கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத்தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிம் சிறூவர்க்குக் கை கொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண…
-
- 0 replies
- 1.2k views
-
-
கைக்கு எட்டாத வானமாய் - என் கண்களில் தெரிகின்றாய் நீலமாய்! தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை, தோலுரித்த இசைகளைத் தவிர! உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய், இன்னும் இருக்கின்றேன் உயிருடன்! உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன... கூர்மையான வாளுடன்! கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை, நான் போராட என்னுயிர் வேண்டும்! அதுவும்.... நீதான்!
-
- 7 replies
- 1.2k views
-
-
கண்ணீர் அஞ்சலி.....( எண்ணமதில் கற்பனைகள் எத்தனையோ தான் சுமந்து... பள்ளியறை மீதினிலே வெண் புறவாய் பறந்தவளை.... வானேறி வந்து ஏனோ மா பாவிகளை ஏன் வதைத்தீர்;....??? என் செய்தாள் என்றென்னி அவள் உடலை நீர் கிழித்தீர்....??? உணர்விழந்து உடல் நலிந்து உணர்வற்று கிடைக்கையிலே.... உயிர்காக்க வேண்டியவள் இடமாறி வருகையிலே... இரக்கம் இன்றி ஏன் வதை;து ஏனோ பகையே நீ கொன்றாய்....??? உயிர் குடிக்க அலைகின்ற இன வெறி மகிந்தாவே ஏனோ அவளை நீ கொன்றாய்....??? என் தீங்கு அவள் இழைத்தாள்....??? தீண்டாமை கிடந்தவளை திருகியே ஏன் கொன்றாய்....??? வலியோடு வடு இணைத்து துடி துடி…
-
- 5 replies
- 1.2k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…
-
- 5 replies
- 1.2k views
-
-
தோல்வி நிலையென நினைத்தால்..... கவிதை - இளங்கவி தொடர்வாய்ப் பெற்ற பல வீழ்ச்சியினாலும்..... தொடர்ந்து கொண்டிருக்கும் பல அதிர்ச்சிகளாலும்..... துவண்டு விடாதே தமிழினமே....! எங்கள் விதியினை நாமே எழுதுவோம் எழுச்சி கொள்ளு எம்மினமே...! எதிரியின் கூச்சலுக்கேல்லாம் பயந்து ஓட நீயொன்றும் கொல்லையில் பறக்கும் கோழியல்ல.... எதிரியின் குதம்வரை சென்று அவன் குடலைப் புடுங்கிய கோரப் புலியின் பலம் உனக்கு.....! நீ கோடியாய்ச் சேர்ந்து கொதித்து எழுந்திட்டால் ; அவன் கோட்டைகள் எரியும் உன் விடுதலைக்கு....! அவன் கோவணம் கழட்டி நீ தோய்த்துப் போட்டால் கொத்தடிமையாய் இருப்பாய் அந்தக் களிசறைக்கு.... நம் விரலை வைத்தே எம் கண்ணைக் குத்துறான் …
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ண…
-
-
- 15 replies
- 1.2k views
-
-
இந்த கவிதையை வாசித்து விட்டு அவசரப்பட்டு பெண்ணியவாதிகள் என்னைத்திட்டவேண்டாம். நகைச்சுவையாக (dark comedy) நான் எடுக்க இருந்த ஒரு குறும்படத்திற்காக எழுதிய கவிதை. ஆனால் அப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சுயநலம் சுயநலம் சுயநலம் பெண்ணியத்தின் மறுபெயரே சுயநலம் கணவனுக்கு பணிவிடை செய்தால் கசக்கும் பிள்ளைகளை பராமரித்தால் புளிக்கும் மாமா மாமியைக் கண்டால் வயித்தைப்பிரட்டும் சுயநலம் மட்டுமே இனிக்கும் இனிக்கும் இனிக்கும்.
