செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
நோயாளர் காவுவண்டி கொழும்புக்கு கொண்டு போகும் போது குண்டுகள் கொண்டு போவதாக பிடிபட்ட சதீஸ் 16 வருடங்கள் சிறையில் இருந்து 6 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம்…
-
- 2 replies
- 605 views
-
-
வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்துவதாக கூறி, தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் தங்களை துன்புறுத்துவதாகவும் தங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் படியாக நடந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக 26 மற்றும் 20 வயதான இளம் தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந்த முறைபாட்டைப் பதிவு செய்துகொண்டிருக்கும் போது, குறித்த ஆணின் கையடக்கத் தொலைபேசிக்கு அடிக்கடி பல அழைப்புகள் வந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், அந்த அழைப்புக்களுக்கு பதிலளிக்குமாற…
-
- 1 reply
- 605 views
-
-
-லக்மால் சூரியகொட சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான். …
-
- 0 replies
- 605 views
-
-
தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்…
-
- 4 replies
- 604 views
-
-
அமெரிக்க பெண்ணுக்கு ஒரு சூலில் எட்டுக் குழந்தைகள் பிரசவம் [28 - January - 2009] [ வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவ்வாறு பிரசவிக்கப்பட்ட ஆறு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கலிபோர்னியாவின் லொஸ்ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் இடம்பெற்ற இச் சத்திரசிகிச்சையை 46 பேரைக் கொண்ட மருத்துவக் குழு மேற்கொண்டுள்ளது. இக் குழந்தைகள் 1.81 பவுண்ஸுக்கும் 3.41 பவுண்ஸுக்குமிடையிலான நிறையில் இருப்பதாகவும் எட்டு குழந்தைகளும் அழுதவாறும் கால்களை உதைத்தவாறும் மிகுந்த துடிப்புடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப் பிரசவம் ஐந்…
-
- 0 replies
- 604 views
-
-
நியூசிலாந்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் பல்கலைக்கழகத்தின் சைன்ஸ் சொசைட்டி துறை, எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, செத்த எலிகளை கொண்டுவரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பப்பில் இலவசமாக பீர் அளிக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்கள் எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிப்பொறி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், நியூசிலாந்தில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து அபூர்வமான பறவைகளின் இனப்பெருக்கத்தை பா…
-
- 5 replies
- 604 views
-
-
அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு 2 மணித்தியாலம் 14 நிமிடங்களில் வந்தடைந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. புராதன காலத்தில் பறவைகள் மூலம் தூதனுப்பும் நடைமுறை பற்றி பாடசாலை மாணவர்களுக்குத் தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை அநுராதபுரம் டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் வந்தளை ‑ ஹெந்தல சந்தியில் உள்ள புறா வளர்ப்பு நிலையத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்துகொண்டிருந்ததோடு 12 புறாக்களையும் இதில் ஈடுபடுத்தினா…
-
- 0 replies
- 604 views
-
-
பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். ஆபத்தான ஏறுகைக்கு காட் ஒன்றும் …
-
- 1 reply
- 604 views
-
-
ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..! பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. மேலும், பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 க…
-
- 2 replies
- 604 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புனுகு பூனை கட்டுரை தகவல் ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா பிபிசி செய்தியாளர் 5 நவம்பர் 2025, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்? பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம். ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம். ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும். அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும். அது, சிவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கோபி லுவாக் காபி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த காபி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Cive…
-
-
- 9 replies
- 604 views
- 1 follower
-
-
2012 ஆம் ஆண்டின் 61வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி டிசம்பர் மாதம் 19ஆம் தேதி Planet Hollywood Resort & Casino in Las Vegas, Nevada என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து வந்துள்ள அழகிகள், மிக முக்கிய போட்டியான நீச்சலுடை போட்டிக்கு தயாராகி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் உலக அழகிகள் பலர் Las Vegas நகரில் உள்ள Pure Nightclub என்ற இடத்தில் நீச்சலுடையில் நடந்து, பயிற்சி எடுத்து வருகின்றனர். இம்மாதம் 19ஆம் நடக்கவிருக்கும் இப்போட்டியை NBC தொலைக்காட்சி, ஐரோப்பிய நேரம் இரவு 8 மணிமுதல் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. பல நாட்டு அழகிகள் நீச்சலுடையில் பயிற்சி எடுக்கும் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 603 views
-
-
“17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்திரேலியாவில் மருத்துவரான தனது கணவரை படுக்கையில் வைத்து கொலை செய்த இலங்கையரான பெண் மருத்துவர், தானும் தனது கணவரும் யுவதியொருவருடன் இணைந்து கூட்டாக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே இக் கொலையைச் செய்தார் என அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சமரி லியனகே (35)எனும் இப் பெண், தனது கணவரான டாக்டர் தினேந்திர அத்துகோரளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்தாரெ…
