Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாடுக|ளில் வதியும் தமிழ் ஓய்வூதியர்களின் கொடுப்பனவு நிறுத்தம்: மஹிந்தவின் அடுத்த தாக்குதல்!

Featured Replies

சிறிலங்காவில் முன்னர் அரச சேவையில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்று வெளி நாடுகளில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களை சிங்கள அரசாங்கம் தடைசெய்யவுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ஓய்வூதியங்களை தடைசெய்ய சிங்கள அரசு முடிவெடுத்துள்ளது.

.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் இந்த பட்டியலில் அடங்குவர். நிறுத்தபப்ட்ட ஓய்வூதியங்களை இராணுவத்தினரின் குடும்பங்களின் நலன்களுக்கு செலவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Re

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில கன சனத்திற்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுது....

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பொருட்களை நன்றாக வாங்கி சமைத்து சாப்பிடவும்.அந்த பொருட்கள் இல்லாமல் தொண்டைக்குள்ளால் இறங்கவில்லை என ஏங்கியவர்களுக்கு மகிந்த சிந்தனை நிரந்தர ஏக்கத்தை தர மகிந்த ஒருவரால் தான் முடிகிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இளசுகளுக்கு சிறிலங்கா பொருட்களை பழக்கியவர்களே இந்த பழசுகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே அடி பட்ட செய்தி...பல கனேடிய உறவுகள் லட்சம்,லட்சமாய் சேர்த்து வைச்சு இருந்து ஏற்கனவே இழந்தும் விட்டார்கள்..

சிறிலங்காவில் முன்னர் அரச சேவையில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்று வெளி நாடுகளில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களை சிங்கள அரசாங்கம் தடைசெய்யவுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ஓய்வூதியங்களை தடைசெய்ய சிங்கள அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழர்களின் ஓய்வூதியங்களை மட்டும் தடைசெய்யுமா? இல்லை இதில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் கூட அடங்குவார்களா??

தமிழர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமோதெரியாது...இங்கு வாழும் பெரும்பாலன தமிழ் ஓய்வுதியர்கள் அங்கு இருக்கும் உறவுகளுக்கு பவர்ஒப்அற்றோனி மாதிரி குடுத்து மாற்றிவிடுகிறார்கள் இல்லை என்றால் இங்கு தங்கள் வங்கிகளுக்கு மாதம்,மாதம் வரச்செய்தும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ளவர்களுக்கு இது தேவை தான்...காசை அங்குள்ள வங்கிகளில் போடுறது அங்கு அவர்களுக்கு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் வருடத்திற்கு வருடம் அங்கே போய் அந்த காசை எடுத்து உடுப்பு,நகை அத்தோடு அங்குள்ளவர்களுக்கு எடுப்பை காட்டிப் போட்டு வாறது அந்த காசை அங்குள்ள கஸ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்தாலாவது பரவாயில்லை

தமிழர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமோதெரியாது...இங்கு வாழும் பெரும்பாலன தமிழ் ஓய்வுதியர்கள் அங்கு இருக்கும் உறவுகளுக்கு பவர்ஒப்அற்றோனி மாதிரி குடுத்து மாற்றிவிடுகிறார்கள் இல்லை என்றால் இங்கு தங்கள் வங்கிகளுக்கு மாதம்,மாதம் வரச்செய்தும் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு கனடாவில் வேலைசெய்த பலர் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வாழுகிறார்கள். அவர்களின் ஓய்வூதியப்பணத்தை நிறுத்துவது முடியாத காரியம். அப்படியானால் சிங்களமும் நிறுத்த முடியாது என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு கனடாவில் வேலைசெய்த பலர் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வாழுகிறார்கள். அவர்களின் ஓய்வூதியப்பணத்தை நிறுத்துவது முடியாத காரியம். அப்படியானால் சிங்களமும் நிறுத்த முடியாது என்பது எனது கருத்து.

தங்களுக்குத் தேவையான சட்டங்களை சிங்களத்தால் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முடியும், அகூதா!

சட்டத்தை வரைபவர்களும் அவர்களே! நீதிபதிகளும் அவர்களே!

யாரிடம் போய் நீதியைக் கேட்பது?

சிறிலங்காவில் முன்னர் அரச சேவையில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்று வெளி நாடுகளில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களை சிங்கள அரசாங்கம் தடைசெய்யவுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ஓய்வூதியங்களை தடைசெய்ய சிங்கள அரசு முடிவெடுத்துள்ளது.

