Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன்கள் சாதிப்பார்கள் - மதன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்கள் சாதிப்பார்கள் - மதன்.

thalaivar.jpgஇவ்வளவு நாள் போராடியும் பிரபாகரனால் சாதிக்க முடியவில்லையே - இதைக் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா? என்று வாசகர் அனுப்பிய கேளிவிக்கு ஆனந்த விகடன் வாரஇதழில் பதிலளிக்கையிலேயே மதன் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

காலத்தின் கட்டாயம் அல்ல - துரோகம். எத்தனையோ போராளிகள் தங்கள் லட்சியத்தை அடைவதற்கு முன்பே கொல்லப்பட்டார்கள். பிற்பாடு இன்னொரு தலைமுறை கிளம்பி அவர்களது லட்சியத்தை நிறைவேற்றி இருக்கின்றது.

அந்தப் புரட்சித் தீயை விதைத்தவர்கள் அந்தப் போராளிகள்தான். ரோம் நாட்டில் அடிமைகளின் சுதந்திரத்திற்காக வாள் எடுத்துப் போராடிய அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் கொடூரமாகக் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் அடிமைத்தனம் ஒழிந்தது. இன்றும் ஸ்பார்ட்டகஸ் மறக்கப்படவில்லை.

சுதந்திர இந்தியாவை பகத்சிங் பார்க்வில்லையே! சே குவேராவை இன்றுவரை உலகம் போற்றுகிறது. ஒரு நாட்டின் வரலாற்றோடு ஒப்பிட்டால் ஒரு தனிமனிதனின் - போராளியின் ஆயுட்காலம் மிகக் குறுகியது. அது எப்படிப்பட்ட ஆயுட்காலம் என்பதுதான் பெருமிதத்திற்குரிய விசயம். பிரபாரனின் லட்சியத்தை பிற்காலத்தில் பிரபாகரன்கள் சாதித்துக் காட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? என கேலிச்சித்திர கலைஞர் மதன் தெரிவித்துள்ளார்.

(மதன் அவர்கள் குறிப்பிட்டது சரிதான். ஆனால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இறந்து போய்விடவும் இல்லை அழிக்கப்படவுமில்லை. நிச்சையமாக பிரபாகரன்களாக மாறியிருக்கும் தமிழர்களது பங்களிப்போடு தமிழர்களின் தாகமான தமிழீழத்தை சிங்கள அன்நிய ஆக்கிரமுப்புப் படைகளிடம் இருந்து வென்றெடுப்பார். அதுவரை நிச்சயம் ஓயாது விடுதலைப்போர்.)

ஈழதேசம் இணையத்திற்காக தமிழகத்தில் இருந்து புலிமறவன்.

நன்றி - ஆனந்த விகடன்.

நன்றி - ஈழதேசம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே எனது பெருமை

நன்றி இணைப்புக்கு நொச்சி.

இன்னொரு ஆயுதப்போரட்டத்திற்கோ இல்லை அடுத்த தலைமுறைக்கோ போராட இடம் வைக்காமல் தாயக மக்கள் ஏற்கக்கூடிய கௌரவமான தீர்வை நாமே பெறலாம், பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், நொச்சி!

பிபாகரன் என்ற உணர்வு ஒவ்வொருவரிடத்திலும் இருந்தாலே அது தொடர்ச்சியான போராட்டம்தான். அந்தத் தொடர் நிலைதான் பிரபாகரன்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

இதே மதன், ராஜீவ் கொலை வழக்கின் முதல் தீர்ப்பின் போது 26 பேருக்கு மரண தண்டனை விதித்தபின், விகடனில் 'அடுத்தது நீ' என்று பொருள்பட ஈழத்தின் வன்னியை பார்த்து இந்தியா கூறிய கார்ட்டூனை 90 களில் போட்டு இருந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

இதே மதன், ராஜீவ் கொலை வழக்கின் முதல் தீர்ப்பின் போது 26 பேருக்கு மரண தண்டனை விதித்தபின், விகடனில் 'அடுத்தது நீ' என்று பொருள்பட ஈழத்தின் வன்னியை பார்த்து இந்தியா கூறிய கார்ட்டூனை 90 களில் போட்டு இருந்தார்...

மே18க்குபின் நம்மவரே மகிந்தவிற்க்கும் kpக்குபின்னும் அலையும் நேரம் முதன்மை ஊடகத்தில் இருப்பவர்களோடு ஏன் பகை கொள்கிறீர்கள் nizhali ஈழம் தவிர்ந்த தமிழர்களிடம் தற்போதைய தமிழ் அரசியல் சூனிய வெளிக்காலகட்டம் நன்றாக உனர்கின்றனர் அதன் விளைவுகளே தற்போதைய மனமாற்றங்களாகும். இல்லை மதனுடன் மல்லுகட்டுவதால் எமக்கு என்ன சாதகங்கள் கிடைக்கும்??????????

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் இறந்த காலகட்டத்தில்

விஐயகாந்த் பிரான்சுக்கு வந்திருந்தார். அவர் சொன்னது இந்தியத்தமிழரை நம்பாதீர்கள்

எனது மகனுக்கு பிரபாகரன் என பெயரிட்ட நான் ராஜீவ் இறந்ததும் பிறந்த எனது சகோதரி மகனுக்கு ராஜீவ் என்றுதான் பெயர் வைத்தேன் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

மதனுக்கு ஒரு "ஓ" போடுங்கையா!

