Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமையான, ஆண்டொன்று பிறக்கட்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lanka-refugees301.jpg

புதுமைகள் ஏந்திய,

புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!

பூக்கள் மலர்வது போல!

புதுமையாக!

பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,

பிடுங்கி எடுத்து

மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,

சாதாரணமாக மலரட்டும்!

வெடிச்சத்தம் கேட்டாலே,

வேதனை கலந்த நினைவுகளே,

வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,

பட்டு வேட்டி சால்வைகளும்,

தொட்டுப் பார்க்க நேரமின்றித்,

தம் பாட்டில் தூங்குகின்றன!

சீர் கொடுத்த நகைகள் கூடச்,

சேரிடம் தெரியாது,

வருடக் கணக்காக,

வங்கிப் பெட்டிகளில்,

வருகின்ற தலைமுறை பார்த்து,

ஆறுதலாகத் தூங்குகையில்,

இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,

கை கொடுக்க என்கிறோம்!

இதுவரை,

இல்லாத கஷ்டமா,

இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,

புதிய ஆண்டு பிறக்கட்டும்!

சொந்த நினைவோடு

சிந்தனையில் நிலைக்கட்டும்!

பரிசுகள் இல்லாமல்,

புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,

தலை காக்க வேண்டாம்!

தனக்கென எதுவுமில்லாமல்,

தவிக்கின்ற உறவுகளின்,

தன் மானத்தைக் காக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lanka-refugees301.jpg

புதுமைகள் ஏந்திய,

புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!

பூக்கள் மலர்வது போல!

புதுமையாக!

பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,

பிடுங்கி எடுத்து

மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,

சாதாரணமாக மலரட்டும்!

வெடிச்சத்தம் கேட்டாலே,

வேதனை கலந்த நினைவுகளே,

வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,

பட்டு வேட்டி சால்வைகளும்,

தொட்டுப் பார்க்க நேரமின்றித்,

தம் பாட்டில் தூங்குகின்றன!

சீர் கொடுத்த நகைகள் கூடச்,

சேரிடம் தெரியாது,

வருடக் கணக்காக,

வங்கிப் பெட்டிகளில்,

வருகின்ற தலைமுறை பார்த்து,

ஆறுதலாகத் தூங்குகையில்,

இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,

கை கொடுக்க என்கிறோம்!

இதுவரை,

இல்லாத கஷ்டமா,

இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,

புதிய ஆண்டு பிறக்கட்டும்!

சொந்த நினைவோடு

சிந்தனையில் நிலைக்கட்டும்!

பரிசுகள் இல்லாமல்,

புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,

தலை காக்க வேண்டாம்!

தனக்கென எதுவுமில்லாமல்,

தவிக்கின்ற உறவுகளின்,

தன் மானத்தைக் காக்கட்டும்!

நல்லதோர் கவிதை புங்கையூரான்

பிறக்கின்ற ஆண்டைப்பற்றி எதிர்பார்ப்புகளோடு எழுந்துள்ள கவிதை. எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத பிறப்புகளாக எம்வாழ்வு வனையப்பட்டுள்ளது... :(

மாற்றம் வந்தால் மகிழ்ச்சியே..

இந்த புதுவருடத்தில் இருந்து

இனிவரும் காலங்களில் நாம் தமிழில் கலந்துள்ள வடமொழி எழுத்துக்களின் உபயோகங்களை கூடுமானவரை முயன்று தமிழ் எழுத்துக்களில் மாற்றிக் கொள்வோம். உங்களுடைய விருப்பாக இருந்தால் மட்டுமே... மற்றப்படி மற்றவர்கள் வேண்டுகோளுக்கான மாற்றமாக இருக்கக்கூடாது ரோமியோ... :)

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.புது வருடம் புதுமைகளுடன் பிறக்கட்டும்.

புத்தம் புதுச் சேலைகளும்,

பட்டு வேட்டி சால்வைகளும்,

தொட்டுப் பார்க்க நேரமின்றித்,

தம் பாட்டில் தூங்குகின்றன!

சீர் கொடுத்த நகைகள் கூடச்,

சேரிடம் தெரியாது,

வருடக் கணக்காக,

வங்கிப் பெட்டிகளில்,

வருகின்ற தலைமுறை பார்த்து,

ஆறுதலாகத் தூங்குகையில்,

இன்னும் நகை எதற்கு?

:):):)3 .

பிறக்கட்டும் புதுவருடம் தவிக்கும் உறவுகளின் தன்மானத்தைக் காக்க.....

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும் புதுவருடத்திலாவது, அவர்களுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும்.

