Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்? மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான். இதெல்லாம் எப்படித் துவங்…

  2. கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…

    • 0 replies
    • 626 views
  3. பாலியல் புகார்களும் பாரத தேசமும் +++++++++++++++++++++++++++++ இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள். இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படு…

  4. மதுரை_வடை_ஃபேக்டரிகள்* *மதுரையில்* நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்! சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும் அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக.. உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிர…

  5. பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்? காட்சிப்படுத்தலும் அதன் மீதான பேச்சாடலும் விவாதமும் நிகழப்படும் பொழுதுதான் அக்காட்சிப்படுத்தலில் இருக்கும் கருத்தின் மீது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் கருக்கட்டும் என்பதில் நான், நாங்கள் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்காகவே, இந்த முக நூலில் வலிந்து அரசியல் பேச முயற்சிக்கிறோம். ஆனால், தமிழ் மக்களைப்போலவே அங்கிருந்து மேலெழுந்த, உருக்கொண்ட மனிதர்கள், அரசியல் அமைப்புகள் இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய குறைந்த பட்சம் மன எண்ணத்திற்குள்கூட வர முடியாத அரசியல் வரலலாற்றுக்குள் கதாபாத்திரங்களாக, காட்சிகளாக கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பற்றிய எந்தக் கேள்விகளு…

    • 12 replies
    • 2k views
  6. காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/

  7. உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் ! ====================================== உலகில் இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும் சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது. மாதம் மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் வெளிவரும் மூன்றுமுறையும் ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப் பழக்கவ…

    • 5 replies
    • 1.6k views
  8. வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு: அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களை விநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. 'அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடு களுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடை யாது' என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி…

    • 0 replies
    • 614 views
  9. குழாய் நீர் வசதி எங்கள் ஊருக்கு வந்த பிறகும் எங்கள் வீட்டிற்கு மட்டும் இணைப்பைப் பெறாமலிருந்தோம். எந்தக் காலத்திலும் வற்றாத கிணறு வளவில் இருந்தது. நல்ல தண்ணீர். எந்தக் குறையும் இல்லை. எதற்கு குழாய் நீர் என்று நான் சாதாரணமாக கேட்டுவிட்டு இருந்துவிட்டேன். ஊரில் வீட்டில் வசிக்கும் உம்மா, ”இந்த பீ.எச்.சைகளின் தொல்லை தாங்கவில்லை” என்று அடிக்கடி புலம்பிக் கொண்டேயிருந்தார். (Public Health Inspector (PHI) ”ஊரில் உள்ள எல்லா சீமெந்துத் தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆர்பிக்கோ டாங்கி மட்டுந்தான் பயன்படுத்தலாம்” என்றார்கள். சீமெந்து டாங்கிகள், சுத்தமாக கழுவிப் பயன்படுத்தினால் எந்தக் குறைபாடுகளும் இல்லாதது. முதலாளித்துவத்திற்கு இந்த அதிகாரிகள் எ…

  10. Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கி…

    • 1 reply
    • 860 views
  11. வாங்க இண்டைக்கு நாம வீட்டுக்கு மீன், இறைச்சி வெட்ட ஒரு கத்திவாங்குவம், அத கடையில வாங்காம ஒரு பட்டறைக்கு போய் நாங்களே நமக்கு பிடிச்ச ஒரு வடிவத்தில, வில்லுதகடுல கத்தியா செய்வம் வாங்க. எப்பிடி வில்லுத்தகடா இருக்க ஒரு துண்டு கத்தியா மாற்றமடையுது எண்டு ஒவ்வொரு படிமுறையா உங்க கூட பகிர்ந்து இருக்கன், பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. ஒரு கத்தியின் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டு நீங்க நினைக்கிறீங்க சொல்லுங்க, யார் சரியா சொல்லுற எண்டு பாப்பம். https://youtu.be/FRJIyjtm4PY

    • 0 replies
    • 982 views
  12. வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை கூட்டணிப் பிச்சைகளும், தனித்துப்போட்டியிடுதலும் தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 16 ஆவது சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதியில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 72.78% of 6,28,69,955 = 4,57,56,754 அப்படி என்றால் 6,28,69,955 வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இதில் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 29,58,458. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இந்த முறை 6.85% சதவீதம் வாக்கு பெற்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 27.22% ஒரு க…

  13. ஓர் அகதியின் மரணம்...! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...! அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது. அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..! அந்த இளை…

  14. வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.