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size] [size=4]காலம் எழுதிய வெற்றிகளில் நெருப்பாய் இயங்கிய வரலாறு. இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும் அசையாத இரும்பின் இருதயம் உனக்காய் படைக்கப்பட்டிருந்தது. ஒருகாலம் உனக்கான விலை உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி. கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில் ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன். ‘செயலின் பின் சொல்’ அதிகாரியாய் , பணியாளனாய் இலட்சியப் போராளியாய் – நீ இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான். தடைகளகற்றித் தனித…
-
- 16 replies
- 1.2k views
-
-
நாலிரண்டு திக்கிருந்தும் - நல் அருவிகளாய் ஊற்றெடுத்து யாழெனும்...... ஆழியிலே சங்கமித்து ஆனதுகாண் அருஞ்செல்வம் மானமது காக்கும் மறக்குலத்தின் மாவிளக்கே தேனமிழ்தே தாயகத்தின் மணம் உணர்த்தும் தனிமலரே திசை வெளிகள் உன் உறவொளிரும் தீந்....தமிழால் யாழ் இசைக்கும் நரம்பொளிரும் பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே! நாமொளிரக் களமுவந்த யாழ் அரங்கே நீ வாழீ. வானமெனத் தமிழ் பரந்த வலையுலகத் திருவே, ஊனுனதாய், உளமுனதாய் கானமிது எழுகிறதே கண்மணியே..... ! எம் கவின்வனமே! காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைந்தும் நீ ஆனதென வாய்கள் மலர்ந்தும் வாழிய நீ பல்லாண்டு
-
- 15 replies
- 1.2k views
-
-
ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …
-
- 4 replies
- 1.2k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1.2k views
-
-
அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லோரையும் போல அவனுக்கும் வாழ்வு மீதான பிரியங்களும் தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன….. பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும் அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்…… கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப் பேரலையொன்று விழுங்குமாப்போல குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில் தொலைந்து போக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்…… ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய் ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்….. காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள் போரும் அவலமும் புகுந்து கொண்ட போது போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன் சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு வீட்டுப் ப…
-
- 7 replies
- 1.2k views
-
-
கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு
-
- 7 replies
- 1.2k views
-
-
உனக்கு சந்தேகம் அதிகம்தான் இல்லையென்றால் எதற்காக உன்னோடு நட்சத்திரங்களையும் கூட்டிப் போகிறாய் * என் இதயக் கரும்பலகையில் உன் பெயரே நிலவு * உன் இதழைத் தொட்டுக் கொடுப்பதால்தான் கேட்டு வாங்குகிறாய் என் முத்தங்களை * முத்தக் கவிதைக்காய் என் காது மடலையும் விட்டு வைக்கவில்லை உன் இதழ்கள் * அம்மா எவ்வளவுதான் சுற்றிப் போட்டாலும் உன் கண்படும் இடத்தில் எப்போதும் நான் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
மொழிக்கு உயிர் எழுத்துப்போல என் உடலின் உயிர் நீ தான் பெண்ணே? நீ கண்களால் பேசும் அந்த மொழிக்கு இவ்வுலகில் வரிவடிவம் உண்டா பெண்ணே? உன்னுடய சிரிப்புக்கு நிகரான சொல் எந்த மொழியில் உண்டு பெண்ணே? நீ பேசுகின்ற குரலின் இனிமை எந்த இசைக்கருவியில் தோன்றும் பெண்ணே ? கருமுகில் போன்ற உன் கூந்தல் நறுமணம் எந்த மலரில் உண்டு பெண்ணே? உன் இதயதின் துடிப்பு என் பெயர்தான் சொல்கிறதா பெண்ணே? உன் சுவாசத்தின் பிரணவாயு நான் தானா பெண்ணே?
-
- 2 replies
- 1.2k views
-
-
விமானக் கிலி காலமும் மாறுது காட்சியும் மாறுது கயவரின் தலைநகர் கதிகலங்குது குண்டுகள் தினமும் கொட்டிய சிங்களம் மண்டுகள் போலவே மருண்டு அலறுது காண்பது அனைத்தும் மஞ்சளாய் தெரிகிற காமாலைக் கண்ணனாய் காவல் புரியுது காகமும் அவர்க்கு காலனாய் தெரிந்திட கயவர் கூட்டம் கத்திக் குளறுது ஒளியினை எங்களின் வாழ்க்கையில் பொசுக்கியோர் ஒளியினை நிறுத்தியே ஒழிந்து மறைகிறார் வெளிச்சம் நிறுத்தியே வெருண்டு கிடக்கிறார் வெற்று வானிலே வெடிகளைச் சுடுகிறார் பகலிலே வந்தால் பார்க்கலாம் என்பதாய் பைத்தியக் காரனாய் பேட்டிகள் கொடுக்கிறரார் வினையினை மண்ணிலே விதைத்தவர் கேளுமே விடுதலை வரும்வரை விண்ணுமக்(கு) எதிரியே!