புதுமைகள் ஏந்திய,

புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!

பூக்கள் மலர்வது போல!

புதுமையாக!

பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,

பிடுங்கி எடுத்து

மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,

சாதாரணமாக மலரட்டும்!

வெடிச்சத்தம் கேட்டாலே,

வேதனை கலந்த நினைவுகளே,

வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,

பட்டு வேட்டி சால்வைகளும்,

தொட்டுப் பார்க்க நேரமின்றித்,

தம் பாட்டில் தூங்குகின்றன!

சீர் கொடுத்த நகைகள் கூடச்,

சேரிடம் தெரியாது,

வருடக் கணக்காக,

வங்கிப் பெட்டிகளில்,

வருகின்ற தலைமுறை பார்த்து,

ஆறுதலாகத் தூங்குகையில்,

இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,

கை கொடுக்க என்கிறோம்!

இதுவரை,

இல்லாத கஷ்டமா,

இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,

புதிய ஆண்டு பிறக்கட்டும்!

சொந்த நினைவோடு

சிந்தனையில் நிலைக்கட்டும்!

பரிசுகள் இல்லாமல்,

புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,

தலை காக்க வேண்டாம்!

தனக்கென எதுவுமில்லாமல்,

தவிக்கின்ற உறவுகளின்,

தன் மானத்தைக் காக்கட்டும்!

எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு நம் மத்தியிலே. இனி வரும் புத்தாண்டாவது நம் வாழ்வை வளப் படுத்தும் என்றே நம்புவோம். தமிழரின் ஏக்கங்களை தங்கள் மனவுணர்வின் பால் வெளிக்கொணர்ந்தது மிக அழகு. நன்றிகள் தங்கள் பகிர்வுக்கு....

  • add.png

  • கருத்துக்கள உறவுகள்

சர வெடிகள் இல்லாமல்,

சாதாரணமாக மலரட்டும்!

வெடிச்சத்தம் கேட்டாலே,

வேதனை கலந்த நினைவுகளே,

வெடித்துக் கிளம்புகின்றன!

எத்தனை புத்தாண்டுகள் பலாலியில இருந்தும் ஆனையிறவிலை இருந்தும் பூநகரியிலை இருந்தும் வாற செல்லடிக்க தொடங்கியிருக்கும்...எத்தனை புத்தாண்டுகள் இண்டைக்குப் புத்தாண்டு என்று தெரியாமலே பங்கருக்குள் விடிஞ்சிருக்கும்..ஒருமுறை வந்த புத்தாண்டிற்க்கு தலைக்கு வைக்கிற மருத்து நீர்கூட வாங்க இடைவெளி விடாமல் செல்லடித்துக்கொண்டிருந்தார்கள்..கிடைத்த ஒரு இடைவெளிக்குள் அம்மா போத்தல் தந்து மருத்து நீர் வாங்க அனுப்பியிருந்தா..கோயிலுக்கு ஒரு நூறுமீற்றர் தூரமிருக்க அடிச்ச செல்லொண்டு கண்முன்னாலை ஒரு காணிக்குள்ள கட்டியிருந்த மாடுகளுக்கு மேல் விழுந்து..போத்தலை தூர எறிந்து விட்டு குப்புற விழுந்து ஊர்ந்து தடவிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்..ஈழத்தில எங்கடை வாழ்க்கையே உப்பிடிப்பட்ட புத்தாண்டுகளை கண்டு களித்தபடிதான போய்க்கொண்டிருந்தது..வெடிச்சத்தங்கள் எப்பொழுதும் உங்களைப்போல் எனக்கும் அவற்றையே நினைவு படுத்திக்கொண்டிருக்கின்றன..நல்ல கவிதை தந்து நினைவுகளை றிவைண்ட் பண்ண வைத்த புங்கை அண்ணாவிற்க்கு நன்றிகள்..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை புங்கையூரான்

பிறக்கின்ற ஆண்டைப்பற்றி எதிர்பார்ப்புகளோடு எழுந்துள்ள கவிதை. எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத பிறப்புகளாக எம்வாழ்வு வனையப்பட்டுள்ளது... :(

மாற்றம் வந்தால் மகிழ்ச்சியே..

இந்த புதுவருடத்தில் இருந்து

இனிவரும் காலங்களில் நாம் தமிழில் கலந்துள்ள வடமொழி எழுத்துக்களின் உபயோகங்களை கூடுமானவரை முயன்று தமிழ் எழுத்துக்களில் மாற்றிக் கொள்வோம். உங்களுடைய விருப்பாக இருந்தால் மட்டுமே... மற்றப்படி மற்றவர்கள் வேண்டுகோளுக்கான மாற்றமாக இருக்கக்கூடாது ரோமியோ... :)

நன்றிகள், வல்வை சகோதரி!