.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் இந்த பட்டியலில் அடங்குவர். நிறுத்தபப்ட்ட ஓய்வூதியங்களை இராணுவத்தினரின் குடும்பங்களின் நலன்களுக்கு செலவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Re

இலங்கை அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவோரின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் தற்போது புலிகளின் ஆலோசகர்களாக வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. (இக்னேஷியஸ்)

Source: Srilankamirror

----------------------

இந்த இரண்டு செய்திகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. முதலாவது செய்தி பொதுப்படையான கருத்துடன் இருக்கிறது. இரண்டாவது செய்தி எந்த சட்ட வரம்பின் கீழ் இது செய்யபடகூடும் என சூசகமாக சொல்வதுடன் சற்று விளக்கமாகவும் உள்ளது.

தங்களுக்குத் தேவையான சட்டங்களை சிங்களத்தால் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முடியும், அகூதா!

சட்டத்தை வரைபவர்களும் அவர்களே! நீதிபதிகளும் அவர்களே!

யாரிடம் போய் நீதியைக் கேட்பது?

என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய ஒருவரின் ஓய்வூதிய பணம் என்பது அவர் உழைக்கும்பொழுது அவர் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்குகின்றார், அதேவேளை அவரின் நிறுவனமும் ஒதுக்குகின்றது. உலக நாடுகளில் அவ்வாறான ஓய்வூதிய பணம் குறைக்கப்பட்டுள்ளது உண்டு, ஆனால் மறுக்கப்படுவது ? இதை எதிர்த்து, வழி முறைகளை ஆராய்ந்து, போராடவேண்டியது முக்கியம்.

இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தெரியாது. ஆனாலும் ஓய்வூதியம் இலங்கையிலிருந்து பெறுபவர்கள் அதற்காகப் போராடலாம். இதில் இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் இலங்கை தனக்கு இயலுமாப்போல் சட்ட வரைபுகளை மாற்றவல்லது. அதன்படி ஓய்வூதியம் பெறுபவர்கள் இலங்கையில் வசிக்கவேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டுவரலாம்.

அல்லது ஓய்வூதியப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது என்ற முடிவை எடுக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தெரியாது. ஆனாலும் ஓய்வூதியம் இலங்கையிலிருந்து பெறுபவர்கள் அதற்காகப் போராடலாம். இதில் இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் இலங்கை தனக்கு இயலுமாப்போல் சட்ட வரைபுகளை மாற்றவல்லது. அதன்படி ஓய்வூதியம் பெறுபவர்கள் இலங்கையில் வசிக்கவேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டுவரலாம்.

அல்லது ஓய்வூதியப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது என்ற முடிவை எடுக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

அப்படி ஒரு முடிவை எடுத்தால், 'நாளை உங்கள் முதலீடும் அரசமயமாக்கப்படலாம்' என்ற செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் வரும். இது சிங்கள பொருளாதரத்தை மேலும் பாதிக்கும். கடன் கொடுத்தவர்கள் கூட 'பயப்படும்' நிலை ஏற்படும்.

அப்படி ஒரு முடிவை எடுத்தால், 'நாளை உங்கள் முதலீடும் அரசமயமாக்கப்படலாம்' என்ற செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் வரும். இது சிங்கள பொருளாதரத்தை மேலும் பாதிக்கும். கடன் கொடுத்தவர்கள் கூட 'பயப்படும்' நிலை ஏற்படும்.

தமிழரது முதலீடுகளை அபகரிக்கும் திட்டம் அவர்களிடம் நிறையவேயுண்டு. அது வெளிநாட்டுத் தமிழராயிருந்தாலும் அது நடக்கலாம். முதலீடுகளில் கைவைக்கும் பொழுது ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்ள விரும்புவார்களா?

தமிழரது முதலீடுகளை அபகரிக்கும் திட்டம் அவர்களிடம் நிறையவேயுண்டு. அது வெளிநாட்டுத் தமிழராயிருந்தாலும் அது நடக்கலாம். முதலீடுகளில் கைவைக்கும் பொழுது ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்ள விரும்புவார்களா?

