சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. அவரின் திருமணம், அவரோடு ஒரே அறையில் வாழ்ந்த அனுபவங்கள், அவர் பெயர் எழுதிய தோட்டா, மகன் பாலச்சந்திரனின் மரணம் போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் ஆய்வறிஞர் மு. நித்தியானந்தம் அவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
பண்ணைக் கடற்கரையை நேசிப்போம் யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள், இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த…
-
- 0 replies
- 944 views
-
-
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் !-Dr Karthik Bala: மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என…
-
- 0 replies
- 880 views
-
-
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது. ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது” எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு? அதற்கு அவர் சொன்னார், நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வர…
-
- 6 replies
- 1.4k views
-
-
1983 ஜூலை! இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு! 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு…
-
- 3 replies
- 1k views
-
-
அன்புள்ள கமலா அக்காவிற்கு, உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்குத் கொஞ்சமும் தெரியாது. ஆனாலும் உங்கட பெயர் தமிழ் பெயரைப் போல இருப்பதால், நீங்க தமிழ் என்று நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏனென்றா அக்கா, நாங்க சின்னனில் இந்திரா காந்தி கூட தமிழ் என்று யோசிச்சாக்கள் தானே. நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Joe Bidenன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டதும், ஏனோ எங்களுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு புளூகம் புக…
-
- 4 replies
- 1.5k views
-
-
2009 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையில் கூட்டமைப்பின் வகிபாகம்! - அம்பலப்படுத்துகிறார் சிவாஜிலிங்கம்
-
- 0 replies
- 739 views
-
-
கற்க கசடற – மக்களும் கட்சிகளும்: பகுதி 1 ==================================== கொரோனாவுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்காக தமது உயிரையும் பணயம் வைத்து அரசியல்வாதிகள் பலர் பல லட்சங்கள், கோடிகளை செலவு செய்து ஒரு வழியாகத் தமது பாராளுமன்ற ஆசனத்தை உறுதி செய்து விட்டார்கள. சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் சிலர் இனி மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கலாம் அல்லது காத்திருக்கும் கொக்காக 2025 பாராளுமன்றத் தேர்தலுக்குக் காத்திருக்கக்கூடும். இந்த முறை நடைபெற்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2010 க்குப் பின்னர் மகிந்தவிற்கு மீண்டும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் அவர் புதிய கட்சியை உருவாக்கிய பின்னர் கிடைத்த ஐந்தே வெற்றி அவர…
-
- 8 replies
- 1.3k views
-
-
மாமனிதர் இரவிராஜ் அண்ணர் அவர்களின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் திருமதி. சசிகலா இரவிராஜ் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி குரல் கொடுத்து முன்னிற்பேன் என உறுதி கூறினேன்..
-
- 0 replies
- 667 views
-
-
என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான். தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக... ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 ச…
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் சரிவினை அந்த அணி பன்முகங்களிலும் இறங்கி பழுதுபார்க்கவேண்டியிருக்கிறது. அந்தப்பணி ஆரோக்கியமாக நடைபெறும் என்பதற்கு - இப்போதிருக்கின்ற - ஒரே நம்பிக்கை, அந்த அணியிலிருந்து சில "வேண்டாதவர்கள்" மக்களால் தூக்கி கடாசப்பட்டிருப்பதுதான். நடந்து முடிந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான மொத்த எதிர்ப்பென்பது சுமந்திரனுக்கு ஊடாகவே குறிவைக்கப்பட்டது. அதுவும் பல தளங்களில். கட்சிக்கு உள்ளே - வெளியே - மேலே - கீழே என்று அத்தனை பக்கங்களினாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்று பெரும் பணச்செலவில் "தொழில் முயற்சிகள்" மேற்கொள்ளப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்து மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு என்று மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிலும் பார்க்க, சுமந்திரனுக்கு குழி …
-
- 0 replies
