Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஏன் இப்படி...?

Featured Replies

'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு வந்து நிக்கும்.. இது தேவையா?

155784_119500228115866_100001676685428_137270_7889095_n.jpg

அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை. நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்! ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும்.

அதுமட்டும் இல்ல. தன்ர பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

super+%252886%2529.jpg

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே நிக்கிறார்கள் நம்மவர்கள்..

super+%252880%2529.jpg

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே. அதை விடுத்து ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள். ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்..

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?

http://nekalvukal.blogspot.com/2011/11/blog-post_18.html

மேற்குலக நாடுகளுக்குள் தனி மனித சுதந்திரம் உள்ளதுதான், அது நல்லதும் தான், அம்மிடம் அது அதிகம் இல்லையும்தான்.

ஆனால், மேற்குலக நாடுகள் உலகெல்லாம் நலிந்த நாடுகளுக்கு சென்று அங்கெல்லாம் தனிமனித உரிமைகளை மீறுகிறார்கள், இல்லை மீறுபவர்களுடன் தமது நலத்திற்காக உறவு வைக்கிறார்கள். பலமுள்ள இடத்தில் பண்பும் இருக்கவேண்டும்.

அதைவிட உலகெல்லாம் தெரிந்து திரிந்து சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வதில் முன்னணியில் நிற்கிறார்கள்.

அவர்களை விட நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஜரோப்பியர் கொசிப் கதைப்பதில்லையா? விடுப்பு பார்ப்பதில்லையா?...ஜரோப்பியருக்கு பொது இடங்களில் முத்தமிடுவதையோ,கட்டிப் பிடிப்பதையோ பார்த்துப்,பார்த்து அலுத்துப் போய் இருக்கும் அதனால் தற்போது பார்க்காமல் இருக்கிறார்கள் ஆனால் எங்கட ஆட்களுக்கு இதெல்லாம் புதிசு அதனால் பார்க்கிறார்கள் இன்னும் கொஞ்ச காலம் போனால் எங்கட ஆட்களுக்கும் இதெல்லாம் சகஜமாய் போய் விடும் அதன் பிறகு அவர்களும் பார்க்க மாட்டார்கள்...பொது இடங்களிலேயோ,பக்க வீட்டிலிலோ என்ன அநியாயம் நடக்கும் போது பார்த்து விட்டு இருந்த பிறகு அநியாயம் நடந்த பிறகு பொலீசுக்கு அடித்து சொல்வதில் என்ன பிரயோசனம்?

ஏன் ஜரோப்பியர் கொசிப் கதைப்பதில்லையா? விடுப்பு பார்ப்பதில்லையா?...ஜரோப்பியருக்கு பொது இடங்களில் முத்தமிடுவதையோ,கட்டிப் பிடிப்பதையோ பார்த்துப்,பார்த்து அலுத்துப் போய் இருக்கும் அதனால் தற்போது பார்க்காமல் இருக்கிறார்கள் ஆனால் எங்கட ஆட்களுக்கு இதெல்லாம் புதிசு அதனால் பார்க்கிறார்கள் இன்னும் கொஞ்ச காலம் போனால் எங்கட ஆட்களுக்கும் இதெல்லாம் சகஜமாய் போய் விடும் அதன் பிறகு அவர்களும் பார்க்க மாட்டார்கள்...பொது இடங்களிலேயோ,பக்க வீட்டிலிலோ என்ன அநியாயம் நடக்கும் போது பார்த்து விட்டு இருந்த பிறகு அநியாயம் நடந்த பிறகு பொலீசுக்கு அடித்து சொல்வதில் என்ன பிரயோசனம்?

இதுதான் உண்மை. இனிவரும் தலைமுறைகளுக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரி நாட்களில் நான் எடுக்கும் பாடங்களுக்கு ஒரு சில வெள்ளை இளசுகள் (பெண்) ஒரு கூட்டமாக வருவார்கள்.இவர்கள் வந்தால் வகுப்பில் சத்தம் இல்லாமல் போய்விடும். அவ்வளவு காட்டுக்கத்தல்.தூசணங்களுக்கு குறைவே இல்லை. கொசிப் சொல்லி வேலையில்லை.ஒருத்தியின் நண்பியை பற்றி (அழகானவர் என்பதும் அவர் அன்று வரவில்லை) கொசிப் போய்க்கொண்டிருந்தது.ஒருத்தி சொன்னார் அழகானவருக்கு பல ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று.மற்றவர் சொன்னார் எனக்கு அவளை தெரியும்.படுக்கையை பகிராத ஆண்கள் குறைவு என்று.இங்கே தமிழில் பவ்வியமாக கூறியுள்ளேன்.அவர் கூறிய தூசண ஆங்கிலம் இன்று நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பாக வரும்.நானும் எனது பங்கிற்கு வகுப்பு முடிய இவர் பேசியவரை பற்றி பேசியவரிடம் அவளுக்கு ஏதும் சுகமில்லையோ அது தான் வரவில்லையோ இன்று என விசாரிக்க அவள்(பேசியவர்) "நீயுமா"(you too) என என்னை கேட்க எனது சிறிப்பு பல மடங்காகியது. :lol: :lol:

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ சத்தமாக பேசுவதால் மற்றவர்களுக்கு இடையூறு வருமென்றோ தூசணவார்த்தைகள் மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்றோ அவர்கள் சிந்தித்ததாக தெரியவில்லை. வெள்ளைகள் கொசிப் கதைப்பதில் வல்லவர்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூக அமைப்பு, வெள்ளையர்களின் கிராமப் புற வாழ்க்கை முறையை ஒத்தது! அநேகமாகப் பெரிய நகரங்களில், ஒருவர் பிரச்சனையில் தலையிடுவதற்கு நேரம் கிடைப்பது இல்லை!

சட்டத்தை மீறுபவர்களைச் சமுதாயமே பெரும்பாலும் கட்டுப் படுத்தி விடுகின்றது!

மற்றும் படிக்கு கிராமத்து வெள்ளைக்காரர்களுக்கு யார், எவருடன் ஓடினார்கள், எவர்கள் வித்தியாசமான தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்பதெல்லாம் அத்துபடி!

நீங்கள் போக வேண்டிய இடங்கள், சலவை இயந்திரங்கள் உள்ள இடங்கள், தலைமயிர் செப்பனமிடும் நிலையங்கள், கிராமப் புறத்து மதுபானச் சாலைகள்!

மனிதர்களில் குணங்கள், உலகம் முழுவதும் அடிப்படையில் ஒன்றே!

வெள்ளையர்களை நேர்மையானவர்களாகக் கருதியதும், எங்கள் போராட்டத்தின் பின்னடைவுக்கு மிகவும் முக்கிய காரணமாகும்!

சிந்தனையைத் தூண்டிய நல்ல ஒரு பதிவுக்கு நன்றிகள், கோமகன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிராமத்து வெள்ளையள் எங்களைவிட மோசம்.

கோ! நான் நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கிறவன்...... :rolleyes:

ம்ம்ம்ம்ம்ம்.......... எங்கட ஆக்கள் இந்த விசயத்தில கொஞ்சம் ஓவர்தான்! ஊர்ப் பூராயம் இருந்திச்செண்டால்..... அவையளுக்கு சாப்பாடு கூடத் தேவையில்லை. :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.