-
- 11 replies
- 603 views
-
-
கடந்த பல நாட்களாக உலகத்தமிழர்களது நாடித்துடிப்பை ஏற இறங்க வைத்த ஜெனீவாத் தீர்மானம் வெற்றிபெற்று விட்டது. இந்த தீர்மானத்தின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகவும் சிங்களவர்களின் தோல்வியாகவும் பார்க்குமளவிற்கு உலகத்தமிழர்களிடையே சிறுவர் பெரியவர் ஆண்கள் பெண்கள் என்ற நிலைகள் கடந்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்த மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படுமா இல்லையா என்ற விவாதத்தில் ஆரம்பித்து அதனை எந்த நாடு கொண்டுவரப் போகின்றது எனும் நிலைக்குச் சென்றது முதல் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதுவரை சென்று அதனை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்கின்ற நிலையில் இந்த நிமிடம் வரை தலைகுத்தி நின்றது உண்மை. தமிழ…
-
- 1 reply
- 603 views
-
-
அமெரிக்க ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில்! அதிசய தகவல் Ca.Thamil Cathamil November 14, 2014 Canada அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான். லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/34010.html#sth…
-
- 0 replies
- 603 views
-
-
-
- 3 replies
- 603 views
-
-
தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/
-
- 0 replies
- 602 views
-
-
சேருவில பகுதியில் தங்கச் சுரங்கம் குறித்து விரிவான ஆய்வு Digital News Team 2021-01-12T17:29:46 சேருவில பகுதியில் பாரிய தங்கச் சுரங்கம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேருவில பகுதியில் தங்கம், இரும்பு மற்றும் செப்பு குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 1970 ஆம் ஆண்டிலும் இந்த பகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள விதத்தில் சேருவில பகுதி நூற் றூக்கு சுமார் 90 சதவீதம் வனத்துறைக்குச் சொந்தமானத…
-
- 2 replies
- 602 views
-
-
24 மணித்தியாலம் பட்டினியில் இருந்த பொன்சேகா திகதி: 11.02.2010 // தமிழீழம் இராணுவ காவல்துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ எடுக்காமல் 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்துள்ளார். ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். நன்றி..........சங்கதி
-
- 0 replies
- 602 views
-
-
இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்ட் பகுதியில் இளம் பெண்ணொருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது. கோல் நெப்டன் என்ற 21 வயதான நடன மங்கையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். குறித்த பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்த வீதியில் யாரோ மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் நிறுத்திவைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அப் பெண் காரை நிறுத்தியுள்ளார். இதன்போது அவரது காரின் அருகில் வந்த நபரொருவர் போத்தல் ஒன்றால் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார். இதன்போது சிதறிய காரின் கண்ணாடித் துண்டுகள் அப் பெண்ணின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப் பெண் மோசமாக காயமடைந்துள்ளார். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் அப்பெண் வாயைத் திறந்து உண்ண…
-
- 2 replies
- 602 views
-
-
தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான றொபேட் பெல்ஸ் மரண தண்டனை அபாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப்கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன்றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூடுபிடித்துள்ளன. தனது நண்பன் ஒருவன் கண்ணி வெடியில் காலை இழந்த காரணத்தால் இந்தப் படுகொலைகளை செய்ததாக இவர் தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் இவர்தான் சுட்டார் என்பதை நீதிபதி ஊர்ஜிதம் செய்தால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அமெரிக்கா தீர்க்கமாக அறிவித்துள்ளது. இதே முன்மாதிரியை சிறீலங்கா பின்பற்றி பொது மக்களை கொன்று, பால…
-
- 1 reply
- 602 views
-
-
இது இன்டர் போலில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் நெடியவனா இல்லையா என்பது அவரை தெரிந்தவர்களிற்க்கே வெளிச்சம். http://www.interpol.int/@en/Wanted-Persons/(wanted_id)/2012-4907
-
- 0 replies
- 602 views
-
-
-ரொமேஸ் மதுசங்க தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் தயாரித்துள்ளனர். 50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஒரு மில்லியன் பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட 3 பந்தை…
-
- 6 replies
- 601 views
-
-
லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார். அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத…
-
- 0 replies
- 601 views
-
-
டுபாயில் பணிபுரிய சென்ற இலங்கை இளைஞன், வீட்டு உரிமையாளரான 60 வயது பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தி, பெருந்தொகை நகைகளை சுருட்டிக் கொண்டு இலங்கை தப்பி வந்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்ப பகுதியை சேர்ந்த 30 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவர் டுபாய்க்கு பணிபுரிய சென்றுள்ளார். அங்கு, வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி ஏற்கனவே திருமணமானவர். இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மூதாட்டிக்கு தெரியாமல் அவரது மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை திருடிக் கொண்டு, இளைஞன் இலங்கை திரும்பியுள்ளார். இது தொடர்பான முறைப்…
-
- 0 replies
- 601 views
-