Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

Featured Replies

எல்லோரும் நடந்து திரியினம், என்ன நடக்குது. ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ..

  • Replies 110
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த இணையத்திற்குச் சென்று.. சனல் 12 தெரிவு செய்யுங்கள்>>>>

http://www.unmultime...org/tv/webcast/

UN-SL+resolution.jpg

நன்றி நெடுக்ஸ்,

  • தொடங்கியவர்

ஆதரவாக 24 எதிராக 15

பிரேரணை நிறைவேற்று பட்டுவிட்டது

நன்றி பகலவன் ஆங்கிலத்தில கதைச்சவங்க எதிரா சொன்னாங்க பயந்து போனேன்

8 பேர் நடுநிலை

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38102-2012-03-22-11-03-51.html

தீர்மானம் நிறைவேறியது

அதரவு 24

எதிர்ப்பு 15

refer : http://puthiyathalaimurai.tv/news/

Edited by ramathevan

  • தொடங்கியவர்

இந்தியாவின் நிலமை ???

  • கருத்துக்கள உறவுகள்

நீதியைக்காக்க ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றியும் எதிராக வாக்களித்தவர்களுக்கு மேலும் தகவல்களையும் ஆதாரங்களையும் நாம்தொடர்ந்து செய்யணும் spacer.gif

இந்தியா ஆதரவு

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை எடுப்பார்களா?

பகலவன்: (22 March 2012 - 03:39 PM)சீனா, நைஜீரியா, உகண்டா பகலவன்: (22 March 2012 - 03:39 PM)இந்தோனிசியா, மாலை தீவு , தாய்லாந்து எதிர்ப்பு பகலவன்: (22 March 2012 - 03:41 PM)இந்தியா, அமேரிக்கா, பெல்ஜியம், உருகுவே ஆதரவு

2009 இல் சிங்களத்திற்கு ஆதரவாக புகழ்ந்த அதே ஐ.நா. மனித உரிமை அமைப்பு இன்று இவ்வாறு வாக்களித்துள்ளது.

இந்த வெற்றிக்கு ஆதரவாக உழைத்தவர்களை பாராட்டி எமது இறுதி இலக்கை நோக்கி ஒற்றுமையாக நிதானமாக பயணிப்போம்.

Edited by akootha

நன்றி.....

பிரேரணை...ஒண்டும் விளக்கமில்லை..

ஆனால் சிங்களவன் கற்றுக்கொணட் பாடங்கள்...

யார் வந்தாலும் தமிழனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுவம் எண்டதுதான்..

விசாரணைகள் நீளும்.குற்றவாளிகள்.. வயசாகி தாமா சாகிறவரை..

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

1. Calls upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans;

2. Requests the Government of Sri Lanka to present, as expeditiously as possible, a comprehensive action plan detailing the steps that the Government has taken and will take to implement the recommendations made in the Commission’s report, and also to address alleged violations of international law;

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

  • கருத்துக்கள உறவுகள்

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

22 ஆவது தொடர் 4 வருடங்களுக்குப்பின்தான் என்கிறாரே திருமால் வளவன்....???

அப்படியென்றால் சிறீலங்காவுக்கு பலமான கால எல்லையுண்டே மிகுதியையும் அழித்துவிட..?

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

சிங்களம் இந்த ஐ.நா. தலையீட்டை இந்தியா மற்றும் நாடுகளின் உதவியுடன் மாற்றத்துடன் சமர்ப்பிக்க எண்ணியது, அதில் தோற்றதே எமக்கு கிடைத்த பெரிய வெற்றியாக எனக்குத்தெரிகின்றது.

இதன் விளைவுகள் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு வித்திடும், அதுவே காலப்போக்கில் ஒரு சுயாதீன ஐ.நா. சுயநிர்ணய வாக்குரிமைக்கு வழிசமைத்து, தனி தமிழீழத்திற்கு வழி சமைக்க நாம் உழைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமதுயிரைக்கொடுத்த அத்தனை தியாகிகளுக்கும் இது சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவின் தலையை வெட்ட அல்ல இந்த பிரேரணை, சட்டையை மாற்று என்பதைப் போன்றது. ஆனால் இதையே உலக அரசியல் இந்தப்பாடு படுத்தும் போது தமிழீழத்தை வளங்கும் பிரேரணை என்ன பாடுபடும்?

இது சிறிய விடயமானாலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வளங்கள் அளவில் மிகப்பெரியது. இது எமக்கு சாதகமான எதிர்காலம் குழந்தையாய் பிறந்திருப்பதை ஒத்தது. மேற்க்கொண்டு எமது ஆதரவும், அரவணைப்பும் இதை வளரத்து பயன் தரவைக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்!

நான் நினைத்த மாதிரியே எழுதிய விசுகு அண்ணாவுக்கு ஒரு பச்சை.

தேவன் சரியாக சொன்னீர்கள்...அந்தக் குழந்தையை பேதங்கள் இல்லாத ஒற்றுமைமிக்க தமிழனாய் எல்லோரும் வளர்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராஜதந்திர வெற்றியை அடிப்படையாகக் கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு.. மேம்பாடு.. உரிமை இவற்றை வெல்லவும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் ஒற்றுமையோடு நாம் எல்லோரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்..! அதுவரை எமக்கு செயலிலும் இராஜதந்திரத்திலும் ஓய்வே இருக்கக் கூடாது.

இந்த தீர்மானம் வெற்றி பெற பல வகைகளிலும் உழைத்த எல்லாருக்கும்.. ஆதரவளித்த நாடுகளுக்கும்.. மிக்க நன்றி.

ஆதரவளிக்க மறுத்த நாடுகளோடும் இராஜதந்திர விளக்கமளிப்புக்களைச் செய்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவையும் திரட்ட வேண்டுமே தவிர அவர்களை திட்டி நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை.

சிறீலங்காவின் இந்த பலவீன நிலையை எமக்கான பலமாக மாற்றுவதில் தான் எமது அரசியல்.. பொருண்மிய.. உரிமை வெற்றிகள் தங்கி உள்ளன..!

இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பதிலும்.. அடுத்த காய் நகர்த்தலுக்கான வழிகளை ஆராய்வதே நமக்கு இன்று அவசியம். இந்தக் காய் நகர்த்தலுக்குப் பின்னால் உள்ள ஆபத்துக்களையும்.. நன்மை தீமைகளையும் நாம் ஆராயவும்.. எமது அணுகுமுறைகளை தேவைக்கு ஏற்ப விரைந்து மாற்றி அமைக்கவும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறவும் எல்லோரும் இயன்ற வரை ஒற்றுமைப்பட்டு.. உழைப்பதே இன்றைய தேவை..! ஒற்றுமைப்பட விரும்பாத அந்த ஒரு சிலருக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றில்லை. ஒற்றுமைப்படக் கூடிய பலரை இணைத்துக் கொள்வதே அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த தீர்மான நகலில் இந்தியா ஏதும் திருத்தங்கள் செய்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

எமது எதிர்காலத்துக்கு மிகச்சிறிய ஒளிக்கீற்று தென்படுவதுபோல் உள்ளது

reason for edit to change english to tamil

Edited by வாதவூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.