Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

QUADRUPLETS- என்னுடன் வந்தவன் -2

Featured Replies

எனது வீட்டு டெக்,

அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சிரிக்கின்றான் .

உரத்தநாடு நான் போய் கருணாவிடம் பணத்தை கொடுக்க கருணா சிரித்துக்கொண்டு உம்மடை ஆள் நேற்றே ஓடிவிட்டார் என்றார் .கருணாவிடம் இருந்து தோழர் ஓடி விட்டதற்கான ஒரு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்து அண்ணா நகரில் குமாரை சந்திகின்றேன்.உன்னை அவர்களால் கொன்றிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்,மூன்று வருடங்களுக்கு மேலாக முகாம்களில் பயிற்சி என்று எல்லோரும் படாபாடு பட, ஆறு மாத பயிற்சி ,பின் சென்னையில் ஆபிஸ் உத்தியோகம் ,மோட்டார் சயிக்கிளில் புலன் ஆய்வு, பிறகு ஊருக்கு போய் வடக்கு,கிழக்கு சுத்தியடித்து வந்து "we missed the bus " என்று சொல்லிவிட்டு ஓடிப்போக, அவங்கள் என்ன பொன்னையர்களா?.உனக்கு மட்டும் எவ்வளவு காசு செலவழித்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்தாயா? எல்லாவற்றிகும் தலை குனிந்தபடி ஆள் நிக்குது .ஆளை கொண்டுபோய் அண்ணா நகரில் இருக்கும் பிரபல ஏஜன்சி மாட்டின் ரோட் மகேந்திரனின் வீட்டில் விட்டு,திரும்ப லண்டன் போகும் ஏற்பாடுகளை செய்யுமாறு சொல்லி வந்தேன்.அதற்குள் தான் மொட்டை மாடியில் நிற்கும் போது ராஜன் ,மாணிக்கம் வேறு மகேந்திரனிடம் வந்து போனதாக பின்னர் சொன்னான் .(எல்லோரும் மாட்டின் ரோட் தான் )

குமார் லண்டன் திரும்பி பின்னர் அவர் அக்கா அமெரிக்கா கூப்பிட்டு இப்ப கலிபோனியாவில் இருக்கின்றார் .கலியாணம் கட்டி சில காலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்து பின்னர் ஒரே தரத்தில் நாலு பிள்ளைகளை பெற்று இருக்கின்றார் .மூன்று பெண்கள் ,ஒரு ஆண்.

நாலுபேரும் எனது வீட்டு தோட்டத்தில் ஓடிவிளையாடுகின்றார்கள்,பெடி பெரும் குழப்படி போல் இருக்கு ,பெட்டைகளுக்கு ஒரே அலுப்பு கொடுத்தபடி, எனக்கு ஏன் கண்களையே நம்ப முடியவில்லை.பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு, எனது மனைவியார் வீடியோ எடுக்கின்றார் ,குமாரிடம் உத்தரவு வாங்கி பதிவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த கதை மூலம் என்ன சொல்ல வாரீயள் அர்சுன்....தோழர் தப்பினது நல்லம் என்று சொல்லுறீயளோ?கூடாது என்று சொல்லுறீயளோ?....

நான் நினைக்கிறன் உங்கன்ட தோழர் சுழியன் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

உரத்த நாட்டில் உரமாய் போவதைவிட தோழர் தப்பியது நல்லதுதான்.

உரத்த நாட்டிலும், முள்ளிவாய்க்காலிலும் தப்பாதவர்களின் கதைகள் மெல்ல இனி மறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கமே உடைந்து சுக்கு நூறாகிய பின் குமாருக்கு இனி என்ன வேலை? வாழ்க்கையாவது நாலு பிள்ளைகளுடன் அனுபவிக்கட்டுமே?.தனது இனத்தை காட்டிக்கொடுக்காத வரை அவர் மேல் தான்.

குமார் நீண்ட காலமாக கலிவோர்ணியாவில் வாழ்கிறாரா?

ஊடகவியலாளர் நிர்மலராஜனை சுட்டவனும் தான் இலண்டனில் உள்ளான்.

ஒரத்த நாட்டில் இருந்து தப்பி வந்த எங்கள் நண்பனை காப்பாற்றி மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்தோம். வெளியில் செல்லும் பொழுது பிடித்து விட்டார்கள். சங்கிலியாலும் டம்பிங்காலும் (தற்போது மத போதகர் என்று கேள்விப்பட்டேன்) எனது உறவினருக்கும் எனக்கும் பெரிய பிரச்சனை வந்தது. கடத்துவதற்கு தேடித் திரிந்தார்கள். அப்பொழுது புளட் நன்றாக உடைவுபட்டு கடைசிக் கட்டத்திலிருந்த நேரம். எனது உறவினருக்கு பெரிய மட்டத்தில் தொடர்புகள் இருந்தபடியால் நண்பனையும் மீட்டு நாங்களும் தப்பக் கூடியதாக இருந்தது. நண்பனின் பெயரும் குமார்தான்.