மற்றையவர்கள் விட்ட பிழைகளை அறிந்து நடப்பவன் கெட்டிக்காரன்

தனது பிழையை உணர்த்து திருந்துபவன் திறமைசாலி

மீண்டும் மீண்டும் பிழை விடுபவன் - ஏமாளி

மற்றையவர்கள் விட்ட பிழைகளை அறிந்து நடப்பவன் கெட்டிக்காரன்

தனது பிழையை உணர்த்து திருந்துபவன் திறமைசாலி

மீண்டும் மீண்டும் பிழை விடுபவன் - ஏமாளி

ஏற்கெனவே வெளிநாட்டு ஓய்வூதியம் பெறுபவர்களிடம் உயிருடன் வாழ்வதற்கான பத்திரங்களை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை பெறுவதன் மூலம்அத்தகையவர்களை அடையாளம் கண்டுள்ளார்கள். காணிப் பதிவு முறையொன்றை ஏற்படுத்தி அதையும் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருக்கும் தமிழர்களையாவது அநுபவிக்க விடுவதற்கு இங்கிருப்பவர்கள் தயாரில்லை. பிழைகளை நாம்தான் விட்டுக்கொண்டிருக்கிறோம்.இந்த ஓய்வூதியத்திற்காக எவரும் இலங்கை சென்று வாழ்வதற்குத் தயாராக இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்கள் வரையப் படும்போது, சில ஓட்டைகள் சில தேவைகளுக்காக விடப்படுகின்றன!

அவற்றில் ஒன்று, பயங்கர வாதம் சம்பத்தப் பட்டது!

அவரவர் தேவைகளுக்கு ஏற்ப, இந்த வார்த்தையின் வரைவிலக்கணங்கள் மாறலாம்!

ஆனால் அந்த வார்த்தையின் ;கனம். என்றும் மாறியதில்லை!

இதையே தான் சிங்களமும் உபயோகிக்கப் போகின்றது!

இந்த வாரத்தையைக் கேட்டதும் அரைவாசி நாடுகள் ஒதுங்கி விடும்!

மிகுதியை நடப் நாடுகள் பார்த்துக் கொள்ளும்!

எங்கள் பணத்திலேயே, எங்கள் நிலத்திலேயே, எங்களை அழித்த போர்வீரர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் படப போகின்றன!

சிங்கள ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் பாதிக்கப் படாது!

இங்குள்ளவர்களுக்கு இது தேவை தான்...காசை அங்குள்ள வங்கிகளில் போடுறது அங்கு அவர்களுக்கு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் வருடத்திற்கு வருடம் அங்கே போய் அந்த காசை எடுத்து உடுப்பு,நகை அத்தோடு அங்குள்ளவர்களுக்கு எடுப்பை காட்டிப் போட்டு வாறது அந்த காசை அங்குள்ள கஸ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்தாலாவது பரவாயில்லை

ரதிக்கு பச்சை குத்தினது ,,, நானேதான்!! :)

என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய ஒருவரின் ஓய்வூதிய பணம் என்பது அவர் உழைக்கும்பொழுது அவர் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்குகின்றார், அதேவேளை அவரின் நிறுவனமும் ஒதுக்குகின்றது. உலக நாடுகளில் அவ்வாறான ஓய்வூதிய பணம் குறைக்கப்பட்டுள்ளது உண்டு, ஆனால் மறுக்கப்படுவது ? இதை எதிர்த்து, வழி முறைகளை ஆராய்ந்து, போராடவேண்டியது முக்கியம்.

அகூதா சிந்திச்சது சரியேதான்!

இதுதான் சொல்றது,,,பலகோணங்களில ஒரு மேட்டரை ஆராயணும் என்கிறது!

பென்ஷன் என்கிறது ,,, ஒரு எம்ப்ளோயரால் ......தனக்காய் .... ஒதுக்கப்படுவதல்ல...

மாறாய்,, அவர் பணிபுரியும் நிறுவனங்களால்... பிடிமானம் செய்யப்படுவது!

சட்டரீதியா வேலைசெய்பவர்களின் , வருமானங்கள அரசாங்கத்தால பறிச்சுக்க முடியுமா?

தெரியலியே!! வெயிட் & சீ!

பைதவே உமை...... நீங்களா , ரொம்ப நாள்முன்னாடி ஒரு செய்தி போட்டீங்க இங்கே.....

அது,,,இனிமே உண்டியல்ல பணம் அனுப்ப முடியாது ஸ்ரீலங்காவுக்குன்னு?

