செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மூடப்பட்ட அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கோரி குடிகாரர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு அருகே மூலக்கடை கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் இந்தக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து அடுத்த நாளே கடை மூடப்பட்டது. இதனால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று காலை டாஸ்மாக் கடையைத் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஆண்கள் பலர் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து கோபத்துடன், ஏ…
-
- 6 replies
- 671 views
-
-
கொரோனா கிருமிப் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை ‘ஆல்கஹால்’ எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடி…
-
- 6 replies
- 578 views
-
-
-எஸ்.தியாகு நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் வித்தியாசமான வண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது. விவசாயி ஒருவருடைய மரக்கறி தோட்டத்திலிருந்தே குறித்த வண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தாடி வைத்த மனிதனின் முகம் போலவும் மறுபக்கம் பார்க்கும் பொழுது சாதாரண மனிதனின் முகம் போலவும் காட்சி தருகின்றது. இது தொடர்ப்பில் விவசாயி குறிப்பிடுகையில், 'விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவேளையிலே இந்த வண்டினை கண்டெடுத்தேன். இது வரை நான் இவ்வகையான வண்டினத்தை கண்டதில்லை' என குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/121680-2014-08-11-12-45-20.html
-
- 6 replies
- 851 views
-
-
அவசர போலீஸ் என்பதற்கு அர்த்தம் தெறிக்க உழைத்திருக்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் போலீஸார். ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகத்தை ஒட்டிய சாலைப் பகுதி செம டேஞ்சரான ஏரியா. காரணம் - சாலையை ஒட்டிய சிறு இறக்கத்தில் ஆழ்கடல் ஆரம்பித்து விடுகிறது. எனவே, ‘கார், பைக்கில் வருபவர்கள் எப்போதுமே அலெர்ட்டாக இருக்க வேண்டும்’ என்கிற எச்சரிக்கைப் பலகையையும் தாண்டி கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்தி விட்டார், 63 வயதான அந்தப் பெண்மணி. கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் சொல்ல, தடாலென காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் என்னும் போலீஸ் அதிகாரிகள். ‘‘இது மிகவும் ஆழமான பகு…
-
- 6 replies
- 709 views
-
-
இது எக்ஸிட் போலா அல்லது புல்ஷிட் போலா? முடிவுகள் நாளை மாலை தெரிந்துவிடும். Source: Dinamalar.
-
- 6 replies
- 666 views
-
-
அரசியல்வாதிகளை பிரமிக்க வைத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ! கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமைச்சரின் மகள் மற்றும் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்றது. சமகால அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அகில விராஜ் காரியவசம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். தனது மகன் மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான முறை ஒன்றினை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங…
-
- 6 replies
- 664 views
-
-
லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- வவுனியாவில் சம்பவம் January 28, 20151:51 pm லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன் கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார். இதன் போது மனைவி கணவனை எட்ட…
-
- 6 replies
- 3.1k views
-
-
பார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகாசிக்கும் தையல்காரர் தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார். நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார். http://www.virakesari.lk/article/898
-
- 6 replies
- 701 views
-
-
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர், நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் சுமார் 20 அழகிகளுடன் அந்தப்புரத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் என்பவர் கொரோனா பரபரப்புக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து தனது அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டார். ஜெர்மனியில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாக செய்திகள் வெளிவ…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியம்! பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளருக்கு ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகின்றது. இளவரசி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரச இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குத் தேர்வானோர் வின்ட்சர் காஸ்டில் அரண்மனை மட்டுமல்லாமல் பக்கிங்காம் அரண்மனை உள்…
-
- 6 replies
- 795 views
-
-
4 வருடம் உரிமையாளர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம் ! நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், எப்போதும் வீல் சேரில் தான் அமர்ந்திருப்பார். இதனால், அவரது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.இதனால், ஹவுலே கோல்டன் ரெட்ரிவர் வகையைச் சேர்ந்த கிரிப்பின் என்ற நாயை வளர்த்தார். தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதற்குப் பழக்கினார் அவர். இதனால் எப்போதும் அது ஹவுலே உடனே வலம் வந்தது.நியூயார்க…
-
- 6 replies
- 910 views
-
-
நித்தியானந்தாவுக்கு, நாளை.... பெங்களூர் மருத்துவமனையில், "ஆண்மை சோதனை."! பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நாளை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அவரைப் பரிசோதிக்க டாக்டர்கள் குழு தயாராக உள்ளது. நித்தியானந்தா ஆண்மைப் பரிசோதனைக்கு வந்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துக் கூறி விட்டதால் நாளை அவரை பெங்களூர் மருத்துவமனையில் பரிசோதிக்கவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டாக்டர்கள் குழுவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிதா - நித்தியானந்தா. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் நித்தியானந்தா. அப்போது ஆசிரம அறையில், நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப…
-
- 6 replies
- 761 views
-
-
