Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வர…

  2. "மெய்யெனப் படுவது" இப்பகுதியிலே ஆழமான பல கருத்துக்கள் சிறந்த முறையில் எம் யாழ் கள உறவுகளால் ஆராயப்பட்டு வருவது சிறப்பாக இருக்கிறது. சிலவற்றைப் படித்தேன், பல இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆராய்வதே மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவின்(6வது அறிவு என்று நாமே செல்லிக்கொண்டிருப்பது) சிறப்பு. காரணம் இல்லாமலோ அல்லது காரணம் தெரியாமலோ எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பன் சிந்திக்கும் மனிதனாக இருக்க முடியாது. மனிதானாய் வாழ்வதற்கும், மந்தையாய் இருப்பதற்கும் இதுதான் வேறுபாடு. இங்கு தற்போது எனது சந்தேகம்: தமிழகத்தில் பொதுவாக பார்த்தால் எமது ஈழப்பிரச்சினைக்கு நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வரும் அமைப்புக்களின் பின்னணியில் திராவிடக் கொள்கை இருப்பது தெ…

  3. நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் ..பல குரல்களில் சிவ புராணம் (By SPB)

  4. அனைத்து மதத்தவரும் விரும்பும் அன்னை வேளாங்கண்ணித் திருவிழா! நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பேராலயத்தில் ஆண்டு விழாக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 29 - ம் தேதி கடல் போல் கூடிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் கொடியேற்றப்பட்டுத் தொடங்கப்பட்ட திருவிழா, மேரி மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ம் தேதி நேற்று மாலையுடன் கோலாகலமாக நிறைவுற்றிருக்கிறது. வங்காள விரிகுடா கடற்கரையோரம் பனை மரங்கள் சூழ்ந்த, கடற்காற்றும் வீசும் பரவசமான சோலையில் அமைந்திருக்கிறது புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். இயேசுநாதரின் தா…

  5. இந்து சமயத்திலை புராணக் கதைகளுக்கு குறைச்சலில்லை. அப்படித் தான் அண்டைக்கு ஒரு கதை கேட்டன். அது பிள்ளையாருக்கு எப்படி யானை முகம் வந்தது எண்டதைப் பற்றினது. அந்தக் கதையைக் கேக்க எனக்கு மகாவம்சத்திலை இருக்கிற கதைகள் தான் ஞாபகம் வந்தது? நான் அந்தக் கதையைச் சொல்ல முன்னம் ஆராவது இதைப் பற்றின கதை அல்லது கதையள் தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ.....

    • 2 replies
    • 1.9k views
  6. எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது. * பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள். * பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு. * மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும். * எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர…

  7. வர்ணமும் ஆஸ்ரமமும் செம்பரிதி அறிமுகம் பண்டைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நான்கு அடுக்குகளைக் கொண்ட இரு வகைச் சமூகப் பகுப்பமைப்பு என்று வர்ணாசிரம தர்மத்தைக் கூறலாம் இங்கு வர்ணம் என்பது வர்க்கத்தையும், ஆஸ்ரமம் என்பது தனிமனித வாழ்வுநிலையையும் குறிக்கின்றன. இந்த இரட்டைக் கோட்பாடு நடைமுறை இந்து சமயத்தின் தூண்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. நான்கு வர்ணங்கள் இவை- 1.பிராமண 2.க்ஷத்திரிய 3.வைஸ்ய 4.சூத்திர நான்கு ஆஸ்ரமங்கள் இவை 1.பிரம்மச்சரியம் 2.கிருஹஸ்தம் 3.வனபிரஸ்தம் 4.சந்நியாசம் ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்ற…

    • 1 reply
    • 1.9k views
  8. பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.…

  9. பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm

  10. நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் …

  11. ஈழத்தமிழர்கள் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு திணித்து வரும் ஆக்கிரமிப்புப் போரால் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் வடக்கிக் கிழக்கு மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் அகதிகளாகியும் சிறைப்பட்டுப் போயுள்ளனர். அதுமட்டுமன்றி சிங்களப் படைகளால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் வன்முறை ரீதியாகப் பறிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டு இந்திய மற்றும் சீன குத்தகைக்காரர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமன்றி இலங்கையில் தமிழர் தாயக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் சிங்கள அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இராண…

    • 5 replies
    • 1.9k views
  12. மூடப்பழக்கத்தை கைவிடுங்கள் அரவானிகளுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. கோரிக்கை தாம்பரம், மே 5- கூவாகத் விழா வில் தாலி அறுக்கும் மூடப் பழக்கத்தை அரவானிகள் கைவிட வேண்டும் என்று கனி மொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார். சென்னையை அடுத்த தாம் பரம் பீர்க்கங்கரணையில் அர வானிகளுக்கென தனி நல வாரியம் அமைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி பேசிய தாவது: தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று அரவானிகளும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த நிலை, திராவிட இயக்கம் மூலமாக தந்தை பெரியார், முதல்வர் கலைஞரால் மாறி இருக்கிறது. பெண்களை விட மோச மான நிலையில் வாழ்ந்து வரு கிறீர்கள். பெண்கள் மீது குடும்ப வன் முறை, பாலியல் பலாத்காரக் கொடுமை …

    • 5 replies
    • 1.9k views
  13. சைவமும் கலையும் பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன. அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன. சமய வாழ்வின் தொடக்க நிலையினை பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை தாரமாகக் கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளக்கினார். மக்கள் ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார…

  14. சோதிடப்புரட்டுக்கள்!!! சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் காண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்.. (1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன. (2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு, கேது கோள்கள…

