வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
பிரித்தானியாவில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இலங்கையருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனையும் அதன்பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 35வயதான தமிழரான இவர் ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இரவு கேளிக்கையகம் ஒன்றில் சந்தித்த யுவதியையே இலங்கையரான தமிழர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதிக மது அருந்தியமையால் குறித்த யுவதிக்கு சுயநினைவு இல்லாத நிலையிலேயே இலங்கையர் அவரை இரவு கேளிக்கையகத்துக்கு பின்னால் உள்ள தொடர்மாடிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட யுவதியின் உதவியுடனேயே குற்றம்புரிந்த இலங்கையர் கைது செய…
-
- 3 replies
- 917 views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது. விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல் திகதி: 02.07.2009 // தமிழீழம் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே தருகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதமான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கா…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாரிஸ் வீதியில் துரோகி பிள்ளையானின் வேட்கை எரிந்தது! துரோகிக்கு எங்கும் இடமில்லை! http://www.battinaatham.net/description.php?art=12853
-
- 3 replies
- 2k views
-
-
கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகின் அதிக நாடுகளில்.... அகதிகளாக வாழும் ஒரே இனம், ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள். உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.போர், உள்நாட்டுப் பிரச்சினை வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்த…
-
- 3 replies
- 2.4k views
-
-
இது இன்று கனடாவில், ரொரண்டோவில் இருந்து வெளிவரும் பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. பலர் இதற்கு தமது கருத்துகளை பின்னூட்டமாக பதிவு செய்து உள்ளனர். வாசித்து நீங்களும் உங்கள் பதிலை போடுங்கள். (register பண்ணினால் தான் உங்களால் பதிவை போட முடியும். உங்களிடம் இருக்கும் பல e mail accounts இல் ஒன்றினை கொடுத்து register பண்ணவும்) சிங்கள வாசகர்கள் பலர் ஆங்கில் புனை பெயர்களில் வந்து தம் இனவாத கருத்துகளை பதிகின்றனர். சர்வதேச ஊடகங்களில் எமது பிரச்சனைகளை தெளிவாக ஆங்கிலத்தில் போடுவதும் நாம் தேசிய போராட்டத்திற்கு செய்யும் சிறு பங்களிப்பு என்பதனை மறக்க வேண்டாம்) ஆக்கம் (இதில் வன்னி வீடியோக்களில் கண்ட கொடூரமான காட்சிகளையும் விபரித்துள்ளார்கள். கனடாவின் செய்திகளில் இப்படியான ஒன…
-
- 3 replies
- 1.8k views
-
-
(முகநூல்)
-
- 3 replies
- 561 views
-
-
காக்க காக்க கமரோன் கவிழ்க்க : ரதன் “Our lives, our homes, our liberties each day are made less secure because of unrestrained and unpunished police brutality.” —National Negro Congress, Petition Against Police Brutality, 1938 சில வாரங்களுக்கு முன்னர் பாரிசின் மெட்ரோ நிலையத்தில் நானும் எனது நண்பரும் நுழைவாயிலில் நின்ற போது, அமெரிக்காவைச் சேர்ந்த சில வெள்ளை நிற மாணவர்களும், ஒரு 35 வயது மதிக்க ஒருவரும் நுழைவாயில் உள்ளே செல்லும் கதவருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருவரிடம் நுழைவுச் சீட்டு இருந்தது. மற்றவர்களிடம் இல்லை. ஒவ்வொருவராக நுழைவுச் சீட்டை உள்ளே தள்ளும் போது கதவு திறக்கும். 35 வயது மிக்க வெள்ளை இனத்தவர் திறந்த கதவை இழுத்துப் பிடிக்க அனைவரும் நுழைவுச் சீட…
-
- 3 replies
- 1.1k views
-
-
