Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போ சிரிப்பாக உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அறியத்தாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.

இத்திரியை அகற்றிவிடவும்

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

புதிய படைப்பாளிகளைத் தட்டிகொடுக்கும் முடிவு மிகவும் வரவேற்கத் தக்கதே!

அதே நேரம் அவர்களுக்கு ஒன்றும் ஏற்படாத மாதிரிக் கொஞ்சம் செல்லமாகத் தட்டவும்!

சில வேற்றுமொழிச் சொற்கள் எமது மொழியில் இரண்டறக் கலந்து விட்டன!

இந்தச் சொற்கள், அவற்றின் சமமான கருத்துடைய தமிழ்ச் சொற்களிலும் பார்க்கக் 'கருப் பொருளைத்' தெளிவு படுத்துமாயின் அதை உபயோகிப்பதில் தவறில்லை, என்பது எனது கருத்தாகும்!

உதாரணமாக , அலவாங்கு, அலுமாரி, கக்கூசு என்பவை போர்த்துகீசிய மொழியில் இருந்து தமிழில் கலந்தவை!

வாசம், சூரியன், சந்திரன், நாசம் ,சர்வம்,தேவன், தேவதை, பூசை, புஷ்பம், தீர்த்தம்,தெய்வம் லிங்கம்,போன்றவை வட மொழியில் இருந்து வந்தவை!

கரைதல், பறைதல் போன்றவை மலையாளத்தில் இருந்து வந்தவை!

அப்புக்காத்து,பிரக்கராசி,வங்கி போன்றவை ஆங்கில மொழியில் இருந்து வந்தவை!

உடையார், தமிழ் சிறி, இசைக்கலைஞன், கோமகன், சகாறா , சுபேஸ், இறைவன்,நாரதர்,சுகன்,இன்னுமொருவன்,நொச்சி,நெல்லை,புலி,புலிக்குரல்,கந்தப்பு,வாதவூரான்,

வாத்தியார்,தூயவன்,இணையவன்,தப்பிலி,அறிவிலி,கிருபன், நிழலி, நுணா, விசுகி, சாத்திரி, சாந்தி,அகூதா, நிலாமதியக்கா, அர்ஜுன், விசுகு, புத்தன், கறுவல், யாழ்கவி, சகீவன், யாயினி, சுண்டல்,வீணா, நவரத்தினம்,புரட்சி,வன்னியன், மல்லை,தேவன்,தேவன,ஜஸ்டின்,புலவர்,அபராஜிதன்,தமிழரசி,நீலப்பறவை,,செம்பகன், ரதி, குட்டி கறுப்பி தமிழரசு , மருது,அலை,கவிதை கல்கி, பகீ. உமை, நிர்மலன்,பொயட்,, மொட்டை, போன்ற பல களங்கள் கண்ட தமிழ் அறிஞர்கள், தங்களுக்குத் தெரிந்த பிற மொழிச் சொற்களையும் இணையுங்கள்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் இந்தத்திரியை தமிழும் நயமும் பகுதியில் இணைத்துவிடமுடியுமர்? :rolleyes:

நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் இந்தத்திரியை தமிழும் நயமும் பகுதியில் இணைத்துவிடமுடியுமர்? :rolleyes:

சிரிப்பு பகுதிக்கு உரிய, கட்சி, தேர்தல் முடிவு, தேர்தல் ஆணையகம் போன்றவற்றை நீக்கிவிட்டால் இதனை தமிழும் நயமும் பகுதியில் எல்லாருக்கும் பொதுவாக இணைக்கலாம்; அல்லது புதிதாக இன்னொரு திரி திறந்து இணைத்து விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் எல்லோருக்கும் உள்ள பிரச்சனையா? சரிதான்... :)

அப்படியானால் மாற்றவேண்டாம்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே எங்களுக்கு வட மொழி எழுத்துக்குப் பதிலாக எப்படி தமிழ் எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ...இன்ன பிற எழுத்துக்கள்) எழுதும்போது பயன்படுத்துவது என சொன்னால் நன்று...

உதாரணமாக.

ராஜவன்னியன் - ராயவன்னியன், ராசவன்னியன் ?

ஜெயலலிதா - செயலலிதா, யயலலிதா ?

.

