மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி ஆனந்த குமாரசாமி தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ - திருவாசகம், XII, 14 ”தோழியே, தேன் நிரம்பிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த தில்லையின் சிற்றம்பலவன் திருநடனம் ஆடுகிறானே, அது ஏனடி?” நடராஜர் – சிவனுடைய பெயர்களில் தலை சிறந்தது இதுவே; ஆடல்வல்லான், ஆடல் அரசன், கூத்தன். பிரபஞ்சமே அவனது அரங்கம், அவன் ஆடல்களோ எண்ணற்றவை, ஆடுவதும் அவனே, அதைக் காண்பதும் அவனே – கூத்தன் தமருகம் கொட்டிய கணமே ஆர்த்து வந்திடுவர் ஆட்டம் காண்போர் மூர்த்தி அபிநயம் முடித்திட அகல்வார்; அவனும் வார்த்தை அற்று ஏகனாய் வதியும் இன்பத்திலே (1) “கூத்தன் தமருகம் கொட்டிய கணம், அவன் ஆடல் காண வந்தனர் அனைவரும்; அவன…
-
- 0 replies
- 2.2k views
-
-
புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம். இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொ…
-
- 0 replies
- 636 views
-
-
இந்து என உணர்தல் - ஜெயமோகன் March 29, 2021 உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன். பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆழ்படிமமும் இந்து மரபும் - ஆசானின் பொய்ப்பிரச்சாரம் ஆர். அபிலாஷ் ஆசான் பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு கருத்து இந்து மதமே நமது பண்பாட்டை கட்டிக் காக்கிறது, நமது கோயில் வழிபாட்டு பண்பாட்டுக்குள்ளே ஆழ்படிமங்கள் உள்ளன, பகுத்தறிவுவாதிகள் இந்த மரபை தாக்குவதன் வழியாக ஆழ்படிமங்களை இல்லாமல் பண்ணி, இந்தியாவின் ஆன்மாவை அழித்து விடுவார்கள் என்பது. இப்போது “படிமங்களின் உரையாடல்” என இதையே திரும்பவும் எழுதியுள்ளார். எந்த தர்க்க நியாயமும் இல்லாத கற்பிதம் இது. ஏனென சொல்கிறேன். ஆழ்படிமம் / தொல்படிமம் (archetype) என்பதை உளவியலில் முக்கியமான ஒரு கருத்தாடலாக உருவாக்கியவர் கார்ல் யுங். அவர் எங்குமே …
-
- 0 replies
- 496 views
-
-
வி. சங்கர் பிபிசி தெலுங்கு மொழி சேவைக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் யேர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது. இந்தக் கோயில் ஆணின் பிறப்புறுப்பு போன்ற லிங்க வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது. …
-
- 0 replies
- 485 views
-
-
உலகவாழ் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு! உலகவாழ் இந்துக்களால் இன்று (வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன. சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடு…
-
- 2 replies
- 457 views
-
-
சைவ சமயமும்... வாழைப் பழமும். எப்போதும் இறைவழிபாட்டுப் பொருட்களில் வாழைப்பழம் தவறாறு இடம் பெற்று விடுகின்றது. பழம் பாக்கு வெத்திலை தேங்காய் என்று சொல்லும் போது கூட அங்கே பழம் என்று சொல்லப்படுவது வாழைப் பழத்தைத் தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றார் திருவள்ளுவர். எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வா…
-
- 4 replies
- 815 views
-
-
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. தவக்காலத்தின் போது ஒரு வேளை மட்டும் உண்பது, இரு வேளை பட்டினி கிடப்பது, மாமிசம் உண்ணாமலும் மது அருந்தாமலும் இன்ன பிற கேளிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பது வளமையாகும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 1.8k views
-
-
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று) January 27, 2021 — விஜி/ஸ்டாலின் — இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில் அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும், சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத்…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உ…
-
- 5 replies
- 1.5k views
-
-
பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது. இவை அனைத்தும் நடப்பது மருத்துவமனைகளில் அல்ல. மண்டபங்களில் பட்டால் படாடோபமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேடைகளில். உங்களைப் பரிபூரணப்படுத்தும் அற்புத சுகமளிக்கும் ஆன்மிக ஜெபக்கூட்டங்களில்தான் இத்தனை களேபரங்களும். சிறப்பு ஆவி அழைப்புப் பொதுக்கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சொஸ்த சபைகள், யேசு அழைக்கிறார், யேசு விடுவிக்கிறார், பரிசுத்த ஆவியின் தூய எழுப்புதல் கூட்டங்கள் என்று விதவிதமான பெயர்களில் அப்பாவி மக்களை மதிமயக்கி காசுகளைக் கொள்ளையடிக்கும், மதச்சாயத்தில் முக்கி எடுக்கப்பட்ட மல்டி லெவல் மார்கெட்டிங் மாயைகளை …
-
- 1 reply
- 1k views
-
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர். https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/23140551/2288289/tamil-news-palani-thaipusam-devotees-kavadi.vpf
-
- 0 replies
- 517 views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத்துவங்களை எல்லாம் தாண்டி கள உறவுகளான நமது சுய சிந்தனையில் உதித்த நல்ல சிந்தனைகளை…