  15. கிறிஸ்துமஸ் சிறப்பு : இயேசு கிறித்துவின் பிறப்பு டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வரும் பண்டிகை கிறிஸ்துமஸ். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இப்பண்டிகையைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெப்உலகம் வாசகர்களுக்காக ஆன்மீகம் - கிறிஸ்துமஸ் சிறப்பு பகுதியில் அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதியில் இயேசு கிறித்துவின் பிறப்பு, இயேசு பிறப்பின் தூது, இயேசுவின் பொன்மொழிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், விசேஷ ஆல்பம்..... என இன்னும் பல சிறப்பு பகுதிகள் ஒவ்வொன்றாக இடம் பெற உள்ளது. இனி, கட்டுரைக்குச் செல்வோமா... உலக வரலாற்றில் புகழ்பெற்ற பேரரசர்களில் இஸ்ரவேலை (ஈச்ரஎல்) ஆண்ட சாலமோன் (Kஇங் ஸொலொமொன் - 975 BC) ஒருவர் என்பதை யாவரும் அறிவோம். அவருக்குப் பின் இஸ்ரவேல…

    • 0 replies
    • 1.9k views
  16. தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.) தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்க…

  17. வணக்கம், நான் நேற்று விஜய் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய சுவாமிகள் பிரேமானந்தா அவர்களின் பிரத்தியேக பேட்டி | விபரணப்படத்தை பார்த்தேன். ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னரே இவர் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைக்கின்றேன். பலவித குற்றங்கள் சுமத்தப்பட்டு கூடாத ஓர் மனிதராக விபரிக்கப்பட்ட இவரது வாழ்க்கையினை இன்னுமோர் கோணத்தில் பார்க்கின்றது இந்த விபரணம். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இங்கும் குறிப்பிட்ட விபரணப்படத்தை இணைக்கின்றேன். வலைத்தளத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தேடல் செய்தபோது தமிழ்மழை இணையத்தில் இவை காணப்பட்டன, நன்றி. http://www.youtube.com/watch?v=zFJ05kWtAdk http://www.youtube.com/watch?v=mzjlLkGJC3o http:…

  18. "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 01 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர், இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு ஆண்டுகள் வன வாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர். மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில் இவன் ஒருவன் என்றும் இராவணனுக்கு முன் இலங்கையை மனு, தாரக, பாலி [Manu, Tharaka, and Bali] ஆண்ட…

  19. உண்மையான வெற்றி பரமஹம்ச சிறீ நித்யாந்தர் தங்கப் பதக்கம்! மாடமாளிகை! சௌகரியமான வாழ்க்கை! பதவியென்னும் கிரீடம்! இவற்றில் ஏதாவதொன்றில் சாதித்துவிட்டால், வாழ்வில் வென்று விட்டோம் என்று அர்த்தமா? புத்தரிலிருந்து ரமணர் வரை இந்த வெற்றிகளையெல்லாம் உண்மையான வெற்றி என்று சொல்லவில்லையே! அப்படியானால் உண்மையான வெற்றிதான் எது? ‘தன்னை வெல்லும் வெற்றியே, உண்மையான வெற்றி’ என்கிறார்கள் ஞானியர்கள். இதற்கு மிகச் சரியான உதாரணம் புத்தர். அங்குலிமால் மிக விசித்திரமானவன். ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு விரல் என்று ஆயிரம் விரல்களால் கோர்க்கப்பட்ட ‘விரல் மாலையை’ தான் அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு குரூர ஆசை அவனுக்கு. அதுவரை 999 பேரைக் கொன்றுவிட்டான…

    • 4 replies
    • 1.9k views
  20. கடவுள் வாழ்த்துகொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமேஉயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழகு 13. ஃகமும் காசும் சிக்கெனத் தேடு

  21. உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள். அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்தார்கள். இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன. அங்கு பேசிய புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்.. 1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் ப…

    • 19 replies
    • 1.9k views
  22. மதுவெறியனை மாற்றும் மந்திரம் மனிதன் மதுவை குடிக்கிறான் என்றாலும் உண்மையில் குடிக்கப்படுவது மதுவல்ல. மனிதனின் வாழ்க்கைதான், மதுவில் கிடைக்கும் சுகங்களைப் பற்றி பகிரங்கமாக குடிகார்கள் பேசுவதை காதுபட கேட்கிறோம், சில திரைப்படங்களில் மது அருந்துவது சாதாரண மனிதனை கூட ராயல் சொசைட்டி வாசிகளாக மாற்றி விடுவதாக மாயப்பிரச்சாரம் செய்யப்படுகிறது, உண்மையில் மது மனிதனின் மனிதத்தன்மையை கெடுத்து மிருக நிலைக்கு தள்ளிவிடுகிறது, இன்னும் எத்தனையோ கொடுமைகளையும். கஷ்டங்களையும். கேவலங்களையும் அடுக்கி கொண்டே போகலாம், மதுப் பழகத்தின் கொடுமை. மது அருந்துபவர்களுக்கு தெரியாதா என்றால் நிச்சயமாக அவர்கள் அதன் கொடுமையை நன்கு உணர்ந்தே தொடர்ந்து அந்த பழக்கததில் ஊறிக்கிடக்கிறார்கள் என்…

  23. வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பகபூர்வமாக இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலய திருவிழா தேர்தல் காலத்தில் இடம் பெற்றமையால் அரசியல்வாதிகளான மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் வட மாகாண ஆளுநர் பளிகக்காரா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ.நடராஜாவும் கலந்துகொண்டார்கள். t: http://www.malarum.com/article/tam/2015/08/13/11375/மாவிட்டபுரம்-கலந்துசுவாமி…

    • 5 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.