தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர்களிடம் ஒற்றுமைஇல்லை இல்லை என்று கூறிக்கொண்டுஆக்கபூர்வமானசெ
-
- 0 replies
- 923 views
-
-
இலக்கங்கள் ஆச்சரியம் உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏறு முக இலக்கங்கள் ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred... மேலும் பார்க்க 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம்…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது. இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன? "இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்குகதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம். ""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'' என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து. நிலமிசை நீடுவாழ்வோர் யார…
-
- 1 reply
- 962 views
-
-
இலக்கணம் கற்பித்தல் : ஆசிரிய அனுபவம் நான் அரசு கல்லூரி ஆசிரியனாகிப் பதினேழாம் ஆண்டு இது. பணிக்குச் சென்ற முதலாம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இளங்கலைத் தமிழிலக்கிய வகுப்புகளுக்கு இலக்கணமும் பட்ட வகுப்புகளுக்குப் பொதுத்தமிழ்த் தாளில் இலக்கணப் பகுதியும் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறேன். பொதுத்தமிழ் இலக்கணப் பகுதி பற்றி இப்போது பேசப் போவதில்லை. அது பள்ளித் தமிழ்ப் பாட இலக்கணப் பகுதியின் தொடர்ச்சிதான். தனியாகப் பேச வேண்டிய விஷயம் என்பதால் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு இளங்கலைத் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும் அனுபவத்தில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இளங்கலையில் நன்னூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, நம்…
-
- 3 replies
- 19.3k views
-
-
இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம் எனது பள்ளித் தோழர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் 'தினம் ஒரு தமிழ்ப் பாடல்' எனும் தலைப்பில், எனது சிறிய இலக்கிய வாசிப்பின் அடிப்படையில், தற்போது சுருக்கமாகப் பதிவிடுகிறேன். அங்கு இன்றைய என் பதிவை இங்கும் பகிரத் தோன்றியது. இன்றைய இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது. மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812 இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்…
-
-
- 1 reply
- 427 views
- 1 follower
-
-
நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ உரை 26:30 ல் இருந்து கல்கியின் பொன்னியின் செல்வன் கம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று ஐயா தமிழருவி மணியம் ஆற்றிய உரை.
-
- 0 replies
- 851 views
-
-
இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் : தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக…
-
- 8 replies
- 3.6k views
-
-
இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்கள் மெல்பேர்ண் நகரில் ஆற்றிய சொற்பொழிவு. http://youtu.be/Y2V99NVgeDk
-
- 0 replies
- 1.7k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். "மாடப் புறாவே…
-
- 5 replies
- 2.5k views
-
-
இலங்கையின் இனவரலாறு இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு பிரிவுகளான மகாயானம்,தேரவாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர் அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘ …
-
- 0 replies
- 1.2k views
-
-
இவள் தமிழ்ப்பெண்! நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும் மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை! என்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. கணவனும், மனைவியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல! இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை! என்ற கருத்தும் உண்டு. இருவேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்த இருவர், பல எதிர்பார்ப்புகளோடு, ஒன்றாக வாழ்வில் இணையும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். அந்தச் சூழலில் இருவரும் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் குடும்பம் போர்க்களமாகத்தான் இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் இயன்றவரை விட்டுக்கொடுத்து வாழக்கற்றுக்கொண்டால் அதுதான் மக…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழரோடு பழகி பாருங்கள், அழகிய தமிழ் கேட்கலாம். -சுகி சிவம்.-
-
- 12 replies
- 2.6k views
-
-
தொன்மையானதும் சமகாலத்தில் புளக்கத்தில் உள்ளதும் எதிர்கால இருப்புக்கு வாய்ப்புக்களையும் கொண்ட மொழியாக தழிழ்மொழி விளங்கி வருகின்றது. செம்மொழியாகிய தழிழ்மொழியே என்று பாராட்டவும்படுகின்றது. இணைய மொழியாகவும் தமிழ்மொழி வாழ்வு கொண்டுள்ளது. ஆயினும் அன்றாடாப் பாடப் பயில்வுகளில் தழிழ்மொழியின் நிலை கேள்விக்குரியதாகி வருகின்றமை மிகவும் வெளிப்படையானது. கல்வி வெளிகளிலும் வெகுசன ஊடக வெளிகளிலும் தமிழ் மொழியின் பாவனை குறைவடைந்தும் திரிபடைந்தும் வருவதும் யதார்த்தமாக இருந்து வருகின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் http://www.arayampathy.lk/research/458-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
-
- 1 reply
- 2.1k views
-
-
ஈழத்து சிற்றிதழ்கள் பற்றி அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்திருந்த ஞானம் இதழின் ஆசிரியரின் உரையை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம் https://uyarthinai.wordpress.com/ நன்றிகள் உயர்திணை
-
- 0 replies
- 715 views
-
-
லேனா தமிழ்வாணன் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது. லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.
-
- 19 replies
- 5.5k views
-
-
ஈழத்துக் கதைகள் - காசி ஆனந்தன் கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது. நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது. வளைக்குள் இருந்த ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது. அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு. தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:- 'முன்பே காப்பான் அன்பே நட்பு" நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது. 'மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறா…
-
- 4 replies
- 2k views
-
-
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! கலாநிதி செ.யோகராசா ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாக…
-
- 2 replies
- 6.7k views
-
-
இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார். நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத…
-
- 18 replies
- 4.7k views
-
-
01. உங்களின் பெயர்களை சங்க காலத்து தமிழியிலும் , பல்லவர் காலத்து தமிழ் வட்டெழுத்திலும் எழுதிப்பார்த்துக்கொள்ளுங்கள். 02. உங்களின் சூழலிலுள்ள பழந்தமிழ்க்கல்வெட்டுகள் , ஏடுகளை நீங்களாகவே உச்சரித்து வாசியுங்கள். உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள் 247 எழுத்துக்களையும் பார்க்க - https://drive.google.com/.../1KJRwelxSbZeRr.../view
-
- 1 reply
- 1.4k views
-
-
உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்? இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி: மதியாதார் வாசல் மிதியாதே!
-
- 47 replies
- 13.7k views
-
-
உயர் தனிச் செம்மொழி?! பிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது? தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறத…
-
- 0 replies
- 552 views
- 1 follower
-