Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இழப்பும் நினைப்பும் வணக்கம், தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால் தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளி…

    • 4 replies
    • 1.3k views
  2. எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் ச…

  3. தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  4. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளும…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 503 views
  5. படம் சொல்லும் வரிகள் (உயிப்பு) **************************** கல்லறையில் மாண்டாலும் கனிதருவோம் கயவர் எமையழித்தாலும் துளிர் விடுவோம். நல்லவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை-இந்த நானிலத்தில் அவர் புகழோ குறைவதில்லை. -பசுவூர்க்கோபி.

  6. Started by suvy,

    உ ஒரேயொரு ....................! ஒரேயொரு வானுயர்ந்த கட்டிடம் - உயரத்தில் ஒரேயொரு நீள்சதுர அறை - உச்சியில் ஒரேயொரு சாரளம் கூரைக்குள் அசையும் - ஆங்கே ஒரேயொரு கட்டிலோடு மெத்தையுடன் தலையணை ......! ஒரேயொரு குறுக்கு மறைப்பில் சமையலறை - எதிரே ஒரேயொரு குளியலறை நாலடி நடையில் ஒரேயொரு மீன்தொட்டி ஒரு பொன் மீனோடு ஒரேயொரு நாய்குட்டி கழுத்தில் கயிறோடு .....! ஒரேயொரு அம்மணி அகவையோ எண்பது - காலையில் ஒரேயொரு முறை திறப்பாள் சாரளத்தை ஒரேயொரு தரம் வரும் தென்றல் தங்கி நிக்கும் ஒரேயொரு துளிகளாய் வரும் மழை முகம் நனைக்கும் ....! ஒரேயொரு தடவை அழைப்புமணி எதிரொலிக்கும் ஒரேயொரு க்கால் திறந்த கதவிடுக்கில் உணவிருக்கும் ஒரே…

    • 4 replies
    • 1.6k views
  7. பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர…

    • 4 replies
    • 872 views
  8. Friday, December 6, 2013 ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா ! நிறவெறிக்கெதிராய் நெருப்பெடுத்த கறுப்புச் சுடர். காலம் ஆபிரிக்க இருளகல கைபிடித்தேற்றிய பேரொளி. இருள் கொன்று ஆபிரிக்கர் ஒளிகொண்டெழ உதித்த மூத்தவன் மண்டேலா. …

    • 4 replies
    • 880 views
  9. Started by நிலாமதி,

    "கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…

  10. மரம் சொன்ன கதை..! அழகான மரங்கள் அழகான பூக்கள் அத்தோடு.. நாங்கள் தரும் பழங்களும் காய்களும் மட்டுமே உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் ருசிக்கிறது நீர் தேடி உணவு தேடி அலைகின்ற எங்கள் வேர்களை எவருக்குமே தெரிவதில்லை. அதுபோலத்தான் உங்கள்.. தாய் தந்தையரும் வேர்களே! மறந்திடாதீர்கள். -பசுவூர்க்கோபி-

  11. கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01

  12. சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம். இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும். ******* கார்பன் வெளிச்சம் ------------------------------- வெளிப்பாட்டு முடிந்து உள்பாட்டு ஓடி இரண்டு மணிகள் அடித்த பின் மின் வெளிச்சம் கலைந்து கும்மிருட்டு சூழ பளிச்சென்று வரும் கண்ணைக் கூசும் …

      • Haha
    • 4 replies
    • 535 views
  13. Started by Kaviarasu,

    என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!

  14. கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…

  15. ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன் வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வ…

  16. தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්‍රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள…

  17. என் .....மரணத்தின் போது......யாரும் அழவேண்டாம்......நீங்கள் இழப்பதற்கு......இன்னும் நிறைய இருக்கிறது.....!என்.....உடலை மரணத்தின் பின்.....நீராட வேண்டாம்......உயிருள்ள போது நன்றாக......நீராடுகிறேன்..................!என்.....உயிரற்ற உடலுக்கு........வாய்க்கரிசி போடவேண்டாம்.......உயிருள்ளபோது நன்றாக.......சாப்பிடுகிறேன்...............!என் ......மரணத்தின் போது......ஈமைக்கிரிகைகள் எதுவும்.......செய்யவேண்டாம்.......கடவுள் பற்றற்றவன் அல்ல.....கிரிகைகளில் பற்றற்றவன்.....!என்.....உடலை எரிக்காதீர்கள்......புதைத்துவிடுங்கள்......புழுக்கலும் பூச்சிகளும்.....உணவாக உண்டுமறைந்துவிடுகிறேன்.......!^^^^^^கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்- இலங்கை

  18. தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…

    • 4 replies
    • 885 views
  19. 'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தி…

