Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    பூமி கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள் சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல் புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம் பாலைவனங்களில் கருகிய தார்பூரரின் தாகம் தணல் மூண்ட பெருங்காடுபோல் தீயாய் நாம்மை துவட்டிய பசி பட்டினியோடு மூச்சடங்கிய கம்போடிய வியட்நாயிமரின் பசி தலை அறுக்கப்பட்ட பறவைபோல் அனல் படரத் துடித்த நம் வயிறு பசியால் மடிந்த உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல் நஞ்சுறைந்து வாட…

    • 1 reply
    • 1.1k views
  2. உலகத்தின் இயக்கத்தில் இதுவுமோர் நாடக மேடையாம் உயிர்களை வைத்தே காட்டுவாரிங்கு வேடிக்கையாம் பாரே! நீ வேடிக்கை பார்! விசித்திர ரசிகன் நீ! அவர்கள் சிரித்தால் நீ அழுவாய்! அவர்கள் அழுதால் நீ சிரிப்பாய்! உணர்வுகளின் கூடாரங்களுள் கருத்தரித்த சுதந்திரப் பிண்டங்கள் சருகுகள் போலிங்கு கருகிப்போகும் குருத்தான செண்டுகள்! இரவுகள் தோறும் மடியல்கள் இரத்தத்தில் தோய்ந்த விடியல்கள் மரண ஓலங்களின் மறைவில் மரணித்துப்போகும் மனிதநேயங்கள்! மாண்பு மிகு உலகே மறைந்திருந்தே வேடிக்கை பார்...! வீடு வாசல்கள் தோறும் இழவுகள் தினந்தோறும் காடுகள் மேடுகள் எங்கும் கல்லறைகளே நிறைந்து போகும்! வாழும் மண்ணில் வாழ வாழ்க்கை கேட்டு நின்றோர் பாழும் உலகில் இன்று பய…

    • 3 replies
    • 1.1k views
  3. நேசிப்பின் நிலாவரையல்ல நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை. கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய் அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின் நெடுங்காலத் திட்டமதில் மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி பரம்பொருளே!.... தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்? இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம். சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி, கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம் கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே? ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின் மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது மானுட ப…

    • 2 replies
    • 1.1k views
  4. பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!! ஆசியாக் கண்டத்தின்உச்சத்தில் உதித்தஈழத்துச் சூரியன்!அச்சத்தில் மூழ்கியஅப்பாவித் தமிழரின்விலங்கினை உடைத்துஉலகின் உச்சத்தில் வைத்தஉன்னதத் தலைவன் இவன்!பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்தமிழனை சிங்களக் கொள்ளையன்அடிமைப் படுத்தி ஆண்ட போது…இலங்கைத் தலையின் மூளையில்வல்வைத் தாயின்…வீரத் திரு வயிற்றில்உலகத் தமிழர்களின்…ஒட்டு மொத்த மூளையாகஉயிராகி… உருவாகினான்..!கார்கால மழையில் – ஓர்கார்த்திகை நாளில்இருட்டியது ஊரு…இருபத்தி ஆறு நன்னாளில்எடுத்தது வீரத்தாய்க்கு வலி!பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!அன்று – உருவானதுதமிழர்களுக்கான புதிய வழி!!இலங்கைத் தலையில் பிறந்துதமிழர்களின் மூளையானன்!ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…மூலையில் முடங்…

  5. எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…

    • 2 replies
    • 1.1k views
  6. அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …

  7. நல்ல பாடம்! குருவி நானும் ஆலமர உச்சியில் ஒரு கூடுகட்டி நான்கு பிள்ளைகள் பெற்றிட அயலிருந்த காக்கையும் உயர பறக்கும் பருந்தும் வல்லூறும் எதிரிகளாகின! அன்றொருநாள் விசை கொடுகாற்றாய் புயலடித்திட கலைந்தது என் மனையொடு குடும்பமே! கலங்கினேன் வருந்தினேன் கவலையில் பிறந்தது உறதி! மீண்டும் கட்டினேன் ஒரு கூடு வலுவான கிளைதனிலே! பல சந்ததி கண்டு வாழ்கிறேன் சுதந்திரமாக! ஈழத்தமிழா நீ குருவியல்ல! மறத்தமிழன் வீணர்கள் காட்டுவர் வார்த்தையாலம்-அதில் மயங்கிடாது முயற்சி என் வாழ்க்கையை பாடமாய்க் கொண்டு! ஒரு நாள் உனது வெற்றித் திருநாளாகும்! யாழில் 2003 இல் பதியப்பட்டுள்ளது. http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=1033 [காக்கை - இந்தியா பருந்து - …

  8. பல்லவி ஆள்காட்டி ஆள்காட்டியே அன்புள்ள ஆள்காட்டியே தூது செல்ல மாட்டாயோ சேதி சொல்ல மாட்டாயோ அனுபல்லவி அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என் ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்… வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம் வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என் பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே… (ஆள்காட்டி ஆள்காட்டியே…) சரணம் கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம் சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை கண்தொலைவில் அவ…

  9. Started by yaal_ahaththiyan,

    நம் வாய்ச் சண்டைகளை எல்லாம் முடித்து வைக்கிறது நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து * பலர் என் மேல் படர்ந்தபோதும் என்னுள் முளைத்தது நீ மட்டும்தான் * நீ நடுங்கி நடுங்கி தந்த உன் முதல் முத்தத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை நிலா நடுக்கத்தில் பயந்து பயந்து வாங்கியதால் * நீ பூச் சூடி பொட்டு வைக்கும்போது முடித்து வைக்கிறேன் உனக்கான என் அன்றைய கவிதையை * அடிக்கடி நீ காணாமல் போகும் தருணங்களில்தான் உணர்கிறேன் நீ தேவதை என்பதை -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.1k views
  10. அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை ^^^ அம்மாவுக்கு குரங்கு அவனுக்கு தெய்வம் அவன் காதலி ^^^ இருந்தால் மனிதன் இறந்தால் பேய் உயிர் ^^^ உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

  11. அழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய் வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே களிப்போடங்கே தேடாமுகமாக வாழ்வைத் தொலைத்தவர்கள் மதில்மேலொட்டுகின்ற சுவரொட்டி மருந்துக்கும் தெரியாது விதிநொந்து போகாமல் விழுதுகள் ஆனவர்கள் உதிக்கின்ற தமிழீழ உயர்வுக்காய் உழைத்தவர்கள் விதிக்கின்ற கட்டளையை விரும்பி யேற்றவர்கள் மண்ணின் விடிவுதன்னை மகிழ்வாய் தேடியவர் எண்ணத்தை மாற்றார்க்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டால் கண்மணிகள் கரும்புலிகள் கூற்றுவனை வலிந்தழைத்து மின்னலென வெடிமுழங்க மலர்சாய்ந்து போனவர்கள் கல்லறைகள் தோன்றாது கழிவிரக்க அஞ்சலியால் இல்லாத உடலுக்கு கண்ணீரைத் தானழைத்து வெந்து உடல்கருகும் வேங்கைகள் ஆனவர்…

  12. தோழர் பாட்டு எட்டூரும் பாத்திருக்க என் ஆத்தா உச்சி மோர நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில் எங்கூட அவன் வளர்ந்தான் சிற்றோடை போல சிலுசிலுக்கும் தென்றல்போல பற்றாடை வரிசைபோல பஞ்சு வண்ண மேகம்போல பட்டாலே மனதிலே படபடக்கும் காலங்கள் சுட்டாலும் எரிக்கேலா சுவையான கனவுகள் வற்றாமல் வரிசையாய் வந்து குதிச்சு நெஞ்சார சுழன்றடிச்சு நினைவுகள் பறக்கிறதே சிற்றாடை கட்டி சிலிர்த்துக்கொண்டு பேசும் உற்றாரும் ஊராரும் உரிமை கொண்டாடா பொற்றாமரை குளத்தடி பொதிகை மர நிழலில் பொழுது விழும் நேரம் பொரி உறுண்டை வாங்கி வந்து பொத்திப்பொத்தி நீ திண்ண பொறுக்காமல் நான் பொங்க பத்திரமாய் மறைத்து பையிலே வாங்கி வந்து பரிவுடனே நீ தர பணிவுடன் நான் ஏற்க…