மாறிக்கொண்டேயிருக்கும் உலகத்தில் கட்டாயம் மாற்றம் வந்தே ஆகும்!

அது நமக்காகவா அல்லது வேறு யாருக்காக்கவுமா என்பதே தற்போதைய பிரச்சனை!

அந்த மாற்றங்களை எமக்குரியதாக்குவோம்!!!

வட மொழிப்பாவனையைப் புத்தாண்டில் இருந்து, ஒழிப்பதில் எனக்குப் பூரண உடன்பாடே!

அதன் உபயோகங்கள் சில வார்த்தைகளில் பொருளையே மாற்றிவிட்டன.

உதாரணமாக நாற்றம் என்பது நல்ல மணத்தைக் குறிக்கும் தூய தமிழ் சொல்லாகும்!

வாசம் என்பது அதே கருத்துடைய வட மொழிச் சொல்!

இப்போது சொல்லிப் பாருங்கள்!

பூ வாசமுள்ளது!

பூ நாற்றமுள்ளது!

பாருங்கள், எங்கள் மொழியின் அர்த்தங்களைக்கூட இந்த வடமொழி, எவ்வாறு மாற்றி விட்டதென்று!!! :icon_mrgreen:

கவிதைக்கு நன்றி.புது வருடம் புதுமைகளுடன் பிறக்கட்டும்.

நன்றிகள், நுணா!

புதுவருடம், சிட்னியில் பிறந்து விட்டது!

புதுமைகளுக்காய், உங்கள் நாட்டில் வருடம் பிறக்கும் வரைக்கும் காத்திருப்போம்! :D

பிறக்கட்டும் புதுவருடம் தவிக்கும் உறவுகளின் தன்மானத்தைக் காக்க.....

கருத்துக்கு நன்றிகள், யார்கவி!!!

பிறக்கும் புதுவருடத்திலாவது, அவர்களுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும்.

நன்றிகள், தமிழ் சிறி!

நனைத்து பங்களிப்பையும் நாங்கள் வழங்குவோம்!!!

நன்றிகள், கல்கி!

தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

புத்தாண்டு, முதலில் எங்களைச் சந்தித்த பின்பே உங்களைச் சந்திக்கின்றது!!! :D

எத்தனை புத்தாண்டுகள் பலாலியில இருந்தும் ஆனையிறவிலை இருந்தும் பூநகரியிலை இருந்தும் வாற செல்லடிக்க தொடங்கியிருக்கும்...எத்தனை புத்தாண்டுகள் இண்டைக்குப் புத்தாண்டு என்று தெரியாமலே பங்கருக்குள் விடிஞ்சிருக்கும்..ஒருமுறை வந்த புத்தாண்டிற்க்கு தலைக்கு வைக்கிற மருத்து நீர்கூட வாங்க இடைவெளி விடாமல் செல்லடித்துக்கொண்டிருந்தார்கள்..கிடைத்த ஒரு இடைவெளிக்குள் அம்மா போத்தல் தந்து மருத்து நீர் வாங்க அனுப்பியிருந்தா..கோயிலுக்கு ஒரு நூறுமீற்றர் தூரமிருக்க அடிச்ச செல்லொண்டு கண்முன்னாலை ஒரு காணிக்குள்ள கட்டியிருந்த மாடுகளுக்கு மேல் விழுந்து..போத்தலை தூர எறிந்து விட்டு குப்புற விழுந்து ஊர்ந்து தடவிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்..ஈழத்தில எங்கடை வாழ்க்கையே உப்பிடிப்பட்ட புத்தாண்டுகளை கண்டு களித்தபடிதான போய்க்கொண்டிருந்தது..வெடிச்சத்தங்கள் எப்பொழுதும் உங்களைப்போல் எனக்கும் அவற்றையே நினைவு படுத்திக்கொண்டிருக்கின்றன..நல்ல கவிதை தந்து நினைவுகளை றிவைண்ட் பண்ண வைத்த புங்கை அண்ணாவிற்க்கு நன்றிகள்..

கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்.

இனிவரும் புத்தாண்டுகளிலாவது, நாங்கள் ஏமாறாது இருக்க முயற்சிப்போம்!

நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்!

நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்பதே எனது எதிர்பாப்புமாகும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடமாவது எங்களுக்கொரு தீர்வு வந்து வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக அமைய வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.