Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் பெண்களின் அட்டகாசம்....ஆண்களுக்கு விடிவு எப்போது...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்தும் பலனில்லை.

நேற்று அதிகாலை 3 மணிக்கு, ஆர்டர் கொடுத்த 42 சவரன் நகைகளை கோவைக்கு கொண்டு செல்ல, மணிகண்டனும், சுகுமாரும் ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அப்போது நகைகளை சுகுமாரிடம் கொடுத்துவிட்டு, பாத்ரூம் சென்றார் மணிகண்டன்.இதை பயன்படுத்திக் கொண்ட சுகுமார், நகைகளுடன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும், கிடைக்காத நிலையில், நேற்று மதியம் 12.30 மணிக்கு, கரிமேடு போலீசில் மணிகண்டன், புகார் செய்தார். தனிப்படையினர் சுகுமாரை தேடினர்.பெத்தானியாபுரத்தில் நகைகளை சுகுமார் விற்க முயன்ற போது, ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடுத்த தகவலில், போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=312704

  • கருத்துக்கள உறவுகள்

காதலியை கைபிடிக்க திருடியவர் கைது: 42 சவரன் நகைகள் மீட்பு...............தலையங்கம் இப்படி இருக்கிறது .

நானும் பார்த்தேன் சுண்டல் . ஏன் இப்பிடி :o ????????????????? :o

பேராசைக்காரிகளின் பசப்பு வார்த்தைக்கு மயங்கி சோரம் போகும் இப்படிப்பட்ட ஆண்களின் நிலை பரிதாபமானதே.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக் காதலிக்கிறதும்.. கார் செலுத்துவதும்... ஒன்று. இரண்டையும் நாம் அவதானமாகச் செய்யவில்லை என்றால்.. உயிரைக் கூட குடித்துவிடலாம்..! இரண்டிலும் அளவுக்கு மிஞ்சி நம்பிக்கை வைக்கிறது.. வேகமாகச் செயற்படுவது.. ஆபத்தில் முடிக்கும். நின்று நிதானித்து.. வரையறைகளைப் பின்பற்றி நடந்தால்.. காரும் இடிபடாது.. காதலும்.. நம்மை ஆபத்தில் தள்ளாது. இரண்டுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நன்று. இன்றேல்.. நஸ்ட ஈடு இன்றி.. பரிதவிக்க நேரிடும். :lol::):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் சுண்டல் . ஏன் இப்பிடி :o ????????????????? :o

கவர்சிகரமான தலையங்கம் இருந்தால்தான் யாழில் கவனத்தில் எடுபடுமாக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக் காதலிக்கிறதும்.. கார் செலுத்துவதும்... ஒன்று. இரண்டையும் நாம் அவதானமாகச் செய்யவில்லை என்றால்.. உயிரைக் கூட குடித்துவிடலாம்..! இரண்டிலும் அளவுக்கு மிஞ்சி நம்பிக்கை வைக்கிறது.. வேகமாகச் செயற்படுவது.. ஆபத்தில் முடிக்கும். நின்று நிதானித்து.. வரையறைகளைப் பின்பற்றி நடந்தால்.. காரும் இடிபடாது.. காதலும்.. நம்மை ஆபத்தில் தள்ளாது. இரண்டுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நன்று. இன்றேல்.. நஸ்ட ஈடு இன்றி.. பரிதவிக்க நேரிடும். :lol::):icon_idea:

ஆண் பெண்ணைத் தேடுவதும், பெண் ஆணைத் தேடுவதும், இயற்கையின் நியதியே.

அதைப் போய்ப் பெரிதாக ஆரவாரப் படுத்துகின்றீர்கள், நெடுக்ஸ்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உமது திருமணத்துக்கான நற்சான்றிதழ் பத்திரம் நிலாமதி அக்காவால் கிழிக்கப்பட்டுவிட்டது, இனி தனி கட்டை ராஜ்ஜியம்தான்.

பணத்துக்காக திருமணம் செய்வதைவிட, தனிய வாழ்வதே மேல்

நான் நினைத்தேன் சுண்டலேல்லோ கல்யாண அவதியில் எங்கேயோ மாட்டுப்பட்டிட்டுது என்று :D :D :D :D :D

பிடி பட்டவன் நிம்மதியாய் 2 வருசத்தில் வெளில வந்து விடுவான். கட்டின நாமதான், 25 வருசமா விடுதலையும் இல்லாமல், நிம்மதி இல்லாமல், அலையிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிடி பட்டவன் நிம்மதியாய் 2 வருசத்தில் வெளில வந்து விடுவான். கட்டின நாமதான், 25 வருசமா விடுதலையும் இல்லாமல், நிம்மதி இல்லாமல், அலையிறம்.