பெண்களைக் கடவுளா போற்றுவதாகச் சொல்லும் பாரத தேசத்தில் பெண்களுக்கு நிகழும் இயற்கையான மாதவிடாய் சக்கரம் பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் பிரசவ விடுமுறைகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்றும் வந்த அறிவுறுத்தலை அடுத்து பெண்கள் கடுஞ்சினங்கொண்டுள்ளனர்..! குறித்த தரவுகள் பெண்களின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தேவையான தரவுகளை எட்டத்தான் கோரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6545115.stm ------------------- எமது பார்வையில் இந்தத் தரவுகளை எடுத்தலில் எந்தத் தவறும் இல்லை என்றே தெரிகிறது. அவற்றை ரகசியமாகப் போணிக்கொள்வதால் பெண்களின் உரிமை காற்றில் பறந்திடாது..! பெண்கள் அடிக்கடி வேலையில் இருந்து விடுமுறை எடுப்பத…
-
- 6 replies
- 2.2k views
-
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண். காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது தாதியர் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்…
-
-
- 6 replies
- 851 views
-
-
ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதித்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட …
-
- 6 replies
- 720 views
-
-
அரேபியர்களும் யூதர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி கட்டணம் மாத்திரம் அறவிடும் இஸ்ரேலிய உணவகம் இஸ்ரேலிலுள்ள உணவகமொன்று யூதர்களும் அரேபியர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி விலைக்கு உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காக இந்தத் தீர்மானத்தை தான் மேற்கொண்டதாக இஸ்ரேலிய உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் தெரிவித்துள்ளார். உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் .................................................................................. “அரேபியர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? யூதர்களைக் கண்டு அஞ்சுகிறீர்களா? எம்மைப…
-
- 6 replies
- 476 views
-
-
ஹெயிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிங்கள இராணுவத்தில் பலர் பலியாகியுள்ளனர் அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=365:-1000-&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100#JOSC_TOP
-
- 6 replies
- 1.6k views
-
-
தமது முன்னாள் காதலி, காதலனின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என ஜேர்மன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனிய பெண்ணொருவர் தனது காதலருக்கு எதிராக தொடுத்த வழக்கொன்றிலேயே மேற்படி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மனு தாரரான பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிட வேண்டுமெனவும் அப்பெண்ணின் முன்னாள் காதலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த இப்பெண், புகைப்படக் கலைஞரான ஒருவரை காதலித்தார். இவர்கள் காதலித்த காலத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நிர்வாணமாகவும் அப்பெண் போஸ் கொடுத்திருந்தார். இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டபின் அப்புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிடுமா…
-
- 6 replies
- 778 views
-
-
நியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்பின் சிலை! நியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகுதியில் “என் மீது சிறுநீர் கழிக்கவும்” “Pee On Me” என எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே, டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். http://athavannews.com/நியூயோர்க்கில்-நாய்கள்-ச/
-
- 6 replies
- 803 views
-
-
உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் இன்று (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானமே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் வகையிலான இந்த விமானம் ரஸ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது எனவும், இது மிகவும் பெரிய விமானம் என்பது மட்டுமின்றி, இதுவரை அமைக்கப்பட்டவைகளில் மிகவும் பாரமான விமானம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் முன் பகுதியில் இருந…
-
- 6 replies
- 943 views
-
-
தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் மகனே இவ்வாறு காதலுக்காக அப்பாவின் காசைக் கொடுத்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியா் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போது தனது கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோது அதைப் பார்த்த ஆசிரியா் அதிர்ச்சியுற்றுள்ளார். அவா் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து 15 ஆயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது என தகவல் வந்திருந்தது. உடனடியாக தனது போ்ஸ்சைப் பார்த்த போது அதற்குள் இருந்த பண அட்டை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். தனது மனைவியைத் தொடா்பு கொண்டு கேட்ட…
-
- 6 replies
- 749 views
-
-
ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் கிழங்குப் பொரியல் வாங்குவதற்கு சென்ற ஜேர்மன் அதிபர் 2016-02-22 11:07:30 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடாக பிரிட்டன் நீடிக்குமா அல்லது பிரிந்து செல்லுமா என்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான உச்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜேர்மன் அதிபரான ஏஞ்சலா மேர்கெல் உருளைக்கிழங்கு பொரியல் (சிப்ஸ்) வாங்குவதற்கு சென்ற சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பிரித்தானியாவில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். …
-
- 6 replies
- 511 views
-
-
கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது. இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது. இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார். கோழியின் உட…
-
- 6 replies
- 1.1k views
-
-
கிராமப் பஞ்சாயத்தின் குரூர விர்ஜினிட்டி டெஸ்ட்... 48 மணி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தனர்! மும்பை: மகராஷ்டிர மாநிலத்தில் திருமணம் முடிந்த தம்பதிக்கு குரூரமான முறையில் கன்னித்தன்மை சோதனை நடத்தி, மணமகள் ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்று கூறி, திருமணம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே அதை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து. நாசிக்கில் கடந்த மே.22-ந் தேதி திருமணம் ஒன்று நடந்தது. முதலிரவுக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துக் குழு மணமகனிடம் வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்துள்ளனர். முதலிரவு முடிந்ததும் அதை மீண்டும் தங்களிடம் கொண்டுவரும்படி பஞ்சாயத்தார் கூறியுள்ளனர். அதன்படி, மணமகன் முதலிரவு முடிந்த பின்னர் தனது வெள்ளை நிற படுக்கை விரிப்…
-
- 6 replies
- 1.1k views
-
-
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான 'வெம்பயர்' என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில…
-
- 6 replies
- 901 views
-