  13. இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாண…

    • 0 replies
    • 1.1k views
  14. ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…

  15. கொண்டாடும் மனசு ............. நாம் பிறந்த மண்ணிலே , நாள்தோறும் குண்டு மழை போதாதென்று மழை வெள்ளம் அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் , தசை பிளந்து ரத்த வெள்ளம் , இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம் எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும் இவை எல்லாம் நம் சனத்தை ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா பட்டியல் நீளும் ,பாதை போன்று அப்பாவை காணவில்லை , அண்ணாவை காணவில்லை , பள்ளி சென்ற அக்காவையும் காணவில்லை ,தகவல் இல்லை இந்நிலையில் கொண்டாட மனம் வருமா தினசரியைபார்த்தால் தினம் தோறும் இணைய தளத்திலும் துயர செய்தி தான். இத்தனையும் நடக்கும் போது கொண்டாட மனம் வருமா ? அமைதியின் ஏசுவை ,தரிசிக்க கோவிலிலும் குண்டு மழை , கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான் இந…

  16. Started by வர்ணன்,

    செத்தவீட்டில் சிரிப்பாய்...... கல்யாண நாளில் நீ அழுவாய்........ வயிறு கிழியும் வரை ... கத்து கத்து ... தவளையே..... வரம்புகள் எதுவென்றே ... தெரியா உமக்கு............. நெடுக்கால போக .. எப்படித்தான் முடியுமோ? எரிகிறவீட்டுக்கு.... தீயணைக்க வழியும் சொல்லாய்...... தேம்பி அழுகிறவருக்கு .. ஆறுதலும் சொல்லாய்... மிருக உலகே....உலகே......... உறவுகள் உடல் கருகும் வாசம் வேண்டியா புலம்பல்? வேணுமா....... வேணுமா........... வேணுமென்றால்... இந்த இந்த உதவாகரைகளையும் உச்சிமுகர்ந்து தத்தெடு!!

  17. யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/

    • 3 replies
    • 1.1k views
  18. இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............

  19. பக்கத்து வீட்டு பரமசிவன் மாஸ்ரர் மகனை விட மார்க்கு கூட நீ எடுத்தா அடுத்த முறை படம் பார்க்க விடுவேன் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினா பரிசா உனக்கு சைக்கிள் வேண்டி தருவன் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் பண்ணி டாக்டருக்கு எடு பட்டா கட்டாயம் காரோடு சீதனம் கேட்டு கலியாணம் பண்ணி வைப்பேன் இது ஒன்றும் நடக்காட்டி ஒரு மாடு வேண்டி மேய்க்க விடுவேன் தானாக சிந்திக்கும் பிள்ளையின் மூளையை வீணாக்கிய கதை போல் அப்பனுக்கும் பிள்ளைக்கும் அப்ப தொடக்கம் நடக்கும் சண்டை இது இப்பவும் இப்படித் தான் யாழ்ப்பாணத்தான் ஆனாலும் ஆயிரம் தான் குறை சொன்னாலும் அடித்து வீழ்த்தி எரித்து புதைத்தாலும் ஏதோ விதை …

  20. நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான் குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்த‌து நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியை நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள் நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள் நீங்க‌ள் இப்போது கால் ந‌னைக்கும் கடற்கரையில்தான் படகில் தப்பியோடமுயன்ற‌ நிறைசூல் பெண் ஒருத்திசுட‌ப்ப‌ட்டு இற‌ந்துபோனாள் கூடவே அவளோடு... நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான் மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல் கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந…

