கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …
-
- 3 replies
- 892 views
-
-
வீதியில் இறங்கி நடக்கமாட்டேன்.... என்று அடம்பிடித்தால் .... தெரு - என்ன தேம்பி அழுமா? கண்முழித்து பார்க்கவே மாட்டேன் என்றே நீ - கருத்து ஒன்று கொண்டால் விடியாது இனி வானம் என்று... விதி ஒன்றாகுமா? திட்டுறான் திட்டுறான் எல்லாரும்.... என்றே - நீ அழுதாய்........ ''தெய்வமே'' முதலில் சொல்லு ... நீ - அடிக்கிறார் அவர் என்று சொல்ல ... ஆக்கினைகள் அவர்க்கு என்ன செய்தாய்? தாய் நிலத்தை கூறு போட குழு சேர்ந்தாய்.... கூடியவர் தோழில் தலை சாய்த்தாய் ........ கொக்கோ கொக்கோ என்று - இரவல் குரல் வாங்கி என்னனமோ கூவினாய்...... தடியை கொடுத்து அடி வாங்கியபின்.... மரத்தின் மேலென்ன குற்றம் ........? 8)
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 89 replies
- 12.6k views
-
-
ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?
-
- 1 reply
- 581 views
-
-
செயற்படுவோம்! -------------------------- கதைத்தோம் ஓடினோம் ஏறினோம் போனோம் கூடினோம் குரல்கொடுத்தோம் கலைந்தோம் ஆனாலும் ஓயோம் தமிழீக் கொடியதனை ஐநாவில் ஏற்றும்வரை ஓயோம்! ஓயோம்! என்றே நாம் உறுதிகொண்டே செயற்படுவோம்!
-
- 3 replies
- 744 views
-
-
முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை, முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்! காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!! மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா? காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்! தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல?? நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!? பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா? பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்?? யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு??? இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில், அவர்கள் கழுத்து …
-
- 9 replies
- 1.5k views
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...
-
- 12 replies
- 1.6k views
-
-
நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. ஆனையிறவின் நாயகனே வன்னிவிக்கிரமவில் புயலவனே..! தீரத்தின் விளைநிலமே வன்னியின் செல்வ மைந்தனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. தமிழர் சேனைத் தலைவனின் வீரத் தளபதியே தலைவன் செய்திகள் சேருமுன் சாதிக்கத் துடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. கூவி வந்த யாழ்தேவி புரட்டி விட்டவனே திமிரெடுத்து வந்த சிங்களத்தின் கதை முடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீர…
-
- 18 replies
- 3.4k views
-
-
பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …
-
- 1 reply
- 721 views
-
-
முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்
-
- 1 reply
- 823 views
-
-
எங்களுக்காய் அஞ்சலிப்போம் - நகுலேசன் கண்ணிலே தூசி என்றால் கைகள் வழக்கு வைத்து கூட்டம் வைத்து கடிதம் எழுதி காத்திருப்பதில்லை இங்கோ வாழும் வயதில் உண்ணா நோன்பிருந்து வாழ்வையே தந்தவன் நினைவெழுத மறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்று அவகாசமும் முடிந்தது வசதியாய் ,ஒதுக்கமாய் நேர வரையறையுடன் உண்ணா நோன்பு போராட்ட அறை கூவல் கூடவே வழமைபோல் போட்டி போட்டு அறிக்கைக் கூவல் ’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி மறைந்தவனுக்கு முன்னரேயே மரணித்துப் போனோமா… அனுமதி அவசியமில்லை எங்களுக்காய் அஞ்சலிப்போம்! – நகுலேசன் https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85463/
-
- 0 replies
- 577 views
-
-
என் வணக்கம் தீஞ்சுவைத் தமிழால் உனைப் பாட வந்தாரே அரசமகனார் யாழே, உனைப் பாட வந்தாரே!!! எட்டுத்திக்கிலும் பட்டி தொட்டியெங்கிலும் உன் கால் பதித்து, தமிழால் ஒன்றிணத்தாய் எனைப்போல் பல தமிழரை . இன்று, நீ வாலைக் குமரியென்றும் கட்டிளங்காளையென்றும் அணிபிரிந்து அளக்கின்றனர் உனைப்பற்றி ....... செந்தமிழ் மொழியாள் உனக்கேது பால் ?? மொழிக்குமுண்டோ ஆண்பால் பெண்பால்?? எனைகேட்டால் , தமிழ்மொழிப்பாலே உன்பால் என்பேன் ........ நித்திரையிலும் எனைத் தட்டி செல்லக்கதை பேசும் என் இனத்து யாழ் நீ .... உன் நரம்புகளை மீட்டியே நாளும் ஒரு இசை படிப்பேன் உன் மீது தூசு விழவும் நான் விடேன் என் யாழே !!!!!!! நீ ........ வாழிய வாழியவே பல்லாண்டு ந…
-
- 17 replies
- 2.2k views
-
-