அதுபோலவா இதுவும்? ஒரே கன்பியூஷன்! :)

ரதிக்கு பச்சை குத்தினது ,,, நானேதான்!! :)

பொய் சொல்லக்கூடாது

நான் ரதிக்கு பச்சை குத்தும்போது எனதைத்தான் முதலாவதாக காட்டியது

அங்கு இருக்க முடியாத அடக்குமுறை என்று வந்தவர்கள் சில ஆண்டுகள் கழிந்த பின் அங்கு போய் தம் பென்ஷன் காசைக் கொண்டு ஆடும் ஆட்டம் எமக்கெல்லாம் தெரிந்ததுதான்

மகிந்தவின் நல்லதொரு முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களுக்கும் ஆப்பு

  • Sunday, November 6, 2011, 2:15

சிறிலங்காவில் முன்னர் அரச சேவையில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்று வெளி நாடுகளில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களை சிங்கள அரசாங்கம் தடைசெய்யவுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ஓய்வூதியங்களை தடைசெய்ய சிங்கள அரசு முடிவெடுத்துள்ளது.அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் இந்த பட்டியலில் அடங்குவர். நிறுத்தபப்ட்ட ஓய்வூதியங்களை இராணுவத்தினரின் குடும்பங்களின் நலன்களுக்கு செலவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=29697

இது தமிழர்களைக் குறிவைக்கும் செயற்பாடுதான்.

பொய் சொல்லக்கூடாது

நான் ரதிக்கு பச்சை குத்தும்போது எனதைத்தான் முதலாவதாக காட்டியது

அங்கு இருக்க முடியாத அடக்குமுறை என்று வந்தவர்கள் சில ஆண்டுகள் கழிந்த பின் அங்கு போய் தம் பென்ஷன் காசைக் கொண்டு ஆடும் ஆட்டம் எமக்கெல்லாம் தெரிந்ததுதான்

மகிந்தவின் நல்லதொரு முடிவு.

ரங்க் ஸ்லிப் ஆயிரிச்சு,, ஆக்சுவலி....

ரதிக்கு பச்சை குத்தினதுல,,, நானும் ஒண்ணு .....என்னு வந்திருக்கணூம்! :(

  • தொடங்கியவர்

வெளி நாட்டில் வதியும் முதியோர்கள் கணிசமானவர்கள் தங்கள் பணத்தினை அங்கு உள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் பல சமூக நிறுவனங்களுக்கும் மாற்றி உதவிவருகின்ரார்கள். நான் அறிந்த அளவில் கனடாவில் அப்படி 17 பேர்வரை செய்துள்ளார்கள். அப்படி மற்றவர்களும் செய்தால் அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாதது. ஏனென்றால் அவர்களுக்கு முக்கிய பிரச்சினை அன்னியசெலவாணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் சொல்லக்கூடாது

நான் ரதிக்கு பச்சை குத்தும்போது எனதைத்தான் முதலாவதாக காட்டியது

அங்கு இருக்க முடியாத அடக்குமுறை என்று வந்தவர்கள் சில ஆண்டுகள் கழிந்த பின் அங்கு போய் தம் பென்ஷன் காசைக் கொண்டு ஆடும் ஆட்டம் எமக்கெல்லாம் தெரிந்ததுதான்

மகிந்தவின் நல்லதொரு முடிவு.

நீங்கள் உழைத்த காசில் நீங்கள் சாரயம் வாங்கி குடிக்கலாம், அவர்கள் வேர்வை சிந்தி உழைத்தகாசில் அவர்கள் கேளிக்கையில் ஈடுபடுபது எப்படி ஆட்டமாக கருதப்படும்? இந்த நிலை சிங்களவருக்கு வர சிங்கள அரசு வரவிடுமா? தமிழர் என்றால் எல்லாருக்கு ஒரு இளப்பம்தான்.

இங்குள்ளவர்களுக்கு இது தேவை தான்...காசை அங்குள்ள வங்கிகளில் போடுறது அங்கு அவர்களுக்கு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் வருடத்திற்கு வருடம் அங்கே போய் அந்த காசை எடுத்து உடுப்பு,நகை அத்தோடு அங்குள்ளவர்களுக்கு எடுப்பை காட்டிப் போட்டு வாறது அந்த காசை அங்குள்ள கஸ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்தாலாவது பரவாயில்லை

வேர்வை சிந்தி உழைத்தவன் அனுபவிக்கிறான் அதில் உங்களுக்கு என்ன பொறாமை.

" மாடு போல நீ உழைக்கலையே மனிசனை ஏச்சு பிழக்கிறியே"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.