவர் காட்டிய அக்கறை ஒன்றும் ஒளிவு மiறைவான விடயமல்ல. இன்று அவருக்கு ஒன்றும் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கை விடுவதும் தெரிந்த விடயமே.

.

ஆகää மொத்தத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த விடயங்களைப் பார்க்கும் போது தமிழினத்தை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் பிழைப்பு நடத்துபவர்களும் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது முன்னரே தெரிந்த விடயங்கள் என்றாலும் ஒரு நாட்டின் தலைவரால் சுட்டிக்காட்டப்படுவது வரலாற்றுப் பதிவுக்குரியதே. ஈழநாதத்திற்காக கொழும்பிலிருந்து சித்தன்

ஈழநாதம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தனது ஆட்சிக்கு அழுத்தம் ஏற்படாமல் இருக்க நாளை கருணாவையும், கேபியையும் போட்டுக்கொடுப்பார். மகிந்தவுக்கு முண்டு கொடுத்த தமிழர்கள் எல்லோரும் சக்கைகள் போல துப்பியெறியப்படுவர்!

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த துரோகிகள்தானே

இவர் என்ன காட்டி கொடுப்பது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதுடில்லியால் அவசரப்பட்டு எதனையும் செய்ய முடியாது என்றால் வன்னி யுத்த களத்தில் தமிழர்களை அழிப்பதற்கான ஆயுத உதவிகளை மட்டும் அவசர அவசரமாக ஏன் இந்தியா வழங்க வேண்டும்? தமிழின அழிப்புக்குக் காட்டிய அவசர அக்கறையைத் தப்பிப் பிழைத்த மிச்சத் தமிழினத்தின் பிரச்சினைத் தீர்வுக்கு ஏன் இந்தியாவால் காட்டமுடியாது?

.

வெட்கம்! முழு இந்தியாவுமே வெட்கித் தலை குனிய வேண்டும்!

வார்த்தை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு!

அது பொய்யாகும் போது, இந்தியா மிகப் பெரிய வரலாற்றுத் தவறு செய்துவிட்டது!

அதற்குப் பிராயச்சித்தமும் இந்த இந்தியாவே செய்து முடிக்க வேண்டும்!!!

இல்லாவிட்டால் இந்தியா துண்டு துண்டாக உடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை!!!

இதுவும் ஒரு நல்ல சமிக்ஞை தான். யாவரும் தமது தலை தப்பினால் காணும் என்ற நிலையில் நகரும் நேரம் வந்துள்ளது.

நீண்ட நாள் இந்த ஒட்டுமொத்த கொலைகாரர்கள் ஒரே கோட்டில் பயணிக்க முடியாது. வரும் வெடிப்பு பின்னர் பெரிய காட்டிக்கொட்டுப்பில் முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் இளைஞர் கொலைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்திருந்தும் அவர்கள் அப்பாவிகள் எனக் கூறிய ஆனந்தசங்கரி உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் அதனையடுத்துத்தே தான் அவர்களை விடுதலை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இதென்ன காமடியா இருக்கு? :D

ஆனந்தசங்கரி என்ன சட்டத்துக்கு மேற்பட்டவரா? அவர் சொன்னாரம்.. இவர் விட்டாராம்..! :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி போன்ற படுபாதகக் கொலைஞர்கள் எல்லாம் மிதவாதிகள் என்ற போர்வையில் இன்றும் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அந்த தமிழரின் இரத்தம் குடிக்கும் ஓநாய்களை மகிந்தர் காட்டிக் கொடுப்பது மிக நல்ல விடயம். அதற்காக மகிந்தர் மன்னிக்கப்படக் கூடிய குற்றவாளி அல்ல..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.