Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரத லக்ஸ்மன் உயிரிழந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bharatha-140x140.gif

கொலன்னாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

http://www.vanakkamnet.com/died/

துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதி

duminda-140x140.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்தந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு முடிவடைவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு சம்வபங்களும் இடம்பெற்றுள்ளன.

http://www.vanakkamnet.com/dumindasilva-firing/

பாரத லஸ்மன்: மிகப் பெரும் பாதாள உலக் கோஸ்டியின் தலைவர். மிகப் பயங்கரமான கொழும்பு அரசியல்வாதிகளில் ஒருவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு பயங்கர வாதி, இவரினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவும் ஒரு உள்வீட்டு பிரச்சனையாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/xLb3Fktn6aY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் இறுதி நிகழ்வில் மஹிந்த! (காணொளி)

http://youtu.be/dRhVpkO_7MA

ஆகா கண்கொள்ளா காட்சிகள், நீண்ட நாளைக்கு பின்னர் மனதில் சந்தோசம். தொடரட்டும் குரங்குங்களின் உட்பூசல்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, இன்னும் கொஞ்ச நாளில் இன்னும் பல விழுந்தால் சரி

பாதாள உலகத்தினர் உதவியுடன் ஆட்சியில் இருந்தால் இதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதாளக் கோஷ்டிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படாலிருக்க,

தகுந்த நேரத்தில், தரம் வாய்ந்த ஆயுதங்களை... இரு தரப்புக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.soldier_smiley8.gif

  • கருத்துக்கள உறவுகள்

பாதாளக் கோஷ்டிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படாலிருக்க,

தகுந்த நேரத்தில், தரம் வாய்ந்த ஆயுதங்களை... இரு தரப்புக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

அவர்களென்ன தமிழர்களா..? என்றுமே இரு துருவங்களாக இணையாமலிருக்க? வாருங்கள், தமிழனை அழிப்போமென கூவுங்கள்..! இரு பிரிவும் கைகோர்த்து பாய்ந்து வரும்... இங்குபோல் LTTE, PLOTE, EPRLF(n times), ENDLF, EROS, TNA......................WXYZ...என ஆயிரத்தெட்டு உட்பிரிவுகள் கிடையா.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சேட்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களென்ன தமிழர்களா..? என்றுமே இரு துருவங்களாக இணையாமலிருக்க? வாருங்கள், தமிழனை அழிப்போமென கூவுங்கள்..! இரு பிரிவும் கைகோர்த்து பாய்ந்து வரும்... இங்குபோல் LTTE, PLOTE, EPRLF(n times), ENDLF, EROS, TNA......................WXYZ...என ஆயிரத்தெட்டு உட்பிரிவுகள் கிடையா.

உண்மை ராஐவன்னியன், தலைவிதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதலக்ஸ்மன் படுகொலை: சந்தேக நபர் கைது

October 10th, 2011 6:41 PM

arrested3-140x140.jpg

ஜனாதிபதியின் ஆலோசகர் பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 12 கைத்துப்பாக்கிகள் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குற்றப்பு புலானய்வு பிரிவினர் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Edited by தமிழ் அரசு

ஜனாதிபதியின் ஆலோசகர் பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யார் பெற்ற புள்ளையோ..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதவின் கன்னத்தில் அறைந்த துமிந்த சில்வா? சுடுமாறு பணித்த நபர் யார்? : சாரதி வாக்குமூலம்

duminda-300x201.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, உயிரிழந்த பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கன்னத்தில் அறைந்ததாக அவரது சாரதி தெரிவித்துள்ளார் அப்பொழுது பாரத லக்ஷ்மன் திடீரென கீழே விழுந்ததாகவும், அவரின் கால்களுக்கு துமிந்த தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலையில் சுடுமாறு யாரோ உத்தரவிட்டதாகவும், அதன் பின்னர் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்தன எனவும் பாரதவின் சாரதி சம்பவத்தை விபரித்துள்ளார்.

கடந்த 8ம் திகதி பிற்பகல் 3.30 அளவில் வல்பொல சந்திக்கு சென்றதாகவும், தேர்தல் முடிவடைவதற்கு முன்னதாக சில பகுதிகளை பார்வையிட வேண்டுமென பாரத கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வல்பொல சந்திக்கு துமிந்த சில்வாவும் மூன்று பிராடோ வாகனங்கள் சகிதம் வந்திருந்தார். கைத்துப்பாக்கியுடன் வாகனத்தை விட்டு இறங்கிய துமிந்தவிற்கும், பாரதவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென பாரதவை, துமிந்த கன்னத்தில் அறைந்தார். இதனால் பாரத கீழே விழுந்தார்.

அப்போது துமிந்தவின் அருகில் இருந்த நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கி ஒன்றினால் பாரதவின் காலில் சுட்டார். அப்போது “அவனின் தலையில் சுட்டு முடித்துவிடுமாறு” யாரோ கூறினார்கள். அதன் பின்னர் துமிந்தவின் அருகில் இருந்தவர்கள் பாரதவின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாக சுட்டனர். அப்போது பாரதவின் மெய்ப்பாதுகாவலர்கள் அவரை வாகனத்திற்கு பின்னால் தூக்கிச் செல்ல முற்பட்டனர், இதன் போது மெய்ப்பாதுகாவலர்கள் மீதும் துமிந்த தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என சாரதி தெரிவித்துள்ளார்.

துமிந்த தரப்பினர் பாரத மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது பாரத தரப்பினர் பதில் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் பாரதவின் சாரதியிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர். துமிந்த சில்வா தரப்பினரிடம் ரி56 ரக ஏழு துப்பாக்கிகள் இருந்ததாகவும், பாரதவின் மெய்ப்பாதுகாவலரது ரி56 ரக துப்பாக்கியை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு பாரத கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச வாழ் இளைஞர் யுவதிகளை போதைப் பொருள் பிரச்சினையிலிருந்து மீட்பதற்கு பாரத பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் இந்தப் பிரதேசத்தைவிட்டு துரத்தியடிக்கப்படுவார்கள் என உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பாரத சூளுரைத்திருந்தார். போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு உதவிகளை வழங்குவோர் பற்றி ஜனாதிபதியிடம் தெரிவிக்கப் போவதாகவும், உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்னரும் இந்தப் பிரதேசத்தைப் பாதுகாக்க தாம் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் பாரத தமது இறுதிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 7ம் திகதி துமிந்தவிற்கு ஆதரவான பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தத் தாக்குதலை பாரத தரப்பினர் மேற்கொண்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

துமிந்த சில்வாவின் தரப்பினர் சம்பவ தினமன்று கடும் குடி போதையில் ஆயுதயுங்களுடன் பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilulakam.com/?p=9729

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.