சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்! உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. …
-
- 0 replies
- 2k views
-
-
தங்களின் 17 மாத ஆண் சிங்கக் குட்டியை சா... குழந்தையை பல்வேறு கொடூர வழிமுறைகளில் துன்புறுத்திக் கொன்ற மேற்கு லண்டனைச் சேர்ந்த ஆசியப் பெற்றோருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. கொலைக்காரப் பெற்றோர். http://news.bbc.co.uk/1/hi/england/london/6983491.stm -------------- இப்படிப்பட்ட பெண்களும் ஆண்களும் உலகத்தில இருக்கிறாங்க தானேப்பா. ரெம்ப அவதானமாத்தான் இருக்கனும் உலகத்தில..!
-
- 8 replies
- 2k views
-
-
என் நண்பி இண்டைக்கு என்கிட்டே அழுது கொண்டே கேட்டதையே தலைப்பாக போட்டு உங்க கிட்ட கேட்கிறன்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்றது என்று தெரிய வில்லை SO உங்க கிட்ட ஆலோசனை கேட்பதற்காக இதை எழுதுறன் ... அவள் யாழ் இல் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படிச்சு கொண்டு இருக்காள். வழமையாக தன் நண்பிகளுடன் சென்று வாறவள் இன்று நண்பி கோவிலுக்கு போனதால இவள் மட்டும் தனியாக நண்பகல் அளவில் வீடுக்கு வந்து கொண்டிருந்தாள். வீதியிலிருந்து வீடுக்கு திரும்புற ஒழுங்கைல திரும்ப முற்படும் போது பின்னால மோட்டார் சைக்கிள் வந்த ஒரு இளைஞன் படார் என இவள் முதுகில் அடிச்சு விட்டு போய் விட்டான் இவள் அதை எதிர்பார்க்கதால மிகவும் பயந்து விட்டாள் EVENING முழுக்க ஒரே அழுகை இரவு என் கிட்ட சொல்லி அழுதாள்... கடந்த …
-
- 22 replies
- 2k views
-
-
குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…
-
- 0 replies
- 2k views
-
-
மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.. பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுட…
-
- 18 replies
- 2k views
-
-
ஆண் பெண் நட்பு பற்றி இளந்தலைமுறையினரின் பார்வை ‐ சொக்கன் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் மூன்று விதமான தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.1984‐1985 வரை புலம்பெயர்ந்த தமிழர்களில் 50வயதிற்கு மேற்பட்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளைக் கண்டவர்களாகவும், திருமணத்திற்குரிய வயதை அடைந்த பிள்ளைகளைக் கொண்டவர்களாக ஒரு தலைமுறையினரும்.இiளுஞர்களாக திருமண வயதை அல்லது பருவ வயதை அடைந்த வயதுப்பிரிவினர் இரண்டாவது தலைமுறையினராகவும்,குழந்தைகள் அல்லது சிறுவர் என்ற மூன்றாவது தலைமுறையினராகவும் இருந்து வருகின்றனர். இன்றைய சமகால இளந்தலைமுறையினர் தமது அடுத்த வாழ்நிலையான திருமண வாழ்க்கை பற்றி சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்…
-
- 0 replies
- 2k views
-
-
(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த த…
-
- 9 replies
- 2k views
-
-
'என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்... 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள். 2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய வி…
-
- 23 replies
- 2k views
-
-
அண்மையில் ஒரு நிகழ்வு தொடர்பான இணையக் கதையைப் படிச்சிருந்தேன். அது எனது மனதில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண்.. திருமண வயதில். சுமாரான அழகு. நல்ல படிப்பு. அவளுக்கு இயற்கையாக ஒரு சின்னக் குறைபாடு. உதட்டுப் பிளவு. அவளின் பிற குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் அது உள்ளது. அவளை திருமணம் செய்ய வருபவர்கள்.. அந்தக் குறையை நிறையாக பார்க்கவில்லை. குறையாகப் பார்த்ததால்.. அவளுக்கு திருமணம் சரிப்பட்டு வரவில்லை. அந்தப் பெண்ணிற்கோ.. இரட்டைக் கவலை. ஒன்று தனது தோற்றம் பற்றியது. இரண்டு எதிர்கால வாழ்க்கை பற்றியது. அறிவியலோ.. சொல்கிறது.. இது ஒரு பரம்பரை சார்ந்த நிலை என்று. மனிதமோ சொல்கிறது.. பாவம் அந்தப் பெண் என்று..??! அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இரு…
-
- 19 replies
- 2k views
-
-
{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…
-
- 2 replies
- 2k views
-
-