  20. நீண்ட கவிதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்கள் இன்றைய உலகின் யதார்த்தம் இது தான். அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை-பா.உதயன் —————————————————————————————- அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு இறக்குகிறது இறுதி மூச்சோடு ஏதோ புசுதாய் இன்னுமொரு ரிசேவ் படையுடன் முயூடேசன் என்ற பெயரோடு அப்பன் போலவே தப்பாமல் ஒரு பிள்ளை பிறந்திருக்கான் அவனைப் போலவே ஆட்டத்தை தொடங்கப் போறானோ ஆருக்குத் தெரியும் மூன்று தளங்களை முழுமையாய் வீழ்த்தி முதல் அடி இருட்டு அடி போல் இங்கிலாந்தை விழுத்திப் போட்டுது இன்று தொடக்கம் இன்னும் ஒருக்கா இழுத்து மூ…

  21. நீளங் கொண்ட வானத்தில் பறக்கும் நேசங் கொண்ட பறவைகளே என் தேசங் கொண்ட நிலையென்ன திரும்ப வந்தால் கூறுங்கள்! வாசங் கொண்ட மலரங்கே வண்ண இதழ்கள் விரிப்பதில்லை பேசுங்கிளியும் கிள்ளை மொழி பேசாதிருக்கு என்கிறார்கள்! வீசும் தென்றல் உடன் சேர்ந்த மாமரத்து விளையாட்டும் வேப்ப மரத்துக் குயிற்பாட்டும் நேசமுடன் நினைவிருக்கும் நாசம் எல்லை மீறியதாம் நாட்டில் காணா வாழ்வோடு! கூசும் கொலைகள் கொள்ளைகளும் குழவி மேனி கூடக் கலைத்தாடும் நீசம் எல்லை மீறுவதாய் நேரக் கேட்டே மனமும் துடிக்கிறதே! மாசும் கொண்டோர் மனமெல்லாம் மருகிப் பிறழ்வாய் மனத் தாகம் பூசும் முகங் கொள் வேடங்கள் புரிவோர் மலியப் பொருளுண்டோ! காசுக் கடிமையாய் போகும் கயவர் கைக…

  22. திடீரென்று ஒரு நாள்மம்மல் பொழுதொன்றில்எல்லைப் பிரதேசத்தில் உள்ளஎன் வீட்டு வேப்ப மரத்தில்பறவை ஒன்று வந்துகுந்தி இருக்கத் தொடங்கியதுஅதன் ஈனஸ்வரமானபசிக்குரலைக் கேட்டுஎன் உணவில் சிறிதளவைஅதற்கு நான் வழங்கியும்இருந்தேன்,மறுநாள் கூடு கட்டவும்குடும்பமாயும் குழுமமாயும்வந்திருக்கவும் தொடங்கியது,என் நாளாந்தச் சமையலுக்காகவைத்திருந்த விறகுகளைகுச்சிகளாய்ப் பிரித்தெடுத்துகூடு கட்டுவதை நான்கவனித்தேன்,சில நாட்களில் முட்டை இட்டுக்குஞ்சும் பொரித்தது,அதன் பின்னர் ஒரு போதும் அதுஉணவு கேட்டுக் கத்தியதில்லைஎனக்குத் தெரியாமலும்தெரியவும் கூடஎன் சமையற் கட்டுக்குள்புகுந்து உணவுகளைஎடுக்கத் தொடங்கியதுஅதில் பலவந்தம் இருந்ததைநான் அவதானித்தேன்சொந்தம் கொண்டாடுவதையும், குஞ்சு பொரித்த காலங்களில்மரத்தின…

  23. முதுமையும் மறதியும் நினைவு நினைவு மறந்து விட்டது நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை . அம்மாவின் மறதி என் பிறந்த தினத்தில் எப்பவும் மறக்காமல் வந்து வாழ்த்து சொல்லும் அம்மா இன்று எப்படி மறந்தாளோ . முதுமை வயது திண்டு கொண்டு இருக்கிறது என்னை மறந்து போகிறேன் என்னை என்ன செய்ய . கனவுகள் என் கனவுகளை சட்டமாக்கி கொள்ள அரசிடம் அப்பீல் கொடுத்து இருக்கிறேன் . மறதி மறதி மட்டும் மறக்காமல் இருக்கிறது மற்ரவை எல்லாம் மறந்து விட்டது . மறந்து போகிலேன் எல்லா என் நினைவுகளும் மறந்தே போகிலும் உந்தன் நினைவை மட்டும் மறக்காது இருக்கச் செய்வாய் தாயே . வெள்ளை மயிர் வெள்ளை மயிர் ஒன்று க…

    • 4 replies
    • 1.7k views
  24. முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே!! உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்...! கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.