Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…

  2. எல்லாருக்கும் வணக்கம், யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது. நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்கள் நக்கல்களிற்கு நன்றி!

  3. Started by Paranee,

    சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்

  4. மேலே உள்ள திரியில் கடஞ்சா கூறுகிறார், ” காணொளி வடிவில் காணொளி வடிவில் காணொளி upload விட்டேன். எப்படி இணைப்பது? ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.” இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?

    • 22 replies
    • 3.9k views
  5. Started by மோகன்,

    அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்

  6. என்னடா ஜீவா இப்படி ஒரு கேள்வி கேட்குறானே என்று ஓடி வந்து பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி வெந்து போன அன்பர்களுக்கு சாறி.. :lol: ([size=3]வ்ந்தது தான் வந்திங்கள் கருத்தை சொல்லிப்போட்டு போங்கோ சரியா???????? [/size][size=3] [/size][size=3] [/size] [size=3] )[/size] நிர்வாகத்தினரிடம் ஒரு சின்ன வேண்டுகோள், கருத்துக்கள உறவுகள் பலர் அருமையான கருத்துக்களை எழுதும் போது அவர்களை ஊக்குவிக்க 3லைக்/(பச்சை) போதாமல் உள்ளது. இன்றைக்கெல்லாம் பலர் தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள் ஆனால் 3 மட்டும் போதாமல் உள்ளது ஆகவே இதை அதிகரிக்கலாமா? ஏதும் மாற்றம் செய்யலாமா? எத்தனையும் எவரும் குத்தலாம் என்ற முறையை கொண்டுவந்தால் என்ன? முடிந்தால் நிர்வாகம் இதை பரிசீலிக்கும்படி அனைவர்சார்பி…

  7. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2023 அன்று யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்கள் கடந்த வருட நடுப்பகுதியில் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். எனினும் யாழ் கள உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய, பல தொழில்நுட்பச் சவால்களுக்கு மத்தியிலும் பிற நிர்வாக உறுப்…

  8. யாழ் ஏன் மாற்றம் கொண்டது? உண்மை யாரறிவார்? நான் அறிவேன்.... நீல வர்ணத்தில் யாழ் புது முகம் கொண்டுள்ளது..... ஆண்கள் மீது கொண்ட அதீத அக்கறையில் தான் யாழ் தன்னை தானே மாற்றிக்கொண்டுள்ளது.... பெண்களுக்கு பிங் நிறமும் ஆண்களுக்கு நீல நிறமும் சுட்டிக்காட்டும் நிறங்களாக இருக்கின்றன...பெண்கள் பிங் கலரில் ஒரு களத்தை ஆரம்பித்து... ஓவரா பெண்ணியம் பேசுகின்றார்கள்... இதைப்பார்த்த யாழ் ஆண்களுக்காக தன்னைத்தானே நீலவர்ணத்தில் மாற்றிக்கொண்டுள்ளது... நாராயணா..........................

  9. ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி. எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁 அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த பச்சை புள்ளி விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல் பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டன…

  10. வணக்கம் , கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்பு…

  11. எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்.. நண்பர். திரு உடையார் அவர்கள் நான் எழுதிய எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி, அதற்கு புத்திமதி கூறியிருந்தார். மிக்க நன்றிகள், அதற்குத் தெரிவிக்கும் அதே வேளை, …

  12. காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது. இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி

    • 24 replies
    • 3.8k views
  13. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்…

  14. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்க…

  15. நேற்று யாழ்.களம் மாற்றங்களை செய்து.... புதிய சில முறைகள் அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது. உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது ஏன் என்று அறிய விரும்புகின்றேன். Sukuthar க்கு S என்று பிங்க் நிறத்திலும், Rajesh க்கு R என்று பச்சை நிறத்திலும், babuec 405 க்கு B என்று நாவல நிறத்திலும் உள்ளதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை அறியாவிட்டால், இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு. மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்…

  16. உங்க கருத்து பதிவுக எல்லாம் பாத்தேங்க . அதில நீங்க சிரிக்கிறீங்க , அழுவுறீங்க என்மோல்லாம் செய்யீறீங்க . நானும் கருத்துங்க எழுதிறப்போ சிரிக்கணும் . வழிசொல்லுவீங்களா கள உறவுகளே ?

  17. அடர் அவைக்குள் ஆதி நுழைந்து பதிவுகளை இட உதவி செய்யுங்கள். நகைச்சுவைப்பகுதியில் உள்ள ஆதியின் அடர் அவை அல்ல, blog உள்ளே புகுந்து எழுத முடியாமல் உள்ளது. ஆவன செய்யுங்கள்

    • 25 replies
    • 3.7k views
  18. யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." யாழ் இணையத்தில் ஏதோவொரு தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆர்வமாக கருத்தெழுதிவந்த பலபேரைக் காணமுடியவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, எனக்கு பதில் தெரியாமல், எனது நண்பனொருவனைக் கேட்டேன்... "ஏன்டா நீ யாழில் இப்ப கருத்தே எழுதிறதில்லை?" என்று. அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????] எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. நண்பர்களே! நமக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுவோம்! நம்…

  19. Started by paradesi,

    பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?

  20. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள். 1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? 2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது? 3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா? 4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்…

    • 23 replies
    • 3.6k views
  21. யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி. உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும். தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும், கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் . 1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? 2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்க…

    • 21 replies
    • 3.6k views
  22. வெட்டுங்க வெட்டுங்க ! நிறைய கடமை உணர்வு உங்களிடம்! அதில தப்பு இல்ல- கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா? எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்?? அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா? இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா? http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15 இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல .... அது உங்க சொந்த பிரச்சினை! மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள…

  23. என்னிடம் ஒரு பாடல் எம் பி பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் சினிமாவிலா அல்லது தனிப்பாடலா எதுவும் தெரியவில்லை அந்த பாடலை இங்கு பதிவிடலாம் என்றால் எப்படி பதிவிட்டு அதன முழுப்பாடலையும் அறிந்து கொள்வது என்றும் தெரியவில்லை ,பாடல் மேட்டு குர்பானி ஹிந்தி பட பாடல் மேட்டில் இருக்கின்றது ,ஆனால் அது தமிழில் இருக்கின்றது ,இந்தியாவின் கனவுக்கன்னி என்று தொடங்கு கின்றது ,இப்பாடல் பற்றிய விபரங்கள் ,இந்த பாடலுடன் வேறும் பாடல்கள் இதே இசைத்தட்டில் வெளிவந்தனவா ?அப்படி வந்திருப்பினவராயும் பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி

  24. Started by malu,

    அய்யா யாராவது எனக்கு உதவி செய்யுங்க நான் எப்படி கருத்துக்களுக்கு பதில் எழுதுவது. அன்புடன் மாலு தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழினி

  25. மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.