வெற்றிக்கு என்ன வழி? இன்றைய சூழ்நிலையில் - வாழ்க்கை வேகமாக மாறிவிட்ட அல்லது அவதியாகிவிட்ட சூழ்நிலையில், கீழே உள்ள மூன்று செயலுக்கும் உற்பட்ட சொற்கள் பிறரைச் சரியாகச் சென்று அடையாது. 1. இப்படி நடந்தால் நல்லது என்ற புத்திமதிகள் (அறிவுரைகள்) 2. எங்கள் காலம் அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்ற அனுபவச் சொற்றாடல்கள் 3. எதிர்பார்ப்புக்கள் (உதாரணம் - பிள்ளைகள் வளர்ந்த பிறகும் நம்து பேச்சைக் கேட்பார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள் அல்லது வந்த மருமகள் கடைசிவரை மரியாதையாக/அன்பாக இருப்பாள் என்பது போன்ற எதிர்பார்ப்புகள்) வெற்றிகரமான வாழ்க்கையின் சாராம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லலாம் 1. Life is nothing but adjusting with the people …
-
- 1 reply
- 2k views
-
-
இயற்கையும் அதிசயங்களும் இயற்கையின் அதிசயங்கள் பல. அவற்றை கண்டும் கேட்டும் ஏன் அனுபவித்தும் அதிசயித்திருப்போம். உண்மைகளை கண்டறியாத கண்டறிய முடியாத நிலையிலும் அவை எமக்கு சில படிப்பினைகளைத்தருவதாகவும் ஏன் சுட்டிகளாகவும் இருந்திருக்கும். இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேசலாம் என விளைகின்றேன். தங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். 1- காகமும் குயிலும் ஒரே நிறமுடையவை. இதைப்பாவித்து குயில் செய்யும் சேட்டை என்ன வெனில் தனது முட்டைகளைப் பெற அல்லது பராமரிக்க தான் எந்தவித கூடும் கட்டுவதில்லை. காகத்தின் கூட்டுக்குள் முட்டைகளைப்போட்டுவிட்டு சென்றுவிடும். இதில் இன்னொரு அதிசயம் என்னவெனில் குயில் காகத்தின் கூட்டுக்குள் முட்டையிட முன் எத்தனை முட்டைகள் கூட்டுக்குள் இர…
-
- 8 replies
- 2k views
-
-
நான் வியாழக்கிழமை, மின்சார தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வண்டி, கோடம்பாக்கம் நிலையத்திலோ மாம்பலத்திலோ நின்று கொண்டிருந்தாக ஞாபகம், வண்டியின் சாளரம் வழியாக பார்க்க நேர்ந்தது, மேல்நிலை படிக்கும் மாணவி வயதில் ஒரு பெண், பார்த்தாலே எந்த தவறும் செய்யமாட்டார் எனும் முகம், அவர் ,இரண்டு பெண் பயணசீட்டு பரிசோதகர்களின் பிடியில் மாட்டி கொண்டு , கண்ணீர் விட்டு அழுது கொண்டே தனது பர்ஸில் பணத்தை தேடி கொடுத்து கொண்டு இருந்தார். மாதந்திர பயணசீட்டோ/ பயணசீட்டோ வாங்காததையோ/ அல்லது மறந்து வைத்து வந்துவிட்டதையோ நினைத்து அழுதாரோ அல்லது இப்படி அவமானமாக நடைமேடையில் நிற்க வேண்டிதாய்விட்டதே என நினைத்து அழுதாரோ தெரியவில்லை. ரொம்ப வருத்தமாய் இருந்தது. இதே இடத்தில்…
-
- 7 replies
- 2k views
-
-
யோகாவும் ஏமாற்று வித்தையும் : இராமியா 06/23/2015 இனியொரு 35 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மூர்மார்க்கெட் கலகலவென்று இருந்த சமயம். ஒரு நாள்அந்த வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். ஒருவர் அறுந்த பிளாஸ்டிக் செருப்பை ஒட்ட வைக்கும் இரசாயனப் பொடி என்று கூவி விற்றுக் கொண்டிருநதார். அப்பொழுது நான் அணிந்திருந்த பிளாஸ்டிக் செருப்பு அறுந்து இருந்தது. அவா¢டம் அதைக் கொடுத்துச் சரி செய்யச் சொன்னேன். அவரும் தன்கையில் இருந்த இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அந்த இரசாயனப் பெடியில் (!) தோய்த்துச் செருப்பின் அறுந்த பாகத்தை இணைத்துப் பழுக்கக் காய்ச்சிய அதன்மேல் வைத்த உடன் அறுந்த பாகங்கள் ஒட்டிக் கொண்டன. செருப்பு நேரான மகிழ்ச்சியில் அந்த அதிசயப் பொடியை இரண்டு பொட்டலங்கள் வாங்கிக் கொ…
-
- 2 replies
- 2k views
-
-
படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா?? சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது. அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள் படித்து பட்டம் பெற்று தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் அனுபவரீதியாக எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது... இது பற்றி பேசலாம்.... அதற்கு முன் கிருபன் நிழலி Justin நெடுக்கு... இவர்கள் எழதிய கருத்து இவை.. இன்றல்ல என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது அதேநேரம் ஒரு காலத்தில் பணம் குவிக்கும் பட்டமாக இருந்த வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா?? அல்லது வேறு பட்டங்கள் அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் லாபகரமாக ஓடுகின்றனவா.....?? இங்கும்…
-
- 17 replies
- 2k views
- 1 follower
-
-