இதே மதன், ராஜீவ் கொலை வழக்கின் முதல் தீர்ப்பின் போது 26 பேருக்கு மரண தண்டனை விதித்தபின், விகடனில் 'அடுத்தது நீ' என்று பொருள்பட ஈழத்தின் வன்னியை பார்த்து இந்தியா கூறிய கார்ட்டூனை 90 களில் போட்டு இருந்தார்...

அது வேற வாயி இது நாறவாயீஈஈஈஈஈ :D

மே18க்குபின் நம்மவரே மகிந்தவிற்க்கும் kpக்குபின்னும் அலையும் நேரம் முதன்மை ஊடகத்தில் இருப்பவர்களோடு ஏன் பகை கொள்கிறீர்கள் nizhali ஈழம் தவிர்ந்த தமிழர்களிடம் தற்போதைய தமிழ் அரசியல் சூனிய வெளிக்காலகட்டம் நன்றாக உனர்கின்றனர் அதன் விளைவுகளே தற்போதைய மனமாற்றங்களாகும். இல்லை மதனுடன் மல்லுகட்டுவதால் எமக்கு என்ன சாதகங்கள் கிடைக்கும்??????????

உண்மை தான் ரிஷி, மதன் போன்றோருடன் மல்லுக் கட்டுவதால் உடையபோவது நமக்கு தான் அவர்களுக்கு இல்லை.

மதனுக்கு ஒரு "ஓ" போடுங்கையா!

வேற யாரும் ஓ' போட நீங்கள் வந்து ''ட்டையை போடவா?

மே18க்குபின் நம்மவரே மகிந்தவிற்க்கும் kpக்குபின்னும் அலையும் நேரம் முதன்மை ஊடகத்தில் இருப்பவர்களோடு ஏன் பகை கொள்கிறீர்கள் nizhali ஈழம் தவிர்ந்த தமிழர்களிடம் தற்போதைய தமிழ் அரசியல் சூனிய வெளிக்காலகட்டம் நன்றாக உனர்கின்றனர் அதன் விளைவுகளே தற்போதைய மனமாற்றங்களாகும். இல்லை மதனுடன் மல்லுகட்டுவதால் எமக்கு என்ன சாதகங்கள் கிடைக்கும்??????????

..நீங்கள் மே18 இன் பின் மகிந்தவிடம் போனீங்களா? நான் போகவில்லை; என்னைப் போன்ற பலர் கொண்டதுதான் இந்த தமிழ் சமூகம். எனவே எனக்கு கருத்து சொல்ல ஒரு இடைவெளி (Space) இருக்கு

ஒரு சரியான ஊடகவியலாளன்/ள், மக்களின் ஏக கருத்தை பிரதிபலிக்காமல் தனக்கு சரியென்ற, தர்மத்தின் பாற்பட்ட ஒன்றையே கருதி நிற்பான்/ள். ...ஆஹா, மக்களெல்லாம் புலிக்கு சப்போர்ட் பண்ணுது மச்சான்/ள், நாமும் பிழைப்பை பார்ப்பம் என்று பக்கம் சாயமாட்டான்/ள். ஒரு புகைப்படப்பிடிப்பாளர் சுபா சுந்தரம் போன்றவர்களின் மரணதண்டனையைக் கூட ஆதரித்த இந்திய தேச பிரஜை இந்த மதன் அவர்கள்

இந்திய தேசியத்தின் நலனை பார்பனியத்திற்கு அடகு வைக்கும் மதன் போன்றவர்களால் ஒரு போதும் 'மனமாற்றம்' அடைய முடியாது. இவர்கள் காற்றடித்தால் அடிக்கும் பக்கம் சாயும் பேர்வழிகள்

இனியும் வெற்று வாய்சாலத்துக்கு மயங்கி இழக்க ஈழத் தமிழருக்கு மக்கள் தொகையும் இல்லை, தியாகிகளும் இல்லை

Edited by நிழலி

.

இந்திய தேசியத்தின் நலனை பார்பனியத்திற்கு அடகு வைக்கும் மதன் போன்றவர்களால் ஒரு போதும் 'மனமாற்றம்' அடைய முடியாது. இவர்கள் காற்றடித்தால் அடிக்கும் பக்கம் சாயும் பேர்வழிகள்

இனியும் வெற்று வாய்சாலத்துக்கு மயங்கி இழக்க ஈழத் தமிழருக்கு மக்கள் தொகையும் இல்லை, தியாகிகளும் இல்லை

நிழலி யு நோ வாட்?

இனிமே நாங்க எல்லாம் , அமெரிக்காவோட கொள்கைல வாழணும்..!

அது என்னான்னா,,

தனக்கு தேவைப்படும்வரை ஒருவனை உபயோகபடுத்து!அது ,,ஸோ செல்ஃபிஷ் பாலிஸியா இருந்தாலும்,,, அதில ஒண்ணும் தப்பே இல்ல...!

ஏன் தெரியுமா?தங்களின் பிராந்திய வேள்விக்காக, எங்களின் 50,000 தலைகளை அறுத்தவர்களை,,

இனி வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் ...அவர்களுக்கு வாழ்த்து சொல்லி....எங்களின் தேவைக்காக....அவர்களை பாவிப்போம்!!அது நல்லாதானே போய்கிட்டு இருக்கும்!! :)

பைத வே... எங்க நிலமை தெரிஞ்சுகிட்டே,, எங்களுக்கு ஆப்பு வைக்குற , திடீர் பாசம் இந்தியா& முஸ்லிம்கள்மேல காட்டுற கருணா சொறிலங்கா தமிழனைவிட ,,

எங்கோ இருந்து ஏதாச்சும் எழுதுற மதன், ஒண்ணும் ரொம்ப கேவலமானவர் இல்ல! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.