பாவம் தப்புவதற்கு வசதிகள் இல்லாதபடியால் விடுதலைக்கென்று போன பல இளைஞர்கள் அநியாயமாக பலியாகி விட்டார்கள்.

எனது வீட்டு டெக்,

அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சிரிக்கின்றான் .

உரத்தநாடு நான் போய் கருணாவிடம் பணத்தை கொடுக்க கருணா சிரித்துக்கொண்டு உம்மடை ஆள் நேற்றே ஓடிவிட்டார் என்றார் .கருணாவிடம் இருந்து தோழர் ஓடி விட்டதற்கான ஒரு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்து அண்ணா நகரில் குமாரை சந்திகின்றேன்.உன்னை அவர்களால் கொன்றிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்,மூன்று வருடங்களுக்கு மேலாக முகாம்களில் பயிற்சி என்று எல்லோரும் படாபாடு பட, ஆறு மாத பயிற்சி ,பின் சென்னையில் ஆபிஸ் உத்தியோகம் ,மோட்டார் சயிக்கிளில் புலன் ஆய்வு, பிறகு ஊருக்கு போய் வடக்கு,கிழக்கு சுத்தியடித்து வந்து "we missed the bus " என்று சொல்லிவிட்டு ஓடிப்போக, அவங்கள் என்ன பொன்னையர்களா?.உனக்கு மட்டும் எவ்வளவு காசு செலவழித்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்தாயா? எல்லாவற்றிகும் தலை குனிந்தபடி ஆள் நிக்குது .ஆளை கொண்டுபோய் அண்ணா நகரில் இருக்கும் பிரபல ஏஜன்சி மாட்டின் ரோட் மகேந்திரனின் வீட்டில் விட்டு,திரும்ப லண்டன் போகும் ஏற்பாடுகளை செய்யுமாறு சொல்லி வந்தேன்.அதற்குள் தான் மொட்டை மாடியில் நிற்கும் போது ராஜன் ,மாணிக்கம் வேறு மகேந்திரனிடம் வந்து போனதாக பின்னர் சொன்னான் .(எல்லோரும் மாட்டின் ரோட் தான் )

குமார் லண்டன் திரும்பி பின்னர் அவர் அக்கா அமெரிக்கா கூப்பிட்டு இப்ப கலிபோனியாவில் இருக்கின்றார் .கலியாணம் கட்டி சில காலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்து பின்னர் ஒரே தரத்தில் நாலு பிள்ளைகளை பெற்று இருக்கின்றார் .மூன்று பெண்கள் ,ஒரு ஆண்.

நாலுபேரும் எனது வீட்டு தோட்டத்தில் ஓடிவிளையாடுகின்றார்கள்,பெடி பெரும் குழப்படி போல் இருக்கு ,பெட்டைகளுக்கு ஒரே அலுப்பு கொடுத்தபடி, எனக்கு ஏன் கண்களையே நம்ப முடியவில்லை.பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு, எனது மனைவியார் வீடியோ எடுக்கின்றார் ,குமாரிடம் உத்தரவு வாங்கி பதிவிடுகின்றேன்.

மிகவும் அழகாகாகக் சொல்லியிருக்கின்றீர்கள் அர்ஜுன் . உங்கள் எழுத்தில் மனிதம் தெரிகின்றது . உங்களால் ஒரு குமாரைத்தானே காப்பாற்ரமுடிந்தது ? புதியதோர் உலகத்தைக் காண வெளிக்கிட்ட ஏதும்அறியா அப்பாவிகள் , தலைமைகளை நம்பி உரமானது ஏனோ கறைபிடித்த வரலாறாகவே இருக்கின்றது . இதில் புலி புரணம் வேண்டாம் அர்ஜுன் . எல்லா அமைப்புகளுக்குமே கறைகள் இருக்கின்றது . இந்த அப்பாவிகள் காப்பாற்ரப் பட்டார்களா என்றால் இல்லை என்ற பதிலே கண்முன்னே விரிகின்றது :( :( :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா...நன்றாக இருக்கிறது உங்கள் அனுபவப் பகிர்வு..தொடர்ந்தும் எழுதுங்கள்..இதை தனித்திரியாக இணைக்காமல் பாகம் ஒன்றின் கீழ் இணைத்திருந்தால் வாசிப்பதற்க்கு இலகுவாக இருந்திருக்கும்..

  • 4 years later...
  • தொடங்கியவர்

அந்த நாலு பேர்களின் படங்களை இன்று முகபுத்தத்தில் பார்க்க இந்த பதிவு நினைவு வந்தது .

நிர்வாகம் சம்மதித்தால் படத்தை மீண்டும் இணைகின்றேன் .

Edited by arjun
படம் எடுத்துவிட்டேன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

12208711_414498202082114_219609944837584

எப்படி வளர்ந்துவிட்டார்கள் .

ஒன்றாக பிறந்த நால்வரும் தாயும் .

கலிபோர்ணியாவில் இருந்து இந்திய வாழ்க்கைக்கு மாறிவிட்டார்கள் .

படத்தை போட கொஞ்சம் யோசனை இருந்தது இருந்தாலும் இணைத்துவிட்டேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.