வாழ்த்துக்கள் தாலி கட்டும் போது வெள்ளி பார்த்து வெள்ளிவிழா கொண்டாடும் பொன்னிக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா சுண்டல உள்ளுக்கு அணுப்பிறதுக்கு கனடால இருந்து சில பேர் சதி செய்றாங்க...சுண்டல் கவணமா இருந்துகோடா..........

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா சுண்டல உள்ளுக்கு அணுப்பிறதுக்கு கனடால இருந்து சில பேர் சதி செய்றாங்க...சுண்டல் கவணமா இருந்துகோடா..........

:D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

பிடி பட்டவன் நிம்மதியாய் 2 வருசத்தில் வெளில வந்து விடுவான். கட்டின நாமதான், 25 வருசமா விடுதலையும் இல்லாமல், நிம்மதி இல்லாமல், அலையிறம்.

நிம்மதி உங்கள் கைகளில் :lol:

வாழ்த்துக்கள் தாலி கட்டும் போது வெள்ளி பார்த்து வெள்ளிவிழா கொண்டாடும் பொன்னிக்கு

கிடைத்த சைக்கில் கப்பில லொறீ ஓட்டிறியள் உடையாரே..

எது செல்வம்?

1. குழந்தைச் செல்வம்

2. நோயற்ற வாழ்வு

3. கல்வி

4. வீடு

5. நிலம்

6. தங்கம்,வைரம்,பிளாட்டினம் என இன்று நாம் வரையறை செய்துள்ள எதுவுமே செல்வமல்ல.

இதுவல்லவா செல்வம்!

நம்மை நம்பி வந்தவரைக் குறையில்லாமல் காக்கும் பண்பே சிறந்த செல்வம் என்கிறது இந்த அகப்பாடல்.

சரி சங்கப் பாடலுக்குச் செல்வோம்.

பரத்தையிடம் சென்று மீண்டும் தலைவியை நாடி வந்தான் தலைவன். அவன் மீது ஊடல் (கோபம்) கொண்டாள் தலைவி. அவளின் ஊடலை நீக்க எண்ணிய தலைவன் தோழியிடம் சென்றான்.

தோழி தலைவனைப் பார்த்து சொல்கிறாள்..

தலைவ! நீ எதை எதையோ செல்வம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்!

அவையெல்லாம் செல்வங்களல்ல!

உன்னை நம்பி வந்தவர்களைக் காத்தலே உண்மையான செல்வம் என்கிறாள்!

அச்செயல் உன்னிடம் இல்லை என்று கடிந்து உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

செல்வம் என்பதற்கான அடையாளம் நாம் இன்று என்னும் எதுவுமே அல்ல நம்மை நம்பி வந்தவரைக் குறையில்லாமல் காக்கும் பண்பே என்னும் உயரிய சிந்தனை பழந்தமிழரின் செம்மாந்த வாழ்வுக்குத் தக்க சான்றாக அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன்

பண்ணியிருக்க என்ன விஷயம் ?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு

நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை ?

நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து

வர மாதிரி இருக்கு. எதை செலக்ட்

பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய்

இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம் ?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க

ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம்

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல

இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்

யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை

செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு

கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது.

ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா

இருக்காரு.

வித்யா : மேனஜரா ? அப்படினா எப்பவுமே எதோ

பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப்

கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும்

செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே

சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி

வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன்

65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு

சொன்னாலும் , ஒத்துக்க மாட்டாரு.

எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு

உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு

சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் ( cab)

அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய்

ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா

செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க

மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா ? அப்ப

நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட்

இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது

செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும்

கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி

சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும்

அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு

மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு

எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா ,

நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை.

அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு.

ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம்.

அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ்

டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா

இருந்தாலும் , இதை செய்ய இவ்வளவு நேரமானு

கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா ,

காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு.

5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10

நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு.

நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி , நான்

செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க

மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா

வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற

நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே

கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே

வேண்டாம்னு சொல்றியா ?

நித்யா: யார் அப்படி சொன்னா ?

சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு

இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம் .

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம்.

எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம

பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா

போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற

பிரச்சனை என்னனா எது கேட்டாலும்

தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி”

படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி.

அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு

அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா

அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப

நல்லவனு” சொல்லனும்

நன்றி - kadayanallur.org

கிடைத்த சைக்கில் கப்பில லொறீ ஓட்டிறியள் உடையாரே..

ஹி...ஹி...ஹி...சும்மாதான்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் பெண்களின் அட்டகாசம்....ஆண்களுக்கு விடிவு எப்போது...?

பெண்களின் அட்டகாசம் குறையும்போது.....ஆண்களுக்கு விடிவு ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.