Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. தமிழர்களும் தமிழும் இல்லாமல் தவிக்கும் மாரியம்மன்,தண்டாயுதபாணி கோயில், ஹோசிமின் சிட்டி, வியட்நாம்.

  2. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்.. உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது. இதிலே அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தத்தமது கடமைகளை கடமைக்கு மேலதிகமாக சேவை மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். இது இப்பிடி இருக்க கிராம அலுவலர் என்ன பொதுமக்கள் சார் தகவல் மற்றும் ஆளணி உதவி என்றாலும் குமரனை கேளுங்கோ என்டுறார். ஊசிக்கு வாற வயோதிபர்களை கொரணா அச்சுறுத்தல் எதுவும் பாராமல் கையைப்பிடிச்சு கூட்டிக…

  3. வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு பண்ணைக்கு போவம், அங்க யாழ்ப்பாணத்தில பெரிய அளவில இதுவரை வளக்காத பல்வேறு வகையான மிருகங்கள், இனங்கள் உதாரணமா மான், பண்ணி, 8 வகையான மாடுகள், 4 - 5 வகையான ஆடுகள், புறா இப்பிடி கனக்க இருக்குது, நாங்க இண்டைக்கு இவை எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு, இத பராமரிக்கற அண்ணாவோடையும் கதைப்பம் வாங்க

    • 5 replies
    • 1.3k views
  4. பச்சை மிளகாய் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும். பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான். சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய். என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார். …

  5. இராமச்சந்திர மூர்த்தி.பா #உலகிலேயே_அதிக_அறிவுத்திறன்_கொண்ட_தமிழகச்_சிறுமி….!! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்க…

    • 0 replies
    • 597 views
  6. சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்... குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்... சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார். தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மண…

  7. சோறு - சாதம் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்? கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? அது ஏன்? திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறத…

    • 34 replies
    • 6.3k views
  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். #யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும். கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது? மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம் கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்…

    • 0 replies
    • 906 views
  9. யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? முற்குறிப்பு: அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல். இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும். அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை. அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்ப…

    • 43 replies
    • 3.5k views
  10. "ஆ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..." என்றுதான் எங்கள் ஊடகவியலாளர்கள் பேட்டிகளை ஆரம்பிப்பார்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்தப் பெண் ஊடகவியலாளர் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்கிறார், "சரி உங்களில் இருந்து ஆரம்பிப்போம்..." என்று. அந்த ஊடகவியலாளரிடம் அகப்பட்ட நம்ம ஆள், Jeyaranjinee Gnanadas "தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி" இல் இருந்து ஆரம்பிக்கிறா. "கலை வளம் நிறைந்த பாடசாலை என்னுடைய பாடசாலை...." என்றபடி.... இந்தப் பேட்டியில் எனக்குப் பிடித்த ஒரே விசயம்: "போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம். 30 வருட ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது, தோல்வியில் முடிந்தது என்று சிலர் அரை வே…

  11. "நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது" என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர். லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூல…

  12. இணையத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: "உள்ளாடையின்றி போஸ் கொடு. இல்லையெனில் படத்தை பகிர்வேன்" விக்டோரியா ப்ரெசிட்ஸ்கியா பிபிசி உக்ரைன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இணையத்தில் நல்லவர்கள் போல் பேசி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்திலோ, நேரிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஆங்கிலத்தில் ஆன்லைன் குரூமிங் என்றழைக்கிறார்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் இணையத்தை பயன்படுத்தி குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகரித்திருப்பதாக, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான தொண…

  13. 13 ஆவது திருத்தச் சட்டமும் குமார் பொன்னம்பலமும் ------------------------------------------- ---- 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இருந்து என்றோ ஒரு நாள் நீக்கம் செய்யப்படும் சந்தர்ப்பம் வருமென மாமனிதர் குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார். 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொன்னார். 13, அரசியல் தீர்வு அல்ல என்றும், ஆனாலும் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைக் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டம்கூட சிங்கள ஆட்சியாளர்களினால் ரத்துச் செய்யப்படும் சூழல் உருவாகுமெனவும் அவர் அன்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார். ----கொழும்பில் உள்ள…

    • 5 replies
    • 907 views
  14. வதிவிடப் பாடசாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட பூர்வகுடிச் சிறுவர்களின் உடல் எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வியாழன் அன்று சஸ்கெச்சுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பூர்வகுடிச் சிறுவர்களின் மீதிகள் கடந்த கால கனடிய அரசுகளின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளை மீண்டும் ஆதாரப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரு இனக்குழுமம், குறிப்பிட்ட நிலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழுவதன் மூலம் அவர்களது மொழி, பண்பாடு, நிலம், குடித்தொகைப் பெருக்கம் போன்றவை உறுதிப்படுத்தப்படுகின்றன. பல நூறு , ஆயிரம் வருடங்களாக இவ்வாறு வாழ்ந்து வந்த குடியினங்களை ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்களும் தங்கள் ஆயுத பலத்தாலும், சூழ்ச்சிகரத் திட்டங்களாலும் அழ…

    • 0 replies
    • 388 views
  15. 23 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் இரெண்டு உடான்ஸ் சாமிகள் மோதி கொண்ட காட்சி. இதில் ஒருவர் இப்போ கைதாகியுள்ள சிவசங்கர் பாபா. இந்த பேட்டியை வைத்து மறைந்த விவேக் செய்த காமெடி பேட்டி கீழே.

    • 0 replies
    • 1k views
  16. அவர்களுக்கு உள்ள உணர்வு நம்மவர்களுக்கில்லை.

  17. 2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன். நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன். பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது. மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு ச…

  18. பணம் செலுத்திய தந்தைக்காக ? திருமணம் செய்த மனைவிக்காக?? இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்?? https://fb.watch/65IUrHd8w1/

  19. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்? மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான். இதெல்லாம் எப்படித் துவங்…

  20. கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…

    • 0 replies
    • 630 views
  21. பாலியல் புகார்களும் பாரத தேசமும் +++++++++++++++++++++++++++++ இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள். இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படு…

  22. மதுரை_வடை_ஃபேக்டரிகள்* *மதுரையில்* நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்! சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும் அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக.. உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிர…

  23. பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்? காட்சிப்படுத்தலும் அதன் மீதான பேச்சாடலும் விவாதமும் நிகழப்படும் பொழுதுதான் அக்காட்சிப்படுத்தலில் இருக்கும் கருத்தின் மீது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் கருக்கட்டும் என்பதில் நான், நாங்கள் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்காகவே, இந்த முக நூலில் வலிந்து அரசியல் பேச முயற்சிக்கிறோம். ஆனால், தமிழ் மக்களைப்போலவே அங்கிருந்து மேலெழுந்த, உருக்கொண்ட மனிதர்கள், அரசியல் அமைப்புகள் இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய குறைந்த பட்சம் மன எண்ணத்திற்குள்கூட வர முடியாத அரசியல் வரலலாற்றுக்குள் கதாபாத்திரங்களாக, காட்சிகளாக கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பற்றிய எந்தக் கேள்விகளு…

    • 12 replies
    • 2k views
  24. காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.