  • கருத்துக்கள உறவுகள்

மொழி வாழும் மக்களால் அவர்கள் ஒருவரை ஒருவர்

புரிந்து கொள்ள உருவாகியது. காலங்கள் கடக்கும் போது சில எழுத்துக்கள்

மருவுவதும் புதிய எழுத்துக்கள் வழமையில் வருவதும் இயல்பு.

புதிய சொற்கள் மொழிக்குள் ஆழமாக வேறூன்றக் காரணமாக இருப்பது

அந்தச்சொற்களைப் பாவிக்கும் மனிதர்களே.

அவர்களே எந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தது என அறியாமல்

தங்களின் பாவனையில் சேர்த்துக் கொள்கின்றனர்.

அதிகமாகப் பேச்சு வழக்கிலோ எழுத்து வழக்கிலோ

ஒரு மொழியில் சேர்ந்துவிடும் சொற்களையும் எழுத்துக்களையும்

அந்த மொழி ஏற்றுக்கொள்வது கட்டாயமாகி விடுகின்றது.

அப்படி ஏற்றுக் கொள்வதால் அந்த மொழி அழிந்து விடும் என

நினைப்பதும் தவறு.

பிற மொழிச்சொற்களை அவற்றின் அடையாளங்களுடன்

பாவித்தல் நன்று.இதுவரை அப்படியே நடந்து வருகின்றது.

247 எழுத்துக்களைக் காப்பதற்காக இன்னும் ஐந்து எழுத்துக்களைச்

சேர்த்துக் கொள்வதில் என்ன தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

மொழிக்கலப்பினால் மொழி வளர்ச்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது.மாறாக மொழியின் வளர்ச்சிக்கு இது உதவலாம்.உதாரணமாக தமிழில் கலந்துள்ள வடமொழி எழுத்துக்கள் வடமொழி வழக்கிழந்து போனதால் காலப்போக்கில் தமிழ் எழுத்துக்களாகவே மாற்றமடையும் நிலை வரலாம்.இன்றும் தமிழில் வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவோரில் பலர் அவை தமிழ் எழுத்துக்கள் என்றே கருதிப் பயன்படுத்துகிறார்கள்.வடமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதும் மேற்கண்ட வகையில் அடங்கும்.

மேலும் சில ஒலிகளுக்கு தமிழில் எழுத்துக்கள் இல்லாதவிடத்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.உதராணமாக பாம்பு இஸ் என்று சீறியது.என்பதில் ஸ் என்ற ஒலிக்கு சரியான ஒலியமைப்பை உடைய எழுத்து தமிழில் பாவனையில் இல்லை.ஆகவே அதைப்பயன்படுத்துவதில் தவறு கிடையாது.(அல்லது புதிதாக ஒரு எழுத்துக்கு அந்த ஒலியைக்கொடுக்க வேண்டும். எற்கனவே உள்ள எழுத்துக்களில் பாவனையில் இல்லாத ஒரு எழுத்தை உபயோகிக்கலாம்.)

அண்மையில் பெரம் வரவேற்பைப் பெற்ற கொலைவெறி பாடலில் வேற்று நாட்டவர் பலரும் என்னைக் கேட்ட கேள்வி கொலைவெறி என்றால் என்ன?ஆக அந்தப் பாடலில் 90 சத வீதம் ஆங்கில வார்த்தைகள் இருந்தும் கேட்பவர்களின் கவனத்தை திருப்பிய சொல் அதுவும் குறித்தபாடலில் அது வெளிப்படுத்தும் கருத்துக்கும் உண்மையான கருத்துக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தும் ஒரு தமிழ்ச்சொல்லாக அமைந்திருப்பது மொழிக்கலப்பின் மூலமாக ஏற்பட்ட மொழிப்பரவுகையே. ஆக தமிழ் என்னும் கடலுக்குள் எத்தனை மொழிகள் கலந்தாலும் கடலின் தன்மை மாறாது.ஏனெனில் அதன் ஆழம் அகலம் மிக விசாலமானது.

மொழி வாழும் மக்களால் அவர்கள் ஒருவரை ஒருவர்

புரிந்து கொள்ள உருவாகியது. காலங்கள் கடக்கும் போது சில எழுத்துக்கள்

மருவுவதும் புதிய எழுத்துக்கள் வழமையில் வருவதும் இயல்பு.

புதிய சொற்கள் மொழிக்குள் ஆழமாக வேறூன்றக் காரணமாக இருப்பது

அந்தச்சொற்களைப் பாவிக்கும் மனிதர்களே.

