உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு! விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
பெய்ஜிங்: திபெத் சீனா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார். சீனாவில் விஜயம் செய்து வரும் ஒபாமா பெய்ஜிங்கில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்இ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம்இ சீனாவுக்கும்இ திபெத்த்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா விரும்புகிறது. இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீளுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார். பின்னர் ஹூ பேசுகையில்இ சீனாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் அமெரிக்கா சிறப்பான…
-
- 2 replies
- 1.1k views
-
-
யுரேனியம் செறிவூட்டும் பணியை 60 நாட்களுக்குள் நிறுத்தாவிடில், மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. விதித்த கெடு இரு தினங்களே உள்ள நிலையில் , 60 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்கும் பெரும் போர் பயிற்சியை ஈரான் ஆரம்பித்திருக்கிறது. ஈரானில் 1906 மார்ச்சுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று, ஈரான் புரட்சிப் படைத்தளபதி முகமது ரேஸா சாஹிதி கூறியதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானில் மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 16 மாகாணங்களில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், ஈரான் புரட்சிப் படையின் 19 பிரிகேடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நவீன ஆயுதங்கள் உட்பட படையின் வசமுள்ள அனைத்து ஆயுதங்களும் இப் பயிற்சியின் போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை நவம்பர் 17, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆயுதம் கடந்த இந்திய மீன் பிடிக்கும் படகுகளை இந்தியா கொடுத்து உதவுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜெனீவா பேச்சு வார்த்தை தேல்விக்கு பின் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் படகுகளை நாங்கள் மூழ்கடித்து வருகிறோம். விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளை கொடுத்து ஆயுதம் கடத்த இந்தியா உதவி செய்து வருகிறது என்றார். மீண்டும் பேச்சுக்கு அழைப்பு: இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசு …
-
- 3 replies
- 1.1k views
-
-
உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி அடைந்துள்ள தோல்வியை பிரிட்டிஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் கோர்டன் பிரவுண் இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார். தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை …
-
- 1 reply
- 1.1k views
-
-
கசாப்புக் கடைக்கு வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடுகள் திடீரென ஆவேசமாகி சரமாரியாக தாக்கியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு வியாபாரியின் உயிர் ஊசலாடி வருகிறது. சென்னை புளியந் தோப்பில் ஆட்டுத் தொட்டி உள்ளது. அங்கு தினசரி இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளும், மாடுகளும் கொண்டு வரப................. தொடர்ந்து வாசிக்க............... http://isoorya.blogspot.com/2008/03/18.html
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மையில் அமெரிக்க போலீசார் கண்டறிந்த செக்ஸ் ராக்கெட் இந்திய திரைப்படத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த கதாநாயகிகளும், பிற நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கின்றனர். சிகாகோவை மையமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி தொடர்பாக ஒரு தெலுங்கு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமை Google அமெரிக்காவில் நடைபெறும் தெலுங்கு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அங்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் போலிஸ் கூறுக…
-
- 4 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 30 JUN, 2023 | 08:51 PM ஈரானில் இரகசிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டு இஸ்ரேலியர்களை சைப்பிரசில் கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆயுதகும்பலின் தலைவரை உயிருடன் பிடித்துள்ளதாக இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் தெரிவித்துள்ளது. ஈரானில் வைத்து தாங்கள் பிடித்துள்ள நபர் சைப்பிரசிஸ் இஸ்ரேலியர்களை கொலை செய்வதற்கு ஈரானின் இராணுவம் திட்டமிட்டமை குறித்த முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார் என மொசாட் தெரிவித்துள்ளது. மொசாட் வழமைக்கு மாறாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சைப்பிரசிற்கு இதனை அறிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் ஈரானை சேர்ந்த குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ர…
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார். அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை. இ…
-
- 5 replies
- 1.1k views
-
-
பகுதி-1 பகுதி-2 தகவல் வன்னியனின் வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது. தமிழ்மண வன்னியனுக்கு நன்றிகள்!
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை? Today at 12 PM இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கிழக்கு ஜெருசலேமின் அல் அக்ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்! 1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பாலஸ்தீனம். …
-
- 2 replies
- 1.1k views
-
-
முஷாரப் கதி என்ன? Tuesday, 19 February, 2008 01:50 PM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன. . எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைக…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன். இவர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முதல் அமைச்சர் கலைஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கலைஞர் சார்பில் சென்னை நகர குற்றவியல் வக்கீல் ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த செய்தி கடந்த 17 ந்தேதி காலை நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அந்த செய்தியில், தேர்தல் ஆணையத்தை முதல்வர் தொடர்ந்து வசைபாடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணைய நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால், தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முதல்வர் வசை பாடுகிறார் என்று கூறி உள்ளார். பழ.நெடுமாறனின் இந்த குற்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார். ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரம் கடலுõரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி கடலுõர்:கடலுõரில் தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரத்தை கின்னஸ் சாதனையாளர் ஜெயராமன் நேற்று துவக்கினார். கடலுõர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(79). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஜெயராமன் உலக அமைதிக்காக வட சென்னையில் தொடர்ந்து 200 மணிநேரமும், கோல்டன் பீச்சில் 360 மணிநேரமும் பேசி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக அமைதி வேண்டி சிதம்பரத்திலிருந்து தரையில் உருண்டபடி (அங்கபிரதட்சணம்) சென்னை வரை 250 கி.மீ., துõரம் சென்றும், மெரினா கடற்கறையில் ஆயிரத்து 8 மணிநேரமும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் 508 மணி நேரமும் தொடர்ந்து பேசி சாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர். இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 4…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். 1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாந…
-
- 17 replies
- 1.1k views
-
-
சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் ‘மகாத்மா அய்யங்காளி இருக்கை’ நடத்திய சர்வதேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17 ஆம் தேதி) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பான்மையைத் தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது” என கூறினார். மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காந்திஜியை பற்றிய அருந்ததிராயின் இந்த விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்கள் எழச்செய்தது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. காந்திஜியை இழிவுபடுத்திய அருந்ததி ராயின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்ச்சியாக 11 தீவிரவாதத் தாக்குதல்கள்: கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்! உலகின் ஃபேஷன் நகரமான பாரீஸ் இப்போது கதிகலங்கி நிற்கிறது. பிரான்சில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 7- 9 2015: கார்ட்டூன் பத்திரிகையான ’சார்லி ஹெப்டோ ’ அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு 8 கார்ட்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியாகினர். அருகில் இருந்த யூத மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த இரு தாக்குதலையும் நடத்தியவர்களை போலீச…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய வங்கி http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7351220.stm
-
- 2 replies
- 1.1k views
-
-
சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகை ரஞ்சிதா மீதும் நித்யானந்தா மீதும் பலர் போர்க்கொடித் தூக்கினர். இந்நிலையில் பாலியல் வீடியோ வழக்கில் சிக்கிய நித்யானந்தா இப்போது ‘நித்தியே ஜெயம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா. மேலும் கர்நாடகா மாநில மகளிர் அணித்தலைவியாக நடிகை ரஞ்சிதாவை நியமனம் செய்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாக பொறுப்புகளைத் தன்னுடைய சிஷ்யர்களுக்கு வழங்கியுள்ளார். நாட்டில் தீயவர்களும், கயவர்களும் நிறைய பெருகிவிட…
-
- 14 replies
- 1.1k views
-
-
இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள். என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-