    • 0 replies
    • 1.1k views
  21. காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்

  22. சமாதானத்தின் பெயரால்.. முந்தியெல்லாம் நாங்கள் விழிநீர் சிந்தியதே இல்லை தந்தனத்தோம் பாடி கெந்தித்தொட்டு ஆடி தெரு மந்திகளைப் போல வாழ்ந்திருந்தோம் முந்திய வாழ்க்கை எல்லாம் நாம் சந்தித்த எதிரியாலே பந்தி விட்டு ஓடியது சந்தி கூடிச் சிரித்தது... வந்தவன் ஆட்டி வைக்க சொந்த மண் விட்டு வெந்த புண் மனத்தோடு சொந்த பந்தமதைப் பிரிந்து குந்தியிருந்த நிலத்தையும் இழந்து மரம் விட்டு மரம் தாவும் மந்திகளைப் போல ஊர் விட்டு ஊரோடினோம் கூடு பிரிந்த வாழ்க்கையது தேடி வந்தது எம்மை கேடென்று நினைக்கலாமோ நாமதனை..? நாடற்ற நமக்கு வீடெதற்கு ? வீண் வம்பெதற்கென பாடித் திரிந்த பண்பட்ட குயிலொன்…

    • 3 replies
    • 1.1k views
  23. நெல்லெடுப்பது யார்? என்னவாயிற்று? ஏனிந்தப் புலம்பல்? ஒப்பாரிச் சொற்களை கூட்டிப் பெருக்கிக் குப்பையிலே கொட்டுக. நெல்லெடுத்து மழலையின் ஈறில் கீறிவிட்டாலே பல் வெளிக்கிளம்ப பாதை திறக்கும். வலியும் குறையும். இது இயற்கை மருத்துவம். நெல்லெடுப்பது யார்?

  24. மறக்க முடியுமா....??? வடு தந்த வரலாறு மறக்க முடியுமா...?? எங்கள் வாழ்வழித்த பகையதுவை மறக்க முடியுமா....??? கண்ணீரிலே கரைந்த வாழ்வை மறக்க முடியுமா....?? அந்த கனத்த நெஞ்ச சோகமதை இறக்க முடியுமா...?? உடனிருந்த உயிர் உறவு கொடுக்க முடியுமா...?? அந்த ஊன பகை செய்த செயல் மறக்க முடியுமா....??? காலம் கடந்து போனால் என்ன கழிக்க முடியுமா...?? அந்த கயவர் செய்த கோரமதை மறக்க முடியுமா....?? நவற்குழி படு கொலைகள் மறக்க முடியுமா...?? அந்த நாடு புரா செய்த கொலை மறைக்க முடியுமா...?? டாங்கி ஏற்றி செய்த கொலை மறக்க முடியுமா...?? அதில் நசுங்கி செத்த மக்களைதான் மறக்க முடியுமா...?? கற்ப்பழித்து கொலை ச…

    • 3 replies
    • 1.1k views
  25. . எல்லாம் நிறைந்ததே வாழ்க்கை வாழ்க்கையின் எல்லா மணித்துளிகளும் சந்தோசமானவையல்ல எவன் ஒருவன் துன்பத்தை எதிர்த்து போராடுகிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான் இறக்கும் திகதி தெரிந்து யாரும் பிறப்பதில்லை பிறந்த எல்லோரும் சாதனை படைத்து இறப்பதில்லை எதைக் கண்டும் அஞ்சாதே எதை செய்வதாக இருந்தாலும் ஆழமாய் யோசி யோசித்தது சரியா என்று இன்னொரு முறை யோசி உன்னை நீ நம்பு யாரலும் முடியாததைக்கூட முயற்சித்தால் உன்னால் முடியும் என்று நம்பு வாழத் தெரியாதவன் தற்கொலை செய்து இறந்து போகிறான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.