பரமேஸ்வரா நீ தியாகத் தீ..! உன்சாவை கண்டுதானா உலகம் விழிக்க வேண்டும்.. நீயும் தமிழமகன்தான். தளராத ஒரு வீரன்தான். பரமேஸ்வரா பார்திருக்க உலகம் நீ பசித்திருக்கின்றாய். நல்லூர் வீதி விட்டு நகர்ந்துள்ள உன்யாகம் வெள்ளை வீதியில் ஆனால் கொடுங்கோல் முடிவில்லை அதை செய்தவரும் மாறவில்லை. தில்லையாடி வள்ளியம்மா பிறந்த மண் என்பார். காந்தீய யாத்திரையால் சுதந்திரம் கொண்டோம் என்பார்.. இன்று கொல்லும் போது எம்மை ஏன் மெளனமாய் உதவுகின்றார். புரியாத எமக்கு புரிய முன்னர் இழவுதான் மிஞ்சும்.. அவர் மெளனம் கலைக்க நீ தொடுத்த போராட்டம் பொய்க்காது. ஒற்றை மரம் தான் கண்ணுக்கு தெரியும் அதை தாங்கும் வேர்கள் என்றுமே தெரியாது. உனக்கு பின் தமிழர் …
-
- 0 replies
- 899 views
-
-
அழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய் வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே களிப்போடங்கே தேடாமுகமாக வாழ்வைத் தொலைத்தவர்கள் மதில்மேலொட்டுகின்ற சுவரொட்டி மருந்துக்கும் தெரியாது விதிநொந்து போகாமல் விழுதுகள் ஆனவர்கள் உதிக்கின்ற தமிழீழ உயர்வுக்காய் உழைத்தவர்கள் விதிக்கின்ற கட்டளையை விரும்பி யேற்றவர்கள் மண்ணின் விடிவுதன்னை மகிழ்வாய் தேடியவர் எண்ணத்தை மாற்றார்க்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டால் கண்மணிகள் கரும்புலிகள் கூற்றுவனை வலிந்தழைத்து மின்னலென வெடிமுழங்க மலர்சாய்ந்து போனவர்கள் கல்லறைகள் தோன்றாது கழிவிரக்க அஞ்சலியால் இல்லாத உடலுக்கு கண்ணீரைத் தானழைத்து வெந்து உடல்கருகும் வேங்கைகள் ஆனவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தீரா விடம் – சித்தி கருணானந்தராஜா தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்.. ----------------- கனவுகளில் காய்ந்த நிலத்தில் விதைகளைதேடுகிறேன் என் காதலை துளிர்ப்பதற்காய்.. மனவெளியெங்கும் இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல காய்ந்துகிடக்கிறது கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்.. ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்.. நாம்தான் கரைபிரித்துக்கட்டப்பட்ட துருவ நதிகளாக திசை பிரிந்து... எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத சோகத்தில் அழுதபடி கடந்துபோகிறது ஒவ்வொரு இரவும் நிலவு.. இப்போதெல்லாம் நாம்பேசிய வார்த்தைகளில் சிதறிக்கிடக்கின்றன அன்பைத்தொலைத்த கண்ணீர்ப்பூக்கள்... ஏன் மெளனம் உன் கரைகளில்..? உன் எண்ணங்களை வனையத்தெரியா வண்ணாத்திப்பூச்சி நீயோ..? இல…
-
- 14 replies
- 1.3k views
-
-
பல்லவி ஆள்காட்டி ஆள்காட்டியே அன்புள்ள ஆள்காட்டியே தூது செல்ல மாட்டாயோ சேதி சொல்ல மாட்டாயோ அனுபல்லவி அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என் ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்… வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம் வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என் பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே… (ஆள்காட்டி ஆள்காட்டியே…) சரணம் கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம் சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை கண்தொலைவில் அவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?
-
- 6 replies
- 577 views
-
-
இதயம் அனலில் வேகுதடி- எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி! செல்லமாய் என்னை கிள்ளு- உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு! சுட்டெரிக்கும் வெய்யில் கூட மழையென்றாச்செனக்கு! சுந்தரி நீ கள்ளி - பாரேன் உன் உதட்டு சிவப்பில் என் உயிர் ஒளிந்து கொண்டதடி! நெருப்பை நீர் அணைக்கும்! மழையை மண் அணைக்கும்! நான் கொண்ட காதலை நீ அணையேன்- மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்! ஆயிரம் பாஷை இங்காகலாம்! உந்தன் செல்ல அதட்டல் பேச்சே- தாய் மொழிடி எனக்கு! ஏய்டா என்பாய் குட்டிமா- என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே! ஏது வாழ்வு ? அதுவல்லவோ ? என் இருகரங்களில் -தலை சாய்த்து குழந்தை என்றாகி நீ தூங்கு! நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன் தந்தையென்றாகாமலே - உன்னை …
-
- 23 replies
- 3.7k views
-
-
எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா
-
- 4 replies
- 1.7k views
-
-
என் அன்பான உறவே அழகான சிரிப்பே உனக்கு அன்பான கதையே உனக்கு இரக்கமான மனசு உனக்கு ஒரு கொடியில் புூத்த புூ இல்லை நீ உன் கோவம் எனக்கு பிடிச்சு இருக்கு உன் திறமை எனக்கு பிடிச்சு இருக்கு ஆனால் நான் உன்னுடன் கதைக்கும் போதெல்லாம் சண்டைதான் செய்வேன் ஆனால் நீ என் சொந்த அண்ணாவாக இல்லாட்டியும் -- எனக்கு நீ ஒரு நல்ல நண்பனாக இருக்கிறாயே அதுவே எனக்கு போதும் நண்பனே ----------ஆக்கம் --? கீதா :P
-
- 9 replies
- 1.7k views
-
-
நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…
-
- 5 replies
- 909 views
-
-