  15. ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை. நான் ஒரு அடிமை-தமிழன் இல்லையே. நான் ஒரு திமிர்-தமிழனாச்சே..! தமிழருக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கோ சிக்கல் வரும்போது நான் வாயை மூடிக்கொண்டு இருப்பதில்லையே..! நான் அவர்கள் மொழியிலே பேசி, அவர்களின் விகார…

    • 1 reply
    • 963 views
  16. சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா.... நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑

  17. யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான். இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும். அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி …

    • 7 replies
    • 1.7k views
  18. சிலோன் விஜயேந்திரன் திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன். ’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ ’நீங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருந்த்து. அப்போதிருந்து நல்ல நண்பரானார். …

    • 4 replies
    • 1.5k views
  19. தமிழரும் போர்க் குற்ற விசாரணையும் ! =============================== உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மற்றும் உரிமை மறுக்கப்படும் இனங்கள், சமூகக் குழுக்கள் தமது உரிமைக்காவும் இருப்புக்காவும் பல்வேறு முறைகளில் போராடி வந்திருக்கின்றன. அவ்வாறு போராடியவர்கள் ஆயுதமுனையிலும் சட்டத்திற்கு முரணான வகையிலும் அடக்கி மௌனிக்கச் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். அத்தோடு சந்தேகத்தின் பேரில் எத்தனையோ அப்பாவிகள் கொல்லபட்டிருக்கிறார்கள் அல்லது விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான சகல ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்த சமூகமாகவே…

  20. தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் ! ================================ ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் ! கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும் ஆய்வுகூட அற…

  21. மீன் கறி என்ற வஸ்து சிம்ரன் போன்றது. யாரோடு சோடி சேர்ந்தாலும் நன்றாகத்தானிருக்கும். பிட்டின் மீது குழம்பை வார்த்துவிட்டு இரண்டு மீன் துண்டை தட்டின் ஓரத்தில் தட்டிவிட்டு, ஆறுதலாக உள்ளே அனுப்பினாலென்னா, சுடுசோற்றின் மீது தலையோடு கவிழ்த்து போட்டுவிட்டு ஆய்ந்து ஆய்ந்து ஒரு சிறுபோர் நடத்தினாலென்ன, பாண் - தோசை - இட்லி - இடியப்பம் என்றெல்லாம் களமாடி, கடைசியாக Mc Donlald's பேகரோடுகூட சாப்பிட்டுப்பார்த்திருக்கிறேன். மீனின் வம்ஸமே ஒரு தனி அம்ஸம்தான். இவ்வாறு நினைவிலேயே எப்போதும் நீந்துகின்ற கலாதியான கடற்கரும்பு எது என்று நாயிடம் கேட்டால்கூட, வாலை ஆட்டிக்கொண்டு சொல்லும் "மீன்தான்" என்று. ஆனால், போன மாதம் Netflix வெளியிட்டிருக்கின்ற Seaspiracy என்ற ஆவணப்படத்தை பார்த…

  22. தமிழரால் தமிழருக்கு ....... ! ==================== தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தமது இருப்பைத் தக்க வைக்கவும், தமக்கு எதிராக பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நியாயம் வேண்டியும் ஜனநாயக முறையில் போராடும் வேளையில் தமிழ் மக்களின் முக்கியமான பொதுப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கருத்துக்களை தொடர்ச்சியாக காவிச் செல்லும் சக்திகள் யார்? திட்டமிடப்பட்ட பின்புலங்களின் செயல்பாடுகளே இவர்கள் மூலம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றே ஊகிக்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் பல கொடுமுடிகள் அணிவகுத்து நிற்பதும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் புறவயச் சூழலுக்குள் தள்ளிவிட முனைவதையும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.