நைஜீரியாவை சேர்ந்த நீதிபதி ஒருவர் முதல் மனைவி மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் தான் தந்தை கிடையாது என்பதை DNA பரிசோதனை மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். Okorodas என்பவர் நீதிபதியாக உள்ளார். இவருக்கும் Celia என்ற பெண்ணுக்கும் திருமணமான பின்னர் மூன்று பிள்ளைகள் பிறந்தது இந்த நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் விவாகரத்து பெற்று 11 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர் இதன் பின்னர் Okorodas இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் முதல் மனைவியின் மூன்று பிள்ளைகளுக்கான கல்வி செலவை அவர் ஏற்று வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் Okorodasக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, Celiaவுக்கு பிறந்த மூன்று பிள்ளைகளுக்கு அவர் தந்தையில்லை என்ற செய்தி…
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா ? இக்பால் செல்வன் Director Jennifer Siebel இன்றைய உலகச் சந்தையில் விற்கப்படும் பல பொருட்களில் பெண்ணின் தேகங்களும் ஒன்றாகி விட்டது என்பதில் ஐயமே இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு உலகம் இன்று ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் செய்தி தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், விளம்பர பதாகைகள் எனக் காட்சி ஊடகங்களே தினந்தோறும் நமது வாழ்வினை பெருமளவில் பாதிக்கின்றன. மனித இனத்தின் இருப்பை ஊடகங்கள் தரும் தகவல் பறிமாற்றங்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் நாம் இன்று பெறுகின்ற தகவல்கள் அனைத்தின் நன்மை, -தீமைகளை, உண்மை - பொய்களைத் தீர்மானிக்க…
-
- 4 replies
- 2k views
-
-
திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும்…
-
- 9 replies
- 2k views
-
-
வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.” உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார். அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று. இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம். அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது.. http://www.ilaignan.com/1917 ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன…
-
- 21 replies
- 2k views
-
-
யாழ்பாணத்தில் இப்பொது வாள் வெட்டு என்பது அடிக்கடி நடக்கின்ற ஒரு நிகழ்வாகும். இதில் பல அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் குழுக்களுக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு பிரசின்னை தான் வாள் வெட்டு வரை போகின்றது. வாள் வெட்டில் ஈடுபட்ட சில நபர்கள் கைது செய்து (பெரும்பாலானவர்கள் கைது செய்யபடுவது இல்லை) சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், சில நாட்கிளில் அவர்கள் பிணையில் வந்து தங்களது திருவிளையாடல்களை மீண்டும் ஆரம்பிகின்றார்கள். அத்துடன் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களையும் அச்சுறுத்தி வருகிறர்கள் (சாட்சி சொன்னவர்களுக்கும் வாள் வெட்டு). இந்த கலாச்சாரத்துக்கு மூல காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன? இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செ…
-
- 20 replies
- 2k views
-
-
திருமணத்தின் பின்பு மாமியார்-மாமனார்-மருமகள்-மருமகன் இடையில் வரும் பிரச்சனைகள் இல்லாத வீடே குறைவு எனலாம். இப்படியான பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்று உங்கள் அபிப்பிராயங்களை அறியத்தருவதோடு, நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவி உங்கள் அம்மா அப்பாவுடன் எப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும், பெண்ணாக இருந்தால், கணவர் எவ்வாறு உங்கள் அம்மா அப்பாவை நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை எழுதலாம். நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக உங்கள் மாமா மாமியுடன் இருப்பவர்கள் ஆனால் எவ்வாறு அவர்களை அனுசரித்து போகின்றீர்கள் என்று அறியத்தந்தால் மற்றவர்களுக்கு ( அவர்களுக்கு தேவைப்பட்டால் ) உதவியாக இருக்கும்.
-
- 5 replies
- 2k views
-
-
பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்
-
- 8 replies
- 2k views
-
-
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று 2016-12-01 10:17:37 உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், வருடாந்தம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருக்கும் நிலைதான் எய்ட்ஸ் ((Acquired Immune Deficiency Syndrome -AIDS ). எச்.ஐ.வி (Human Hmmunodeficiency Virus -HIV) எனும் வைரஸால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இ…
-
- 3 replies
- 2k views
-
-
கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…
-
- 14 replies
- 2k views
-