அவர்களே எந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தது என அறியாமல்

தங்களின் பாவனையில் சேர்த்துக் கொள்கின்றனர்.

அதிகமாகப் பேச்சு வழக்கிலோ எழுத்து வழக்கிலோ

ஒரு மொழியில் சேர்ந்துவிடும் சொற்களையும் எழுத்துக்களையும்

அந்த மொழி ஏற்றுக்கொள்வது கட்டாயமாகி விடுகின்றது.

அப்படி ஏற்றுக் கொள்வதால் அந்த மொழி அழிந்து விடும் என

நினைப்பதும் தவறு.

பிற மொழிச்சொற்களை அவற்றின் அடையாளங்களுடன்

பாவித்தல் நன்று.இதுவரை அப்படியே நடந்து வருகின்றது.

247 எழுத்துக்களைக் காப்பதற்காக இன்னும் ஐந்து எழுத்துக்களைச்

சேர்த்துக் கொள்வதில் என்ன தப்பு?

மொழிக்கலப்பினால் மொழி வளர்ச்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது.மாறாக மொழியின் வளர்ச்சிக்கு இது உதவலாம்.உதாரணமாக தமிழில் கலந்துள்ள வடமொழி எழுத்துக்கள் வடமொழி வழக்கிழந்து போனதால் காலப்போக்கில் தமிழ் எழுத்துக்களாகவே மாற்றமடையும் நிலை வரலாம்.இன்றும் தமிழில் வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவோரில் பலர் அவை தமிழ் எழுத்துக்கள் என்றே கருதிப் பயன்படுத்துகிறார்கள்.வடமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதும் மேற்கண்ட வகையில் அடங்கும்.

மேலும் சில ஒலிகளுக்கு தமிழில் எழுத்துக்கள் இல்லாதவிடத்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.உதராணமாக பாம்பு இஸ் என்று சீறியது.என்பதில் ஸ் என்ற ஒலிக்கு சரியான ஒலியமைப்பை உடைய எழுத்து தமிழில் பாவனையில் இல்லை.ஆகவே அதைப்பயன்படுத்துவதில் தவறு கிடையாது.(அல்லது புதிதாக ஒரு எழுத்துக்கு அந்த ஒலியைக்கொடுக்க வேண்டும். எற்கனவே உள்ள எழுத்துக்களில் பாவனையில் இல்லாத ஒரு எழுத்தை உபயோகிக்கலாம்.)

அண்மையில் பெரம் வரவேற்பைப் பெற்ற கொலைவெறி பாடலில் வேற்று நாட்டவர் பலரும் என்னைக் கேட்ட கேள்வி கொலைவெறி என்றால் என்ன?ஆக அந்தப் பாடலில் 90 சத வீதம் ஆங்கில வார்த்தைகள் இருந்தும் கேட்பவர்களின் கவனத்தை திருப்பிய சொல் அதுவும் குறித்தபாடலில் அது வெளிப்படுத்தும் கருத்துக்கும் உண்மையான கருத்துக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தும் ஒரு தமிழ்ச்சொல்லாக அமைந்திருப்பது மொழிக்கலப்பின் மூலமாக ஏற்பட்ட மொழிப்பரவுகையே. ஆக தமிழ் என்னும் கடலுக்குள் எத்தனை மொழிகள் கலந்தாலும் கடலின் தன்மை மாறாது.ஏனெனில் அதன் ஆழம் அகலம் மிக விசாலமானது.

வாத்தியாருக்கும் , புலவருக்கும் இரண்டாயிரம் பச்சை :):):) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், வாத்தியார் ஆகியோரது கருத்துடன் உடன்படுகிறேன்.ஆங்கில மொழி பல மொழிகளில் இருந்து பல சொற்களை உள்வாங்கி மில்லியனுக்கு மேற்பட்ட சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளதோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறதே ஒழிய அது தனது தனித்துவத்தை இழக்கவில்லையே. தமிழும் இவ்வழியில் ஏன் பயணம் செய்ய முடியாது??

வாத்தியார், புலவர் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். மொழியின் வளர்ச்சிக்காகவும் நடைமுறைத் தேவைக்கேற்பவும் குறைந்த அளவிலான சிறு மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Cash - 'காஷ்' - காசு

Rise - அரிசி

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு அப்படியே மாற்றிய சொற்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.