-
- 5 replies
- 1.2k views
-
-
இனியவளே... தளர்நடை பாதங்களுக்கு உனது கரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த குடை தான் இப்போது துணையாயுள்ளது குடைக்கார ஐயாவிற்கு சாப்பாடு போடு குடைக்கார கிழவனை திண்ணையில் துங்க விடாதே குடைக்கார தாத்தாவிற்கு லூசு பிடிச்சுருக்கு என ஒற்றை அடையாளமுமாய், வாழ்தலின் சான்றாயுமுள்ளது அடைமழை நாளில் நனைந்து வருமென்னை துவட்டியபடி வரும் உனது வசவுகளை போலல்லாது மௌனமாய் நின்று காக்கிறது பெருமழைகளில் முன்னெப்போதையும் விட பலவீனமாய் இருந்தாலும் இந்த குடையை விரிக்குமளவு திரானியோடிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில் குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் கானல் வெளியில் நாமிருவரும் குடைக்குள் நடந்து போ…
-
- 16 replies
- 1.2k views
-
-
தேடல் உனக்காக நானும் எனக்காக நீயும் எம் மழலைகளுக்காக நாமும் எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்தோம் ஆனாலும் நீ நிரந்தரமாய் தூங்கிய அந்த இரவில் மட்டும் நான் நிரந்தரமாய்த் தொலைத்தது என் தூக்கத்தை மட்டுமா? நிரந்தர இருளுக்குள் நித்தமும் தேடுகின்றேன் உன்னை மட்டுமல்ல என்னையும் தான்
-
- 3 replies
- 1.2k views
-
-
உங்கள் வீரம்...... இனத்தின்நெஞ்சை நிமிர்த்தியது உலகின் புருவங்களையும் உயர்த்தியது சொந்த ஆசைகளைத் துறப்பது ஒன்றுதான் உங்கள் ஆசையா? வித்(து)தகரே சிந்தனைக்குள் விடுதலை வெப்பம் செறிந்த மின்சாரம் பாய்ச்சிய தலைவனை மட்டுமல்ல உலக தமிழனையும் தலைநிமிர்த்திய உங்கள் செயல்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தலைவணங்குகின்றோம் உயரிய இலட்சியத்திற்காக உயிரை உருக்கிய உன்னத்த்தினை, உலகம் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் பொருள் கொடுத்ததுதான் பாரிய பயங்கரவாதம் உயரிய தீவிரவாதம் கனவுகள் அழிந்திடுமோ என்று அழும் உங்கள் ஆன்மாக்களின் குரலால் அதிருகின்றது எங்கள் உணர்வு பத்ருகின்றது உள் மனது கவலை விட்டு உறங்கிடுங்கள் கண்மணிகள…
-
- 3 replies
- 1.2k views
-
-
இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
சொந்த நாட்டு வீட்டுக்கு... எப்பத்தான் நான் போவேன்? என் சொந்தக்காரர் நாலுபேரை... அப்பத்தான் நான் பாப்பேன்! வந்த நாட்டை எண்டைக்கும்... எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்! சொந்த நாட்டை மீட்குமட்டும் நிம்மதியா தூங்கமாட்டேன்...!??? வல்லைவெளிக் காற்றாக.... மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது! நெல்லுவயல் கதிர் பார்க்க.... தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது! முல்லை நில கடலோரம்.... அலை ஓயாமல் அடிக்கிறது! ஓயாத அலை ஞாபகங்கள்.... மீண்டும் நெஞ்சில் வந்து துளிர்க்கிறது! ஓடக்கரை அப்பம் தோசை... வாங்கி நல்லா தின்ன ஆசை! பருத்தித்துறை வடையோட... பங்குனிக் கள் அடிக்க ஆசை! வல்வெட்டிதுறை எள்ளுப்பா... வாய் இனிக்க கடிக்க ஆசை! தப்பி ஓடி வந்த பாவியாகி... தஞ்சம் தேடி வந்த அகதியாகி... செல…
-
- 5 replies
- 1.2k views
-
-
சர்வதேசமே கண் திறவாயோ ? தரணியிலே தலைநிமிர துடிக்கின்ற இனம்! இனிமையான மொழியோடு இரக்கமுள்ள மனம்! வந்தாரை வரவேற்க வாசலில் காத்திருந்து அன்பைப் பரிமாற ஆசையுள்ள சனம் பச்சைக் கிளிகள் பசுமையான வயல்கள் பண்பாடும் குயில்கள் பணியாத பனைமரங்கள் கலை கலாச்சாரம் கனிவான பண்பாடு தளராத துணிவுதான் தமிழரின் அடையாளம் உங்களோடு இணைகிற நாடுகள் உருகிட உலகத்தின் செவிகளில் எங்களின் பூபாளம் உரிமைக்குரல் ஒலிக்க வீதியிலே ஊர்வலம் முட்களை விழுங்கி சிறகடிக்கும் பறவைகள் சாவிலும் வாழ்வோம் நிகழ்வே உணர்த்தும் நாங்கள் விடுதலை சுமந்த எரிமலைகள் மூன்று தசாப்த்தங்கள் மூச்சுவிடாத போராட்டம் எங்கள் குஞ்சுகள் குருதியில் கரைகிறது …
-
- 5 replies
- 1.2k views
-
-
கோடைத் தாக்குதலில் உதடுகள் உலர்ந்த இலைகளை வாரி யணைத்துக் கொண்டது ஒரு ஆலமரம். பீறிட்ட ஞாபங்கள் ஒன்று சேர மெல்ல கிளைமேல் படர்ந்தேன் ஒரு பாம்புபோல. ஒரு கிளையினுள் நுழைந்த அக்கணமே கண்டேன். அங்கே பல சிற்பங்கள் செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சிறு வலியோடு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. முன்பொருநாள் எனக்கும்.. "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" அதே அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்கப்பட்டது. என் பதிலை எதிர்பாராது உளியை கையில் எடுத்துக்கொண்டான் என்னையும் செதுக்கிய சிற்பி. நான் ஞாபகங்களுடன் வெளியேறினேன். அன்று அழுத விழிகளுடன் அதே கிளையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று அழகிய சிற்பமாய் ஆதவனாய் நான்....…
-
- 3 replies
- 1.2k views
-
-
அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…
-
- 8 replies
- 1.2k views
-