- 674 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இனவழிப்பு நடந்தாப் பிறகு சம்பந்தர் இன்னும் வெளிப்படையாகவே தடம்புரளத் தொடங்கி விட்டார். அதில் பெண்கள் சார்பில் நான் இருக்கிறேன். இளைஞர் அணி சார்பில் கஜேந்திரன் இருக்கிறார். கூட்டுறவு அமைப்பு சார்ந்து சிவநேசன் இ…
-
- 0 replies
- 676 views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் அனைவரையும் வறுத்தெடுக்கும் சிங்கள மொழிப் பாடல்
-
- 0 replies
- 1.2k views
-
-
போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு இயக்கம் சம்பளம் தரவில்லை தான். ஆனால், தலைக்கு வைக்கும் எண்ணெய் தொடக்கம் காலுக்குப் போடும் செருப்பு வரைக்கும் இரு பின்னல்களையும் இணைத்து மாட்டும் ஒற்றைக் கிளிப் தொடக்கம் சட்டை ஊசி வரை மூன்று மாதங்களுக் கொருமுறை பற்தூரிகை தொடக்கம் உள்ளாடைகள் வரை போட்டு குளிக்க சோப் தொடக்கம் துடைப்பதற்கு சரம் வரை ஐயோ என்றால் மருத்துவத் தோழர்களும் பசி என்றால் வழங்கல் பகுதியினரும் பயணம் என்றால் "சிறப்புப் பணி" பேருந்துகளும் எங்களுக்கிருந்தன. இப்போது அப்படி எதுவுமில்லாத போதும் மக்கள் பணியை செய்யும் #எங்களை #உங்கள்_பெயர் விளங்க #உழைப்புச்_சுரண்டல்_செய்…
-
- 2 replies
- 1k views
-
-
#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.
-
- 20 replies
- 2.3k views
-
-
இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும் ************************************************* இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது. மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் …
-
- 6 replies
- 1.6k views
-
-
தூரநோக்கற்ற அரசியல் தலைமைகளும் உட்கட்சி சனநாயகமும் ---------------------------------------------- இலங்கையில் இன்னுமொரு “சனநாயக” தேர்தல் களைகட்டியுள்ளது. என்னதான் இந்தத் தேர்தல்கள் சனநாயக வழியில் எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் எத்தனை பேர் அறிவுசார் முடிவெடுக்கும் வாக்காளர்களாக, மிகவும் பொருத்தமானவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வி உலகில் பல நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு கேள்வியாகும். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளிலும் தேர்தலின்போது வாக்காளர்கள் குறித்த ஒரு கட்சிக்கோ அல்லது குறித்த ஒரு வேட்பாளருக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை வழமையாகக் கொண்டிருப்பார்கள். முழுக் குடு…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம் கிரி ட்விட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web என எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட). Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும். இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது. உலவியில் மட்டுமே! எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்ட…
-
- 0 replies
- 783 views
-
-
கருணா ஆனையிறவில் 3000 படையினரை கொலைசெய்தாரா? ஜெயந்தன் படையணி தளபதி
-
- 0 replies
- 804 views
-
-
-
வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்... திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தயவு செய்து முழுவதுமாக வாசிக்கவும்! சுமந்திரன் பேசிய வழக்குகள்! 1. வெளியேற்ற வழக்கு (2007) ஜூன் 2007 இல், கொழும்பில் உள்ள லாட்ஜ்களில் வசிக்கும் தமிழர்கள் காவல்துறையினரால் நகரத்திலிருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அன்று காலை உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது, செய்தித்தாள் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் க…
-
- 28 replies
- 5.3k views
- 1 follower
-
-
இன்று சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - Jun 26 (International Day in Support of Torture Victims). இலங்கையில் தமிழர் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் / செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்ட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்தக் காணொளியில் கொடுக்கப்படும் வாக்குமூலங்களைக் கருதலாம். பெற்றோலில் நனைக்கப்பட்ட பையைத் தலையில் கட்டி அடித்து உதைக்கப்பட்ட ஆண். காலைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்து, பாலியலில் ஈடுபட வைக்கப்பட்ட ஒருவர். 4/5 ஆண்களால் ஒவ்வொரு இரவிலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வயர், மின்சாரத…
-
- 0 replies
- 610 views
-