-
- 50 replies
- 5.4k views
-
-
தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன் 01/03/2021 இனியொரு... அத்தியாயம் 1 பாசிசவியல் ஒரு கதம்பம், இருந்த போதும் அது ஒரு தேசிய முழுமை பாசிசவியலானது, தனக்குத்தானே முரண்பாடுகளைக் கொண்டுள்ள சித்தாந்தங்களினதும், முக்கியத்துவமிக்க நிர்வாக, நிறுவன, பொருளா தார மற்றும் சமூக நிர்பந்தங்களினது கட்டளைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய முறையில், சித்தாந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைத் திருத்தங் களினதும் அபூர்வமானதோர் கலவையாக பார்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. பாசிசவியல், முன்பின் முரண்களின் அபூர்வ கலவை ஹிட்லரும்A1, முசோலினியும்M2 கடந்து போன நிகழ்வுகளாகும். ஆனால் பாசிசவியல் ஒரு கடந்துபோன நிகழ்வல்ல. அது கடந்த காலத்தில் இருந்தது, …
-
- 0 replies
- 498 views
-
-
2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நு…
-
- 40 replies
- 3.9k views
-
-
சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020 றின்னோஸா Santa Claus | Christmas நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. சான்டா இல்லாமல் கிறிஸ்துமஸ் பூரணமடையாது. கிபி 280-ல் நிக்கோலஸ் என்ற ஒரு பாதிரியார், தற்போது துருக்கி என அழைக்கப்படும் Myra எனும் இடத்தில் வாழ்ந்தாராம். அவர் மிகவும் கருணயுள்ளவராகவும் தன்னிடம், உள்ள எல்லா பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பவரா…
-
- 0 replies
- 487 views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம் ‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது. உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும…
-
- 0 replies
- 956 views
-
-
குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா! சிந்து ஆர் போலீஸார் காவடி கட்டும் நிகழ்வு குற்றங்கள் குறைய போலீஸ் அதிகாரிகளும், விவசாயம் செழிக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேளிமலை குமரனை வழிபட காவடி கட்டிச் செல்லும் விழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில் முருகப் பெருமானும், சுமார் ஐந்தரை அடி உயரத்தில் வள்ளி பிராட்டியும் கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். நம்பிராஜனின் மகளாக வளர்ந்த வள்ளி தேவியை …
-
- 0 replies
- 503 views
-
-
அவசரமா வெங்காயம் வாங்க பக்கத்தில் இருந்த தமிழ் கடைக்கு போயிருந்தேன்... கடையை முற்றிலுமாக நேர்த்தியாக மாற்றி அமைத்து இருந்தார்கள் ... கூடவே காசாளர் மேசையில் 2 பெரிய தங்க நிறத்திலான தொப்பை வண்டியும், மொட்டை தலையுமாய், கோணலாக சிரித்தபடி பெரிய சிலைகள். திருநீறும் குங்குமமும் , கௌரி காப்புமாய் நெளிந்த கடைக்கார அக்காவிடம் கேட்டேன், இதெல்லாம் யார் என்று. அவர் போட்டாரே ஒரு போடு .. இவர் தான் குபேரன், இவரை வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்று... நான் அவாவிடம் கேட்டேன் அப்போ; இவ்ளோ நாள் நான் வைத்திருந்த லக்ஸ்மி அக்காவுக்கு என்ன கெதி என்று. சிலையில் தெரிந்த குபேரனை போல கோணலாய் சிரித்தார். அவாவுக்கு சொன்னேன்... இது குபேரனும் இல்லை, குப்பனும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மனதை கட்டுப்படுத்த சில வழிகள்.! 1 . மனித மனமானது மரம்விட்டு மரம் தாவும் குரங்கைப்போன்றது அது நிலைகொள்ளாமல் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவிற்கு தாவக் கூடியது 2.மனம் நம் சொல் கேட்பது என்பது நாம் ஒன்றைப்பற்றி நினைக்கக் கூடாது என்றால் நினைக்காமல் இருக்கும் நிலையாகும். 3.மனதை கட்டுப்படுத்த முதல் வழி காலையும் மாலையும் யோகாசனம் செய்ய வேண்டும் 4.யோகாசனம் என்றால் அதிகம் உடலை வளைத்து செய்வதல்ல முதலில் மூச்சுப்பயிற்சி ் 5.மூச்சுப்பயிற்சி என்பது நம் வலது கையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரல் கொண்டு மூக்கின் இடப் புறமாக சுவாசத்தை இழுத்து வலப்புறமாக விட்டு பின் வலப்புறமாக சு…
-
- 0 replies
- 790 views
-
-
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வர…
-
- 18 replies
- 1.9k views
-
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்? யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்? யார் உன்னை கொல்ல முடியும்? ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள். எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 722 views
-
-
இந்துக்களின் புனித நூல் எது? இந்துக்களின் புனித நூல் எது? உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புன…
-
- 2 replies
- 5.5k views
-
-
ஒரு புரட்டின் வரலாறு ஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின்…
-
- 0 replies
- 507 views
-
-
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம். மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள். முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகார…
-
- 2 replies
- 1.2k views
-