அத்தனையும் கலைக்கப்பட்டு கனத்த மனத்தோடு மட்டும் நாடு கடத்தப்பட்டேனா? கலைத்ததால் வந்தேனா? விடை காண முடியாத கேள்விகள்!! தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்? ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலைக்குள் சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் தப்பி வந்தார்கள். இப்படித் தப்பிவந்தவர்களில் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
அன்புடையீர், நெதர்லாந்துப்பத்திரிகைகள் பலவற்றில், இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டில் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் இலங்கையில் இன்று வாழும் அனைத்துத்தமிழர்களும் என்று பல கட்டுரைகள் வந்துள்ளன. இது வரலாறு தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ எழுதி அனைத்துதமிழர்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் டென்காக் நகரிலுள்ள நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில், 4000 ஆண்டுகளிற்கு மேலாக இலங்கையில் வாழும் பழங்குடிமக்கள் ஈழத்தமிழர்கள் என்ற ஆதாரங்கள் பல உள்ளன. இவ் ஆதாரத்தை யாரும் அங்கு சென்று அதைப்பார்வையிடலாம். எனவே இவ் ஆதாரங்களைக் குறிப்பி;ட்டு கீழே எழுதப்பட்ட முன்மாதிரியான கடிதத்தை அப்பத்திரிகைகளிற்கு அனுப்புபவர்களின் முகவரி, கையெழுத்துடன் அன…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் மக்களுக்கு அவசர அழைப்பு திகதி: 17.05.2009 // தமிழீழம் பிரான்ஸ் வாழ் மக்களுக்கு அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினர் முற்றுகைத் தாக்குதல் ஒன்றை நடத்தி 25 ஆயிரம் வரையானமக்களைப் படுகொலை செய்து மேலும் 25 ஆயிரம் வரையான மக்களை படுகாயங்களுக்கு உள்ளாக்கி பெரும் வரலாற்றுப் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக பிரான்ஸ் நாடாளுமன்றம் (Invalide) முன்பாக அனைத்து மக்களையும் பேரெழுச்சியாக அணி தரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன் கூடியுள்ள நிலையில், ஏனைய மக்களையும் அணிதிரண்டு வன்னியில் ஏற்படவுள்ள பாரிய அழிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக அனைவரும்அணி திரளும…
-
- 3 replies
- 1.7k views
-
-
அண்ணா.. உன் கோபம் நியாயமானதுடா.. கலைஞனின் உழைப்புக்கு மதிப்பில்லா சமூகத்தில் பிறந்துவிட்டோம்.. ஒரு பத்திரிகையாளன் ஒருசினிமாப்பட கீறோவிலும் மேலாக கொண்டாடப்படுகிறான் நாம் புலம்பெயர்ந்த தேசங்களில்.. இந்த சமூகங்களில் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது.. என் சமூகத்தில்..? உன் கோபத்தில் இருக்கும் நியாயம் வெம்மையாக சுடுகிறது அண்ணா.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AvPxYzSdbIQ
-
- 3 replies
- 1.3k views
-
-
கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…
-
- 3 replies
- 996 views
-
-
இதில் யார் முட்டாள்கள்????? சில தினங்களுக்கு முன்னர் அரச பயங்கர வாத அரசாங்கத்தினால் அறிவக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றில்.............. வன்னி நிலப் பரப்பிலே வெறும் 70.000 மக்களே இருக்கிறார்கள் என கணக்கிடப் பட்டது அதன் பின் அது 30.000 ஆக குறைக்கப்பட்டது!!!!!. இப்போது 1இலட்சம் மக்கள் பாதுகாப்பு தேடி 2 தினங்களில் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக சொல்லுகிறார்கள்;. அது மட்டுமல்லாமல் சர்வசே கூடகங்களுக்கும் இதை அறிவித்திருக்கிறார்கள்!!! அதில் குறிப்பாக பி பி சி உலக சேவைக்கு இலங்கை பயங்கர வாத ராணுவத் தளபதி செவ்வி கொடுத்த போது இன்னும் .30.000 ற்கும் குறைவான மக்களே வன்னியில் இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை சொன்ன போது பி பி சி யும் அதை அப்படியே …
-
- 3 replies
- 2k views
-
-
