Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெப் கேணல் வானதி /கிருபா அவர்களின் வீர வணக்கநாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெப் கேணல் வானதி /கிருபா அவர்களின் வீர வணக்கநாள்

vanathi_march21-150x150.jpg

லெப் கேணல் வானதி/கிருபா

நித்தியகரன் மாலதி

தமிழீழம் (யாழ் மாவட்டம்)

தாய் மடியில்-09.04.1974 வீரச்சாவு-21.03.2009

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல் வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..!!!!!!!!

லெப் கேணல் வானதி /கிருபா

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் ,,ஊடுருவி தாக்குதல்கள் ,,வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.

கவிதை ,,கட்டுரை ,,நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது . அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணியினை சோதியா படையணியுடன் இணைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள் ,,,மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள் .

மேஜர் சோதியா படையணியில் கேணல் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பல புரிந்தாள். சமாதான காலத்தின் போது யாழ் மாவட்டத்திற்க்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்ய பட்ட சோதியா படையணி போராளிகளிற்க்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். சமாதான காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள் ,,இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள். திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும் ..நிர்வாக செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்ப்பட்டாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும் , அவளது செயற்பாடு தொடர்ந்த வண்ணமிருந்தது….

vanathi_march21.jpg

இறுதி சமர் வன்னியெங்கும் வியாபித்த போதும் ,, குடும்ப வாழ்வும் ,,களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது ..தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள் ,,மக்களின் கொடூர மரணங்கள் ,,தொடர் விமான தாக்குதல்கள் ,, இடப்பெயர்வின் அவலங்கள் ,,மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம் ,,தனது குழந்தையென வாழாது தாயகத்தை நேசித்தாள் .துணைவன் ஒரு சமர் களத்தில் ,,இவளோ எதிரியின் வரவை எதிர் பார்த்து வேறொரு சமர் களத்தில் இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்திப்புக்கள் இப்படியாக தான் இறுதி யுத்த நேரங்களில் போராளிக்குடும்பங்களின் வாழ்விருந்தது. அதற்க்கு மேலாக எதிரி மீதான தாக்குதல் களங்களேயே அதிகம் நேசித்தனர். இறுதி யுத்தத்தில் குடும்பங்களாகவே எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதை கண்டது வன்னி மண் .

21 / 03 / 2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான திட்டமிடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை எதிரியின் எறிகணை வீச்சொன்றில் இம் மண்ணை முத்தமிட்டாள் லெப் கேணல் வானதி / கிருபா.

http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/PI97jQJEclI/41692&type=P&itemid=211209

  • கருத்துக்கள உறவுகள்

லெப்.கேணல். வானதிக்கு வீர வணக்கங்கள்!

வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் தம் இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

தாயக கனவுடன் சாவினைத் தோழ்மீது தாங்கிய சந்தணப்பேழைகளே வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

தமிழின விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு வீர வணக்கங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.