‘தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பு - கனடா முன்னெடுக்கும் ஒரு கற்பனையின் அடிப்படையிலான செயற்றிட்டமாகும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள இளையோரின் பல்வேறு திறமைகளைத் தன்னார்வமுறையில் வெளிக்கொணர்ந்து அதனூடாக அவர்களின் நண்பர்களுடன் அவர்களைப் பேச வைப்பதே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோள். இதில் பங்குகொள்பவர் தமது கதையினை மற்றையோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு, தமது செயற்றிட்டத்தினை முயற்சிப்பதற்கு, அவர் எவ்வாறு அதனூடாக சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார் என்பது தொடர்பாக பேசுதல் பேன்றவற்குக்கும் மேடையில் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு பாடகர் தனது பாடலில் உள்ள கருத்தாழம் மிக்க சொற்களை அல்லது வரிகளை தமது பார…
-
- 3 replies
- 664 views
-
-
ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் (Arthavan Rehnu-Vasanthakumar, 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchange இல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://seithy.com/breifNews.php?newsID=124352&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 1.5k views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) The release of the UN Panel Report on Sri Lanka estimates that tens of thousands of civilians were killed during the final stages of the conflict between Sri Lankan forces and the LTTE in 2009. The three-member panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance. Navi Pillay, the UN High Commissioner for Human …
-
- 3 replies
- 955 views
-
-
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
வாகன ஓட்டுனர்களின் அவதானத்திற்கு.இது நேற்று இரவு நடந்தது.எனதுவீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றபோது அந்தச் சந்தியில் ஒரு பெரிய விபத்து. 3 மாதங்களுக்கு முன் எனது மைத்துனர் ஜேர்மனியில் இருந்து வந்து எனது மனைவி பிள்ளைகள் அவரது மகள் உடன் இதே கடைக்கு போகும் போது இதே இடத்தில் தான் அந்த விபத்தும் நடந்தது.விபத்து நடந்த அடுத்த நாள் எனது மைத்துனர் சொன்னார் தன்னால் நம்பமுடியாமல் இருக்கின்றது விபத்து நடந்த விதம். தான் கடைக்குள் திரும்ப சிக்னலை போட்டுவிட்டு நிற்க எதிரே வந்த காரில் ஒன்று நின்று தன்னை போகும்படி கையை காட்டியதாகவும் தான் திருப்ப அந்தகாருக்குகு பின்னால் நின்ற வேறொரு கார் நின்ற காரை கடந்து அசுர வேகத்தில் வந்து தனது காரை இடித்ததாத சொன்னார்.இவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது. டிப்ஸ் -2: தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல்…
-
- 3 replies
- 12.9k views
-
-
10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தமாக தங்க அனுமதிக்கும் கனடா: உலகநாடுகள் மகிழ்ச்சி! எதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெ…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார். இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலை…
-
- 3 replies
- 895 views
-
-
தென்றல் தொலைகாட்சி புலம்பெயர் மக்களின் உளம்தொட வருகிறது…. தென்றல். உலகத் தமிழரது உணர்வுகளின் தரிசனம்…..தென்றல் தொடர்புகளுக்கு 0049 1632332239 வீசும் காற்றாகும் பேசும் தமிழாகும் நாளும் உமதாகும் காத்திருங்கள் பரிசார்த்த ஒளிபரப்பு ""Nepali TV" மாலை 19.00 22.00 Satellite - Eutelsat Hotbirds -13° East Frequency - 11727 MHz. Symbol rate - 27500 Polarity - V FEC - 3/4 http://www.tamilvoice.dk/nyheder1407200844.htm
-
- 3 replies
- 1.6k views
-